Jump to content

ஊமைவெயில் காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊமைவெயில் காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவு

3N7A3998.jpg?zoom=2&resize=1200,550&ssl=

பட மூலம், Selvaraja Rajasegar

நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும் என்ன தெரிகின்றது என்பதையே இக்கட்டுரை அலசுகின்றது.

18 மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படுகையில், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழகத் தமிழர்களிடமும்தான் கையளிக்கப்பட்டது. இது இயற்கையான போக்கில் நிகழ்ந்ததுதான். ஆனால் அனைத்துத் தரப்புமே இந்தக் கைமாற்றலைக் கைவிட்டனர். பெரும் பேரவலத்தோடு நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரசினாலும், இராணுவத்தாலும் உருவாக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கவே யாரும் முன்வரவில்லை. பணவசதியுள்ளவர்கள் பணத்தைக்கொடுத்துத் தப்பித்துக்கொள்ள, பணமற்ற சாதாரணர்கள் அதற்குள்ளேயே வருடக்கணக்கில் அடைபட்டுக்கிடந்தனர். அதற்குள்ளேயே கடத்தப்பட்டனர். காட்டிக்கொடுப்பவர்களின் கைவரிசைகளினால் காணாமலும் போயினர். ஒருநாள் ‘அமைப்பில்’ இருந்தவர்களும் இராணுவத்தின் அறிவிப்பை நம்பி வெள்ளைவான் ஏறினார்கள். அவர்கள் மீண்டுவரவேயில்லை. நலன்புரி நிலையங்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் வருகைதந்த போதிலும்  விலங்குக் காட்சிசாலை பார்க்கவே வந்தார்கள். உலகம் நடத்திய போரொன்றிலிருந்து தப்பிவந்த மனிதர்களைப் பார்க்க வரவில்லை. இறுதியில் அரசின் நலன்புரி நிலையப் பணிகள் நன்றாக உள்ளதென சான்றுப்பத்திரம் கொடுத்துப்போயினர்.

ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், அரசியல் தளத்தில் இனவிடுதலைக்கான போர் முன்னெடுக்கப்படும் என்றே தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், போரில் கொலைக்கு மேல் கொலை செய்து களைத்துப் போய் அரசியலுக்கு வந்திருந்த சரத்பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தும், அவரால் பாதிக்கப்பட்ட மக்களை அவருக்கு வாக்களிக்க கோரியபோதிலும் கூட்டமைப்புக்கு இருந்த வரலாற்றுப் பெறுமதியை அது தவறவிட்டது. அந்த சந்தர்ப்பத்தோடு, தமிழ் தேசிய தேர்தல் அரசியலின் அடையாளமாகிவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதையவும் தொடங்கியது. அதற்கு மாற்று அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தன்னைப் பிரகடனம் செய்தது. பத்தாண்டுகளாக அப்பிரகடனம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது. அதன் பின்னரான காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் புதியவர்கள் நுழைந்தார்கள்.  உயிர்த்தியாகத்தாலும், ஆயுதப் போரினாலும் வளர்ந்த தமிழ் தேசியம் என்கிற விடுதலைத் தத்துவத்தை விலைபொருள் ஆக்கினர். வியாபாரம் பேசினர். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் 2009க்குப் பின் சேர்ந்தவர்களில் பலர் தேர்ந்த வியாபார விற்பன்னர்களாயிருந்தனர். எனவே, முள்ளிவாய்க்காலின் பின்னான விடுதலைத் தேசியம் வியாபாரத் தேசியமானது. 2015 வரைக்கும் அது வளைந்து நெளிந்து நிமிரும் என்ற நம்பிக்கை தென்பட்டாலும், குறித்த ஆண்டில் ஏற்பட்ட நல்லாட்சிக்கு அது வழங்கிய ஆதரவிலிருந்து முற்றாகவே தமிழ்தேசியம் நீர்த்த கட்சியாக மாறியது. சிங்களத்தேசியம் என்கிற பெருந்தேசியத்துக்குள் தன்னை நிர்மூலப்படுத்திக்கொள்ள சதாகாலமும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அப்படி நிர்மூலப்படுத்திக்கொள்வதில் தமிழ் தேசிய விடுதலை விற்பன்னர்களுக்கு பெரும் இலாபமிருந்தது.

இந்தப் போக்கில் விமர்சனமுள்ளவர்கள் வெளியே வந்தார்கள். புதிய கட்சிகள் தொடங்கினர். இரத்தமாகப் பாய்ந்த பெருநதி சிறுசிறு கிளையாகி வற்றிவரளும் நிலையை எட்டியது.

அரசியல் இப்படியே நிர்மூலமாகப் பொருளாதாரமாவது தளிர்த்ததா என்று பார்த்தால் அதுவும் அதளபாதாளத்தில் விழுந்தது.

வடக்கு, கிழக்கு முழுவதும் கிளைபரப்பிய தெற்கு முதலாளிகளின் வங்கிகளும்,  பன்னாட்டு நிதிநிறுவனங்களும் போரில் எஞ்சியிருந்த மக்களையும் சுரண்டித்தீர்த்தன. வடக்கு, கிழக்கில் இருந்த தமிழர்களின் பெருவணிகம் என நம்பப்பட்ட அனைத்துமே பலத்த அடியை வாங்கின. மீள முடியாதளவுக்கு வீழ்ச்சியைக் கண்டன. தமிழ் சமூகம் தனக்கு கீழான சுயபொருளாதார கட்டமைப்பில் எப்போதும் பலமாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இந்தப் பத்தாண்டுகளுக்குள் அந்த அடித்தளமே சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இலகு கடன்கள், நுண்கடன்கள் பெண்களை அதிகளவில் இலக்காக்கின. கிராமிய அளவில் படலை வரை வந்து நின்ற இலகுகடன்கள், இலகுவிலேயே தமிழ் பெணகளைத் தம் வசப்படுத்தியது. பெற்ற கடனை மீள செலுத்தமுடியாத கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு உளஅழுத்தத்தைக் கொடுத்தது. பல பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள். தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அரசு குறித்தளவிலான கடனைப் பொறுப்பெடுததுக்கொண்ட போதிலும், இப்போதெல்லாம் இரவில் கடன் வசூலிப்பு இடம்பெறுகிறது. உடற்பாகங்களை விற்று கடனை மீளச்செலுத்தும் பெண்களையும் இந்தப் பத்தாண்டுகளுக்குள் தமிழ் சமூகம் கண்டிருக்கிறது.

போரில் ஈடுபட்ட தரப்பினராகிய முன்னாள் போராளிகள் என்றொரு வகுப்பினரும் தமிழ் சமூகத்தில் உருவாகியிருக்கின்றனர். இந்த சமூகத்தின் விருத்திக்காக, வளமான வாழ்வுக்காக, விடுதலைக்காக தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகள் இன்றைய நிலை கவலைதருவதாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலும், உளரீதியிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புனர்வாழ்வளிப்பின் பின்னர் மர்மமாக இறந்துபோன முன்னாள் போராளிகள் எத்தனைபேர் என்ற தகவல்களைக் கூட திரட்டிப் பாதுகாக்கக் கூட யாரும் அக்கறையெடுக்கவில்லை. போரில் தன் உடல் அவயத்தை இழந்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் முன்னாள் போராளி குறித்து சமூக வலைதளங்களில் கண்ணீர் வரும் காணொளிகள் வெளியான பின்னரே அவர் குறித்து பரிதாபப்படும் மனநிலையை தமிழ் சமூகம் அடைந்திருக்கிறது. உளப்பலம் மிக்க பல முன்னாள் போராளிகள் தங்கள் கஸ்ரங்களை வெளிப்படுத்தாமலே இறந்துபோன சந்தர்ப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. முன்னாள் போராளி என்றால் வேலையில் புறக்கணிப்பு, திருமணத்தில் புறக்கணிப்பு, சமூக அந்தஸ்தில் புறக்கணிப்பு எனப் பல்வேறுவிதமான அழுத்தங்களையும் அவர்கள் சந்தித்துவருகின்றனர்.

இந்த சந்தரப்பத்தை இராணுவம் தெளிவான திட்டத்தோடு பயன்படுத்திக்கொண்டது. வறுமைக்கோட்டுக்குட்பட்டு வாழும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளைக் கொண்டு சிவில் பாதுகாப்பு வேலைத்தளங்களை இராணுவம் உருவாக்கியிருக்கிறது. அரச நியமனத்துக்கு நிகரான தொழில்வாய்ப்பொன்றை வழங்கியிருக்கும் இராணுவம், ஆண் – பெண் முன்னாள் போராளிகளுக்கு முழுநேர வேலைவாய்ப்பை வழங்குகிறது. அவர்களின் கல்வித்தகைமைக்கேற்ப கட்டடத்தொழிலாளர்களிலிருந்து, அலுவலக வேலைகள் வரைக்கும் வழங்கப்படுகின்றன. இராணுவ பயிற்சிகளும் வேலைக்கான ஒரு தகைமையாகக் கொள்ளப்படுகிறது. இதுவொருவகையில் இராணுவமயமாக்கல் என்ற பார்வையும் உண்டு. சிவில் பாதுகாப்பு பிரிவிலிருந்து பயிற்றப்பட்டு வெளியேறும் சிறுவர் பாடசாலை ஆசிரியர்கள் கிராமங்களில் கற்பிக்கின்றனர். அந்தச் சிறார்களுக்கான கல்வி, அதற்கான செலவு அனைத்தையுமே இராணுவம் பார்த்துக்கொள்கிறது. எனவே மறைமுகமான இராணுவமயமாக்கல் சிந்தனை சிறுபராயத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறது. இராணுவமயமாக்கலை தம் வாழ்வோடு இணைந்த ஒன்றுதுான் என்ற எண்ணம் ஆழ்மனதில் படியும்வரைக்குமான கற்பித்தல் ஒழுங்குகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அசாதாரண நிலையை சாதாரணமாக்கும் வேலைத்திட்டம் இதுவென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதோடு, சிவில் பாதுகாப்பு பண்ணைகளில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் மீறல்சார்ந்த பிரச்சினைகள் வெளிவருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றது.

என்றுமில்லாதளவுக்கு தமிழ் சமூகம் தனக்குள்ளேயும், வெளியேயும் சிதைவைச் சந்தித்திருக்கிறது. இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை, கடற்படை என தமிழர் பகுதிகளின் மூலைமுடுக்கெல்லாம் முகாமிட்டிருக்கும் இராணுவத்தைக் கடந்துதான் தாராளமாக போதைப்பொருட்கள் புழங்குகின்றன. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருட்கள் விநியோகிப்பவர்கள் கையுமெய்யுமாக அகப்பட்டாலும், விசாரணைகள் ஒரு கட்டத்தின் மேல் முன்னெடுப்பதில்லை. இறுக்கமான கடற்படையின் கண்காணிப்பைத் தாண்டித்தான் கேரள கஞ்சா மாதகல், வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு வருகின்றன என்பதை நாம் நம்பியே ஆகவேண்டும். போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல்கள் கண்டும்காணாமல் விடும் பாதுகாப்புத் தரப்பே தமிழர்களைச் சூழ நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. எங்காவது கையூட்டலில் தாமதங்கள் ஏற்படுத்தபடுமிடத்தில்தான் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் பொலிஸாரிடம் சிக்குகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான் மொத்த தமிழ் சமூகத்தையும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கின்றனர். அதற்கு நிகராக வாள்வெட்டுக்குழுக்களும் உருவாக்கப்பட்டு சமூகத்துள் உலாவவிடப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் உலாவிய துணை இராணுவக் குழுக்களைப் போல இந்த வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை இராணுவத்துக்கும் தெரியாது. பொலிஸாருக்கும் தெரியாது. இத்தகையதொரு அச்ச சூழலுக்குள்தான் தமிழ் சமூகத்தின் பத்தாண்டுகள் கழிந்திருக்கிறது. இனியும் அதுவே நீளவுமுள்ளது.

கடந்த 2015இல் ஏற்பட்ட நல்லாட்சியின் பின்னர் இராணுவத்துக்கு நிகரான அதிகாரங்கள் அரச திணைக்களங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. சர்வதேச நல்லபிப்பிராயத்திற்காக பாடுபட்ட அரசு, வலிகாமம் வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்க, தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றன தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்பதில் இரவு பகலாக உழைத்தன. தொல்லியல் திணைக்களம் தமிழர்கள் இடங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டுவது, புதிய இடங்களை தொல்லியல் மையமாக பிரகடனம் செய்வது, புத்த விகாரைகளை வைப்பது போன்ற பணிகளை செய்தது. இராணுவமும் அவர்களோடு இணைந்து தம் பணிக்கு புத்தர் சிலைகளை நிறுவினார்கள். முல்லைத்தீவில் மட்டும் 60 இடங்களில் புத்த விகாரைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் செய்திருக்கின்றது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய வீடமைப்பு அதிகார சபையும் வவுனியா வடக்கிலும், மணலாற்றிலும் பெரியளவிலான சிங்கள குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியிருக்கின்றன. அங்கு குடியேற்றப்பட்ட மக்களுக்கென தனி பிரதேச செயலகம் சம்பத்நுவர எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கில் புதிய சிங்கள பிரதேச சபையை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் முன்னின்று செய்வது அரச திணைக்களங்கள்தான். மகாவலி திணைக்களத்தின் எல் வலயம் இரணைமடு வரைக்கும் நீண்டிருக்கிறது. அதனை யாழ்ப்பாணம் வரை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் இரவுபகலாக நடக்கின்றன. இதன் பின்னணியில்தான் இரணைமடுகுள நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் கடற்றொழில் திணைக்களம் தமிழர் கடலின் வளங்களை சுரண்டிச் செல்வதற்கு தன்னாலான முழு பணிகளையும் செய்கிறது. கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டிய திணைக்களம் தமிழர் அளவாகப் பயன்படுத்தி எதிர்கால தலைமுறைக்காகக் பாதுகாத்து வந்த மொத்த கடல்வளத்தையும் அழித்துச் செல்ல உதவுகின்றது. கொக்கிளாய், நாயாறு, முல்லைத்தீவு, சாலை, சுண்டிக்குளம், தாழையடி என குடியேறியிருக்கும் சிங்கள மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். கடலில் டைனமைற் வீசி வெடிக்கச் செய்து மீன் பிடிக்கின்றனர். பகலிலேயே அட்டை பிடிப்பில் ஈடுபடுகின்றனர். தடைசெய்யப்பட்ட கரைவலை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். தமிழர் தொழில் செய்யமுடியாதளவுக்கு கடல் முழுவதையும் ஆக்கிரமித்து நின்று இரவு பகல் மீன்பிடியில் சிங்கள மீனவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான அனுமதியை நீரியல் வளத்திணைக்களம்தான் வழங்கியிருக்கிறது. நாயாறு பகுதியை மாயபுர எனப் பெயர் மாற்றி 300 வரையான சிங்கள குடும்பங்கள் குடியேறவும், அங்கிருக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த விகாரையைாக மாற்றவும் இத்திணைக்களம் உதவியிருக்கிறது.

இந்தப் பத்தாண்டுகளுக்குள் இனவிகிதாசாரப்படி சிங்கள, முஸ்லிம் இனங்களின் இனவிருத்தி அதிகரித்துச் செல்ல தமிழர்களின் இனவிருத்தி குறைந்துசெல்வதையும் ஆய்வொன்று நிருபிக்கின்றது. இலங்கையில் இன்னும் பத்தாண்டுகளில் மூன்றாவது சிறுபான்மையினமாகத் தமிழர்கள் மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாக அவ்வாய்வு குறிப்பிடுகின்றது. அதற்கு நாட்டைவிட்டு புலம்பெயர்தலும் மிக முக்கியமான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. போர் ஓய்ந்து பத்தாண்டுகளில் இவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் தமிழர்கள் இனவிருத்தியிலும் அருகுவார்களாயின், அரசியல் அபிலாசைகளை நிலைநாட்டுவதிலும் அசண்டையீனங்கள் உருவாகும். எனவே, மூன்றாவது சிறுபான்மையினத்தின் அரசியல் உரிமைகள், தேவைகள் குறித்து அக்கறைப்படத் தேவையற்ற சூழல் ஒன்றும் உருவாகும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாவது தசாப்தத்தை அடையும்போது, அரசியல் உரிமை குறித்தோ, இன விடுதலை குறித்தோ அக்கறைபடாத ஒரு சமூகமாக தமிழர்கள் மாறியிருப்பர் என்கிற எதிர்வுகூறலையும் முன்வைக்கமுடியும்.

கல்வியில் தமிழர்கள் தான் முதலிடம் பிடித்திருந்தார்கள். இதனால், எரிச்சலடைந்த பெரும்பான்மையினத்தவர் கலவரங்களை செய்தனர். கல்வித்தரப்படுத்தலைக் கொண்டுவந்தனர். இதுவே இலங்கையில் ஆயுதப் போராட்டங்கள் தமிழர் பக்கமிருந்து உருவாகக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. எந்தக் கல்விக்காக தமிழர் ஆயுதம் ஏந்தினரோ அந்தக் கல்வியிலேயே இன்று அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் நிலை உருவாகியிருக்கிறது. போர்க்காலத்தில் குப்பி விளக்குகளில் படித்து சாதனைப் படைத்த தமிழ் தலைமுறை இன்று சகல வசதிகள் அடைந்தும் கல்வியில் பின்சென்றிருக்கிறது. சாதாரணதர, உயர்தர, உயர்கல்வி வாய்ப்புக்களில் மூன்றாமிடத்துக்கு தமிழர்கள் பின்தள்ளப்பட்டிருக்கின்றனர். பெரியளவான பணவரவும், தேவைகள் இலகுவில் நிறைவேறுகின்றமையும், புலம்பெயரும் பேரவாவும், போதைப்பொருட்களின் அதிகரித்த பாவனையும் கல்வி மீதான ஆர்வத்தை இல்லாமல்செய்திருக்கும் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

போர்காலத்தில் சாதிய பிளவுகளோ, சமய பிரிவுகளோ பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகள் இம்மாதிரியான பிற்போக்குத்தனங்களை தடைசெய்திருந்தனர். இந்தப் பத்தாண்டுகளுக்குள் அந்த வன்மம் மீளவும் உயிர்த்துடிப்போடு கண்விழித்திருக்கிறது. சாதிய கடைபிடிப்புக்கள் மீளவும் அரும்பத்தொடங்கியிருக்கின்றன. கோயில், திருமணம், ஊர் நடைமுறைகளில் சாதியக் கட்டுக்களை மீள நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு சமதையாக மதப் பிரச்சினைகளும் தூண்டப்படுகின்றன. அண்மையில் மன்னார், திருக்கேதீச்சரம் பகுதியில் இடம்பெற்ற மதம்சார்ந்த பிரச்சினைகள் தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இந்த ஆபத்தான போக்கை தமிழ் சமூகம் தற்போது எதிர்கொண்டிருக்கிறது.

இப்படியாக கடந்த பத்து வருடங்கள் தமிழ் சமூகத்தின் உள்ளேயும், புறமாயும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழர்களின் பொது எதிரியான சிங்கள பெருந்தேசியமும், இந்தியாவும், சர்வதேச சமூகமும் தமிழர் குறித்த பார்வையில் துளியளவு மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நாட்டின் எப்பாகத்தில் குண்டுவெடித்தாலும், வடக்கு, கிழக்குத் தமிழர்கள்தான் பிரதான குற்றவாளியாக்கப்படுகின்றனர். நாட்டுக்குள் சர்வதேச தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் முன்னாள் போராளிகள்தான் கைதாகின்றனர். எனவே கடந்த பத்தாண்டுகளில் தமிழர் குறித்த பெரும்பான்மையினர் பார்வையில் – மனநிலையில் துளியளவு மாற்றமும் நிகழவில்லை என்ற புரிதலோடு இனப்படுகொலையைின் இரண்டாவது தசாப்தத்திற்குள் நுழைவோம்.

Jera.jpg?resize=90%2C90&ssl=1ஜெரா

 

 

https://maatram.org/?p=7872

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பத்தாண்டுகளில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது என்பதை சரியாகச் சொல்லும் கட்டுரை.     சமூகத்தை மீளவும் கட்டமைக்க சரியான ஆளுமைகள் இல்லாவிடில் தமிழர்களின் எதிர்காலம் இருள்மயமாகத்தான் மாறும் என்று தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.