Jump to content

ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா - காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி.

காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

ராகுல் காந்தி

நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி.

இப்படி செழுமையான அரசியல் பின்புலம் கொண்டவர் ராகுல்.

2014ம் ஆண்டு தேர்தல்தான், காங்கிரஸ் அரசியல் பயணத்தில் மோசமான காலக்கட்டமாக பார்க்கப்பட்டது. 2019ம் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல தேர்தல் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களை பெற்றுள்ள போது காங்கிரஸ் கூட்டணி வெறும் 85 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ராகுலே தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்று இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி: காந்தி வம்சத்தின் வீழ்ச்சியா?

இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வுயுற்று இருக்கிறார் அவர்.

உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் 8 பேர் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சரி இந்த தேர்தல் விஷயத்திற்கு வருவோம்.

இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில் வெல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்திருக்கிறது.

காங்கிரஸின் தேவை என்ன?

தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறினார்.

காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க தேவையில்லை என்று கூறிய ராகுல், "யாரும் அச்சப்பட தேவையில்லை. கடுமையாக வேலை செய்வோம். இறுதியில் வெல்வோம்" என்றார்.

நாளிதழ்களில் வரும் செய்திகள் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இன்று நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸின் தோல்வி, எடுக்க வேண்டிய பிற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படுமென தெரிகிறது.

உத்தர பிரதேச தலைநகரில் ஒரு காங்கிரஸ்காரர் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். அவர், "எங்களுடைய நம்பகத்தன்மை மிக மோசமாக உள்ளது. நாங்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. எங்கள் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை" என்றார்.

"மோதியும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் அவரை நம்புகிறார்கள்" என்று கூறியாவரிடம், அதற்கான காரணத்தை கேட்டோம்.

"எங்களுக்கும் அது புரியவில்லை" என்று தெரிவித்தார்.

கவலைக்கிடமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து.

பல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துக வருவ்து முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை புறந்தள்ளியே வருகிறார்கள்.

ப்ரியங்கா காந்திபடத்தின் காப்புரிமை Getty Images

பிபிசியிடம் பேசிய மணிசங்கர் அய்யர், "காங்கிரஸ் அதன் தலைமையை கேள்வி கேட்காது. அவர் ராஜிநாமா செய்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்" என்கிறார்.

காங்கிரஸில் தோல்விக்கு அதன் தலைமை காரணமல்ல என்று தெரிவிக்கும் அவர், "பிற காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என்கிறார்.

இது போன்ற கருத்தைதான் முன் வைக்கிறார் காங்கிரஸ் கட்சியின் லக்னோ செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேந்திர குமார் சிங். அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல. காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள், மோசமான பிரசார யுக்தியே தோல்விக்கு காரணம்." என்கிறார்.

பிராண்ட் மோதி

மோதி என்னும் பிராண்ட் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பல காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொது அவ்வாறான பிம்பம் ராகுலுக்கு இல்லை. அந்த விஷயத்தில் தாங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

ப்ரிஜேந்திர குமார் சிங், "மோதி தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி மக்களை சமாதானம் செய்ய முடிகிறது." என்கிறார்.

இதற்கு காரணமாக அவர் குறிப்பிடுவதும் மோதி எனும் பிம்பத்தைதான்.

ராகுலுக்கு எது பின்னடைவாக இருக்கிறதோ, அதுவேதான் மோதிக்கு கைகொடுக்கிறது.

ஆம். அது குடும்ப பின்னணி.

பெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல். இது வாரிசு அரசியல் எனும் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது.

மோதி எளிமையான குடும்ப பின்னணியில் வந்தவர். இந்த பின்னணி அவருக்கு வலுவான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனால், நிஜத்தில் ராகுல் மிக எளிமையானவர் என்கிறார்கள் காங்கிரஸார். அதே நேரம் எதிரிகளிடம் இருக்கும் கபடமும் தந்திரமும் ராகுலுக்கு இல்லை. அரசியலாக பார்த்தால் இது ஒரு குறைதான் என்கிறார்கள்.

ராகுலுக்கு தேவை ஓர் அமித்ஷா

இந்த தோல்விக்கு கட்சி ராகுலை குற்றஞ்சாட்டவில்லை.

இப்போது உண்மையில் ராகுலுக்கு தேவை ஓர் 'அமித் ஷா' என்கிறார் காங்கிரஸ்காரர் ஒருவர்.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் முதல் டெல்லி வரை மோதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு சூத்திரதாரி அமித் ஷா. அவரை போல ஒருவரை அடையாளம் காண்பதே வெற்றிக்கு உதவும் என்கிறார் அவர்.

அரசியலுக்கு வந்தது முதல் ராகுல் இறங்கு முகத்திலேயே இருக்கிறாரா என்றால்? - நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.

கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் ரீதியாக அவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது சமூக ஊடக குழுவும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இருக்கிறது.

பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வந்ததும் ராகுலுக்கு பலம்.

பின் என்னதான் பிரச்சனை?

விளக்குகிறார் காங்கிரஸ் தலைவர் விரேந்திர மதன்,

அவர், "எங்களது தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. எங்களது கொள்கைகளும் சிறப்பானது. ஆனால், நாங்கள் என்ன வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்தோமோ அது நடக்கவில்லை" என்கிறார்.

இப்போது எக்களுக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எங்களது தவறுகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-48406289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பன்  ஜே.ஆரின்  ஆட்டத்துக்கு துணை  போய் பலியானார்

மகன் மோடியின்  ஆட்டத்துக்கு

பலம்  சேர்க்கப்போகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்திக்கு தேவை அமித்சா இல்லை. ஒரு பெண்டாட்டி.

படிப்பும் இல்லை. சொந்த புத்தியோ, சொல்புத்தியோ இல்லை. 

(தேப்பனுக்கும் தான் )

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல் சட்டையினை தூக்கி, பூணூலை இழுத்துக் காட்டி, நான் பிரமணர்களுள் அதி உயர் பிராமணர், எனக்கு வோட்டு போடுங்கள் என்றார்.

அவர் சொன்ன வகைக்கு கீழான பிராமணர்களும், பிராமணர் அல்லாதோரும் (தலித் உள்பட) விக்கித்துப் போய், மோடி பக்கம் போய் விட்டனர்.

இதனால் இவருக்கு மேல கொஞ்சம் பிசகோ என்று பேசிக் கொண்டார்கள்.

ஊர் சுத்துறது. இடையில வந்து எலெக்சனிலே நிக்கிறது. தோக்கிறது, பிறகு ஊர் சுத்துறது.

ரெவெலெளி தொகுதி உத்தரபிரதேசத்தில், இந்திரா, சோனியா என்று வென்ற பரம்பரை தொகுதி.

அங்கே வெல்ல முடியாது என்று கேரளா வயநாட்டில் நின்றார்.

நினைத்தது போலவே அங்கே போட்டியிட சவால் விட்டு வந்த அமைச்சர் சிமிதி இரானியிடம் கேவலமாக தோற்றார். வயநாட்டில் வென்றார்.  

இவர் தலைவராக இருக்குமட்டும் காங்கிரஸ் தேறாது.

ஆனாலும், முள்ளிவாய்க்கால் பாவம் சும்மாவா விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா.. ராகுல்.. பிரியங்கா முற்றாக அரசியலில் இருந்து விலகி.. அம்மாவும்.. அப்பாவும் பாட்டியும் தாத்தாவும் மனித குலத்துக்கு எதிராக செய்த பாவங்களுக்கு பிராய்ச்சித்தம் தேடுவதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2019 at 6:44 PM, Nathamuni said:

ராகுல் காந்திக்கு தேவை அமித்சா இல்லை. ஒரு பெண்டாட்டி.

படிப்பும் இல்லை. சொந்த புத்தியோ, சொல்புத்தியோ இல்லை. 

(தேப்பனுக்கும் தான் )

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல் சட்டையினை தூக்கி, பூணூலை இழுத்துக் காட்டி, நான் பிரமணர்களுள் அதி உயர் பிராமணர், எனக்கு வோட்டு போடுங்கள் என்றார்.

அவர் சொன்ன வகைக்கு கீழான பிராமணர்களும், பிராமணர் அல்லாதோரும் (தலித் உள்பட) விக்கித்துப் போய், மோடி பக்கம் போய் விட்டனர்.

இதனால் இவருக்கு மேல கொஞ்சம் பிசகோ என்று பேசிக் கொண்டார்கள்.

ஊர் சுத்துறது. இடையில வந்து எலெக்சனிலே நிக்கிறது. தோக்கிறது, பிறகு ஊர் சுத்துறது.

ரெவெலெளி தொகுதி உத்தரபிரதேசத்தில், இந்திரா, சோனியா என்று வென்ற பரம்பரை தொகுதி.

அங்கே வெல்ல முடியாது என்று கேரளா வயநாட்டில் நின்றார்.

நினைத்தது போலவே அங்கே போட்டியிட சவால் விட்டு வந்த அமைச்சர் சிமிதி இரானியிடம் கேவலமாக தோற்றார். வயநாட்டில் வென்றார்.  

இவர் தலைவராக இருக்குமட்டும் காங்கிரஸ் தேறாது.

ஆனாலும், முள்ளிவாய்க்கால் பாவம் சும்மாவா விடும்.

இவர்கள் பிராமணர்களா? இவர்கள் வேறு ஒரு உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

இவர்கள் பிராமணர்களா? இவர்கள் வேறு ஒரு உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன்.

Ãhnliches Foto

இவர்கள் பிராமணர்கள் இல்லை என்று தான்... நானும் எங்கோ வாசித்தேன்.
தேர்தல் வந்தால்.... குல்லா  போடுறதும், பூணுல் போடுறதும், தேவாலயத்துக்கு போறதும்,
குடிசைக்குள் போய் கிழவியை....   கட்டிப் பிடிக்கிறதும், இந்திய அரசியல்வாதிகளின்  சர்க்கஸ் விளையாட்டு.

மேலே உள்ள படத்தில்... ஒருத்தன்,  சந்தடி சாக்கில...  கிழவி என்றும் பாராமல்,   நைசாக... இடுப்பிலயும்  கை வைக்கிறார்.  🤣 :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.