Jump to content

தண்ணீர்


Recommended Posts

நகரத்துக்குள் இந்த காடு இருக்கும் இடம் மட்டும் கொட்டுகிறது மழை!

எப்படி சாத்தியம்?

 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? 

நெருக்கடியான நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது? மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதன் மூலம் சாத்தியமென்றால், இட வசதி இல்லாத ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இது எப்படி சாத்தியமாகும்? - த. விக்னேஷ் நம் #DoubtOfCommon man பகுதியில் எழுப்பிய கேள்வி.

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான தேவை. ஆனால் உலகில் கிடைக்கும் நன்னீரில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீரானது ஆவியாகி, கரு மேகங்களாக மாறி மழையாகப் பொழியும். இந்த இயற்கை நிகழ்வு ஒவ்வொருவருக்கும் போதுமான மழை நீரைக் கொடுக்கிறது. அவற்றைச் சேகரிக்க ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் எனப் பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு எப்படி உருவாகிறது? நிலத்தடி நீர்மட்டம் எப்படிக் குறைந்துபோனது?

 

மழைக் காலங்களில் இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும், ஆனால் சேமிப்பு வரம்புகள் காரணமாக இந்த நீரில் 36%க்கும் குறைவான நீரே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு வசதிகள் இல்லாததால் 65 சதவிகிதம் மழை நீர் கடலில் கலக்கிறது. இந்திய நீர்ப் பாசன நீர் வள மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாம் எதிர்கொள்ளும் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையானது, நீரின் பற்றாக்குறையால் ஏற்படுவது அல்ல,அதற்கு மழை நீரை வீணாக்குவது மற்றும் சேமிக்காததே காரணம் என்று அறிவித்துள்ளனர். தண்ணீரை அதிகளவு வீணாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

மரபுவழியாக மழைநீர் சேமிக்க பல வழிகள் கையாளப்பட்டன. பெய்யும் மழை நீரை வீட்டிலேயே சேமிக்க வீட்டின் நடுப்பகுதியில் முற்றம் அமைத்துள்ளனர். கூரைக்கு நாட்டு ஓடுகள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் குளங்களைக் கொண்டு மழைநீரைச் சேமித்தனர். அணைகளைக் கட்டினர். காலப்போக்கில் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் மாசுபாடு எனப் பல காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைந்து போனது.

குழாயிலிருந்து 3 அடி தூரத்தில் சுமார் 3 அடி விட்டம் உள்ள நான்கு அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக இட்டு அந்தக் குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்தக் குறிப்பிட தொட்டிக்குள் விட வேண்டும். இதன் மூலம் அவ்வப்போது பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க இயலும். நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க இம்முறை உதவுகிறது.

 

இரண்டாவது முறையானது, கொள்கலனில் சேமித்தல். இந்த முறை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு உகந்தது. நிலத்திற்கு அடியில் பெரிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம். நில மட்டத்திற்கு மேல் தொட்டியில் சேமிக்கலாம். ஏற்கெனவே உள்ள கிணறுகளைத் தூர்வாரி, அதில் வடிகட்டும் அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளிலும் சேமிக்கலாம்.

போர்வெல்லிலும் சேமிக்கலாம். போர்வெல் இல்லையென்றால் அந்த இடத்தினுடைய மண்ணின் தன்மையைப் பொறுத்து 10- 20 அடி ஆழம் வரை குழி தோண்டுவதன் மூலம் நீரை நிலத்திற்கு அனுப்பலாம்.

நகர்ப்புறங்களில் அதிக அளவில் கட்டடங்கள் கட்டப்படுவதாலும், பெய்யும் மழைநீர் நிலத்திற்குக் கீழ் இறங்க போதிய நிலப்பரப்பு இல்லாததாலும் மழைநீரைச் சேமிக்க இயலாமல் வீணாகிறது. அப்படியென்றால் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில், இடவசதி இல்லாத பல கட்டடங்களில் மழைநீரை எப்படிச் சேமிப்பது?

கட்டப்பட்ட வீடுகளிலோ அல்லது கட்டடங்களிலோ மழைநீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். இதை வடிவமைக்க ஆறு முக்கியமான அமைப்பு அடிப்படை தேவையாகிறது.

 

1. கொட்டு பரப்பு அல்லது பெய்யும் பரப்பு : பெய்யும் மழைநீரைச் சேமிக்கும், வீடு அல்லது கட்டடத்தின் மேற்பரப்பு.

2. கொண்டு போகும் அமைப்பு: மேற்பரப்பில் பெய்யும் மழையை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் குழாய்கள்.

3. கூரைகளைச் சுத்தம் செய்தல்: அசுத்தங்களை நீக்கி வேறு இடத்துக்கு அந்த நீரை எடுத்துச் செல்லும் சேமிப்புக் குழாய்கள்.

4. சேமிப்பு:கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக தொட்டியில் சேமிக்கவேண்டும்.

5. சுத்திகரித்தல்: அறுவடை செய்த நீரை வடிகட்டி சுத்தம் செய்யும் அமைப்பு.

6. பகிர்தல் : சேகரித்த மழை நீரை உபயோகிக்கச் செய்ய ஒரு சிறிய மோட்டார் அல்லது தொட்டி தேவைப்படும்.

இந்தத் தண்ணீர் நிலத்தடிக்கோ அல்லது நிலத்தின் மேலுள்ள டேங்குகளுக்கோ அனுப்பப்படுகின்றன. டேங்குகளில் மழைநீர் சேமிக்கப்பட்டால் காற்று, சூரிய ஒளி, கழிவுப் பொருள்கள் உட்புகாத படி டேங்குகள் அடைத்து வைக்கப்பட வேண்டும். படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீரைத் தெளிவடையச் செய்யலாம். ப்ளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களைக் கொல்லுகிறது. இந்தத் தண்ணீரை தோட்டத்திற்கும் கழிவறைக்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சேமித்த பிறகும் தண்ணீர் அதிகமாக இருந்தால் கிணறுகளிலும் சேமிக்கலாம்.

குழாய்கள், மழைநீர் வடிகட்டியை அமைக்க சிறிது பணம் செலவிட வேண்டும். சேமிப்புத் தொட்டி அமைக்க இயலாத நிலையில் கிணறுகள் சிறந்த தீர்வாக இருக்கும். குழாய்களை ஒருங்கிணைத்து, நீரை வடிகட்டி கிணற்றில் விடலாம்.

மழை நீர் சேமிப்பு என்பது அனைத்து நிலப்பரப்புக்கும் தேவையான ஒன்று. மழைநீர் சேமிப்பு எந்தப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது என்ற கேள்வி எழலாம். நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும், அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கும், மழை நீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கும், மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்கும் மழை நீர் தேவைப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று.

1. மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.

2. மழைநீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் சுத்தப்படுத்திய பிறகே உபயோகப்படுத்த வேண்டும்.

3. முதலில் கிடைக்கும் மழை நீரைச் சேகரிக்காமல் சற்று நேரம் வெளியேற்றிவிட்டு சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

4. மழை நீரைச் சேகரிக்க பயன்படும் பொருள்கள் அவ்வப்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கவும் வேண்டும்.

5. சேமிக்கப்படும் மழைநீரில் பாசிப்படிதல் மற்றும் பூச்சிகள் சேர்தலைத் தவிர்க்க வேண்டும்.

6. சமையல் அறை மற்றும் குளியல் அறையிலிருந்து வரும் கழிவு நீர் அல்லாத தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.

7. வற்றிவிட்ட கிணறுகளைத் தூர்வாரி விட்ட பிறகு மழைநீரைச் சேமிக்கப் பயன்படுத்தலாம்.

8. மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை நட வேண்டும்.

அன்றாட தேவையை மட்டும் கருத்தில் கொள்ளும் மக்கள் அடுத்த தலைமுறைக்கான தேவையை மறந்து விடுகிறார்கள். இன்று வீணாக்கப்படும் நீர் அடுத்த தலைமுறையின் உயிர் காக்கும் நீராகக் கூட இருக்கலாம்.

https://www.vikatan.com/news/environment/how-to-increase-groundwater-level-in-cities

Link to comment
Share on other sites

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

 

 

Link to comment
Share on other sites

இரண்டாம் தலைமுறைஅமெரிக்காவில் இருந்து  ஊருக்கு வந்து தூர் வாருவது என்பது பெருமைப்பட வேண்டிய, மாற்றையவர்களுக்கும் கூற வேண்டிய நிகழ்வு  !

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

உங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்..! என்னென்ன நடைமுறைகள்?

தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு அந்தப் பகுதி மக்கள் விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்தித்திருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகப் தூர்வாரிப் பராமரிக்காமல் இருந்ததும், பல நீர்நிலைகள்மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளும்தான். பருவநிலை மாற்றங்களால் பல நேரங்களிலும் மழை பெய்வதில்லை.

அபூர்வமாக மழை பெய்யும் தருணங்களிலும். மழைநீர் முறையாகச் சேமிக்கப்படாமல், வீணாகக் கழிவுநீர்களுடனும் கடல்நீருடனும்தான் கலந்துகொண்டிருக்கிறது. பெய்யும் மழைநீரைச் சேமிப்பதும். அதோடு, நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரிப் பராமரிப்பதுமே இதற்கு ஒற்றைத் தீர்வு.

யாரெல்லாம் நீர்நிலைகளைச் சரிசெய்ய முடியும்..?

`மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே, நீர்நிலைகளைச் சரிசெய்ய இயலும் என்ற கட்டாய விதிகள் முன்னர் நடைமுறையிலிருந்தன. இந்த வருடம் ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை திட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், `தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வாரத் தாமாக முன்வந்தால் அனுமதி வழங்க அரசு தயாராக உள்ளது; அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று, அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

 

யாரிடம் அனுமதி வாங்குவது..?

தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்களைத் தூர்வாருதல் போன்ற பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 2017 - 18-ம் ஆண்டு 1,511 ஏரிகளில் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் சுமார் 1,311 ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் 2018 - 19-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 1,829 பணிகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உலக வங்கி நிதியுதவியுடன், 22 மாவட்டங்களில் 1,325 ஏரிகள் மற்றும் 107 அணைக்கட்டுகளைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மீதமுள்ள ஏரிகளையும் தூர்வார, அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதோடு, `தனியார் நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வார முன்வந்தால், அனுமதி வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

இதன்படி, அந்தந்தப் பகுதி மக்கள் தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும்.

அல்லது தாங்களாகவே நீர்நிலைகளைச் சரிசெய்யத் தயாராக இருந்தால். தூர்வாரப்போகும் நீர்நிலை பற்றிய விவரங்களோடு. அந்தப் பகுதி பொதுப்பணித்துறை அல்லது கிராம அதிகாரியிடம் மனு அளித்தால், அவர் அந்த நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்டு சில நிபந்தனைகளோடு ஒப்புதல் அளிப்பார்.

அதேபோல் வண்டல்மண் தேவைப்படுபவர்கள், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னர், அரசு நிர்ணயித்த அளவான நஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 25 டிராக்டர்களும், புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 30 டிராக்டர் என்ற அளவிலும் மண் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். மண்பாண்டம் செய்பவர்களாக இருந்தால் 10 முதல் 20 டிராக்டர் அளவுக்கு மண் அள்ளிக்கொள்ளலாம்.

 

 

நடைமுறையில் என்ன நடக்கிறது..?

கடந்த இரண்டு வருடங்களாக, கோவையைச் சுற்றியிருக்கும் பல்வேறு நீர்நிலைகளைச் சீரமைத்துவரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரிடம் இது குறித்துப் பேசினோம். ``தூர்வார வேண்டிய அல்லது சீரமைக்க வேண்டிய நீர்நிலைகளைத் தேர்வுசெய்த பின்னர், அந்த நீர்நிலைகளின் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வழித்தடம், நீர்நிலைகளின் விவரங்களைச் சேகரித்து, அந்த நீர்நிலை உள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்போம். அவர்கள் மனு விவரங்களைப் பார்த்துவிட்டு, விண்ணப்பம் ஒன்றைக் கொடுப்பார்கள்.

அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்த பின்னர், விவரங்களைச் சரிபார்த்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும்... கரையை எவ்வளவு பலப்படுத்த வேண்டும்... நீர் வழித்தடம் மற்றும் கரைகள் எதையும் சேதப்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளோடு அனுமதியளிப்பார்கள். நீர் வரும் அல்லது செல்லும் நீர்வழித் தடங்களைக் கண்டறிய உதவியும் செய்வார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், பல ஆலோசனைகளும் கிடைத்துள்ளன. எவ்வித இடையூறும் இதுவரை எங்களுக்கு வந்ததில்லை’’ என்று சொன்னார்கள்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

 

https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-process-to-clean-public-water-bodies

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க புதிய முயற்சி: பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு

Dkn_Tamil_News_2019_Oct_23__874859035015107.jpg

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிக்க புதிய முயற்சியாக பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழிற்சாலைகள், மக்கள்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றம், மக்களிடையே தண்ணீர் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் நீராதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்டன. இந்நிலையில் மழைநீரைச் சேகரிப்பதே உடனடித் தீர்வாக இருக்க முடியும். இத்தகைய எண்ணத்துடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள கருங்குழி பேரூராட்சியில் பிளாஸ்டிக் தொட்டி மூலம் மழைநீர் சேகரிக்கும் அமைப்பை பேரூராட்சி நிர்வாகம் நிறுவி உள்ளது.

கருங்குழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் கிணற்றில் தண்ணீர் வற்றியது. குடிநீருக்காக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி குறித்து விழுப்புணர்வை பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியது. இந்த திட்டத்தில் பிளாஸ்டிக் ட்ரம்மை 5 அடிக்குக் குழி தோண்டி புதைக்கப்பட்டு அதனை சுற்றிலும் அடியிலும்  துளைகள் இடப்படும். அதேபோல 1.5 அங்குலத்துக்கு ஜல்லியும் நிரப்பப்படும். இதனால் மழைநீரானது வீணாக கடலில் கலக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

தற்போது 80 விழுக்காடு குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அரசு கட்டடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் என மொத்தம் 100 இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடிவு செய்தனர். இதனால் அடுத்த ஆண்டு இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தெரிவித்துள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536678

Link to comment
Share on other sites

ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது! வழிகாட்டும் விவசாயி

திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி தினேஷ். இவர் தன்னுடைய வயலில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ஆறு மாதத்துக்கு முன்னரே மழை நீரைச் சேகரிக்கும் வகையில் மாற்றியமைத்து அசத்தியிருக்கிறார்.

ஆழ்துளைக் கிணறுகள்

மழைநீர் சேகரிப்பு அமைப்பு

 

காவிரியில் பல ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆறு மட்டுமல்ல வயலும் வறண்டு கிடந்தது. இதையடுத்து என்னுடைய வயலில் 110 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். என்னுடைய போதாத நேரம் அதில் தண்ணீர் வரவில்லை. அத்துடன் அதற்குச் செய்த செலவும் வீணாகிப்போனது. பின்னர், மீண்டும் வேற இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். அதில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து நெல் சாகுபடியும் செய்து வருகிறேன்.

இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவது என்னை யோசிக்க வைத்தது. உடனே மழை நீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அத்துடன் மழைக் காலங்களில் வயலில் வீணாகத் தேங்கி நிற்கும் மழை நீரையும் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

பாதுகாப்பாக மூடி வைத்திருந்தாலும் பலரும் தண்ணீர் வராத ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடச் சொன்னார்கள். அதை மூடுவதற்கும் பெரும் தொகை செலவாகும் என்பதும் என்னை யோசிக்க வைத்தது. அப்போதுதான் செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றும் எண்ணம் வந்தது. இதையடுத்து போர்வெல் குழாயைச் சுற்றி வயலுக்கு மேல் குழாய் தெரியும் அளவில் 10 அடி அகலத்திலும் ஆழத்திலும் குழி எடுத்தேன். பின்னர், 10 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் குழாயையொட்டிக் கான்கிரீட் உறைகள் இறக்கினேன். பின்னர், உறைக்குள் 5 அடி ஆழத்திற்குக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றைக் கொண்டு நிரப்பினேன். மேலும், நிலத்திலிருந்து ஆழ்துளைக் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் குழாயில் ஓட்டைகள் அமைத்தேன்.

அத்துடன் வேறு எதுவும் உள்ளே செல்லாத வகையில் நைலான் வலையைக் கொண்டு குழாயைச் சுற்றிக் கட்டிவிட்டேன். இதன் மூலம் தண்ணீர் குழாய் வழியாக நிலத்துக்குள் செல்லும்போது வடிகட்டப்பட்டு சுத்தமான நீராகவும் செல்லும். அத்துடன் அந்த இடத்தைச் சுற்றி மழை பெய்யும்போது மழை நீர் வயலுக்குச் செல்லும் வகையிலும், நிலத்தடியிலிருந்து மழை நீர் ஆழ்துளைக் குழாய் பகுதிக்கு வரும் தண்ணீர் உள்ளே செல்லும் வகையிலும் இடைவெளி விட்டுச் சிமென்ட் சுவர் அமைத்துவிட்டேன். இதற்கு மொத்த செலவே ரூபாய் 50,000 தான் ஆனது. ஆரம்பத்தில் என்னைத் தேவையில்லாத வேலை செய்கிறானெனப் பேசியவர்கள் கூடப் பணி முடிந்து மழை நீர் உள்ளே செல்வதைப் பார்த்துப் பாராட்டத் தொடங்கினர்.

இன்றைக்கு மழை பெய்யும்போது ஆழ்துளைக் குழாய் வழியாக மழை நீர் உள்ளே செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் இதுபோல் ரீச்சார்ஜ் முறையைப் பயன்படுத்தி மழை நீரைச் சேமிக்கலாம். தண்ணீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்ததால் நான் இதைச் செய்தேன். இதை அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துவிட்டுப் பாராட்டிவிட்டுச் சென்றனர். கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நீர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசினேன். கலெக்டர் எழுந்து வந்து என்னை விவசாய விஞ்ஞானி எனப் பாராட்டினர்.

சாதாரண விவசாயி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர்த் தொட்டியாக மாற்ற ரூ 50,000 செலவு செய்ய முடியாத நிலையில் அவர்களின் பொருளாதாரம் உள்ளது. எங்க பகுதியில் இதுபோல் பயன்பாட்டில் இல்லாமல் பல ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அரசு மானியம் வழங்கினால் இவற்றை மழை நீர் சேகரிப்புக் குழாயாக மாற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைச் செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு

மண்ணை நாம் காத்தால் மண் மனிதனைக் காக்கும் என நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்த வகையில், செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இது போன்று மாற்றியமைத்தால் மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும். குழந்தை அதற்குள் விழுந்து உயிரிழக்கும் நெஞ்சை ரணமாக்கும் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இப்போது அரசு செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை, மழை நீரைச் சேமிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கத்து. பலர் ஆழ்துளைக் கிணற்றை மூட வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் எதற்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மண்ணையும் மழலையின் உயிரையும் காக்கின்ற வகையில் இது போன்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.vikatan.com/news/environment/a-farmers-idea-to-use-borewells-for-rain-water-harvesting

Link to comment
Share on other sites

30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது!

நாம் பணத்தை விட அதிக அளவில் செலவு செய்வது தண்ணீரைத்தான். பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். தவிர, கட்டடங்கள் கட்டுவதற்கு, வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர்தான் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் ‘‘இன்னும் முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான நதிகளும் ஓடைகளும் காணாமல் போய்விடும் அல்லது தங்களின் செயல்பாட்டை இழந்துவிடும்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ‘நேச்சர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்று. ‘‘உலகம் முழுவதும் அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை பம்ப் வைத்து உறிஞ்சுவதுதான் நதிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்...’’ என்று அந்தக் கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஏனென்றால் நதிகளின் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிப்பதே நிலத்தடி நீர்தான். வறட்சியின்போது கூட நதி பாய்வதற்கு உந்துசக்தியாக நிலத்தடி நீர்தான் இருக்கிறது. சமீப காலங்களில் டிரில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீரை பூமியிலிருந்து மனிதன் எடுத்துவிட்டான்.

இன்னும் எடுத்துக்கொண்டே இருக்கிறான். இதே நிலை தொடர்ந்தால் 2050ல் பல நதிகள் வற்றிப்போய்விடும். அந்த நதிகள் வற்றிப்போவதால் நதியை ஒட்டியிருந்த காடுகள், கிராமங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே பாதிப்படையும்.

‘‘நிலத்தடி நீரை எடுப்பது டைம் பாமை செட் செய்வதைப் போன்றது. இப்போது அதன் பாதிப்பு எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், பத்து வருடங்களில் அதன் பாதிப்பு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கும். இப்போது வற்றிப்போன நிலையிலிருக்கும் நதிகளுக்குக் காரணம் அந்த நதி பாயும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். நிலத்தடி நீரை எடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் டைம் பாம்...’’ என்கிறார் நதிகளை ஆய்வு செய்யும் நிபுணர் டே கிராப்.                      

த.சக்திவேல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539134

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வறண்ட கிணற்றில் மழைநீர் சேமிப்பு.. விவசாயத்தில் அசத்தும் விவசாயி..!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி ஒருவர் வறண்டு கிடந்த தனது விவசாய  கிணற்றில் மழைநீரை சேமித்து,  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி உள்ளார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தைச்சேர்ந்தவர் குணசீலன். 70 வயது நிரம்பிய பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியரான இவர் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் தோட்டம் அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடுமையான வறட்சியால் குளங்கள் நிறைவதே சவாலான நிலையில் இவரது தோட்டத்து கிணற்றில் 4 அடிக்கு மேல் தண்ணீர் வந்ததே கிடையாது. இந்நிலையில் குணசீலன் JCB எந்திரம் மூலம் ஊரணி அமைத்து, அதில் ஓடைகளை இனைத்து மழைகாலத்தில் ஓடும் தண்ணீரை சேமித்துள்ளார். பின்பு மோட்டார் மூலம் மழைநீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி அங்கிருந்து கிணற்றுக்குள் பாய்ச்சியுள்ளார்.

இதன்மூலம் தனது 6 ஏக்கர் தோட்டத்தில் 100 சப்போட்டா மரம், 150 புளியமரம், தென்னை, பனை, வாழை, மக்காச்சோளம், பருத்தி, பாசி, கற்றாழை போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்.கிணற்றுக்குள் சேமிக்கும் மழை நீர் கோடைகாலத்திலும் விவசாயத்துக்கு கை கொடுப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்,குணசீலன்.

இவரைப்போல் வறண்ட பயனற்ற கிணறுகளில் மழை நீரை நிரப்பினால் தண்ணீர் பஞ்சம் என்ற நிலையே வராது என்று இயற்கை ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்.

https://www.polimernews.com/dnews/89717/வறண்ட-கிணற்றில்-மழைநீர்சேமிப்பு..-விவசாயத்தில்அசத்தும்-விவசாயி..!

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சொந்த செலவில் வாய்க்கால் அமைத்து வீணாக சென்ற உபரி நீரை ஏரியில் நிரப்பும் விவசாயிகள்

Tamil_News_2019_Dec_05__125789821147919.jpg

காரிமங்கலம் :  காரிமங்கலம் அருகே விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் சுமார் 1 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து, வீணாக சென்ற உபரி நீரை ஏரிக்கு கொண்டு வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சோமலிங்க ஐயர் ஏரி (பெரிய ஏரி) உள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால், அருகாமையிலுள்ள கொண்டிசெட்டிபட்டி குறவன் ஏரிக்கு, தண்ணீர் வரும் வாய்க்கால் சேதமடைந்து இருப்பதால், தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது. இதையடுத்து, கொண்டிசெட்டிபட்டி, புதுக்குடியானூர், குட்டூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, பெரிய ஏரியில் இருந்து கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு, சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தங்களது சொந்த செலவில் வாய்க்கால் வெட்டி, வீணாக செல்லும் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில், தண்ணீரை கொண்டு வருவதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி, வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்த விவசாயிகளை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பெரிய ஏரியில் இருந்து உபரி நீரை, கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு கொண்டு வர, வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும்  என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நிதி இல்லை என கூறி விட்டனர். எனவே, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சுமார் ₹68 ஆயிரம் நிதி திரட்டி, பொக்லைன் மூலம் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தோம் ,’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546835

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.