Jump to content

ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்!

9.jpg

ஒரு கப் காபி!

ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும்.

அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும்.

இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன.

எந்த ஒன்றையும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணின் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும்.

ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நாள் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.

மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது.

- பா.உதய்

 

https://minnambalam.com/k/2019/05/27/9

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.