Jump to content

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!

29.jpg

தனியன்

தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன.

விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த ஓராண்டில் (2006) அவரது கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.4% வாக்குகளைப் பெறுகிறது.

அடுத்து அவர் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 10.3%.

இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் 3.87%.

கமல்ஹாசன் கட்சி பெற்ற வாக்குகள் 3.78%.

இதே தேர்தலில் “மற்ற” கட்சிகள் 4.94% வாங்கியிருக்கின்றன.

NOTAவுக்கு 1.28% வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அதாவது “மற்ற” கட்சிகளை விட கமலும் சீமானும் குறைவாகத்தான் வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். NOTAவை விட மூன்று மடங்கு வாக்குகளை அதிகம் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் இவர்களுக்கான ஒரே ஆறுதல்.

இதுதான் தமிழக அரசியலின் யதார்த்தம்.

29a.jpg

விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்துத் தேர்தல்களைத் தனியாகச் சந்தித்தபோது ஒருபக்கம் கலைஞர், மறுபக்கம் ஜெயலலிதா என்கிற இரு பெரும் ஆளுமைகளை எதிர்த்துத் தன்னந்தனியாக 8.3% முதல் 10.3% வாக்குகளை வாங்கினார்.

பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதியில் அவரே நின்று, வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டசபைக்குச் சென்றார்.

கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.

விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?

ஒரே காரணம் நம்பகத்தன்மை.

தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.

கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை.

மாறாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோதும் 2006 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான மூன்றாவது கட்சியாகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். அதை மக்களும் நம்பினார்கள். அதனாலேயே அவருக்கு இரட்டை இலக்க வாக்கு சதவிகிதம் கிடைத்தது.

ஆனால், மக்கள் தன் மீது வைத்த அந்த அதீத நம்பிக்கையை விஜயகாந்த் 2011 தேர்தலில் தானாகவே குலைத்துக்கொண்டார். தன்னையும் தன் கட்சியையும் ஜெயலலிதாவிடம் நல்ல விலைக்கு அவரே விற்றுக்கொண்டார், சோ ராமசாமி மூலம். அன்றே போனது விஜயகாந்த் மீதான மக்கள் நம்பிக்கை.

29b.jpg

விளைவு, அந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி வென்று அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வானாலும் அவரது கட்சியின் அரசியல் எதிர்காலம் அந்தத் தேர்தலோடு முடிந்துபோனது. கட்சியின் வீழ்ச்சியும் தொடர்கதையானது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் வெறும் 2.19%. இனி, அந்தக் கட்சிக்கு அரசியலில் மீட்சியில்லை.

இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தையும் மாநிலம் தழுவிய கட்சி அமைப்பையும் கொண்டிருந்த விஜயகாந்த் கட்சியின் கதையே அதுவென்றால் அந்த இரண்டும் இல்லாத கமலும் சீமானும் தான் தமிழக அரசியலின் அடுத்த மாற்றுச் சக்திகள் என்கிற மாய்மாலமெல்லாம் சிரிப்பைக்கூட மூட்டாத நமுத்துப்போன நகைச்சுவைகள்.

மாற்று என்பது புதிய முழக்கம் அல்ல

உண்மையில் தமிழக அரசியலில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று அரசியல் உருவாக வேண்டும் என்பது புதிய கோரிக்கையே அல்ல. மிகவும் பழைய கோரிக்கை.

திமுக, அதிமுக இரண்டையும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று காமராஜர் சொன்னதாகக் கூறப்படும் 1970களிலிருந்து அந்த மூன்றாவது மாற்றுக்கான முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

முதலில் அதை காமராஜரே முயன்றார். பின்னர் மூப்பனார் முயன்றார். சிவாஜி முயன்றார். வைகோ முயன்றார். விஜயகாந்த் முயன்றார். இவர்கள் தவிர வாழப்பாடி, டி ராஜேந்தர் என வேறு பலரும் முயன்றார்கள். ஒருவருமே தேறவில்லை.

கட்டக் கடைசியாக மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 1989 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய 21.8% வாக்குகள்தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக்கும் மாற்று அரசியல் கட்சி வாங்கிய அதிகபட்ச வாக்குகள். அந்தச் சாதனையை வேறு எந்த மாற்று அரசியல் கட்சியும் இன்றுவரை தாண்டவில்லை என்பது மட்டுமல்ல இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தைக்கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை. எல்லாம் ஒற்றை இலக்கில் வாக்குகள் வாங்கி ஒட்டுமொத்தமாய் கட்டுத்தொகையைப் பறிகொடுக்கும் அரசியல் ஒற்றை ரோசாக்கள்தான்.

என்ன காரணம்?

மாற்றுச் சக்தி எது, மாய்மால கும்பல் எது என்பதைத் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்று அரசியல் சக்தி என்று அவர்கள் கட்டக்கடைசியாக அடையாளம் கண்டது எம்ஜிஆரை. அது நடந்தது 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில். 42 ஆண்டுகளாக அப்படியொரு மாற்று அரசியல் தலைமையைத் தமிழர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. கிடைத்தால் ஏற்கத் தயாராகவே இருக்கிறார்கள். அதுவும் ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்கிற குழப்பம் தொடரும் சூழலில் மாற்று அரசியலுக்கும் மாற்று அரசியல் தலைமைக்குமான வெற்றிடம் இருப்பதாகக் கருதுவதில் தவறில்லை.

ஆனால், அரசியலில் உண்மையான மாற்றுச் சக்திகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தமிழக வாக்காளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு சாட்சியம்.

 

 

https://minnambalam.com/k/2019/05/26/29

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

😋

உவர் கிருபண்ணா தேடிப் போடும் உந்த புதிய இணையத்தளங்களின் கதாநாயகனே இவர் தான். இதெல்லாம் முதலமைச்சர் கனவு காணுது... வைகோ இதுகளை எல்லாம் முதலமைச்சர் ஆக்காமல் ஓய மாட்டாராம்.

வைகோ தன் வாயாலேயே கெட்டுக் கொண்டிருக்கிறார். தன் மதிப்பை தானே இழக்கப் பண்ணுறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

86+9= 97

ஸ்ராலின்...  தமிழில்  தான்  "வீக்" என்று பார்த்தால்,
கணக்கிலும்  "வீக்" போலை கிடக்கு. :grin:

ஸ்ராலின் பொன்  மொழிகள்:

  •  ஆனை  வரும் முன்னே... மணியோசை வரும் பின்னே.
  •  பூனை...  மேல்,  மதில் மாதிரி...  
Link to comment
Share on other sites

முதன்மை கட்சிகள் ஒரு மூன்றாம் கட்சி வளர்வதை விரும்பியதில்லை. அவர்கள் தங்களுக்குள் இதற்காக விட்டுக்கொடுப்புக்களை கூட செய்கிறார்கள். 

தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பை கூட ஒருவரும் அதிபர் பதவியை வெல்லுவார் என ஆரம்பத்தில் எதிர்வு கூறவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கிருபன் பதிந்துள்ள கட்டுரையின் கருத்து இன்றையநிலையில் சரியே. அதாவது திமுக/அதிமுக தவிர யாருக்கு நம்பகத்தன்மை இல்லை.

ஆனால் விஜயகாந்த் செய்தது போல இருந்த நம்பகத்தன்மையையும் பாழடிக்காமல் தொடர்ந்து தனியே நிண்டால் கமல், சீமான் இருவராலும் தொடர்ந்து முன்னேற முடியும்.

சீமானே சொன்னது போல, நாத வின் பல கொள்கைகளை ஈயடிச்சான் கொப்பி அடிச்சவர் கமல். ஆனால் அதே கொள்கைக்காக சீமானுக்கு போட விரும்பாத 4% கமலுக்கு போட்டிருக்கு. அதே போலத்தான் சீமானுக்கு போட்ட 4%. 

சீமானையும் கமலையும் பிரிக்கும் ஒரே விசயம் தமிழ்தேசியம் மட்டுமே.

சீமான் சரியான மூலோபாயத்தை, தந்திரோபாயத்தை கடைப்பிடித்தால், முதலில் கமலின் வோட்டுகளையும், பின்னர், பாமக, மதிமுக, விசிக, அமமுக,  வோட்டுக்களையும் தம்பக்கம் திருப்பலாம்.

இப்படியே ஒரு threshold ஐ தாண்டிவிட்டால், அப்புறம் வளர்சி சுலபமாயிருக்கும்.

இது மறுவழமாக கமலுக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®à¯à®à¯à®¯à¯ ..... à®à®¿à®´à®¿à®¤à¯à®¤ ஸà¯à®°à®¾à®²à®¿à®©à¯ Bildergebnis für à®à®à¯à®à¯à®¯à¯ ..... à®à®¿à®´à®¿à®¤à¯à®¤ ஸà¯à®°à®¾à®²à®¿à®©à¯

ஸ்ராலின் தான்...  மீத்தேன்  திட்டத்தை,
வாசிக்காமல், கை  எழுத்துப் போட்ட புண்ணியவான்.
இவரின் தகப்பன்,  இவரை... நல்ல பள்ளிக்  கூடத்தில்  சேர்த்திருக்கலாம்.
ஹ்ம்ம்.... அவங்களுக்கு,  அப்ப  வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்.

இப்ப... வசதி வந்தவுடன்,  தமிழ்நாட்டின்...
தலைவர் ஆக.... ஆசை வந்திட்டுதோ ?
உதயநிதி... வேறை... வரிசையில நிற்கிறான்...

உங்களுக்கு... உதைப்பதை, தவிர.. வேறு வழியில்லை.
சட்ட மன்றத்தில், எதிர்க் கட்சி தலைவராக... இருந்து,  
சட்டையை ..... கிழித்துக் கொண்டு, வெளியே  வாருங்கள்.

கொழுப்பு... முத்திய அரசியல், இனியும் செய்ய வேண்டாம்.
அது, உங்களுக்கு... ஆபத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2019 at 7:35 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®à¯à®à¯à®¯à¯ ..... à®à®¿à®´à®¿à®¤à¯à®¤ ஸà¯à®°à®¾à®²à®¿à®©à¯ Bildergebnis für à®à®à¯à®à¯à®¯à¯ ..... à®à®¿à®´à®¿à®¤à¯à®¤ ஸà¯à®°à®¾à®²à®¿à®©à¯

ஸ்ராலின் தான்...  மீத்தேன்  திட்டத்தை,
வாசிக்காமல், கை  எழுத்துப் போட்ட புண்ணியவான்.
இவரின் தகப்பன்,  இவரை... நல்ல பள்ளிக்  கூடத்தில்  சேர்த்திருக்கலாம்.
ஹ்ம்ம்.... அவங்களுக்கு,  அப்ப  வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்.

இப்ப... வசதி வந்தவுடன்,  தமிழ்நாட்டின்...
தலைவர் ஆக.... ஆசை வந்திட்டுதோ ?
உதயநிதி... வேறை... வரிசையில நிற்கிறான்...

உங்களுக்கு... உதைப்பதை, தவிர.. வேறு வழியில்லை.
சட்ட மன்றத்தில், எதிர்க் கட்சி தலைவராக... இருந்து,  
சட்டையை ..... கிழித்துக் கொண்டு, வெளியே  வாருங்கள்.

கொழுப்பு... முத்திய அரசியல், இனியும் செய்ய வேண்டாம்.
அது, உங்களுக்கு... ஆபத்தானது.

அன்று அந்த‌ திருட‌ன் வ‌ந்த‌ ர‌யில‌ கொழுத்தி இருந்தா , த‌மிழ் நாட்டுக்கு எப்ப‌வோ விடிவு கால‌ம் பிற‌ந்து இருக்கும் / 

திமுக்கா
பமாகா
மாதிமுக்கா / இந்த‌ மூன்று க‌ட்சிக‌ளும் அருவ‌ருக்க‌ த‌க்க‌ க‌ட்சிய‌ல் /

இவ‌ர்க‌ள் இன்னும் எவ‌ள‌வு கால‌த்துக்கு தான் ம‌க்க‌ளை ஏமாத்த‌ போகிறார்க‌ள் , 

கொள்கை இல்லா க‌ட்சி என்றால் இந்த‌ மூன்று க‌ட்சியும் தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.