Jump to content

தண்ணீர்


Recommended Posts

நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்!

ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது.

பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல்.

தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.

2. இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.

3. பயிரின் கீழ்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனம் தான் அடிப்படை காரணியாக இருக்கிறது.

4. பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில், இஸ்ரேல் சூரியசக்தி மூலம் தனது ஆற்றல் தேவைகளை நிறைவேற்றுகிறது.

5. உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.

6. பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில், உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

 https://www.bbc.com/tamil/global-40522516

à®à®¸à¯à®°à¯à®²à¯: மணலில௠மலரà¯à®®à¯ பà®à¯à®®à¯

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்... இருக்கின்ற தண்ணீரை....மாசு படுத்தாமல் இருக்க, 
மனிதருக்கு  விழிப்புணர்வு அவசியம்.சுன்னாகத்தில் செய்த மாதிரி... 
பல்லாயிரக்  கணக்கான லீற்றர்  கழிவு எண்ணையை, நிலத்தில் ஊற்றியதால்... 
இன்று அப்பிரதேச மக்கள் குடிக்க நீர் இல்லாமலும்,
பல்வேறு நோய்களுடன் போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு மிக மிக அத்தியாவசியமானது நீர். அந்த நீரை மாசு படுத்தி,
கொடிய செயலை செய்தவர்களுக்கு, இதுவரை தண்டனை கிடைத்ததாகவும் தெரியவில்லை.
தமிழ்நாட்டிலும்,  இதே... நிலைமைதான். வளமான பூமியை பாலைவனம் ஆக்க, 
அரசியல்வாதிகள் பணத்துக்காக  ஒரு இனத்தின் வாழ்வாதாரத்தை பாழாக்குகின்றார்கள்.

Link to comment
Share on other sites

நீரின்றி உயிர்கள் வாழ்தல் அாிது.நீரினால் மட்டுமே உயிா்கள் வாழ்கின்றன என்பதான்ல்தா உலகைப் படைத்த இறைவன் பெரும் பகுதி நீராகவும் எஞ்சிய பகுதி நிலமாகவும் படைத்தான்.
 
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் காலத்தில்கூட அமைச்சர்களை நோக்கி எழுப்பப்படும் முதல் கேள்வி ”மாதம் மும்மாாி மழை பொழிகின்றதா? மக்கள் நலமுடன் வாழ்கின்றனரா” என“பதே ஆகும்.இதிலிருந்தே மாாி என்னும் மழை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நன்கு விளங்கும்.
 
வடமாகாணம்  ஏனைய  மாகாணங்களை  விட  நீர்பற்றாக்குறை  கொண்ட மாகாணமாகும். அதிஸ்ட வசமாக யாழ் குடா நாடு நிலக்கீழ் நீர் பெற்ற நிலப்பரப்பாக இருப்பினும் நீர் முகாமைத்துவம் குறைந்த பகுதியாகவே உள்ளது.இதற்கு நாம் யுத்த நிலையை காரணம் கூறி  அமைதி  காண  முடியாது.  எமது  பாரம்பரிய  முறைமையுடன்;  எம்மவர்களின்  பண்புசார் நிலைமைகளும் பாதகமாக அமைவதை கூறியே ஆகவேண்டும்.மாற்ற எண்ணங்களை உள்வாங்க தயங்கும் நிலை விவசாய நடவடிக்கைகளிலும் திட்ட செயற்பாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
 
தமிழில், உறவு ஒருவரின் ஆய்வுக்கட்டுரையை கீழே காணலாம். 
Link to comment
Share on other sites

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள

2070 தமிழகம் பாலைவனமாகும் :

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

- முகநூல் பக்கத்தில் இருந்து 

https://www.vikatan.com/news/miscellaneous/158557-what-nitin-gadkari-should-do-first-in-tamilnadu-instead-of-godavari-krishna-interlinking.html?fbclid=IwAR2QhwNK-6Dxr2rfHBIs79sliKtYAkM8QM_CVULLZjParnE3Y5JmuMMHYRs

 

Link to comment
Share on other sites

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுகள் மத்தியில் போதுமான தண்ணீர் கிடைக்கும் வீடு.

 

 

Link to comment
Share on other sites

 

#TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்தது. இதையடுத்து சென்னையில் நவீன நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தக் கோரி வழக்கறிஞர் விபிஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என உள்ள நீர்பிடிப்புப் பகுதியை அதிகரிப்பதன் மூலம் வெள்ளநீர் வீணாகக் கடலுக்கு செல்வதைத் தடுக்க முடியும். ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ள சேதமும் கட்டுப்படுத்தப்படும்'' என வாதிட்டார்.

சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுகின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für திலà¯à®ªà®©à¯ பிரபாà®à®°à®©à¯.

தண்ணீர்  அருந்தாமல்,  சாதாரண ஒரு மனிதனால்,
ஐந்து மணித்தியாலத்துக்கு மேல் தாங்குவது கடினம்.

மாவீரன்  திலீபன்.... அகிம்சை போராட்டத்தில், 
பன்னிரண்டு நாட்கள், நீர் அருந்தாமல்... செய்த உண்ணாவிரதம் மறக்க  முடியாதது.

இந்தியாவின்,  மகாத்மா  காந்தி, என சொல்லப் படும் அவரே...
தண்ணீர்  குடித்துக் கொண்டு தான்,  உண்ணா விரதம்  இருந்து,
இந்தியாவுக்கு.... சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.

Link to comment
Share on other sites

காற்றில் இருந்து நீரை பெறக்கூடிய இயந்திரம் - தொழில்நுட்பம்.  

 

Link to comment
Share on other sites

முல்/மாங்குளம் மத்திய மாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

?t=30

தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்றாகத்தான் இருந்தது 

2030 கண்டிப்பா இது நடக்கும் தமிழகத்தில் அதுக்கு முன் நாம் எல்லோரும் விழித்துக் கொள்ள வேண்டும் காப்பரேட் கம்பெனி முதலில் தமிழகம் முழுவதும் மூட செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்னும் மிருகம். மனதை பாதித்த காணொளி. 😰

Link to comment
Share on other sites

On 5/29/2019 at 6:25 AM, ampanai said:

நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்!

ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது.

பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல்.

தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.

2. இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.

3. பயிரின் கீழ்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனம் தான் அடிப்படை காரணியாக இருக்கிறது.

4. பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில், இஸ்ரேல் சூரியசக்தி மூலம் தனது ஆற்றல் தேவைகளை நிறைவேற்றுகிறது.

5. உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.

6. பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில், உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

 https://www.bbc.com/tamil/global-40522516

à®à®¸à¯à®°à¯à®²à¯: மணலில௠மலரà¯à®®à¯ பà®à¯à®®à¯

பயனுள்ள பதிவு. தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்னும் மனித ஜந்துக்கள் உணரவில்லை. எதிர்காலச் சந்ததிகள் நீரின்றி தவிக்கும் நிலைக்கு நாமும் நம் அலட்சியப்போக்கும் காரணமாக அமையும்.

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

Link to comment
Share on other sites

தண்ணீர் பிரச்னையில் கொல்லப்பட்ட தஞ்சை சமூக ஆர்வலர் - தலைமகனை இழந்து தவிக்கும் குடும்பம்!

ஆனந்த்பாபுவுக்கு இரண்டு அக்கா, ஒரு தங்கச்சி அதில் ஒரு அக்காவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது. அவருக்கு மூளை வளர்ச்சியடையாத, கை, கால்கள் செயல் இழந்த நிலையில் 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் நிலை முடியாத அப்பா, அம்மா என அந்தக் குடும்பத்துக்கே இவன்தான் ஜீவாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்தான். அவன் இல்லாமல் போனதால் அந்தக் குடும்பே, தற்போது நிர்கதியாய் நிற்கிறது. இனி எதிர்காலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமகனை இழந்து தவித்து வருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/159405-tanjore-youth-beaten-to-death-over-water-sharing-dispute.html?fbclid=IwAR3GsLe-ZuleJhp69yDx2HLk8M__-8Ik47JhAeDE2gjfagVGwXgts9UNji8

Link to comment
Share on other sites

 

வீட்டுக் கூரையில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் விவசாயி | Water

 

Link to comment
Share on other sites

கடும் தண்ணீர் தட்டுப்பாடு - சென்னையில் 4000 உணவகங்கள் மூட ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு

தண்ணீர் தட்டுப்பாட்டால் ஐ.டி.ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய ஐ.டி.நிறுவனங்கள் அறிவுறுத்தல்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

"சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?"

தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், எந்த மூலையில் பார்த்தாலும் பொதுமக்களின் கூக்குரல், தெருக்குழாய்கள் முன்னே அணிவகுக்கும் காலிக்குடங்கள், வற்றிய கிணற்றில் ஊசலாடும் வாளி, குடிநீர் கேட்டு சாலைமறியல், ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தண்ணீர்ப் பிரச்னைக்காகத் தீக்குளிப்பு முயற்சி, தண்ணீருக்காகக் கத்திக்குத்து, `தண்ணீர் இல்லை' எனத் தீயணைப்பு நிலையங்கள் கைவிரிப்பு... இதுபோன்று எங்கு கேட்டாலும் `தண்ணீர் இல்லை’ என்கிற பேச்சு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது தண்ணீர்த் தட்டுப்பாடு.

தொடர் போராட்டத்தில் மக்கள்...கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்... 'கொஞ்சம் பொறுங்கள் கடல்நீரைக் குடிநீராக்கித் தருகிறோம்' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகப் பல்வேறு தரப்பினரால் ஒரு சேர முன்வைக்கப்படும் ஒரே மாற்று, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

கடல்நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்து, குடிநீராக மாற்றும் முறையே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். பொதுவாகக் காய்ச்சி வடித்தல் (Thermal distillation) மற்றும் எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis - RO) என்ற இரண்டு தொழில்நுட்பமுறைகள் இருப்பினும் எதிர் சவ்வூடு முறையே பெரும்பாலும் உலகநாடுகளால் பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேச உப்பு நீக்கும் சங்கத்தின் (International Desalination Association) அறிக்கையில், 2015 வரையிலான கணக்கெடுப்பின்படி, உலக அளவில் சுமார் 150 நாடுகளில் 18,000 உப்பு நீக்கும் தொழிற்சாலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வறட்சி மிகுந்த வளைகுடா நாடுகளில் மட்டும் 55 சதவிகிதம் கடல்நீர் பயன்பாட்டில் உள்ளது. சவுதி அரேபியாவின் செங்கடல், பெர்சியன் வளைகுடாவில் மட்டும் கடல்நீரை குடிநீராக்கக்கூடிய 27 ஆலைகள் உள்ளன.

திட்டத்தின் விளைவுகள், ஆபத்தில் உலகச் சமநிலை!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் 840 மைல் கடற்கரைப்பகுதியில் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பொசைடன் (Poseidon) உள்ளிட்ட நிறுவனங்களின் 21 கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் இருந்தன. இதன்மூலம் நவாடா (Nevada), ஆரஞ்ச் கவுண்டி (Orange county) உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்த ஆலைகளின் தாக்கத்தால் கடல்வளம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானது என `பசிபிக் இன்ஸ்டிட்யூட் வாட்டர் புரோகிராம்' (Pacific Institute’s Water Program) என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. `Desalination: An Ocean of Problems' என்னும் பெயரிலான அந்த ஆய்வறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளினால், ஆண்டுதோறும் சுமார் 3.4 மில்லியன் அளவிற்கு மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மீனவர்கள் சுமார் 165 மில்லியன் பவுண்ட் அளவிலான மீன்களை நாள்தோறும் இழக்கின்றனர். மேலும் சுமார் 717.1 மில்லியன் பவுண்ட் அளவிற்கு எதிர்கால மீன்பிடி இருப்பை இழப்பதோடு, சுமார் $212.5 மில்லியன் டாலர் அளவு பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ஹேதர் கூலே (Heather Cooley), “கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் நீரை உறிஞ்சுவதனாலும், கரிப்பு நிறைந்த நச்சு நீரை வெளியேற்றுவதனாலும் கடலின் சுற்றுபுறச்சூழல் வெவ்வேறு முறைகளில் மாசடைகிறது. இந்தப் பகுதிகளில் கடல் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகும் சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவிக்கிறார்.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கடல்நீர் போக மீதமுள்ள வேதிகலந்த உப்புநீர் மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்தப்படும். சாதாரண கடல்நீரின் உப்புத்தன்மையை விட உட்செலுத்தப்படும் எஞ்சிய நீரின் தன்மை இரண்டு மடங்கு உப்புத்தன்மை வாய்ந்தது. கடல்நீரின் உப்புத்தன்மை இயல்பாக மூன்று சதவிகிதம். ஆனால் வெளியேற்றப்படும் நீரின் உப்புத்தன்மை ஆறு சதவிகிதம். இந்த உப்புநீரோடு சுத்திகரிப்பில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களும் சேர்ந்து வெளியேறுவதால் நச்சு நிறைந்த உப்பாக (Toxic Brine) மாறி கடலில் கலக்கிறது. இதனால் அந்தப் பகுதி முழுமையும் ரசாயன மண்டலமாக மாறி, உயிர்வாழத் தகுதியற்ற இடமாக மாறுகிறது. பெரும்பாலும் சிறிய உயிரினங்களே அழிவுக்குள்ளாவதனால் உணவுச்சங்கிலியின் அடிப்படையே இதனால் அறுபடுகிறது. சர்வதேசக் கடல்நீர் வல்லுநர்கள் 'அழிவுப்பகுதி' (Dead Zone or Kill Zone) என்று அழைக்கிறார்கள். சுழற்சிமுறையில் இந்த நீரே மீண்டும் குடிநீராக சுத்திகரிக்க உள்ளிழுக்கப்படுகிறது.

திட்டத்தின் பின்னணி என்ன?

'ஃபுட் & வாட்டர் வாட்ச்' (Food & Water Watch) என்ற பொதுநல அமைப்பின் அறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் முறை, நம் பாரம்பார்ய முறையைவிட நான்கு மடங்கு செலவு மிகுந்த தொழில்நுட்பம். பெருமளவு மின்சார விரயமும் ஏற்படும். போரான் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கடல்நீரில் உள்ளன. ஆனால் சாதாரண குடிநீரில் அவை கிடையாது. சுத்திகரிப்பின் மூலம் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே இவை நீக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும். தண்ணீர் மாசுபடும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். உலக வெப்பமயமாதல் உண்டாகும்!” என எச்சரிக்கை விடுக்கிறது. 

தமிழகத்தில் தடம்பதித்த திட்டம்:

 

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைதான், தெற்காசியாவிலேயே மிகப்பெரியது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியிலும் ரூ.5,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது ரூ.700 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், ரூ.1000 கோடியில் விழுப்புரம் மாவட்டத்திலும், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி எனத் தொடர்ந்து தமிழகக்  கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பெரும் பொருள்செலவில் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது அந்தப் பகுதி மக்கள் வரவேற்றனர். ஆனால், பாதிப்பை நேரடியாக உணர்ந்த பின்னர் அந்த ஆலைகளுக்கு எதிராக ``NO DESAL PLANT” என்ற கோஷத்துடன் குழந்தைகளும், பெண்களும், மீனவர்களும் என ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டில், சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையிலிருந்து விநாடிக்கு 2,000 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், அப்பகுதி குடிநீர், உப்புநீராக மாறியிருக்கிறது.

மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவக்குப்பத்தில் 200 அடிக்குக் கடல்நீர் உட்புகுந்து சமுதாயக்கூடம், வலைப்பின்னல் கூடமெல்லாம் இடிந்து விழுந்தன. கடலின் மேற்பரப்பில் வேகமாகக் கழிவுநீர் பாய்வதனால் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் உடைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இதுபோன்ற தொடர் நிகழ்வால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதேபோல் சென்னை மீஞ்சூரிலும் போராட்டம் நடந்தது. 

இயற்கையே இயங்கியல் தத்துவம்:

தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என வான்மழை பார்த்து வாழ்ந்த மக்கள் இன்று கடலை நோக்கி நகர்வது காலக்கொடுமை. கடல்நீரிலிருந்து உப்பு வடித்த கூட்டம், இப்போது உப்புநீரிலிருந்த குடிநீரை வடிக்கும்வழியில் ஒதுங்குகிறது. நவீனத்தின் பெயரால் நரக வாழ்க்கை வாழ்கிறது. குடிநீர்ப் பிரச்னைகளுக்குக் கடல்நீரைக் சுத்திகரிக்கும் ஆலைகள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. அது மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கு மாறாக, நிறுவனங்களின் லாபத்தையே கணிக்கின்றன.  

Link to comment
Share on other sites

சென்னையில் மட்டும் சுமார் 4,000 ஏரிகள்வரை பயன்பாட்டில் இருந்தன. ஆண்டுக்குச் சராசரியாக 1,350 மி.மீ மழை பொழிகிறது. குடியிருப்புகளாக மாறிவிட்ட ஏரிகளைத் தவிர்த்து விட்டு, இப்போதுள்ள சில நூற்றுக்கணக்கான ஏரிகளையாவது தூர்வாரி, சீர்செய்து பெய்யக்கூடிய மழைநீரைச் சேகரித்தாலே குடிநீர்ப் பஞ்சம் என்பது எப்போதும் இருக்காது. மேலும் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற தமிழக நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கிவைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆண்டுமுழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோன்ற பணிகளைச் செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான செலவைக் காட்டிலும் குறைவான தொகையே ஆகும். `அறிவற்றங் காக்குங் கருவி' என எழுதியவன் தமிழன். எனவே, அறிவுத் தெளிவோடு செயல்படுவோம்!

https://www.vikatan.com/news/coverstory/159740-seawater-desalination-plant-an-effect-of-commodification.html?fbclid=IwAR0m2l3JLUf8ynhA0XFUn17feTjlFcIt3xaEEYsRCRtcwiIbmJ7H6DC9zKw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் பாவித்து வெளியேறும் தண்ணீரை  இரண்டு வகையாக பிரிகிறார்கள்.

Grey Water 
Black Water 

முந்தியது, குளிப்பு, கழுவுதல் போன்றவை நடந்த பின் வெளியேறுவது.

இரண்டாவது, மனித கழிவுகளுடன் (flush) வெளியேறும் நீர்.

இந்த இரண்டாவது வகையில், நோய் தரக்கூடிய கிருமிகள் இருப்பதால், அதனை மீள் பாவனைக்கு பயன்படுத்த முடியாது.

ஆனால், முதலாவது வகை கழிவு நீரை, சேமித்து, வடிகட்டி flush தேவைகளுக்கு பாவித்து, தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்ற சிந்தனை இப்போது வந்துள்ளது.

வீட்டில் இருக்கும் ஒவொருவரும் மலம், சிறுநீர் என, flush மூலம் வெளியே அனுப்பும் நீரை, இந்த முதலாவது வகை நீரை பாவிப்பதன் மூலம் தடுக்கலாம் என நினைக்கிறார்கள்.

விரைவில் அது பாவனைக்கு வரும். தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடுகளில் இது விரைவில் வரலாம்.

Image result for using grey water for flushing toiletsImage result for using grey water for flushing toilets

Link to comment
Share on other sites

ஒரு ஆறு கிடையாது... 
மழையும் பெய்யாது... 
தண்ணீர்ப் பஞ்சமும் இல்லை ! உலகில் இப்படியும் ஒரு நாடு

வளைகுடாவில் சவுதி உள்ளிட்ட பல நாடுகள் மழை மறைவு பிரதேசங்கள்தான். மழை பெய்தால் அவர்களுக்குத் தீபாவளிபோல. ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் ஆறு மட்டுமே வளைகுடாவில் ஓடும் பெரிய நதி.  

à®à®µà¯à®¤à®¿ à®à¯à®à®¿à®¨à¯à®°à¯ திà®à¯à®à®à¯à®à®³à¯ à®à®®à¯à®¨à¯à®¤ à®à®à®à¯à®à®³à¯

உலகிலேயே ஒரு ஆறுகூட இல்லாத நாடு சவுதி அரேபியா. சவுதி மட்டுமல்ல பஹ்ரைன், அமீரகம் ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் கிடையாது. எப்போதாவது மழை கொட்டினால் திடீர் ஆறுகள் உருவாகும். அப்படியென்றால் இந்த நாடுகள் எப்படி தண்ணீர்ப் பிரச்னையைச் தீர்த்துக்கொள்கின்றன என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? சிம்பிள்... கடல்நீரைக் குடிப்பதற்கு உகந்ததாக்கிக் கொள்கிறார்கள். கடல் நீரில் உப்புத் தன்மையை நீக்கிப் பல நிலைகளில் கொதிக்க வைத்து குடிநீராக மாற்றிக் கொள்கிறார்கள். 

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், கடற்கரையிலிருந்து 467 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரின் மக்கள் தொகை சுமார் 35 லட்சம். பாரசீக கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு தங்குதடையில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.  இதற்காக மொத்தம் 17 இடங்களில் 27 குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் சவுதியில் உள்ளன. கிட்டத்தட்டச் சவுதியின் 4 கோடி மக்களுக்கும் தங்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. வளைகுடாவின் முக்கிய நகரங்களான ஜெட்டா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, தோஹா போன்ற எல்லா நகரங்களிலுமே கடல் நீரைக் குடிநீராக்கி பயன்படுத்துகிறார்கள். 

சென்னை அருகே நெம்மேலி, மீஞ்சூர் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கேயிருந்து தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது. தென்சென்னை மக்களுக்கு இந்தத் திட்டம்தான் கொஞ்சம் கைகொடுக்கிறது.  சென்னை போன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள நகரங்களுக்காகக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் அரசு போதிய கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். 

https://www.vikatan.com/news/world/159710-no-river-in-this-saudi-but-no-water-crisis-also.html?fbclid=IwAR1KGYj4GcywOQEiMcgDY5ivBjF4HWnXgeEThudNh_YJb_dIaxHkX3SYT3c

 

 

 

 

Link to comment
Share on other sites

தண்ணீர் சினிமா... தண்ணீர் பஞ்சத்தை திரை முன் கொண்டுவந்த கத்தி, அறம்!

https://tamil.news18.com/videos/shows/water-scarcity-issue-tamil-movies-akp-167335.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.