Jump to content

ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா - காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி.

காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

ராகுல் காந்தி

நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி.

இப்படி செழுமையான அரசியல் பின்புலம் கொண்டவர் ராகுல்.

2014ம் ஆண்டு தேர்தல்தான், காங்கிரஸ் அரசியல் பயணத்தில் மோசமான காலக்கட்டமாக பார்க்கப்பட்டது. 2019ம் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல தேர்தல் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களை பெற்றுள்ள போது காங்கிரஸ் கூட்டணி வெறும் 85 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ராகுலே தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்று இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி: காந்தி வம்சத்தின் வீழ்ச்சியா?

இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வுயுற்று இருக்கிறார் அவர்.

உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் 8 பேர் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சரி இந்த தேர்தல் விஷயத்திற்கு வருவோம்.

இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில் வெல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்திருக்கிறது.

காங்கிரஸின் தேவை என்ன?

தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறினார்.

காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க தேவையில்லை என்று கூறிய ராகுல், "யாரும் அச்சப்பட தேவையில்லை. கடுமையாக வேலை செய்வோம். இறுதியில் வெல்வோம்" என்றார்.

நாளிதழ்களில் வரும் செய்திகள் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இன்று நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸின் தோல்வி, எடுக்க வேண்டிய பிற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படுமென தெரிகிறது.

உத்தர பிரதேச தலைநகரில் ஒரு காங்கிரஸ்காரர் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். அவர், "எங்களுடைய நம்பகத்தன்மை மிக மோசமாக உள்ளது. நாங்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. எங்கள் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை" என்றார்.

"மோதியும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் அவரை நம்புகிறார்கள்" என்று கூறியாவரிடம், அதற்கான காரணத்தை கேட்டோம்.

"எங்களுக்கும் அது புரியவில்லை" என்று தெரிவித்தார்.

கவலைக்கிடமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து.

பல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துக வருவ்து முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை புறந்தள்ளியே வருகிறார்கள்.

ப்ரியங்கா காந்திபடத்தின் காப்புரிமை Getty Images

பிபிசியிடம் பேசிய மணிசங்கர் அய்யர், "காங்கிரஸ் அதன் தலைமையை கேள்வி கேட்காது. அவர் ராஜிநாமா செய்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்" என்கிறார்.

காங்கிரஸில் தோல்விக்கு அதன் தலைமை காரணமல்ல என்று தெரிவிக்கும் அவர், "பிற காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என்கிறார்.

இது போன்ற கருத்தைதான் முன் வைக்கிறார் காங்கிரஸ் கட்சியின் லக்னோ செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேந்திர குமார் சிங். அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல. காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள், மோசமான பிரசார யுக்தியே தோல்விக்கு காரணம்." என்கிறார்.

பிராண்ட் மோதி

மோதி என்னும் பிராண்ட் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பல காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொது அவ்வாறான பிம்பம் ராகுலுக்கு இல்லை. அந்த விஷயத்தில் தாங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

ப்ரிஜேந்திர குமார் சிங், "மோதி தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி மக்களை சமாதானம் செய்ய முடிகிறது." என்கிறார்.

இதற்கு காரணமாக அவர் குறிப்பிடுவதும் மோதி எனும் பிம்பத்தைதான்.

ராகுலுக்கு எது பின்னடைவாக இருக்கிறதோ, அதுவேதான் மோதிக்கு கைகொடுக்கிறது.

ஆம். அது குடும்ப பின்னணி.

பெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல். இது வாரிசு அரசியல் எனும் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது.

மோதி எளிமையான குடும்ப பின்னணியில் வந்தவர். இந்த பின்னணி அவருக்கு வலுவான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனால், நிஜத்தில் ராகுல் மிக எளிமையானவர் என்கிறார்கள் காங்கிரஸார். அதே நேரம் எதிரிகளிடம் இருக்கும் கபடமும் தந்திரமும் ராகுலுக்கு இல்லை. அரசியலாக பார்த்தால் இது ஒரு குறைதான் என்கிறார்கள்.

ராகுலுக்கு தேவை ஓர் அமித்ஷா

இந்த தோல்விக்கு கட்சி ராகுலை குற்றஞ்சாட்டவில்லை.

இப்போது உண்மையில் ராகுலுக்கு தேவை ஓர் 'அமித் ஷா' என்கிறார் காங்கிரஸ்காரர் ஒருவர்.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் முதல் டெல்லி வரை மோதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு சூத்திரதாரி அமித் ஷா. அவரை போல ஒருவரை அடையாளம் காண்பதே வெற்றிக்கு உதவும் என்கிறார் அவர்.

அரசியலுக்கு வந்தது முதல் ராகுல் இறங்கு முகத்திலேயே இருக்கிறாரா என்றால்? - நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.

கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் ரீதியாக அவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது சமூக ஊடக குழுவும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இருக்கிறது.

பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வந்ததும் ராகுலுக்கு பலம்.

பின் என்னதான் பிரச்சனை?

விளக்குகிறார் காங்கிரஸ் தலைவர் விரேந்திர மதன்,

அவர், "எங்களது தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. எங்களது கொள்கைகளும் சிறப்பானது. ஆனால், நாங்கள் என்ன வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்தோமோ அது நடக்கவில்லை" என்கிறார்.

இப்போது எக்களுக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எங்களது தவறுகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-48406289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பன்  ஜே.ஆரின்  ஆட்டத்துக்கு துணை  போய் பலியானார்

மகன் மோடியின்  ஆட்டத்துக்கு

பலம்  சேர்க்கப்போகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்திக்கு தேவை அமித்சா இல்லை. ஒரு பெண்டாட்டி.

படிப்பும் இல்லை. சொந்த புத்தியோ, சொல்புத்தியோ இல்லை. 

(தேப்பனுக்கும் தான் )

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல் சட்டையினை தூக்கி, பூணூலை இழுத்துக் காட்டி, நான் பிரமணர்களுள் அதி உயர் பிராமணர், எனக்கு வோட்டு போடுங்கள் என்றார்.

அவர் சொன்ன வகைக்கு கீழான பிராமணர்களும், பிராமணர் அல்லாதோரும் (தலித் உள்பட) விக்கித்துப் போய், மோடி பக்கம் போய் விட்டனர்.

இதனால் இவருக்கு மேல கொஞ்சம் பிசகோ என்று பேசிக் கொண்டார்கள்.

ஊர் சுத்துறது. இடையில வந்து எலெக்சனிலே நிக்கிறது. தோக்கிறது, பிறகு ஊர் சுத்துறது.

ரெவெலெளி தொகுதி உத்தரபிரதேசத்தில், இந்திரா, சோனியா என்று வென்ற பரம்பரை தொகுதி.

அங்கே வெல்ல முடியாது என்று கேரளா வயநாட்டில் நின்றார்.

நினைத்தது போலவே அங்கே போட்டியிட சவால் விட்டு வந்த அமைச்சர் சிமிதி இரானியிடம் கேவலமாக தோற்றார். வயநாட்டில் வென்றார்.  

இவர் தலைவராக இருக்குமட்டும் காங்கிரஸ் தேறாது.

ஆனாலும், முள்ளிவாய்க்கால் பாவம் சும்மாவா விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா.. ராகுல்.. பிரியங்கா முற்றாக அரசியலில் இருந்து விலகி.. அம்மாவும்.. அப்பாவும் பாட்டியும் தாத்தாவும் மனித குலத்துக்கு எதிராக செய்த பாவங்களுக்கு பிராய்ச்சித்தம் தேடுவதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2019 at 6:44 PM, Nathamuni said:

ராகுல் காந்திக்கு தேவை அமித்சா இல்லை. ஒரு பெண்டாட்டி.

படிப்பும் இல்லை. சொந்த புத்தியோ, சொல்புத்தியோ இல்லை. 

(தேப்பனுக்கும் தான் )

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல் சட்டையினை தூக்கி, பூணூலை இழுத்துக் காட்டி, நான் பிரமணர்களுள் அதி உயர் பிராமணர், எனக்கு வோட்டு போடுங்கள் என்றார்.

அவர் சொன்ன வகைக்கு கீழான பிராமணர்களும், பிராமணர் அல்லாதோரும் (தலித் உள்பட) விக்கித்துப் போய், மோடி பக்கம் போய் விட்டனர்.

இதனால் இவருக்கு மேல கொஞ்சம் பிசகோ என்று பேசிக் கொண்டார்கள்.

ஊர் சுத்துறது. இடையில வந்து எலெக்சனிலே நிக்கிறது. தோக்கிறது, பிறகு ஊர் சுத்துறது.

ரெவெலெளி தொகுதி உத்தரபிரதேசத்தில், இந்திரா, சோனியா என்று வென்ற பரம்பரை தொகுதி.

அங்கே வெல்ல முடியாது என்று கேரளா வயநாட்டில் நின்றார்.

நினைத்தது போலவே அங்கே போட்டியிட சவால் விட்டு வந்த அமைச்சர் சிமிதி இரானியிடம் கேவலமாக தோற்றார். வயநாட்டில் வென்றார்.  

இவர் தலைவராக இருக்குமட்டும் காங்கிரஸ் தேறாது.

ஆனாலும், முள்ளிவாய்க்கால் பாவம் சும்மாவா விடும்.

இவர்கள் பிராமணர்களா? இவர்கள் வேறு ஒரு உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

இவர்கள் பிராமணர்களா? இவர்கள் வேறு ஒரு உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன்.

Ãhnliches Foto

இவர்கள் பிராமணர்கள் இல்லை என்று தான்... நானும் எங்கோ வாசித்தேன்.
தேர்தல் வந்தால்.... குல்லா  போடுறதும், பூணுல் போடுறதும், தேவாலயத்துக்கு போறதும்,
குடிசைக்குள் போய் கிழவியை....   கட்டிப் பிடிக்கிறதும், இந்திய அரசியல்வாதிகளின்  சர்க்கஸ் விளையாட்டு.

மேலே உள்ள படத்தில்... ஒருத்தன்,  சந்தடி சாக்கில...  கிழவி என்றும் பாராமல்,   நைசாக... இடுப்பிலயும்  கை வைக்கிறார்.  🤣 :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.