Jump to content

இல‌ங்கை முஸ்லிம்க‌ள், உருது மொழியை ப‌டிக்க‌ வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mubarak-moulavi-e1330839878465.jpg

இல‌ங்கை முஸ்லிம்க‌ள் அர‌பு மொழி பேசுவோராக‌ மாற‌ வேண்டும் என்ற‌ முய‌ற்சி முஸ்லிம் ச‌மூக‌த்தில் துப்ப‌ர‌வாக‌ இல்லை. இஸ்லாம் மார்க்க‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை அறிய‌வே அர‌பு மொழியை ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌து.
 
வைத்திய‌ துறையை க‌ற்கும் மாண‌வ‌னுக்கு ஆங்கில‌ அறிவு இல்லாவிட்டால் அவ‌னால் ஒரு வைத்திய‌னாக‌ வ‌ர‌ முடிய‌ முடியாது. ஆங்கில‌ அறிவு இல்லாத‌ ஒரு டொக்ட‌ரை சிங்க‌ள‌, த‌மிழ் ச‌மூக‌த்தில் காட்ட‌ முடியுமா? அப்ப‌டியிருந்தால் அது ந‌கைப்புக்கிட‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் அதிக‌மான‌ வைத்திய‌ அடிப்ப‌டைக‌ள் ஆங்கில‌த்திலேயே உள்ள‌ன‌.
 
அது போல் அர‌பு மொழி என்ப‌து குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய‌ வேண்டுமாயின் அர‌பு மொழி அறிவு அவ‌சிய‌மாகும்.
 
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ மொழிக்கு திரும்ப‌ வேண்டும் என்ற‌ பிர‌சார‌ம் சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பிருந்தே முன்னெடுக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பிர‌சார‌த்தின் க‌வ‌ர்ச்சியால் தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளில் ப‌ல‌ர் த‌ற்போது த‌மிழ் பேச‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். பெற்றோர் த‌மிழிலும் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌த்திலும் உரையாடுவோர் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.
 
இவ்வாறு சிங்க‌ள‌ மொழிக்கு மாறுவ‌து ம‌ட‌மை என்றும் அதில் நாம் எதிர் பார்க்கும் பாதுகாப்போ, ந‌ல‌ன்க‌ளோ கிடைக்காது என்றும் நாம் தொட‌ர்ந்தும் கூறி வ‌ருகிறோம்.  முஸ்லிம் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌ பாட‌சாலைக‌ளுக்கு க‌ல்வி க‌ற்க‌ செல்லாம‌ல் த‌மிழ் மொழி மூல‌ பாட‌சாலைக‌ளில் க‌ல்வி க‌ற்க‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி க‌ட‌ந்த‌ ஏழெட்டு வ‌ருட‌மாக‌ சொல்லிவ‌ருகிற‌து. கார‌ண‌ம் த‌மிழ் க‌லாசார‌ம் ஓர‌ள‌வு முஸ்லிம் க‌லாசார‌த்துக்கு நெருங்கிய‌து என்ப‌தாலும் த‌மிழ் மொழி உல‌கின் சில‌ நாடுக‌ளிலும் பாவிக்க‌ப்ப‌டும் மொழியாக‌ இருப்ப‌தாலும், இஸ்லாம் ச‌ம்ப‌ந்த‌மான‌ நூல்க‌ள் த‌மிழில் போதிய‌ள‌வு கிடைப்ப‌தாலும், சிங்க‌ள‌ மொழி மூல‌ம் க‌ல்வி க‌ற்றோர் தொழில்வாய்ப்பில் பாரிய‌ போட்டிக்கு முக‌ம் கொடுப்ப‌தாலும் இக்க‌ருத்தை நாம் முன் வைக்கும் அதேவேளை ஒவ்வொரு இல‌ங்கை முஸ்லிமும் சிங்க‌ள‌ மொழியையும் ஆங்கில‌த்தையும் க‌ட்டாய‌ம் உப‌ மொழியாக‌ க‌ற்க‌ வேண்டும் என்ப‌தையும் சொல்லி வ‌ருகிறோம்.
 
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌னியான‌ இன‌ம் என்ப‌தை சிங்க‌ள‌ ச‌மூக‌ம் ஏற்றுக்கொண்டாலும் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர்  இத‌னை ஏற்க‌ முடியாம‌ல் த‌விக்கிறார்க‌ள். இத‌ற்கு கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌மிழ் பேசுவ‌தை சுட்டிக்காட்டி முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர் என்கின்ற‌ன‌ர்.  வெளிப்ப‌டையில் இது ச‌ரியாக‌ தோன்றினாலும் ந‌டை முறையில் முஸ்லிம்க‌ளை த‌மிழ‌ர்க‌ளாக‌ இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக்கொள்ள‌வே இல்லை. ஏற்றிருந்தால் த‌மிழ் போராளிக‌ளாலும் த‌மிழ் நிர்வாகிக‌ளாலும் முஸ்லிம்க‌ள் த‌னியாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். வ‌ட‌க்கிலிருந்து த‌மிழ் ம‌ட்டுமே பேச‌த்தெரிந்த‌ முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். 
 
அதே போல் முஸ்லிம் க‌டைக‌ளில் பொருள் வாங்க‌ கூடாது, முஸ்லிம் வியாபாரிக‌ள் த‌மிழ் ஊருக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌ன‌ போன்ற‌ பிர‌ச்சார‌ங்க‌ள் இருந்திருக்காது.
 
இவ்வாறெல்லாம் த‌மிழ் த‌ர‌ப்பு முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌ம் செய்வ‌தை க‌ண்ட‌ பின்பே முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழி பேசுவ‌தில் இருந்து வில‌கி அர‌பு அல்ல‌து உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ க‌ற்க‌ வேண்டும் என‌ கூறி வ‌ருகிறோம். உருது மொழி ந‌ம‌து நாட்டுக்கு அருகில் உள்ள‌ வ‌ட‌ இந்தியாவின‌தும் பாகிஸ்தானின‌தும் மொழியாக‌ இருப்ப‌தால் உருது மொழியையே நாம் இல‌ங்கை முஸ்லிம்க‌ளுக்கு சிபாரிசு செய்கின்றோம்.
 
இவ்வாறு இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழியில் இருந்து வெளியேறும் போது முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னியான‌ மொழி, பிரதேச‌ம், க‌லாசார‌ம் என்ப‌வை இருக்கும் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌னியான‌ தேசிய‌ இன‌ம் என்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.
 
இக்க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டியாக‌ வெற்றிபெறாது. முத‌லில் முஸ்லிம் ச‌மூக‌ம் இத‌னை உள‌ப்பூர்வ‌மாக‌ ஏற்க‌ வேண்டும். பின்ன‌ர் அட்க‌ற்குரிய‌ வேலைக‌ளை செய்தால் இன்னும் 50 வ‌ருட‌ங்க‌ளில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ பேசுவ‌ர்.
 
பொதுவாக‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எதையும் தூர‌நோக்கில் சிந்திப்ப‌துமில்லை, அவ்வாறு சிந்திப்ப‌வ‌ர்க‌ளை உட‌ன‌டியாக‌ விரும்புவ‌தும் இல்லை. ஒரு நூறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஆங்கில‌ம் பேசுவ‌து ஹ‌ராம் என்று சொன்ன‌ ச‌மூக‌ம் இது. இப்போது ஆங்கில‌ம் பேசுவ‌தை பெருமையாக‌ நினைக்கும் ச‌மூக‌மாக‌ மாறியுள்ள‌து.
 
என‌வேதான் சொல்கிறோம். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌டிக்க‌ வேண்டும். இத‌ற்குரிய‌ உத‌வியை இல‌ங்கையின் ந‌ட்பு ந‌ட்பு நாடான‌ பாகிஸ்தான் மூல‌ம் பெற‌ முடியும். முஸ்லிம் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ள் அத‌ற்கு முய‌ற்சி செய்ய‌ வேண்டும். அத‌ற்கான‌ புல‌மைப்ப‌ரிசில்க‌ளை வ‌ழ‌ங்க‌ முன் வ‌ர‌ வேண்டும். அத்துட‌ன் த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம், அர‌பு ஆகிய‌வ‌ற்றை உப‌ மொழிக‌ளாக‌ க‌ற்க‌ வேண்டும். 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமீர் காக்கா, கக்கா போன அமேரிக்கன் மொழீயையூம் படீக்கோணும் வாப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கிணத்துத் தவளைகள்... கத்துவதை இலங்கை பொலீசு கவனிக்காதோ...இது கத்துவது முழுக்க துவேசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபு படிக்க விரும்புவர்களை அரபு நாடுகளுக்கும்.. உருது படிக்க விரும்புவர்களை பாகிஸ்தானுக்கும் நிரந்தரமாக நாடு கடத்துவது தான் நல்லது. 

இலங்கையில் இருந்து அரபு படிச்சு ஒரு பிரயோசனும் இல்லை.. உருது படிச்சு ஒரு பிரயோசனும் இல்லை. குர் ரானை அரபியில் படிக்க விரும்புவர்கள் அரேபியர்களாக இருப்பது தான் நல்லது.

இப்படியான தொப்பிக்கூட்டத்தை அங்கு நாடு கடத்துவது தான் சிறப்பு. அங்க இருந்து இப்படிக் கதை அளந்தால் சவுக்கடிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருதை படித்து விட்டு அரபு நாடுகளில் செட்டில் ஆகுங்கோ...எல்லோருக்கும் நிம்மதி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்ரான் உலகமொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது மட்டுமல்ல அனைவரும் பயன்படுத்தும் வகையில் எண்ணற்ற இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே குரானைப் புரிந்துகொள்வதற்கு அரபு மொழி தேவை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அப்பட்டமான பொய்.

குர்ரானை படிப்பவர்களுக்கு அது ஒரு மார்க்கமோ மதமோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அதிக நேரம் தேவையில்லை. அங்கு சொல்லப்பட்டிருப்பவை அல்லாவின் கட்டளைகள் குறைந்தது இஸ்லாமியருக்கான கடமைகள் என்றும் சொல்லலாம். அதில் கட்டளைகள் அல்லது கடமைகளாக சொல்லப்பட்டுள்ள பலவிடயங்கள் வேறு சமயங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன.

போதாக்குறைக்கு பலர் குரானை மொழிப்பிரச்சினை காரணமாகவோ என்னவோ சரியாக புரிந்துகொள்வதுமில்லை. மொத்தத்தில் குரான் இந்த உலகத்தில் மக்களால் பின்பற்றவேண்டிய ஒரு மார்க்க போதனையே அல்ல. இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையற்ற கால ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு கண்ணியமற்ற மார்க்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் தமிழ் மொழியை கதைப்பது தமிழ் மொழிக்கே கேவலம் .

இலங்கை தமிழ் முஸ்லீம் என்று சொல்லாமல் இருப்பது கோடி நன்மை தமிழ் மொழிக்கே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போன்ற மவுலவி‍‍ மதவாதிகள்தான் சமூகத்தை தவறாக நடத்துபவர்கள். சவுதி போன்ற‌ நாட்டு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்ற இலங்கை முஸ்லீம் மவுலவிகள் இப்படித்தான் இருப்பார்கள். இவ்வாறனவர்களை அடிக்கடி காண்பேன்.  மதவாதத்தை கக்குவார்கள்.  மதத்திறாக எதுவும் செய்ய கூடிய காட்டுமிராண்டிகள். மலே,  போர போன்ற முஸ்லீகளை கண்டுள்ளீர்களா. இப்படியெல்லாம் இல்லை. அவர்களுக்கு என ஓர் இன அடையளமுள்ளது.

இப்போதுள்ள‌அரபியர்கள் கூட‌ எவ்வளவே மாறி அருமையாக பழகுகின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.