Jump to content

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை


Recommended Posts

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை

USA-SriLanka-Flag-300x200.jpgஅமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்கா இடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்பாட்டின் சில விதிமுறைகள் குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதே, சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

சோபா உடன்பாடு தொடர்பாக, முன்னதாக கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும், சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

http://www.puthinappalakai.net/2019/05/26/news/38172

Link to comment
Share on other sites

இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட நிலையிலும்

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென மைத்திரி உத்தரவு

தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மகாநாயகத்த் தேரா்களைச் சந்தித்தும் பயனில்லை
 
 
main photo
 
சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கூறியுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துடன் அமெரிக்கா செய்யவுள்ள ஒப்பந்தங்களுக்கு கண்டி, மல்லவத்துப் பௌத்த பீடாதிபதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில். கொழும்பில் உள்ள அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற 23 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்து விளக்கமளித்திருந்தார். ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாதெனவும் அமெரிக்கத்தூதுவர் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டாமென மைத்திரிபால சிறிசேன திலக்மாரப்பனவிடம் உத்தரவிட்டுள்ளார்.

 

 

மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முடியாதெனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

சோபா உடன்படிக்கை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகள் கொழும்பில் பேச்சு நடத்தியிருந்தனர். ரணில் அரசாங்கமும் அந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்து கையொப்பமிட முடிவு செய்திருந்தது.

சென்ற 16 ஆம் திகதி வோஷிங்டனில் அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளோடு நடத்திய கலந்துரையாடலிலும் சோபா ஒப்பந்தம் குறித்துப் பேசியிருந்தார்.

 

பௌத்த தேசியவாத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையையும் தொடர்ச்சியாகத் தக்கவைக்கும் நோக்கில் இவ்வாறான இரு வகையான அணுகுமுறைகளையும், பல்வகைப்பட்ட முகங்களையும் சர்வதேச அரங்கில் இலங்கை வெளிப்படுத்தி வருவதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.

 

பாதுகாப்பு, படைகளுக்கான ஒத்துழைப்பு, ஆலோசணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கிய சோபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென அமெரிக்க உயர் அதிகாரிகள் வோஷிங்கடனில் வலியுறுத்தியிருந்தனர்.

கொழும்பு திரும்பிய அமைச்சர் திலக் மாரப்பன மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். இதன்போது தனது அனுமதியின்றி எந்தவொரு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட வேண்டமென கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உ்ள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற வாரம் சந்தித்து விளக்கமளித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் சார்பில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் பாதகாப்புச் செய்லாளர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணிவருகின்றார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பதை அமெரிக்காவும் விரும்புகின்றது.

இந்த நிலையில். மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையி்ன் பிரதான அரசியல் கட்சிகளின் சிங்களத் தலைவர்கள், சீனாவுடன் உறவைப் பேணுகின்ற அதேவேளை, அமொிக்காவுடனும் நல்லுறவைப் பேணவே விரும்புவா் என்பது கடந்தகால வரலாறுகள்.

பௌத்த தேசியவாத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையையும் தொடர்ச்சியாகத் தக்கவைக்கும் நோக்கில் இவ்வாறான இரண்டு வகையான அணுகுமுறைகளையும், பல்வகைப்பட்ட முகங்களையும் சர்வதேச அரங்கில் இலங்கை வெளிப்படுத்தி வருவதாகவே அவதானிகளும் கூறுகின்றனர்.

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.