Jump to content

இல‌ங்கை முஸ்லிம்க‌ள், உருது மொழியை ப‌டிக்க‌ வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mubarak-moulavi-e1330839878465.jpg

இல‌ங்கை முஸ்லிம்க‌ள் அர‌பு மொழி பேசுவோராக‌ மாற‌ வேண்டும் என்ற‌ முய‌ற்சி முஸ்லிம் ச‌மூக‌த்தில் துப்ப‌ர‌வாக‌ இல்லை. இஸ்லாம் மார்க்க‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை அறிய‌வே அர‌பு மொழியை ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌து.
 
வைத்திய‌ துறையை க‌ற்கும் மாண‌வ‌னுக்கு ஆங்கில‌ அறிவு இல்லாவிட்டால் அவ‌னால் ஒரு வைத்திய‌னாக‌ வ‌ர‌ முடிய‌ முடியாது. ஆங்கில‌ அறிவு இல்லாத‌ ஒரு டொக்ட‌ரை சிங்க‌ள‌, த‌மிழ் ச‌மூக‌த்தில் காட்ட‌ முடியுமா? அப்ப‌டியிருந்தால் அது ந‌கைப்புக்கிட‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் அதிக‌மான‌ வைத்திய‌ அடிப்ப‌டைக‌ள் ஆங்கில‌த்திலேயே உள்ள‌ன‌.
 
அது போல் அர‌பு மொழி என்ப‌து குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய‌ வேண்டுமாயின் அர‌பு மொழி அறிவு அவ‌சிய‌மாகும்.
 
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ மொழிக்கு திரும்ப‌ வேண்டும் என்ற‌ பிர‌சார‌ம் சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பிருந்தே முன்னெடுக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பிர‌சார‌த்தின் க‌வ‌ர்ச்சியால் தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளில் ப‌ல‌ர் த‌ற்போது த‌மிழ் பேச‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். பெற்றோர் த‌மிழிலும் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌த்திலும் உரையாடுவோர் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.
 
இவ்வாறு சிங்க‌ள‌ மொழிக்கு மாறுவ‌து ம‌ட‌மை என்றும் அதில் நாம் எதிர் பார்க்கும் பாதுகாப்போ, ந‌ல‌ன்க‌ளோ கிடைக்காது என்றும் நாம் தொட‌ர்ந்தும் கூறி வ‌ருகிறோம்.  முஸ்லிம் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌ பாட‌சாலைக‌ளுக்கு க‌ல்வி க‌ற்க‌ செல்லாம‌ல் த‌மிழ் மொழி மூல‌ பாட‌சாலைக‌ளில் க‌ல்வி க‌ற்க‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி க‌ட‌ந்த‌ ஏழெட்டு வ‌ருட‌மாக‌ சொல்லிவ‌ருகிற‌து. கார‌ண‌ம் த‌மிழ் க‌லாசார‌ம் ஓர‌ள‌வு முஸ்லிம் க‌லாசார‌த்துக்கு நெருங்கிய‌து என்ப‌தாலும் த‌மிழ் மொழி உல‌கின் சில‌ நாடுக‌ளிலும் பாவிக்க‌ப்ப‌டும் மொழியாக‌ இருப்ப‌தாலும், இஸ்லாம் ச‌ம்ப‌ந்த‌மான‌ நூல்க‌ள் த‌மிழில் போதிய‌ள‌வு கிடைப்ப‌தாலும், சிங்க‌ள‌ மொழி மூல‌ம் க‌ல்வி க‌ற்றோர் தொழில்வாய்ப்பில் பாரிய‌ போட்டிக்கு முக‌ம் கொடுப்ப‌தாலும் இக்க‌ருத்தை நாம் முன் வைக்கும் அதேவேளை ஒவ்வொரு இல‌ங்கை முஸ்லிமும் சிங்க‌ள‌ மொழியையும் ஆங்கில‌த்தையும் க‌ட்டாய‌ம் உப‌ மொழியாக‌ க‌ற்க‌ வேண்டும் என்ப‌தையும் சொல்லி வ‌ருகிறோம்.
 
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌னியான‌ இன‌ம் என்ப‌தை சிங்க‌ள‌ ச‌மூக‌ம் ஏற்றுக்கொண்டாலும் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர்  இத‌னை ஏற்க‌ முடியாம‌ல் த‌விக்கிறார்க‌ள். இத‌ற்கு கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌மிழ் பேசுவ‌தை சுட்டிக்காட்டி முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர் என்கின்ற‌ன‌ர்.  வெளிப்ப‌டையில் இது ச‌ரியாக‌ தோன்றினாலும் ந‌டை முறையில் முஸ்லிம்க‌ளை த‌மிழ‌ர்க‌ளாக‌ இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக்கொள்ள‌வே இல்லை. ஏற்றிருந்தால் த‌மிழ் போராளிக‌ளாலும் த‌மிழ் நிர்வாகிக‌ளாலும் முஸ்லிம்க‌ள் த‌னியாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். வ‌ட‌க்கிலிருந்து த‌மிழ் ம‌ட்டுமே பேச‌த்தெரிந்த‌ முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். 
 
அதே போல் முஸ்லிம் க‌டைக‌ளில் பொருள் வாங்க‌ கூடாது, முஸ்லிம் வியாபாரிக‌ள் த‌மிழ் ஊருக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌ன‌ போன்ற‌ பிர‌ச்சார‌ங்க‌ள் இருந்திருக்காது.
 
இவ்வாறெல்லாம் த‌மிழ் த‌ர‌ப்பு முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌ம் செய்வ‌தை க‌ண்ட‌ பின்பே முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழி பேசுவ‌தில் இருந்து வில‌கி அர‌பு அல்ல‌து உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ க‌ற்க‌ வேண்டும் என‌ கூறி வ‌ருகிறோம். உருது மொழி ந‌ம‌து நாட்டுக்கு அருகில் உள்ள‌ வ‌ட‌ இந்தியாவின‌தும் பாகிஸ்தானின‌தும் மொழியாக‌ இருப்ப‌தால் உருது மொழியையே நாம் இல‌ங்கை முஸ்லிம்க‌ளுக்கு சிபாரிசு செய்கின்றோம்.
 
இவ்வாறு இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழியில் இருந்து வெளியேறும் போது முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னியான‌ மொழி, பிரதேச‌ம், க‌லாசார‌ம் என்ப‌வை இருக்கும் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌னியான‌ தேசிய‌ இன‌ம் என்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.
 
இக்க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டியாக‌ வெற்றிபெறாது. முத‌லில் முஸ்லிம் ச‌மூக‌ம் இத‌னை உள‌ப்பூர்வ‌மாக‌ ஏற்க‌ வேண்டும். பின்ன‌ர் அட்க‌ற்குரிய‌ வேலைக‌ளை செய்தால் இன்னும் 50 வ‌ருட‌ங்க‌ளில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ பேசுவ‌ர்.
 
பொதுவாக‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எதையும் தூர‌நோக்கில் சிந்திப்ப‌துமில்லை, அவ்வாறு சிந்திப்ப‌வ‌ர்க‌ளை உட‌ன‌டியாக‌ விரும்புவ‌தும் இல்லை. ஒரு நூறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஆங்கில‌ம் பேசுவ‌து ஹ‌ராம் என்று சொன்ன‌ ச‌மூக‌ம் இது. இப்போது ஆங்கில‌ம் பேசுவ‌தை பெருமையாக‌ நினைக்கும் ச‌மூக‌மாக‌ மாறியுள்ள‌து.
 
என‌வேதான் சொல்கிறோம். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌டிக்க‌ வேண்டும். இத‌ற்குரிய‌ உத‌வியை இல‌ங்கையின் ந‌ட்பு ந‌ட்பு நாடான‌ பாகிஸ்தான் மூல‌ம் பெற‌ முடியும். முஸ்லிம் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ள் அத‌ற்கு முய‌ற்சி செய்ய‌ வேண்டும். அத‌ற்கான‌ புல‌மைப்ப‌ரிசில்க‌ளை வ‌ழ‌ங்க‌ முன் வ‌ர‌ வேண்டும். அத்துட‌ன் த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம், அர‌பு ஆகிய‌வ‌ற்றை உப‌ மொழிக‌ளாக‌ க‌ற்க‌ வேண்டும். 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமீர் காக்கா, கக்கா போன அமேரிக்கன் மொழீயையூம் படீக்கோணும் வாப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கிணத்துத் தவளைகள்... கத்துவதை இலங்கை பொலீசு கவனிக்காதோ...இது கத்துவது முழுக்க துவேசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபு படிக்க விரும்புவர்களை அரபு நாடுகளுக்கும்.. உருது படிக்க விரும்புவர்களை பாகிஸ்தானுக்கும் நிரந்தரமாக நாடு கடத்துவது தான் நல்லது. 

இலங்கையில் இருந்து அரபு படிச்சு ஒரு பிரயோசனும் இல்லை.. உருது படிச்சு ஒரு பிரயோசனும் இல்லை. குர் ரானை அரபியில் படிக்க விரும்புவர்கள் அரேபியர்களாக இருப்பது தான் நல்லது.

இப்படியான தொப்பிக்கூட்டத்தை அங்கு நாடு கடத்துவது தான் சிறப்பு. அங்க இருந்து இப்படிக் கதை அளந்தால் சவுக்கடிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருதை படித்து விட்டு அரபு நாடுகளில் செட்டில் ஆகுங்கோ...எல்லோருக்கும் நிம்மதி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்ரான் உலகமொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது மட்டுமல்ல அனைவரும் பயன்படுத்தும் வகையில் எண்ணற்ற இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே குரானைப் புரிந்துகொள்வதற்கு அரபு மொழி தேவை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அப்பட்டமான பொய்.

குர்ரானை படிப்பவர்களுக்கு அது ஒரு மார்க்கமோ மதமோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அதிக நேரம் தேவையில்லை. அங்கு சொல்லப்பட்டிருப்பவை அல்லாவின் கட்டளைகள் குறைந்தது இஸ்லாமியருக்கான கடமைகள் என்றும் சொல்லலாம். அதில் கட்டளைகள் அல்லது கடமைகளாக சொல்லப்பட்டுள்ள பலவிடயங்கள் வேறு சமயங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன.

போதாக்குறைக்கு பலர் குரானை மொழிப்பிரச்சினை காரணமாகவோ என்னவோ சரியாக புரிந்துகொள்வதுமில்லை. மொத்தத்தில் குரான் இந்த உலகத்தில் மக்களால் பின்பற்றவேண்டிய ஒரு மார்க்க போதனையே அல்ல. இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையற்ற கால ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு கண்ணியமற்ற மார்க்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் தமிழ் மொழியை கதைப்பது தமிழ் மொழிக்கே கேவலம் .

இலங்கை தமிழ் முஸ்லீம் என்று சொல்லாமல் இருப்பது கோடி நன்மை தமிழ் மொழிக்கே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போன்ற மவுலவி‍‍ மதவாதிகள்தான் சமூகத்தை தவறாக நடத்துபவர்கள். சவுதி போன்ற‌ நாட்டு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்ற இலங்கை முஸ்லீம் மவுலவிகள் இப்படித்தான் இருப்பார்கள். இவ்வாறனவர்களை அடிக்கடி காண்பேன்.  மதவாதத்தை கக்குவார்கள்.  மதத்திறாக எதுவும் செய்ய கூடிய காட்டுமிராண்டிகள். மலே,  போர போன்ற முஸ்லீகளை கண்டுள்ளீர்களா. இப்படியெல்லாம் இல்லை. அவர்களுக்கு என ஓர் இன அடையளமுள்ளது.

இப்போதுள்ள‌அரபியர்கள் கூட‌ எவ்வளவே மாறி அருமையாக பழகுகின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.