Jump to content

தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..

May 27, 2019

 

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது.

யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியின் கீழ் இரண்டு தடவைகளுக்கு மேலாக முஸ்லிம்கள் மீதான இந்த கும்பலாட்சி வன்முறைசார்ந்த தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி உள்ளது. இது இறைமையுள்ள ஆட்சிக்குள்ளே வலிமை வாய்ந்த வன்முறை சார்ந்த சக்தியொன்று மறைகரமாக இருந்து செயற்படுவதையே உறுதிப்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த நாடு என்ற தனியொரு இன, மத ரீதியான மேலாண்மை சார்ந்த அரசியல் போக்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியை வெளிப்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது. பல்லினங்கள் சார்ந்த பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற பன்மைத்தன்மை கொண்ட இந்த நாட்டின் பாரம்பரியத்தை படிப்படியாக அடித்து நொறுக்கி இல்லாமல் செய்கின்ற ஆபத்தான நிகழ்ச்சி நிரலைக் கொண்ட தொடர் நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே இது காணப்படுகின்றது.

எப்படி நடந்தது?

முகப்புத்தகத்தில் ஒருவர் வெளியிட்டிருந்த ‘சிரிக்காதே. நீயும் ஒரு நாள் அழுவாய்’ (Don’t laugh 1 day you will cry) என்ற கருத்துப் பதிவானது, வன்முறை வழியில் பழிதீர்க்கின்ற முஸ்லிம் மக்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவதாகத் தப்பர்த்தம் செய்து, அதற்கு எதிராக மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாக சிலாபம் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் இதனை ஒரு சாதாரண சிறிய சம்பவமாகவே முதலில் கருதியிருந்தனர். ஆயினும் அது அவர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி, சிலாபம் மற்றும் குருணாகலை மாவட்டங்களின் பல இடங்களுக்கும் இந்த வன்முறைகள் பரவி, முஸ்லிம் மக்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் மூலம் நாட்டில் உருவாகியிருக்கின்ற சர்வதேச பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரச படைகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு தருணத்தில், அதுவும் சிலாபம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான பாதுகாப்புச் சூழலில் சிலாபம், மினுவாங்கொட, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, குளியாப்பிட்டிய, கினியாம, கொட்டாம்பிட்டிய போன்ற பல இடங்களில் முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

வன்முறைக்குத் தூண்டுதலாகக் கருதப்பட்ட முகப்புத்தகப் பதிவானது, பாரிய அளவில் ஒரு சமூகத்தையே குறி வைத்து தாக்கி அவர்களுடைய உடைமைகளைத் தீயிட்டு நாசமாக்குகின்ற அளவுக்குப் பெறுமதி வாய்ந்த காரணமாகத் தோற்றவில்லை. ஆயினும் அந்த சிறிய சம்பவத்தை ஒரு தீப்பொறியாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த குண்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற ஆவேசத்துடன், நன்கு திட்டமிட்ட வகையில் இந்த வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு மற்றும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த உச்ச கட்ட பாதுகாப்பான ஒரு தருணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கும்பல் கும்பலாக வெளியிடங்களில் இருந்து வந்து வீதிகளில் பகிரங்கமாக உரத்து கோஷமிட்டபடி முஸ்லிம்களின் வீடுகள் வர்த்தக நிலையங்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

இதன் மூலம், இந்த வன்முறையாளர்கள், அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை. அதற்கு அடங்கி நடக்கவில்லை. அத்துடன், வீடுகளில் முடங்கியிருந்து அமைதி காக்க வேண்டும் என்ற பொலிசாரினதும், பாதுகாப்புப் படையினரதும் உத்தரவை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.

பொது அமைதிக்கும், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளுக்கும் ஊறு விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறையாளர்களின் செயற்பாட்டை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும், படையினரும் உடனடியாகத் தடுப்பதற்கு முற்பட்டிருக்கவில்லை. அந்த வன்முறையாளர்கள் வீதிகளில் கும்பலாகக் கூக்குரலிட்டுச் சென்றதையும், வன்முறையில் ஈடுபட்டதையும் அவர்கள் பாராமுகத்துடன் ஊக்குவித்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துரைத்துள்ள போதிலும், அப்பாவி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களை அகதிளாக்கும் வகையில் வீடுகள் வர்த்தகநிலையங்கள் என்பவற்றைத் தாக்கி, தீயிட்டு அழித்துள்ள அநியாயத்திற்கு இன்னும் அhசாங்கம் உரிய முறையில் பொறுப்பெற்கவில்லை. உரிய முறையில் பொறுப்பு கூறவுமில்லை.

இந்த வன்முறைகளின்போது பிங்கிரிய என்ற இடத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்து ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நிலையத்தை ஆயிரக்கணக்கானவர்கள் முற்றுகையிட்டு கலகம் செய்தமையும், அந்த இடத்திற்குச் சென்ற சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தயாசிறி ஜெயசேகர கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவித்துச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தயாசிறி ஜயசேகர ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்தை மூவாயிரம் பேர் வரையில் முற்றுகையிட்டிருந்ததையடுத்து, ஏற்பட்டிருந்த பதட்ட நிலைமையைத் தணிப்பதற்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைப் பாதுகாப்பாக பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்காகவே அங்கு சென்றதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கானவர்கள் ஒரு பொலிஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்திருந்த பதட்ட நிலையில் பாதுகாப்பைப் பலப்படுத்தி நிலைமையைக் கையாள்வதற்கு ஏன் இராணுவம் அழைக்கப்படவில்லை அல்லது ஏன் இராணுவம் அங்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க எவரும் முன்வராத நிலைமையே காணப்படுகின்றது.

தொடரும் வன்முறை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாடு மீள்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக மோசமானவை. மனித இயல்புக்கு முரணான காட்டுமிராண்டித்தனமானவை. ஒரு சிறுபான்மை மத இனத்தின் மீது பேரினவாதிகள் மேற்கொள்கின்ற மத ரீதியான இன ரீதியான அடக்குமுறையாகவே இந்தத் தாக்குதல்கள்; பதிவாகியிருக்கின்றன. இரண்டு தினங்கள் வரையில் நடைபெற்ற இந்த வன்முறையானது 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது தமிழ் மக்கள் மீது நாடளாவிய ரீதியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு வன்முறைக்கு ஒத்ததாகவும், அது போன்ற வன்முறை மீண்டும் தோன்றுவதற்கான அடையாளமாகவும் சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

கறுப்பு ஜுலை இன வன்முறையானது, திட்டமிட்டமுறையில் அரங்கேற்றப்பட்டிருந்தது. அந்த வன்முறையின்போது சுமார் நாலாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், தீயிட்டும் அழிக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.

அதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகளும் திட்டமிட்ட வகையிலேயே நாடத்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெளியிடங்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை முகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களின் ஊடாக தூண்டிவிட்டு, ஒருங்கிணைத்து, ஒன்று கூட்டி இந்த வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்களை அணி சேர்ப்பதற்காக சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட காணொளிகள், ஒளிப்படங்களையும் பரவலாகப் பதிவேற்றி பிரசாரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அரசியல் மறைகரங்களும், சிங்கள பௌத்த தேசியவாதமும் இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்து ஊக்குவித்துச் செயற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த போதிலும் சட்டவிரோதமான குறுக்கு வழிகளின் ஊடாக அவற்றைப் பயன்படுத்தி பலரும் செயற்பட்டிருப்பதகவும் கூறப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கின்ற ஒரு தருணத்தில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால், பொலிசாரும் இராணுவத்தினரும், இந்தச் சந்தர்ப்பத்தில் பாராமுகமாக இருந்ததைப் போன்று அமைதி காத்திருப்பார்களா என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அந்தக் கேள்வியில் அர்த்தமுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மத, இனவாத வன்முறைகளின் பின்னால் உள்ள இனவாத அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்தக் கேள்வி அமைந்துள்ளது.

முன்னைய அரசாங்கத்தில் அளுத்கம பிரதேசத்தில் சிங்கள பௌத்தர்கள் பௌத்த துறவிகளின் தலைமையில் பேரணிகளாகச் சென்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்கண்ட சாட்சிகள் பலர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் அம்பாறை மற்றும் திகன கட்டுகஸ்தோட்டை போன்ற பகுதிகளில் பேரினவாத கும்பல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த சம்பவங்களிலும் பௌத்த குருமார்கள் பகிரங்கமாகவே வன்முறைக் கும்பலில் காணப்பட்டதை ஊடகங்கள் செய்திகளின் மூலம் வெளிப்படு;த்தியிருந்தன.

அதேபாணியில்தான் சிலாபம் மற்றும் குருணாகலை மாவட்டப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் வன்முறைக் கும்பல்களினால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டிருந்தன.

பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

கடந்த 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழர்கள் மீதான கறுப்பு ஜுலை இன வன்முறைத் தாக்குதல்களில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் நிர்மூலமாக்கப்பட்டதைப் போலவே, முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், முஸ்லிம் சமூகத்தினருடைய பொருளாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. நசுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும், சிறுநகர்ப்புறங்களிலும் தாக்குதல்களுக்கு இலக்காகிய முஸ்லிம்களுடைய சிறு வர்த்தக முயற்சிகளே பாதிப்புக்கும் பேரழிவக்கும் உள்ளாக்கப்பட்டது. என்றாலும், இது அந்தந்தப் பிரதேசத்தின் வளர்ச்சி, அதன் பொருளாதாரம், என்பவற்றை நிர்மூலமாக்கி தேசிய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதே பொருளியலாளர்களின் கருத்தாகும்.

இந்த வன்முறைகளின் மூலம் உள்நாட்டில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவும் இன ஐக்கியமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற அல்லது பழகுகின்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இதனால், தேசத்தின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் குலைந்து நாட்டின் பொதுவான அமைதியை கேள்விக்கு உள்ளாக்குகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் மூன்று உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த ஹோட்டல்களின் இருப்புக்கு உரிய பாதுகாப்பு குறித்த அச்சமும், சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்ற உல்லாசப் பயணத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய வருமானத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் பின்னர் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமைகளை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, நாடு சுமுக நிலைமைக்குத் திரும்பத் தொடங்கியிருந்த வேளையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து தாக்குதல்கள் நடைபெற்ற பிரதேசங்கள் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நன்மையையும் கருதி இந்த ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டபோதிலும், நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கின்ற உல்லாசப் பயணிகளின் வருகை, அந்நிய முதலீட்டாளர்களின் வர்த்தக முதலீட்டுக்கான வருகை என்பவற்றைப் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கின்றன.

நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது. அங்கு செல்வது ஆபத்தானது என்ற செய்தியையே தேசிய பாதுகாப்புக்கான ஊரடங்கு உத்தரவு என்பது வெளியுலகத்திற்குக் காட்டுகின்ற காட்சியாக இருக்கும். ஆபத்தான சூழலுக்குள் செல்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள். அதுவும் சர்வதேச பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளுரில் கலவரங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எவரும் உல்லாசப் பயணம் மேற்கொள்ளவோ அல்லது முதலீடு செய்வதையோ ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

அத்தகைய ஒரு நிலைமையே பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் உருவாக்கியிருக்கின்றன. சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்திருந்த முன்னெச்சரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்திருந்ததைப் போலவே, குண்டுத் தாக்குதல்களின் பாதிப்பில் இருந்து நாடு மீளெழ முயற்சிக்கின்ற தருணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தி பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்குரிய இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.

சர்வதேச பயங்கரவாதம் நாட்டிற்குள் தலையெடுத்துள்ள பின்னணியில் சுய அரசியல் நலன்கள் மற்றும் சிங்கள பௌத்த தேசியத்தின் மீது கொண்ட பற்றுறவு காரணமாக அராசங்கம் பாராமுகமான போக்கில் நடந்து கொண்டிருப்பது நாட்டின் பொதுவான எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

அரசியல் ரீதியான அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும், சுய அரசியல் இலாபத்திற்கான நிலைமைகளைக் கைவிடாமல் பாதுகாத்துக் கொள்வதிலும் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற கரிசனையும் அக்கறையும் உண்மையான நாட்டின் நலன்கள், எதிர்கால நிலைமைகள், தேசிய பாதுகாப்பு போன்ற அதிமுக்கிய விடயங்களில் காட்டுவதில் அக்கறையற்ற ஓர் அரசியல் போக்கையே காண முடிகின்றது.

குடியியல் அரசியல் உரிமைகள்

நாட்டு மக்களின் குடியியல், அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழn ஊiஎடை யனெ Pழடவைiஉயட சுiபாவள (ஐஊஊPசு) யுஉவ) நாட்டின் சட்ட நடைமுறைகளில் காணப்படுகின்றது.

இந்த சட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நியதி.

யாரேனும் ஆளொருவர் மற்றவருடைய குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு மீறிச் செயற்பட்டு பகை உணர்வைத் தூண்டிவிடுதலும், மோதல் நிலைமைகளை உருவாக்குதலும் தண்டனைக்குரிய குற்றமாக இந்தச்; சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குடியியல் என்பது ஒரு குடிமகன் என்ற அந்தஸ்தில் தனக்குள்ள அரசியல் மற்றும் மத உரிமைகளைப் பேணுவதற்கும் பேணி நடப்பதற்கும் அதிகாரம் கொண்டிருப்பதையே குறிக்கின்றது எனலாம். அதேபோன்று அந்தக் குடிமகனுக்கு அரசியல் சார்ந்த உரிமைகளும் இந்த சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்த உரிமைகளை மீறுகின்ற வகையிலேயே இந்த சட்ட விதிகளையும் பொது அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான ஏனைய சட்டவிதிகளையும் மீறும் வகையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் ஒரு கூட்டுச் செயற்பாடாக, கும்பல்கள் – குண்டர்கள் ஒரு தடவையல்ல, பல தடவைகள் இந்த வன்முறைகளில்; ஈடுபட்டு கலகம் புரிந்திருக்கின்றார்கள். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் (ஐஊஊPசு யுஉவ) கீழ் ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை, எதிர்;ப்புணர்ச்சியை அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலோ ஆகாது என சுட்டிக்காட்டி, அத்தகைய நடவடிக்கை தண்டனைக்குரிய ஒரு குற்றச் செயலாகும் என்று வரையறை செய்திருக்கின்றது.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருந்த கும்பல்கள் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களைத் தாக்கி ஒருவரைக் கொன்று, பலரையும் உயிரச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, வீடுகளைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு துரத்தியடித்துள்ளது மட்டுமல்லாமல், அவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக்கொளுத்தி அழித்து அட்டகாசம் புரிந்திருக்கின்றன.

இதற்கு முன்னர் இத்தகைய குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்த போதிலும், அவர்கள் எவரும் கைது செய்யப்பட்டு முறையாக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை. இத்தகைய பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்காகவே உருவாக்கியது போன்று தண்டனை பெறுவதில் இருந்து விலக்கு பெறுகின்ற ஒரு குற்றவியல் கலாசாரம் அரசியல் அந்தஸ்து பெற்ற ஒரு நாகரிகப் போக்காக நாட்டில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய குற்றவாளிகளை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை கிடையாது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் மாத்திரம் மேல் நீதிமன்றத்திற்கு, பிணை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குடியியல் அரசியல் உரிமைகள் சட்டம் மட்டுமல்ல. பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களையம், வன்முறைகளில் ஈடுபடுபவர்களையும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் பொலிசாருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தேசிய பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டு தேசிய பாதுகாப்பு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்ற ஒரு சூழலில்;, அதுவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில் ஓர் இனக்குழுமத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ள கும்பல்களின் அராஜக போக்கை, கும்பல்களின் ஆட்சியைப் போன்ற ஒரு போக்கை இறைமையுள்ள அரசுகள் தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதித்திருப்பதை எவ்வாறு வகைப்படுத்துவது, எவ்வாறு நியாயப்படுத்துவது என்று தெரியவில்லை.

அதேவேளை, தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தை எழுதாத ஒரு மரபு வழியிலான ஒழுங்கு முறையாக அரசாங்கம் அனுமதித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அதேநேரம் இந்த கலாசாரத்தை சுய அரசியல் நலன்களைக் கருத்திற் கொண்டும், சிங்கள பௌத்த தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டும் தொடர்ந்து அனுமதிப்பது என்பது நாட்டைப் பாரதூரமான நிலைமைக்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

எனவே, கும்பலாட்சி என்ற வன்முறைப் போக்கினைக் கட்டுப்படுத்தி இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசு முன்வர வேண்டும். அதேவேளை, அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த வல்ல சக்திகளும் பொது அமைப்புக்களும் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களும் இது விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி அரசாங்கத்தைச் சரியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான அழுத்தத்தையும் ஊக்குவிப்பையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

http://globaltamilnews.net/2019/122790/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.