Jump to content

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில ஆயிரம் பிரச்சனைகள் இருக்குதாம்.🙄

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

மாவட்ட ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் எண்ணிக்கை விபரங்கள்!!

  • அம்பாறை மாவட்டம் 282484 (43.6%) பேர்
  • கொழும்பு மாவட்டம் 242728 (10.5%) பேர்
  • கண்டி மாவட்டம் 191159 (14.0%) பேர்
  • திருகோணமலை மாவட்டம் 152854 (40.4%) பேர்
  • புத்தளம் மாவட்டம் 146820 (19.3%) பேர்
  • மட்டக்களப்பு மாவட்டம் 133844 (25.5%) பேர்
  • குருணாகல் மாவட்டம் 113560 (7.1%) பேர்
  • களுத்துறை மாவட்டம் 112276 (9.2%) பேர்
  • கம்பஹா மாவட்டம் 95501 (4.2%) பேர்
  • அநுராதபுரம் மாவட்டம் 70248 (8.2%) பேர்
  • கேகாலை மாவட்டம் 57952 (6.9%) பேர்
  • பதுளை மாவட்டம் 45886 (5.7%) பேர்
  • மாத்தளை மாவட்டம் 44113 (9.1%) பேர்
  • காலி மாவட்டம் 38591 (3.6%) பேர்
  • பொலன்னறுவை மாவட்டம் 29060 (7.2%) பேர்
  • மாத்தறை மாவட்டம் 25300 (3.1%) பேர்
  • இரத்தினபுரி மாவட்டம் 21550 (2.0%) பேர்
  • நுவரெலியா மாவட்டம் 17422 (2.5%) பேர்
  • மன்னார் மாவட்டம் 16087 (18.2%) பேர்
  • வவுனியா மாவட்டம் 11700 (6.8%) பேர்
  • மொனராகலை மாவட்டம் 9552 (2.1%) பேர்
  • அம்பாந்தோட்டை மாவட்டம் 6556 (1.1%) பேர்
  • யாழ்ப்பாணம் மாவட்டம் 2139 (0.4%) பேர்
  • முல்லைத்தீவு மாவட்டம் 1760 (1.9%) பேர்
  • கிளிநொச்சி மாவட்டம் 678 (0.6%) பேர்

https://www.tamilarul.net/2019/05/Muslim.html?fbclid=IwAR3Ve8WJ0RzCNOWgsAkHXBAz7av0WyKwqkDy7SLNduwUbTYFwfUgzzxElSs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

யாழ்ப்பாணம் மாவட்டம் 2139 (0.4%) பேர்

இது பொய் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

On 5/26/2019 at 11:08 AM, பெருமாள் said:

கனகாலத்துக்கு பிறகு சும்மான் அழ தொடங்கி உள்ளார்  இந்த திரி கொழுந்துவிட்டு எரியும் அதற்கு வாழ்த்துக்கள் .

தீர்க்கதரிசி பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎29‎/‎2019 at 6:51 PM, Sasi_varnam said:

மாவீரர் நாளை ஒழுங்கு படுத்துபவர்களுக்கு பொதுவாக மாவீரர் யார், தேசப்பற்றாளர் யார், நாட்டுப்பற்றாளர் யார் என்ற ஒரு தெளிவு நிச்சியம் இருக்கும்.  நூற்றுக்கணக்கான மாவீரர்களின் படங்களை வரிசைப்படுத்தி வைக்கும் பொழுது ஒரு தவறு கூட நேர்ந்திருக்கலாம். இவரை அவராகவும், அவரை இவராகவும் அடையாளப்படுத்தி இருக்கலாம். 
முதலில் இந்த கருத்தை சொன்னவர் மாவீரர் நாளுக்கு போனாரா? உண்மையில் மருத்துவரை அப்படிதான் அடையாளப்படுத்தி இருந்தார்களா? அல்லது யாரோ சொல்வழி கேட்டதை வைத்துக்கொண்டு தான் கதைக்கிறோமா? ஆதாரங்கள் எதுவும் இருக்கா? 
தெரியவில்லை...தெளிவில்லை..

இதைப்பற்றியெல்லாம் தூக்கிப்பிடித்துக்கொண்டு கதைப்பதற்கும், சொன்ன கருத்துக்கு வலு சேர்க்கவேண்டும் என்று தேடித்தேடி சேறடிப்பதும், நாறடிப்பதும் உங்களின் விதண்டாவாதத்தையும் / வக்கிர புத்தியையும் தான் காட்டி நிற்கிறது.

சுமத்திரனை,சம்மந்தனை பற்றி எல்லோரும் விமர்சிக்கினம்..ஆதாரம் வைச்சு கொண்டா விமர்சிக்கினம்?...உங்களுக்கு பிடிக்காதவர்களை இங்கு விமர்சிக்கும் போது மெளனமாய் பார்த்திட்டு பேசாமல் போகும் நீங்கள்...இது திரியில் வந்து நியாயம் கதைக்கும் அளவிற்கு சரியான ஆள் இல்லை 

On ‎5‎/‎31‎/‎2019 at 10:31 AM, விசுகு said:

மிகவும்  பொறுப்பற்ற

அநாகரீகமான  பதில்

ஒருவரைப்பற்றி

அதிலும் தாயக  விடுதலை  சார்ந்து

தனது இயலுமைக்கும்  அதிகமாக  உழைத்த (அங்கயீனர்)

ஒருவரைப்பற்றி  தாறுமாறாக கருத்தை விதைத்துவிட்டு

இவ்வாறு விலகிச்செல்வது 

உங்களை சமூகத்தில் வேறு  தரத்துக்கு  கொண்டு செல்லும்.

அண்ணா, சுமோ தன்னுடைய கருத்தை எழுத முன்னரே "நரம்பிலாத நாக்கு" என்று எழுதியிட்டினம்...வேற யாரும் எழுதியிருந்தாலும் பரவாயில்லை.கோசானிடம் இருந்து சத்தியமாய் இதை நான் எதிர் பார்க்கவில்லை.(அவர் உண்மையிலேயே வக்கீலாய் இருந்தால் ஒரு பக்க நியாயத்தை மட்டும் தான் கேட்பார் என்று நினைக்கிறேன்.)...அதற்கு பிறகும் இதில வந்து எழுத  சுமோவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்

On ‎5‎/‎31‎/‎2019 at 11:20 AM, தனிக்காட்டு ராஜா said:

கர்ணா  கொடுத்த இந்த பேட்டியே பொய்யானது (செய்திக்கு மட்டும்) இதுக்குள்ள ஏன் குத்தி முறியுறியள் உன்மையானது எல்லோருக்கும் தெரியும் ஏன் வெளியேற்றினார்கள் என்று 

வெளியேற்றினார்களா?   வெளியேறினாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சுமத்திரனை,சம்மந்தனை பற்றி எல்லோரும் விமர்சிக்கினம்..ஆதாரம் வைச்சு கொண்டா விமர்சிக்கினம்?...உங்களுக்கு பிடிக்காதவர்களை இங்கு விமர்சிக்கும் போது மெளனமாய் பார்த்திட்டு பேசாமல் போகும் நீங்கள்...இது திரியில் வந்து நியாயம் கதைக்கும் அளவிற்கு சரியான ஆள் இல்லை 

அண்ணா, சுமோ தன்னுடைய கருத்தை எழுத முன்னரே "நரம்பிலாத நாக்கு" என்று எழுதியிட்டினம்...வேற யாரும் எழுதியிருந்தாலும் பரவாயில்லை.கோசானிடம் இருந்து சத்தியமாய் இதை நான் எதிர் பார்க்கவில்லை.(அவர் உண்மையிலேயே வக்கீலாய் இருந்தால் ஒரு பக்க நியாயத்தை மட்டும் தான் கேட்பார் என்று நினைக்கிறேன்.)...அதற்கு பிறகும் இதில வந்து எழுத  சுமோவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்

வெளியேற்றினார்களா?   வெளியேறினாரா?

ரதி,

தயவுசெய்து நான் “நரம்பில்லாத நாக்கு” என்று எழுத முன்னர் இந்த திரியில் வைத்தியர் மூர்தி பற்றி என்ன எழுதபட்டது என்பதை மீளவும் வாசியுங்கள். 

நான் உண்மையிலே வக்கீலா அல்லது டுபாகூரா என்பதல்ல முக்கியம். என் மனதுக்கு அநியாயம் என்று பட்டதை சுட்டிக் காட்டினேன். அதைவிட ஒரு அப்பழுக்கற்ற மனிதர், நான் அவதானித்து உண்மையிலேயே சேவை மனப்பாங்குடைய, இனப்பற்றாளர் என நான் நினைக்கும் ஒருவரை பற்றி, தன்னை அவர் தற்காத்து பேச முடியாத நிலையில், எழுந்தமானமாக, எல்லாரும் இப்படித்தான், சுனாமி நேரம் நடந்தது தெரியாதோ, என்று பூடகமாக விடுப்பு கதைப்பதை மட்டுமே நான் தட்டிக் கேட்டேன்.

நான் இந்த திரியில் 2 தடவைதான் எழுதியுள்ளேன். இரெண்டு தடவையும் வைத்தியர் மூர்த்தி மீதான சேறடிப்பை கேள்வி கேட்டது மட்டுமே நான் செய்தது.

சுமோ நான் எழுதியதால்தான் எழுதாமல் விட்டா என அவவே சொல்லவில்லை. இதே திரியில் நான் எழுதியதற்கு பதிலும் எழுதி அதன் பின்னரும் பலநாட்கள் அவ எழுதியிருக்கிறா.

இடையில நீங்கள் குறுக்க விழுந்து ஏன் ஒப்பாரி வைக்கிறியள் எண்டதுதான் எனக்கு விளங்கேல்ல.

கோசானிடம் இதை நீங்கள் எதிர்பார்க்காமல் இருக்கலாம், ஆனால் அது கோசான் இப்படி பட்டவர் அல்லது இன்ன குறூப் ஆள் என்று என்னை பற்றி தாமாகவவே கற்பனை செய்து கொண்டவர்களின் பார்வைக் கோளாறு.

புலிகளின் தலைமையை (மட்டுமே) நான் விமர்சித்துள்ளேன். மற்றயது போருக்கு பின் வெளிநாட்டில் புலிவேசம் கட்டுவோரையும் விமர்சிப்பேன். அதில் மாற்றமில்லை. ஆனால் அடுத்த நிலைத் தலைவர்கள், போரளிகளையோ அல்லது பாலாசிங்கம் மூர்தி போன்றோரையோ நான் விமர்சிப்பதில்லை.

கூடவே ஒரு ஆளை எனக்குப் பிடிக்கும் என்பதற்க்காக பச்சை இனத் துரோகம் செய்தவர்களின் நிலைப்பாட்டை சமயோசிதம் என்றோ, அல்லது பிரதேசவாதத்தின் எதிர்வினை என்றோ சப்பைக் கட்டும் ஆளும் இல்லை நான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ரதி,

தயவுசெய்து நான் “நரம்பில்லாத நாக்கு” என்று எழுத முன்னர் இந்த திரியில் வைத்தியர் மூர்தி பற்றி என்ன எழுதபட்டது என்பதை மீளவும் வாசியுங்கள். 

நான் உண்மையிலே வக்கீலா அல்லது டுபாகூரா என்பதல்ல முக்கியம். என் மனதுக்கு அநியாயம் என்று பட்டதை சுட்டிக் காட்டினேன். அதைவிட ஒரு அப்பழுக்கற்ற மனிதர், நான் அவதானித்து உண்மையிலேயே சேவை மனப்பாங்குடைய, இனப்பற்றாளர் என நான் நினைக்கும் ஒருவரை பற்றி, தன்னை அவர் தற்காத்து பேச முடியாத நிலையில், எழுந்தமானமாக, எல்லாரும் இப்படித்தான், சுனாமி நேரம் நடந்தது தெரியாதோ, என்று பூடகமாக விடுப்பு கதைப்பதை மட்டுமே நான் தட்டிக் கேட்டேன்.

நான் இந்த திரியில் 2 தடவைதான் எழுதியுள்ளேன். இரெண்டு தடவையும் வைத்தியர் மூர்த்தி மீதான சேறடிப்பை கேள்வி கேட்டது மட்டுமே நான் செய்தது.

சுமோ நான் எழுதியதால்தான் எழுதாமல் விட்டா என அவவே சொல்லவில்லை. இதே திரியில் நான் எழுதியதற்கு பதிலும் எழுதி அதன் பின்னரும் பலநாட்கள் அவ எழுதியிருக்கிறா.

இடையில நீங்கள் குறுக்க விழுந்து ஏன் ஒப்பாரி வைக்கிறியள் எண்டதுதான் எனக்கு விளங்கேல்ல.

கோசானிடம் இதை நீங்கள் எதிர்பார்க்காமல் இருக்கலாம், ஆனால் அது கோசான் இப்படி பட்டவர் அல்லது இன்ன குறூப் ஆள் என்று என்னை பற்றி தாமாகவவே கற்பனை செய்து கொண்டவர்களின் பார்வைக் கோளாறு.

புலிகளின் தலைமையை (மட்டுமே) நான் விமர்சித்துள்ளேன். மற்றயது போருக்கு பின் வெளிநாட்டில் புலிவேசம் கட்டுவோரையும் விமர்சிப்பேன். அதில் மாற்றமில்லை. ஆனால் அடுத்த நிலைத் தலைவர்கள், போரளிகளையோ அல்லது பாலாசிங்கம் மூர்தி போன்றோரையோ நான் விமர்சிப்பதில்லை.

கூடவே ஒரு ஆளை எனக்குப் பிடிக்கும் என்பதற்க்காக பச்சை இனத் துரோகம் செய்தவர்களின் நிலைப்பாட்டை சமயோசிதம் என்றோ, அல்லது பிரதேசவாதத்தின் எதிர்வினை என்றோ சப்பைக் கட்டும் ஆளும் இல்லை நான்.

 

 

கோசான் ஒரு  குரூப் ஆள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்களது கருத்து சுதந்திரத்தை மதிப்பார் என்று நினைத்திருந்தேன்.

பாலசிங்கம்,மூர்த்தி போன்றோர் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர்களா? ... நீங்கள் ஒருவரை அவர் சேவை மனப்பான்மையுள்ளவர் தான்...நிறைய உதவிகள் செய்தவர் தான்...அப்படிப்பட்டவர் எப்படி ஒரு பிழையும் விட மாட்டார் என்று நம்புகிறீர்களோ அதே போல நான் நம்புவதில் ஒரு பிழையுமில்லை...நீங்கள் செய்கிறது சரி என்றால் ,எனது பார்வையில் நான் செய்வதும் சரி தான் .

கருணா என்ற தனி மனிதனை வைத்து அவரை ஆதரிக்கவில்லை ...எந்த ஒரு  வினைக்கும்,மறு வினைக்கும் மறு வினை உண்டு... மட்டுவில் 90 களில்  சின்னவர்களாய் இருக்கும் போதே அண்ணமாரால்  பல கதைகள் கேட்டுத் தான் வளர்ந்தேன்...எப்படி அவர்களை,புலிகள் வைத்து இருந்தார்கள் என கேட்டு வளர்ந்தவள் நான்....தலைவருடைய காதிற்கு நிலைமை கை மீறினப்  பிறகு தான் கொண்டு போக பட்டது... பொட்டர் மட்டு வந்து தாங்கள் எல்லோரும் ஒன்று என காட்ட அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தார்...நிலைமை கொஞ்சம் அடக்கி வைத்தாரே தவிர முற்றாக கட்டுப்படுத்தவில்லை 


இந்த பிரதேசவாச யுத்தம் எப்பவோ தொடங்கி இருக்க வேண்டியது ...கருணா தொடங்கி,பிரிந்து சென்ற போது எங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கவில்லை...பிரச்சனையின்  ஆணி வேர் எங்கு இருக்கிறது என்று யோசியுங்கள்...இது பற்றி நிறையவே எழுதியாயிற்று.


இப்ப கூட கிழக்கில் இருந்து ஒரு அரசியல்வாதிகளும்,தலைவர்களும்  வரக்  கூடாது என்பதில் இங்குள்ளவர்கள் கவனமாய் உள்ளார்கள் 

மற்றவர்கள் பச்சை  குத்தினதை விட கிருபன் உங்களுக்கு குத்தினதை நினைக்க சிரிப்பாய் இருக்குது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி தட்டை என்று நம்புவது உங்கள் சொந்த பிரச்சனை 

அதுக்காக அடுத்தவர்கள் விமானங்களை தட்டை வரை படத்தை பார்த்து 
ஓட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சனையானது. 

உண்மை என்பது ஒன்றுதான்!
அது அவர் அவர் அறிவுக்கு ஏற்றால்போல் மாறாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

பதிலுக்கு நன்றி. கருத்து சுதந்திரத்தை நான் மதிப்பேன் என இதுவரை இருந்த மதிப்பீடிற்கும் நன்றி. 

நீங்களோ சுமேயோ எதையும் எழுதவேண்டாம் என நான் சொல்லவில்லை. யார் மீதும் விமர்சனம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் அரசியலில் இருந்திராத, பொதுவெளியில் செயலாற்றிய ஒருவரை பற்றி எழுதும் போது, குறிப்பாக நீத்தார் ஒருவர் பற்றி எழுதும் போது, கொஞ்சம் அவதானம் தேவை. யாழ் பலரும் வாசிக்கும் ஒரு களம் - இங்கே வந்து ஒருவரை பற்றி தவறாக அல்லது உண்மைக்கு புறம்பாக எழுதும் போது, எமக்கு உண்மை நிலை தெரியும் பட்சத்தில், அந்த உண்மையை எடுத்துச் சொல்வது எமது கடமையாகிறது. 

எம்மில், குறிப்பாக 2009 க்கு பின்னான வெளிநாட்டு தமிழ் அரசியல் தலமைகளில் விமர்சிக்க எவ்வளவோ இருக்கிறது, அதற்காக, 2009 க்கு முன் தன்னலமற்ற சேவையாற்றியவர்களை, அவர்களின் சேவையை குறைமதிப்பீடு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவெளியில் அப்படி நடக்கும் போது எதிர்கருத்தை பதிவது கட்டாயமாகிறது. 

இது கருத்துச் சுதந்திரத்தை பாவித்து பரப்படும் உண்மையற்ற தகவல்களுக்கு எதிரான எதிர்வினையே அன்றி, கருத்துசுதந்திரத்தை மீறும் செயல் அல்ல.

பிரதேசவாதம் எனும் புற்றுநோய், எமது இனத்தின் அத்தனை படிநிலையிலும் இருக்கும் போதும் அது புலிகளிடமும் இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நானும் இயக்கங்களில் இருந்த பிரதேசவாத கதைகளை கேட்டு வளர்ந்தவந்தான். ஆக புலிகளில் (பிரபாகரன் தவிர்ந்த) ஏனையோர் பலரிடம் இந்த மனோநிலை இருந்தது என்பதும், காலத்துக்கு காலம் இது பிரபாவின் காதுகளுக்கு கிழக்கு போராளிகளால் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பிரச்சினைகளுக்கு முடிவும் காணப்பட்டது என்பதும் உண்மையே.

இது கிழக்கு போராளிகள் மட்டுமல்ல, பால்ராஜ், தீபன் போன்ற வன்னியின் மைந்தர்களும் எதிர் கொண்ட சவால்தான்.

பாலசிங்கத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள். அவர்தான் சமஸ்டி என்ற கருத்தை புலிகளிடம் சொன்னவர் என்பதாக. உண்மைதான், இறுதி வருடங்கள் பலதில் பிரபாவின் போக்குக்கு நேர் எதிரான ஒரு வழியையே அவர் விரும்பினார். அதனாலேயே, வருத்தம் வர முன்னமே அவர் ஓரங்கட்ட பட்டிருந்தார். 

ஆனாலும் தன் தலைமைக்கு இடித்துரைத்தாரே ஒழிய, எதிராக திரும்பவில்லை. திரும்பினால் அழியப்போவது என் இனமே என்ற நீண்டகால நோக்கு அவரிடம் இருந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என் சுயநலமே முக்கியம் என முடிவெடுத்தவர் உங்கள் அண்ணரும், கேபியிம்.

சுருங்கச் சொல்லின் பிரதேசவாதம் இருந்தது, இன்னும் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் உங்கள் அண்ணர் அதுக்காக வெளியேறவில்லை. அவர் பிரதேசவாதத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டார்.

இதைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதனால்தான் இந்த திரியின் விடயதானம் பற்றி நான் இந்த திரியில் இதுவரை எழுதவில்லை.

பாலவுக்கும் உங்கள் அண்ணருக்கும் இடையான வித்தியாசம் கும்பகர்ணணுக்கும், விபீசணனுக்கும் இடையான வித்தியாசம் அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2019 at 5:16 PM, MEERA said:

மீண்டும் கூறுகிறேன் உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்.

நினைவிழந்து இருந்தவரை பார்த்துவிட்டு அல்லது கண்டுவிட்டு , அதனை சந்தித்ததாக ஏன் கூறினீர்கள். 

மேலும் அவர் தொடர்பாகவும் சுனாமி நேரம் நடந்த தில்லுமுல்லுகளையும் தெரிந்த நீங்கள்   அவரை வைத்தியசாலையில் பார்க்க வேண்டிய தேவை இல்லையே!

 

மீரா நான் அவரைப் பார்ப்பதற்கென்று வைத்தியசாலைக்குப் போனேன் என்று கூறினேனா?? அல்லது அவரை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து அவருடன் உரையாடினேன் அல்லது உணவருந்தினேன் என்று கூறினேனா ??

என் கண் முன்னால் நடக்கும் அனைத்தையும் கண்டு உடனே பொங்கி எழுந்து போராடிக்கொண்டே இருக்கிறோமா எல்லாரும். எத்தனையோ விடயங்களில் தெரிந்தாலும் அதை நாம் நிறுவுவது மிக்க கடினம். நிதி மோசடிகள் எங்கும் நடந்ததுதான். ஆனால் பல விடயங்களைத் தெரிந்தாலும் பொது வெளியில் எழுத முடியாது. அப்படி எழுதினாலும் என்னை முட்டாளாக்கித் திட்டிவிட்டுப் போவார்களேயன்றி எதுவுமே நடக்கப் போவதில்லை.
எமக்குத் தெரிந்த பலர் தவறானவர்கள் என்று தெரிந்தாலும் ஏதோவொரு காரணம் அவர்கள் முகத்துக்கு நேரே திட்ட முடியாமல் எம்மைத் தடுக்கும். அப்படித்தான் வைத்தியர் மூர்த்தியை வாட்டில் கண்டதும் அவர் மனைவியுடன் கதைத்ததும். அவரின் மனைவியுடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீரா நான் அவரைப் பார்ப்பதற்கென்று வைத்தியசாலைக்குப் போனேன் என்று கூறினேனா?? அல்லது அவரை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து அவருடன் உரையாடினேன் அல்லது உணவருந்தினேன் என்று கூறினேனா ??

என் கண் முன்னால் நடக்கும் அனைத்தையும் கண்டு உடனே பொங்கி எழுந்து போராடிக்கொண்டே இருக்கிறோமா எல்லாரும். எத்தனையோ விடயங்களில் தெரிந்தாலும் அதை நாம் நிறுவுவது மிக்க கடினம். நிதி மோசடிகள் எங்கும் நடந்ததுதான். ஆனால் பல விடயங்களைத் தெரிந்தாலும் பொது வெளியில் எழுத முடியாது. அப்படி எழுதினாலும் என்னை முட்டாளாக்கித் திட்டிவிட்டுப் போவார்களேயன்றி எதுவுமே நடக்கப் போவதில்லை.
எமக்குத் தெரிந்த பலர் தவறானவர்கள் என்று தெரிந்தாலும் ஏதோவொரு காரணம் அவர்கள் முகத்துக்கு நேரே திட்ட முடியாமல் எம்மைத் தடுக்கும். அப்படித்தான் வைத்தியர் மூர்த்தியை வாட்டில் கண்டதும் அவர் மனைவியுடன் கதைத்ததும். அவரின் மனைவியுடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. 

ஊரிலே பல பிசாசு பேய்கதைகளும் 
புலிகள் சுட்ட (இந்திய இராணுவ நேரம்) கதைகளும் உண்டு 
எமது ஊரில் ஒருவரை புலிகள் சுட்டு விட்டு போனதை கண்ணால் கண்டவரும் உண்டு.
அவரது சொந்த குடும்பத்தாருக்கு நான் முன்பே அறிவுறுத்தி இருந்தேன் 
ஒரு மகன் என்னுடன் படித்தவர் ஈபியில் இருக்கும் இன்னார் இவரை சுட போகிறார்கள் என்று 
அவர் தான் சுட்டார் இப்போது டென்மார்க்கில் இருக்கிறார்.
அவரது குடுமபத்தாருக்கு தெரியும் நடந்த அனைத்தும் அவர்கள் இப்போதும் 
புலிகளுக்கு ஆதர்வாகவே இருக்கிறார்கள் ..... இடையில் இருக்கும் அரைவேக்காடுகள்தான் 
பொய்யுடனும் புரட்டுடனும் வாழ்கிறார்கள்.

உங்களிடம் நேர்மை பண்பு இருப்பின் 
ஒருவரை பற்றி அவதூறு பரப்ப முன்னர் யோசிக்க வேண்டும்
அல்லது பிறர் சுட்டி காட்டிய பின்பு ஒத்துக்கொள்ள வேண்டும்.
அல்லது ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.
இங்கு எழுதும் எல்லோரும் உங்களிடம் கேட்பது சிறு ஆதாரம் தாருங்கள் என்று.

இவை அனைத்தும் இல்லாத பட்ஷத்தில் உங்கள் கருத்தை திருத்த வேண்டும் 
இப்படி ஒரு வந்தந்தி ஒன்றை நான் கேள்வி பட்டேன் இதை உண்மை என்று சொல்ல என்னிடம் எந்த 
ஆதாரமும் இல்லை என்று. அதுதானே நிஜம்! 

அத்துடன் முடிந்து விடும் உங்களுக்கும் சேதாரம் இல்லை 
அவர் காசு எடுக்க நீங்கள் நேரில் நின்று விளக்கு பிடித்த மாதிரி எழுதுவதுதான் 
பிரச்சனையான விடயம்.

எனக்கும் புலிகளின் காசை அடித்தவர்கள் சிலரை தெரியும் 
ஆனால் ஆதாரம் இல்லை..... நான் இப்படி நம்புகிறேன் ஒரு வேளை அவர்கள் 
உரிய இடத்தில சேர்த்து இருக்க கூடும் என்னிடம் அதுக்கும் ஆதாரம் இல்லை 

Innocent until proofed 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

மற்றவர்கள் பச்சை  குத்தினதை விட கிருபன் உங்களுக்கு குத்தினதை நினைக்க சிரிப்பாய் இருக்குது 

ஆதாரம் இல்லாமல் எழுந்தமானமாகக் கதைக்கக்கூடாது என்பதை லைக் செய்தால் ஏன் சிரிப்பு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ரதி,

பதிலுக்கு நன்றி. கருத்து சுதந்திரத்தை நான் மதிப்பேன் என இதுவரை இருந்த மதிப்பீடிற்கும் நன்றி. 

நீங்களோ சுமேயோ எதையும் எழுதவேண்டாம் என நான் சொல்லவில்லை. யார் மீதும் விமர்சனம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் அரசியலில் இருந்திராத, பொதுவெளியில் செயலாற்றிய ஒருவரை பற்றி எழுதும் போது, குறிப்பாக நீத்தார் ஒருவர் பற்றி எழுதும் போது, கொஞ்சம் அவதானம் தேவை. யாழ் பலரும் வாசிக்கும் ஒரு களம் - இங்கே வந்து ஒருவரை பற்றி தவறாக அல்லது உண்மைக்கு புறம்பாக எழுதும் போது, எமக்கு உண்மை நிலை தெரியும் பட்சத்தில், அந்த உண்மையை எடுத்துச் சொல்வது எமது கடமையாகிறது. 

எம்மில், குறிப்பாக 2009 க்கு பின்னான வெளிநாட்டு தமிழ் அரசியல் தலமைகளில் விமர்சிக்க எவ்வளவோ இருக்கிறது, அதற்காக, 2009 க்கு முன் தன்னலமற்ற சேவையாற்றியவர்களை, அவர்களின் சேவையை குறைமதிப்பீடு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவெளியில் அப்படி நடக்கும் போது எதிர்கருத்தை பதிவது கட்டாயமாகிறது. 

இது கருத்துச் சுதந்திரத்தை பாவித்து பரப்படும் உண்மையற்ற தகவல்களுக்கு எதிரான எதிர்வினையே அன்றி, கருத்துசுதந்திரத்தை மீறும் செயல் அல்ல.

பிரதேசவாதம் எனும் புற்றுநோய், எமது இனத்தின் அத்தனை படிநிலையிலும் இருக்கும் போதும் அது புலிகளிடமும் இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நானும் இயக்கங்களில் இருந்த பிரதேசவாத கதைகளை கேட்டு வளர்ந்தவந்தான். ஆக புலிகளில் (பிரபாகரன் தவிர்ந்த) ஏனையோர் பலரிடம் இந்த மனோநிலை இருந்தது என்பதும், காலத்துக்கு காலம் இது பிரபாவின் காதுகளுக்கு கிழக்கு போராளிகளால் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பிரச்சினைகளுக்கு முடிவும் காணப்பட்டது என்பதும் உண்மையே.

இது கிழக்கு போராளிகள் மட்டுமல்ல, பால்ராஜ், தீபன் போன்ற வன்னியின் மைந்தர்களும் எதிர் கொண்ட சவால்தான்.

பாலசிங்கத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள். அவர்தான் சமஸ்டி என்ற கருத்தை புலிகளிடம் சொன்னவர் என்பதாக. உண்மைதான், இறுதி வருடங்கள் பலதில் பிரபாவின் போக்குக்கு நேர் எதிரான ஒரு வழியையே அவர் விரும்பினார். அதனாலேயே, வருத்தம் வர முன்னமே அவர் ஓரங்கட்ட பட்டிருந்தார். 

ஆனாலும் தன் தலைமைக்கு இடித்துரைத்தாரே ஒழிய, எதிராக திரும்பவில்லை. திரும்பினால் அழியப்போவது என் இனமே என்ற நீண்டகால நோக்கு அவரிடம் இருந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என் சுயநலமே முக்கியம் என முடிவெடுத்தவர் உங்கள் அண்ணரும், கேபியிம்.

சுருங்கச் சொல்லின் பிரதேசவாதம் இருந்தது, இன்னும் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் உங்கள் அண்ணர் அதுக்காக வெளியேறவில்லை. அவர் பிரதேசவாதத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டார்.

இதைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதனால்தான் இந்த திரியின் விடயதானம் பற்றி நான் இந்த திரியில் இதுவரை எழுதவில்லை.

பாலவுக்கும் உங்கள் அண்ணருக்கும் இடையான வித்தியாசம் கும்பகர்ணணுக்கும், விபீசணனுக்கும் இடையான வித்தியாசம் அவ்வளவே.

திரு பாலசிங்கம் தலைமைக்கு எதிராய் திரும்பி இருந்தால் அவருக்கு பின்னால் ஒருத்தரும் போக  மாட்டார்கள் .கருணா உட்பட...பி.வாதத்தை கருணா கையில் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது தான் உண்மை..எல்லோரும் தங்களுக்கு,தங்களுக்கு என்று வரும் போது தங்கட உயிர்களை காப்பாத்த தான் பார்ப்பார்கள் .
விசாரனைக்கு வா என்று கூப்பிட நம்பிப்  போகும் அளவிற்கு அவர் முட்டாளில்லை...மாத்தையாவிற்கு என்ன நடந்தது என்று பார்த்தவர் அவர்.
பதவி இறங்குவதையோ அல்லது சிறையில் இருப்பதையோ அவர் விரும்பி இருக்க மாட்டார்.
எல்லோரும் பால்ராஜ் ஆக முடியாது.
கருணா துரோகியாய் இருந்திட்டு போகட்டும்...அதை பற்றி நான் இங்கு கதைக்க வரேல்ல...கருணாவை துரோகி சொல்லும் நீங்கள் எப்படி பாலசிங்கத்தை வைச்சு கும்புடுகிறீர்கள்?..தூண்டியவருக்கு தண்டனை இல்லையா அதைத் தான் முதலிலும் கேட்டேன் .

உங்கட கருத்தைப் பார்த்தால் 2009 க்கு முன் காசை அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்காமல் அப்படியே விட்டு விடோணும் என்று சொல்கின்ற மாதிரி இருக்கு 
 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2019 at 9:49 PM, nunavilan said:

சிலோனிலே முஸ்லீம் குறைவான இடம் யாழ்ப்பாணம் என்று காட்டுது அதுவும் .4 வீதம் இந்த ஆறுநூறு  எழுநூறு பேருக்காகா முழு யாழ்பாணத்திலும் இலங்கை படைகள் தமிழ் மக்களை சோதனை எனும் பெயரில் வதைப்பதை என்ன வென்று சொல்வது ?

பேசாமல் இந்த முஸ்லீம்  பிரச்சனை முடியும் மட்டும் பழையபடி அவர்கள் இருந்த நீர்கொழும்பு புத்தளம் பக்கமே போய் இருப்பது நல்லது ஆண்டாண்டு காலம்  யாழில் வாழும் தமிழ்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்கும் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

சிலோனிலே முஸ்லீம் குறைவான இடம் யாழ்ப்பாணம் என்று காட்டுது அதுவும் .4 வீதம் இந்த ஆறுநூறு  எழுநூறு பேருக்காகா முழு யாழ்பாணத்திலும் இலங்கை படைகள் தமிழ் மக்களை சோதனை எனும் பெயரில் வதைப்பதை என்ன வென்று சொல்வது ?

பேசாமல் இந்த முஸ்லீம்  பிரச்சனை முடியும் மட்டும் பழையபடி அவர்கள் இருந்த நீர்கொழும்பு புத்தளம் பக்கமே போய் இருப்பது நல்லது ஆண்டாண்டு காலம்  யாழில் வாழும் தமிழ்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்கும் .

அண்ணொய் நீங்கள் எந்த காலத்தில இருக்கிறியள்; இது 2012இல் எடுத்த தரவு. அவர்கள் இப்பொழுது  மன்னார் மாவட்டத்தைன்பிடித்து (44%) வவுனியாவில் 1/3 பங்கை பிடித்து முல்லைத்தீவின் 1/5 பங்கை பிடித்து கிளிநொச்சியின் 1/10 பங்கை பிடித்து யாழில் 1/15 பங்கை பிடித்து அசுர வேகத்தில் முன்னெறி வருகிறார்கள். அடுத்த கணக்கெடுப்பின் போது இலகுவில் வடக்கு மாகாணத்தில் 25% தாண்டி விடுவார்கள்.

யாழ் மத்தியில் இவர்களது அனுமதி இல்லாமல் hardware கடை அல்லது சாப்பாட்டு கடை போட ஏலாது; புலம்பெயர்ந்தவர்கள் ஹொட்டல் போட முற்பட்ட போது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தார்கள்

சுன்னாகத்தில் ஒரு வெங்காய தமிழ் முகவர் ஒரு தமிழனின் காணியை வாங்கி முஸ்லிம்முக்கு வித்து அங்கு பள்ளிவாசல் வருவதாக தகவல்.

அதை விட 1 கோடிக்கு விலை போகிற நிலத்தை 3 கோடி கொடுத்து வாங்க ஆய்த்தமாக இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மதற்றங்கள் சர்வ சாதாரண்மாக இருக்கின்றன. அண்மையில் கூட புங்குடுதீவில் 3 பெண்கள் இஸ்லாம் மதம் தழுவினவையாம், ஏன் என்று கேட்டால் நிதி உதவி ஒன்றும் தமிழரிடம் இருந்து இல்லையாம்; எண்ட கேள்வி என்ன்வென்றால் புங்குடுதீவு நலம்புரி சங்கம் என்ற பெயரில் லண்டனில உண்டியல் குழுக்கின காசெல்லம் எங்கே என்பதே .....🙂🙂🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­னரின் ஆயு­தங்கள் களை­யப்­ப­ட­வில்லை": கருணா அம்மான்

"இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதில் தவ­றில்லை: கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கடமை"

விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு விற்­கப்­ப­ட­வில்லை. இந்­திய படை­க­ளுக்கு எதி­ராக அமைக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய இரா­ணு­வத்தின் ஆயு­தங்­களே பெரு­ம­ளவில் முஸ்லிம் தரப்­புக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. 

அத்­துடன் அர­சாங்­கத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் கிழக்கில் உரு­வாக்­கப்­பட்ட முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முழு­மை­யாக களை­யப்­ப­ட­வில்­லை­யென தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிரதி அமைச்­ச­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தெரி­வித்தார்.

வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்வி நிறை­வுப்­ப­குதி வரு­மாறு,

virakesari.jpg

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மைக்கும் முஸ்லிம் தலை­மை­க­ளுக்­கு­மான சந்­திப்­பின்­போது தனி­ய­லகு பற்றி பேசப்­பட்­டதா?

பதில்:- முஸ்லிம் தலை­மைகள் பேச்­சு வார்த்­தை­க­ளின்­போது தனி­ய­லகு கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தார்கள். குறிப்­பாக, நோர்வே தலை­மை­யி­லான பேச்­சுக்­க­ளின்­போது ஹக்கீம் தலை­மை­யி­லான பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டார்கள். ஆனால், நாம் அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் வட­கி­ழக்கு இணைந்த தாய­கத்­திற்­கா­கவே ஆயு­தப்­போ­ராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். வட­கி­ழக்கு என்­பது தமி­ழர்­களின் தாயகம் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. முஸ்­லிம்கள் வர்த்­தக நோக்­கத்­திற்­காக கிழக்கில் வந்து கள­மி­றங்­கி­ய­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள்.

முதன்­மு­த­லாக முஸ்லிம் ஆண்­களே கல்­மு­னைக்­கு­டியில் வந்­தி­றங்­கி­னார்கள். இவ்­வாறு தான் அவர்­களின் வர­லாறு இருக்­கின்­றது. அப்­ப­டி­யி­ருக்­கையில், வட­கி­ழக்கு தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய தாயகம். தமி­ழர்­க­ளுக்கு தாயகம் கிடைக்­கின்­ற­போது முஸ்­லிம்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி தீர்­வினை வழங்­குவோம் என்ற முடி­வுக்கே வந்­தி­ருந்தோம். ஏனென்றால் தனி­நாடு கோரி நாம் போரா­டிக்­கொண்­டி­ருக்­கையில், முஸ்­லிம்­களும் தனி­ய­லகைக் கோரு­கையில் அவை கிடைப்­ப­தென்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும்.

அதற்­காக முஸ்­லிம்­களை எமது நிரு­வா­கத்­திற்குள் அடக்­கு­வ­தற்கு நாம் விரும்­ப­வில்லை. ஆனால், முஸ்­லிம்கள் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வடக்கும் கிழக்கும் இணை­வதை  எதிர்ப்­பதில் முத­லா­வது முஸ்லிம் பிர­தி நிதி ஹிஸ்­புல்லாஹ் ஆவார். வட­கி­ழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார். ஆனால், அவர் என்ன நோக்­கத்­திற்­காக கூறு­கின்றார் என்­பது தெரி­யா­துள்­ளது.

கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்­ன­வாக இருக்­கின்­றது?

பதில்:- வடக்கு கிழக்கு எமது பூர்­வீக தாயகம். அதனை சட்­ட­ரீ­தி­யாக பிரித்து வைத்­துள்­ளார்கள். நாம் எமது தாய­கத்­தினை தனி நாடாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கோரி போரா­டி­யி­ருந்தோம். இப்­போது எமது தாய­கத்தின் உரி­மை­களை வழங்­கு­மாறு கோரு­கின்றோம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் 13இற்கு அப்­பாற்­சென்று அதி­கா­ரங்­களை வழங்­குவேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

அதனை நாம் சரி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. இந்த விடயம் சம்­பந்­த­மாக தனிப்­பட்ட முறையில் நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டிய போது அவர்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு விரும்­ப­வில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் யாருடன் அது­கு­றித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தீர்கள்?

பதில்:- மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஒப்­பு­த­லைப் பெற்­றுக்­கொண்டு கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். ஆனால், அதனை ஏற்­றுக்­கொண்டு பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு விரும்­ப­வில்லை. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூற்றின் மீது நம்­பிக்கை இல்­லை­யென்றே கூறி­னார்கள். பூகோள ரீதி­யான அர­சி­யலை அவ­தா­னிக்­கின்­ற போது, மீண்­டு­மொரு ஆயு­தப்

போ­ராட்டம் சாத்­தி­ய­மில்லை. எமக்­குள்ள மக்கள் ஆணை பலத்­தினை வைத்­துக் கொண்டு தான் நகர்­வு­களை செய்ய வேண்டும். அத­னை­வி­டுத்து சர்­வ­தேசம் வரும், தீர்வு வழங்கும் என்று கூறிக்­கொண்­டி­ருப்­பது வேடிக்­கை­யான விட­ய­மாகும்.

கேள்வி:- கிழக்கில் தமி­ழர்கள் இருப்பு கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­வதை எப்­படி பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- நூற்­றுக்கு நூறு­வீதம் உண்­மை­யான விடயம். இதற்கு தமிழ்த் தலை­மை­களின் தவ­று­களே பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன. கிழக்கில் தமி­ழர்கள் ஒற்­று­மை­யாக இருந்தால் தமிழ் முத­ல­மைச்சர் ஒரு­வரை உரு­வாக்க முடியும். தமிழர் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­தற்­கான வாக்­குப்­ப­லத்­தினை தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த வாக்­குப்­ப­லத்­தினை யாரும் பயன்­ப­டுத்­து­வ­தாக இல்லை. 

போர் நிறை­வ­டைந்து கிழக்கில் தேர்தல் நடத்­து­வ­தற்­கான தயார்ப்­ப­டுத்­தல்கள் நடத்­தப்­பட்ட போது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினை நேரில் சந்­தித்­தி­ருந்தேன். போர் முடிவின் பின்னர் தீர்­வொன்று ஏற்­பட வேண்­டு­மாயின் கிழக்கில் தமிழர் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மி­யுங்கள் என்று கோரி­யி­ருந்தேன்.

நான்கு ஆச­னங்­களைப் பெற்ற சந்­தி­ர­கா­சனை(பிள்­ளை­யானை)  எத்­த­னையோ எதிர்ப்­புக்­களை தாண்டி மஹிந்த ராஜ­பக் ஷ முத­ல­மைச்­ச­ராக நிய­மித்­தி­ருந்தார். 

பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வெறும் ஏழு ஆச­னங்­களை எடுத்த நான் கிழக்கு மாகா­ணத்­தினை ஆட்­டிப்­ப­டைக்­கின்றேன் என்று மு.கா தலைவர் ஹக்கீம் இழி­வாக உரைக்கும் அள­விற்கு கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன. கூட்­ட­மைப்­பிற்கும் எனக்கும் எவ்­வி­த­மான தனிப்­பட்ட முரண்­பா­டு­களும் இல்லை. ஆனால், கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கட­மை­யா­கின்­றது. ஆகவே அதனை ஆணை­பெற்ற கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் செயற்­ப­டுத்­தா­ம­லி­ருப்­பதே அவர்கள் மீதான எனது குற்­றச்­சாட்­டுக்கு கார­ண­மா­கின்­றது.

கேள்வி:- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் போரா­ளிகள் ஆயு­தங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு விற்­பனை செய்­து­விட்டு நாட்­டை­விட்டு வெளி­யே­றி­ய­தா­கவும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் போரா­ளி­களை கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை. அவர்கள் ஆயு­தங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு விற்­பனை செய்து விட்டு வெளி­யே­றி­னார்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்­பனை செய்யும் அள­விற்கு உணர்­வற்ற நிலையில் விடு­த­லைப்­

பு­லிகள் போரா­ளிகள் இருக்­க­வில்லை.

கேள்வி:- போரின் பின்­ன­ரான சூழலில் துணைக்­கு­ழுக்­களின் ஆயு­தங்­களை முழு­மை­யாக களைந்து ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்­டி­ய­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­ாபய ராஜ­பக் ஷ கூறு­கிறார். அப்­ப­டி­யி­ருக்­கையில், முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முற்­றாக களை­யப்­பட்­டி­ருக்­க­லா­மல்­லவா?

பதில்:- முஸ்­லிம்கள் ஊர்­கா­வல்

ப­டையில் இருந்த காலத்தில் ஆயு­தங்கள் பெரு­ம­ளவில் வழங்­கப்­பட்­டன. அவ்­வாறு வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முற்­றாக களை­யப்­ப­ட­வில்லை. அந்த ஆயு­தங்கள் அவர்­க­ளி­டத்தில் இருக்­கின்­றன என்­பது உண்­மை­யான விட­ய­மாகும். இந்­தியப் படைகள் இலங்­கைக்கு வந்த காலத்தில் தமிழ்த் தேசிய இரா­ணுவம் (ரி.என்.ஏ)உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. 

தமிழ்த் தேசிய இரா­ணு­வத்­தினை விடு­தலைப் புலிகள் அழித்த தரு­ணத்தில், அவர்­களின் பெரு­ம­ள­வான ஆயு­தங்கள் முஸ்லிம் பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன. இவ்­வாறு தான் முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தங்கள் கிடைப்­ப­தற்கு வழிகள் ஏற்­பட்­டன.

கேள்வி:- கிழக்கு ஆளுநர் மீது நீங்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­னரும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்ற போதும் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் ஏன் தயங்­கு­கின்­றது எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- ஆளு­ந­ராக இருக்கும் ஹிஸ்­புல்லாஹ் மீது எனக்கு தனிப்­பட்ட முரண்­பா­டுகள் எவையும் இல்லை. ஆனால், ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு பலத்த எதிர்ப்­புக்கள் உள்­ளன. தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்னர் அவர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் கைலாகு கொடுத்த புகைப்­படம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அவ்­வா­றான நிலை­மை­களில், ஜனா­தி­ப­தியோ, அர­சாங்­கத்­த­ரப்­பி­னரோ அவரை அழைத்து ஒரு­வார்த்தை கூட இவ்­வி­டயம் குறித்து வின­வாத நிலை­மையே இருக்­கின்­றது.

மாறாக, கிழக்கு மாகா­ணத்­திற்கு ஜனா­தி­பதி ஆளு­ந­ருடன் வரு­கிறார். சாய்ந்­த­ம­ரு­துவில் தற்­கொ­லை­தா­ரிகள் உயி­ரி­ழந்த இடத்­தினைச் சென்று பார்­வை­யி­டு­கிறார். ஆனாலும் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கான தேவா­ல­யத்­தி­னையோ காய­ம­டைந்­த­வர்­க­ளையோ சென்று பார்க்­க­வில்லை.

ஜனா­தி­ப­திக்கும், கிழக்கு ஆளு­ந­ருக்கும் இடையில் இருக்கும் உற­வுகள் என்ன என்­பது குறித்து தெரி­யா­துள்­ளது. ஆனால், இத்­த­கைய செயற்­பா­டுகள் தமிழ் மக்கள் மத்­தியில் விரக்­தி­யான நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது.

மறு­பக்­கத்தில் ஹிஸ்­புல்லாஹ் கிழக்கு ஆளுநர் பத­வியில் நீடிப்­ப­தற்கு அனைத்து தமி­ழர்­களும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். இப்­ப­டி­யான நிலையில் தான் பத­வி­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் கிழக்கு ஆளுநர் இருப்­ப­தா­னது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சலை மேலும் அதி­க­ரிப்­ப­தா­கவே அமையும்.

கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் இருப்பு எவ்­வாறு பறி­போ­கின்­றது என்­பதை நான் நன்கு அறிவேன்.

நான் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனால், முஸ்­லிம்­களின் பெயரால் முன்­னெ­டுக்­கப்­படும் ஏகா­தி­பத்­தி­யத்­தினை முழு­மை­யாக எதிர்க்­கின்றேன். தொடர்ச்­சி­யாக அதற்கு எதி­ராக குர­லெ­ழுப்­பியே வரு­கின்றேன். விடு­தலைப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்­த­வ­னாக நான் இருக்­கின்றேன். 

அக்­கா­லத்தில் தமி­ழர்கள் அனை­வ­ரையும் விடு­தலைப் புலி­க­ளா­கவே சித்­த­ரித்­தார்கள். அந்த அனு­ப­வத்­தினைக் கொண்­டி­ருக்கும் நாம் முஸ்­லிம்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக  கொள்ள முடி­யாது என்­ப­திலும் தெளி­வாக இருக்­கின்றோம்.

கேள்வி:- சஹ்ரான் சம்­பந்­த­மான தக­வல்­களை நீங்கள் அறிந்து வைத்­தி­ருந்­தீர்­களா?

பதில்:- காத்­தான்­கு­டியில் ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பின் ஊடு­ருவல் காணப்­ப­டு­கின்­றது. நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள் என்ற விட­யங்கள் ஊட­கங்­களில் பிர­சு­ர­மாகும் அள­விற்கு வெளிப்­ப­டை­யாக இருந்­தன. காத்­தான்­கு­டியில் 63பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. இவற்றில் எட்­டுப்­பள்­ளி­வா­சல்கள் வித்­தி­யா­ச­மான போக்­கினைக் கொண்­டி­ருக்­கின்­றன என்ற தக­வல்­களும் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

சஹ்ரான், முதலில் ஓலைக்­கு­டி­சை­யி­லேயே பள்­ளி­வா­சலை அமைத்­தி­ருந்தார். தற்­போது அது மாளிகை போன்று உள்­ளது. இதற்­கான நிதி எங்­கி­ருந்து வந்­தது, யார் அனு­ம­தியை வழங்­கி­யது? என்­பதை அர­சாங்கம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்டும். 

இத்­த­கைய ஒரு­வ­ருடன் தேர்­த­லுக்­காக கைலா­கு­கொ­டுத்­த­தாக ஹிஸ்­புல்லாஹ் கூறு­கின்றார். இப்­ராஹிம் ஹாஜி­யுடன் அமைச்சர் ரிஷாத் வர்த்­தக தொடர்­பு­களை கொண்­டி­ருப்­ப­தா­கவும் ஆதா­ரங்கள் உள்­ளன. ஆகவே, இவர்கள் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டார்­களா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் இவர்­களை பத­வி­க­ளி­லி­ருந்து இடை­நி­றுத்தி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்டும்.

ஒப்­ப­டைத்த வாக­னத்தை வைத்­தி­ருந்­த­மைக்­காக என்னை கைது செய்­தார்கள். புல­னாய்­வுப்­பி­ரிவால் அரி­ய­நேத்­திரன், சிறி­தரன் உள்­ளிட்ட தமிழ்த் தலை­வர்கள் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­டு­கின்­றார்கள். தலை­வரின் படத்தை வைத்­தி­ருந்­த­மைக்­காக பல்­கலை மாண­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வாறு தமிழர் தரப்­புக்கு ஒரு நீதி காணப்­ப­டு­கையில், இத்­தனை குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­படும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை ஆகக்­கு­றைந்­தது விசா­ர­ணைக்கு கூட உட்­ப­டுத்­தா­தி­ருப்­பது ஏன்? இந்த நாட்டில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு நீதியும், முஸ்­லிம்­க­ளுக்கு இன்­னொரு நீதியும் காணப்­ப­டு­கின்­றதா?

கேள்வி:- உங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் தான் சர்ச்­சைக்­கு­ரிய பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு அடிக்கல் நாட்­டப்­பட்­டுள்­ளது. அக்­கா­லத்தில் இது­தொ­டர்பில் ஏன் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை?

பதில்:- ஆரம்­பத்தில் இந்த பல்­க­லைக்­க­ழகம் கிங் அப்­துல்லா கெம்பஸ் என்­று தான் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. இதனை நான் எதிர்த்தேன். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டத்தில் இதனை அனு­ம­திக்கக் கூடாது என்றும் கூறினேன். எனக்கு ஆத­ர­வாக மறைந்த அஸ்வர் எம்.பி.யும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். அத­னைத்­தொ­டர்ந்தே குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. எனினும் நான் தொடர்ந்தும் எதிர்த்து வந்தேன்.

இருப்­பினும், வாகரைப் பிர­தேச சபை­யூ­டாக பாரி­ய­ளவில் காணிகள் வழங்­கப்­பட்­டன. தொழிற்­ப­யிற்சி அமைச்சும் இந்த விட­யத்தில் தவ­று­களை இழைத்து விட்­டது. இருப்­பினும், அப்­போது அமைச்­ச­ராக இருந்த டளஸ் மக்­க­ளுக்கு நன்மை அளிக்கும் என்ற அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­ட­தா­கவே கூறு­கின்றார். இவற்றை முழு­மை­யாக விசா­ரணை செய்ய வேண்டும். குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­டட அமைப்பு அரே­பிய கட்­ட­டக்­க­லையை ஒத்­த­தா­கவே உள்­ளது. அதுவே தவ­றா­ன­தாகும். ஆகவே இதனை முழு­மை­யாக அர­சு­ட­மை­யாக்கி கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைக்க வேண்டும்.

கேள்வி:- கிழக்கில் இனங்­க­ளுக்­கி­டையில் சுமு­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு என்ன செய்ய வேண்டும்?

 பதில்:- தாக்­குதல் சம்­ப­வங்­க­ளைத்­தொ­டர்ந்து கிழக்கில் பதற்­ற­மான நிலை­மை­யொன்று இருந்­தது. இருப்­பினும் தமிழ், முஸ்லிம் தரப்­புக்­க­ளுடன் நான் நேர­டி­யா­கவே கலந்­து­ரை­யாடி அமை­தி­யான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளேன்.  தாக்­குதல் நடை­பெற்ற தேவா­ல­யங்கள் ஒரு­மா­தத்­திற்­குள்­ளேயே புன­ர­மைப்புச் செய்­யப்­ப­டு­கின்­றன. கிரான் குளத்தில், ஆரை­யம்­பதி, ஏறாவூர் உள்­ளிட்ட பகு­தி­களில் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள். இதற்­காக நாம் நினை­வுத்­தூ­பி­யொன்றை நிறுவி நினைவுக்கூரலை முன்­னெ­டுக்­கலாம்.

அத்­த­கைய செயற்­பா­டுகள் இனங்­க­ளுக்­கி­டை­யில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாம் கரு­து­கின்றோம். ஆனால், காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை நினை­வுப­டுத்தும் வகையில் அந்­தப்­பள்­ளி­வா­சலில் தற்­போதும் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை அவ்­வாறே பேணி வரு­கின்­றார்கள். 

வர­வேற்­பினை அரே­பிய மொழியில் எழு­து­கின்­றார்கள். இந்த நிலை­மைகள் தவிர்க்­கப்­பட வேண்டும். தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­களும் இந்த விட­யத்­தினை பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­வதைக் கைவிட வேண்டும். முஸ்லிம் சம­யத்­த­லை­வர்­களும் இந்த விட­யத்­தினை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அரே­பிய சிந்­த­னை­களைத் தவிர்த்து இலங்­கைக்குள் வாழும் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற மனோ­நி­லையை உரு­வாக்க வேண்டும்.

கேள்வி:- கிழக்கில் ஊர்­காவல் படை­யொன்றை ஸ்தாபிப்­பது பற்றி பேசப்­ப­டு­கின்­றதா?

பதில்:- ஊர்­கா­வற்­படை ஸ்தாபிப்­பது குறித்த பேச்­சுக்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால், ஒரு இனத்­துக்கு எதி­ராக பிறி­தொரு இனத்­தினை பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே அந்த விடயம் அவசியமில்லை என்பதை தமிழ் இளைஞர்களுக்கு கூறியுள்ளதோடு கடந்த காலத்தினை உதாரணப்படுத்தி இத்தகைய விடயங்களில் சிக்கவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

கேள்வி:- தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான ஐக்கியம் சம்பந்தமாக பேசப்படுகின்ற நிலையில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- குண்டுத் தாக்குதலின் பின்னர் தான், பல தமிழ்ப் பிரதிநிதிகள் இதுபற்றி அதிகம் சிந்திக்கின்றார்கள். கிழக்கில் உருவாக்கப்படும் தமிழர் கூட்டமைப்பு தொடர்பில் எம்முடன் சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடினார்கள். நாம் அதற்கு தயாராகவே உள்ளோம். எம்மைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் எமது தமிழ்ச் சமூகத்தினை காப்பாற்றக்கூடிய தலைமைகள் யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றே கருதுகின்றேன். அரசியல் கட்சியை ஸ்தாபித்து செயற்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. 

அதற்காக நாம் மட்டும் தான் என்ற கருத்தினை மையப்படுத்த முடியாது. ஒரு கட்சியை அழிக்கும் வகையில் செயற்பட முடியாது. ஆகவே கொள்கை அடிப்படையில் கிழக்கில் தமிழர் கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படுமாகவிருந்தால் அதில் பங்கேற்கவும் முழுமையாக வரவேற்கவும் தயாராகவுள்ள முதல் நபராக நானே இருப்பேன்.

கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ 

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங் கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் உங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்:- தீவிரவாத அச்சுறுத்தலி லிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒருவர் ஆட்சியில் அமரவேண்டும் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆகவே அத்தகைய 

வொரு தலைமையை ஏற்றுக்கொள் வதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போரை தலைமைத்தாங்கி நடத்திய இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு கூறியது. அப்படியிருக்கையில், இராணுவச் சீருடையை அணியாத பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஒருவருக்கு ஏன் ஆதரவளிக்க முடியாது. இதுபற்றிய தெளிவும் மக்களுக்கு உள்ளது.


(நேர்காணல்:- ஆர்.ராம்)

 

http://www.virakesari.lk/article/57309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

திரு பாலசிங்கம் தலைமைக்கு எதிராய் திரும்பி இருந்தால் அவருக்கு பின்னால் ஒருத்தரும் போக  மாட்டார்கள் .கருணா உட்பட...பி.வாதத்தை கருணா கையில் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது தான் உண்மை..எல்லோரும் தங்களுக்கு,தங்களுக்கு என்று வரும் போது தங்கட உயிர்களை காப்பாத்த தான் பார்ப்பார்கள் .
விசாரனைக்கு வா என்று கூப்பிட நம்பிப்  போகும் அளவிற்கு அவர் முட்டாளில்லை...மாத்தையாவிற்கு என்ன நடந்தது என்று பார்த்தவர் அவர்.
பதவி இறங்குவதையோ அல்லது சிறையில் இருப்பதையோ அவர் விரும்பி இருக்க மாட்டார்.
எல்லோரும் பால்ராஜ் ஆக முடியாது.
கருணா துரோகியாய் இருந்திட்டு போகட்டும்...அதை பற்றி நான் இங்கு கதைக்க வரேல்ல...கருணாவை துரோகி சொல்லும் நீங்கள் எப்படி பாலசிங்கத்தை வைச்சு கும்புடுகிறீர்கள்?..தூண்டியவருக்கு தண்டனை இல்லையா அதைத் தான் முதலிலும் கேட்டேன் .

உங்கட கருத்தைப் பார்த்தால் 2009 க்கு முன் காசை அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்காமல் அப்படியே விட்டு விடோணும் என்று சொல்கின்ற மாதிரி இருக்கு 
 
 

ரதி,

யாரும் போகமாட்டீனம் எண்டதுக்காக பிரியாமல் இருந்தாரோ அல்லது பிரிஞ்சிம் தன்னால் ஒண்டும் ஆகபோவதில்ல என்பதால் சும்மா இருந்தாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால் பிரியவில்லை. பிரிவதால் தன் இனத்தை பலவீனமாக்கவில்லை. அவர் பின்னால் யாரும் போகாவிட்டாலும், அவர் பிரிந்திருந்தால் ஏற்பட்டிருக்க கூடிய சர்வதேச அழுத்தம் மிகபெரியாதாய் இருந்திருக்கும். ஆனால் எம் இனத்தின் கடைசி துருப்புச் சீட்டை தன் நலனுக்காக, ஈகோவிற்க்காக அவர் பலியிடவில்லை. ஒதுங்கி விட்டார். இது மிகப் பெரிய விசயம். 

பிரபாகரனையே தேசியத் தலைவர் என அழைக்காத என்னை பார்த்து பாலாவை கும்பிடுவதாக நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. ஒரு மனிதனின் நல்லதை போற்றுவது கும்பிடுவது ஆகாது. பாலசிங்கம் தூண்டியவர் என்பதற்கு நீங்கள் ஆதாரம் எதுவும் வைத்திருந்தால் பதியவும். உங்கள் அண்ணைரை கல்விமான்கள், அரசியல்வாதிகள், இப்போதும் இங்கே பலர் காவித்திரியும் இணைய தளத்தின் ஆசிரியர் பீடத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் என பலர் தத்தம் சுயநலனுக்காக தூண்டிவிட்டனர் என்பது உண்மையே. ஆனால் அதில் பாலசிங்கம் அடங்கவில்லலை. சமஸ்டி கொள்கையை தலைமைக்கு பரிந்துரை செய்ததை வைத்து, இன்னொருவர் சமஸ்டியை காட்டி இயக்கத்தை விட்டு ஓடியதை பாலா தூண்டினார் என்பது அறிவார்ந்த வாதம் அல்ல.

உங்கள் அண்ணர் விடயம் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை என முன்பே சொல்லிவிட்டேன். ஆகவே அதைபற்றி நீங்கள் சொல்வதற்கு பதில் சொல்லவில்லை. மனித வாழ்வு மிஞ்சிப் போனால் 100 வருடம். எல்லாரையும் காலம் எனும் தராசு நிறுக்கத்தான் போகிறது. அதை காலத்தின் கையில் விட்டுவிடுவோம்.

 2009 முன்பு களவு நடக்கவில்லை என நான் சொல்லவில்லை. காசை எடுத்தவர்கள் மீது எப்போதும் குற்றம் சொல்லலாம். ஆனால் உயிர் பயம் காரணமாக 2009 க்கு முன் களவெடுக்கப் பயப்பட்டர்கள். தவிர பல நல்லவர்களும் அப்போ இணைந்து செயல்பட்டர்கள். 2009 ற்கு பிறகு அப்படி இல்லை என்பது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வது.

ஆகவே 2009 க்கு முன் செயல்பட்டவர்கள் மீது எழுந்தமானமாக சேறடிக்காமல், ஆதாரங்களை முன்வைத்தால். நாமும் அவர்களை பற்றி அறிய கூடியதாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.