Jump to content

வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’

கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன.  

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று.  

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று.  

சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது பெரிய எதிர்விளைவுகள், போராட்டங்கள், சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும்.   

ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமை, இவர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை, நியாயப்படுத்துவதாக மாறியிருக்கிறது.  

குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைமைகளைக் கையாளுவதற்கு, இவர்களின் உதவி தேவை என்றொரு நிலை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் வந்திருப்பது போல காட்டப்படுவது, வேடிக்கை.  

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஒரு தொகுதி கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகள் விடுவிப்பு நிகழ்விலும் பங்கேற்றார். கைதிகள் விடுவிப்பில் ஜனாதிபதி பொதுவாகப் பங்கேற்பதில்லை.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெலிக்கடைச் சிறைக்குச் சென்றது, கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் அல்ல; அங்கு, தண்டனை அனுபவித்து வரும், ஞானசார தேரரைச் சந்திப்பதற்காகவே வெலிக்கடைக்குச் சென்றிருந்தார் என்ற சந்தேகம் தோன்றுகின்றது.  

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரைச் சந்திக்க, நாட்டின் ஜனாதிபதி சிறைக்குச் சென்றார் என்ற வரலாறு எழுதப்படுவதை மறைக்கவே, அவர் வெசாக் கைதிகள் விடுதலையைப் பயன்படுத்திக் கொண்டார்.  

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் ஞானசார தேரரை சந்தித்து உரையாடினார். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான போரை, எப்படி முன்னெடுப்பது, எப்படிக் கையாளுவது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.  

ஞானசார தேரரின் விடுதலை பற்றி பேசப்படவில்லை என்று, ஜனாபதிபதி செயலக வட்டாரங்கள் கூறிய போதும், கடைசியில் அதுவே உண்மையாகிப் போனது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான ஆணையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை (22) மாலை ஒப்பமிட்டார்.  

முன்னதாக, ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பௌத்த அமைப்புகள் கோரியபோது, அதற்குக் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு அளிப்பது, நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று வாதிடப்பட்டது,  

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், பௌத்த அமைப்புகள், ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று, எச்சரிக்கின்ற நிலைக்குச் சென்றார்கள். ஏனென்றால், இப்போதுள்ள சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக, தீவிரமாகச் செயற்படக் கூடியவர் அவர். பல ஆண்டுகளாகவே அவர், அதைத் தான் முன்னெடுத்து வந்தார். இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி, அதிகம் எச்சரித்தவர் ஞானசார தேரர் தான்.  

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், புதன்கிழமை (22) காலை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஞானசார தேரரைச் சந்தித்திருந்தார். “அடிப்படைவாத தீவிரவாதத்தை அகற்றி, எப்படி நாட்டை முன்னே கொண்டு செல்லலாம் என்று கலந்துரையாடினோம்” என, வெளியே வந்து கொடுத்திருந்த பேட்டியில் அமைச்சர் கூறினார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஞானசார தேரரிடம் போய், எப்படி இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்கலாம் என்று ஆலோசனை கேட்கின்ற நிலை வந்திருக்கிறது. அதற்காகவே, அவருக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்படுகிறார் என்பது போன்ற சூழல், உருவாக்கப்பட்டிருக்கிறது.  

தமிழ், ஆங்கில சினிமாக்களில், பலமுறை கண்டுள்ள காட்சிகள், இப்போது நினைவுக்கு வருகின்றன. முன்னர் இராணுவத்திலோ, பொலிஸிலோ அல்லது வேறு முக்கிய துறைகளிலோ, திறமையாகப் பணியாற்றிய கதாநாயகன், ஏதோ ஒரு காரணத்துக்காகச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பார். 

பாரிய அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக, அவர் ஒருவரால் தான் முடியும் என்ற நிலை வரும். அரச இயந்திரம், சிறைக்குள் இருக்கும் அந்தக் கதாநாயகனிடம் போய் மண்டியிடும். அவர் வெளியே வந்து எதிரிகளைத் துவம்சம் செய்வார். இது, சினிமாவில் மாத்திரமன்றி, உண்மையாகவும் நடக்கும் என்பதைத் தான், ஞானசார தேரர், மேஜர் புலத் வத்தை விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேஜர் பிரபாத் புலத்வத்தவும் கூட, இதுபோன்று தான் மீண்டும் இராணுவத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலிமையானதாக,அதிகாரங்கள் நிரம்பியதாக இருந்தது. இரகசிய நிகழ்ச்சி நிரல்களுக்காக அவர்கள், கோட்டாபய ராஜபக்‌ஷவால் தயார்படுத்தி வளர்க்கப்பட்டிருந்தார்கள்.  

மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியே, ‘திரிபொலி’ என்ற இரகசிய நடவடிக்கைகளுக்கான ஒரு கட்டளை மய்யத்தின் தளபதியாக இருந்தவர் என்று கூறுகிறது பொலிஸ் தரப்பு.  

இந்த இரகசிய அணியால்த் தான், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்றும் ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டார் என்றும் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையிலும் இவர்களுக்குத் தொடர்புள்ளதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.  

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், முக்கியமான சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் மேஜர் பிரபாத் புலத்வத்த. பிணையில் வெளியே வந்த பின்னரும், அவரை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, முக்கிய பொறுப்பு ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.  

அவர் மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும், விசாரணைகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று, சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான  அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் மாத்திரமன்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கூடத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கிழக்கு மாகாணம் தொடர்பான துல்லியமான தகவல்களை வைத்திருக்கின்றவர் மேஜர் புலத்வத்த. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பற்றிய தகவல்களும் அவற்றுடன் நெருக்கமானவர்களுடனான  தொடர்புகளும் அவரிடத்தில் இருக்கின்றன.  

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இஸ்லாமிய அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதில், இராணுவப் புலனாய்வுத்துறை முக்கியமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. அந்தத் தொடர்புகளை வைத்துக் கொண்டு, இப்போதைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தான் இராணுவத் தளபதியின் திட்டம். அதற்காக மேஜர் புலத்வத்தவைத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார், இராணுவத் தளபதி.  

இந்த நடவடிக்கை, கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ள போதும், மேஜர் புலத்வத்தவை வைத்துத்தான், இஸ்லாமியத் தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்ற தொனியில் இராணுவத் தளபதி பேசி வருகிறார்.  

கடந்த வாரம், ஆங்கில வாரஇதழுக்கு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அளித்திருந்த செவ்வியில்,  “மேஜர் புலத்வத்தவிடம் ஒரு திறமை இருந்ததால், அதனை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்குப் பொறுப்புகளோ, அதிகாரங்களோ கொடுக்கப்படவில்லை. நான் என்ன கேட்கிறேனோ, அவர் அதைச் செய்கிறார். நாங்கள் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த முக்கியமான தருணத்தில் எங்களுக்கு, துடுப்பெடுத்தாடக் கூடிய ஒரு வீரர் தான் தேவை. எனக்கு இப்போது, ஒரு பந்து வீச்சாளரோ, களத்தடுப்பாளரோ தேவையில்லை. எனக்கு, விளையாடுவதற்கு குறிப்பிட்ட சில ஓவர்கள் மட்டும் தான் உள்ளன” என்று நியாயப்படுத்தி இருக்கிறார்.  

அதாவது இப்போதைய நிலையில், இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்குவதற்கு, மேஜர் புலத்வத்த என்ற ஒற்றை மனிதனே தேவை என்றளவு நிலை, உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரைக் கொண்டு, எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று இராணுவத் தளபதி நம்புவது, சினிமாக்களைப் போலவே தெரிகிறது.  

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போர், இந்த இரண்டு தரப்புகளின் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் நியாயத்துக்கு அப்பால், அவர்களை வெளியே கொண்டு வருவதே இப்போது முக்கியமானது என்று காட்டுவதற்கு உதவியிருக்கிறது.  

இந்த இடத்தில் தான் இலங்கையின் நீதித்துறை மீண்டும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெளியே-வந்துள்ள-ஹீரோக்கள்/91-233452

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.