Jump to content

10 நாடுகள் களத்தில் ; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10 நாடுகள் களத்தில் ; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்!

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது நாளைய தினம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

D7qOAZdW0AEMdyN.jpg

இங்கிலாந்து, மற்றும் வேல்ஸில் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் நடப்புச் சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா, விராட் கோலி தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை, மொஷ்ரபி மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் குல்பாடின் நாபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

ICC.jpeg

46 நாட்கள் நடைபெறும் இத் தொடரில் ஒவ்வொரு அணியும், ஏனைய அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் ஜூலை 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறுவதுடன் இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி லண்டனில் இடம்பெறும்.

மொத்தம் இங்கிலாந்து, வேல்ஸில் உள்ள 11 மைதானங்களில்  48 போட்டிகள் நடைபெறுகின்றன. 

இங்கிலாந்தில் வெயில் காலம் என்பதால் ஆடுகளம் நன்கு உலர்ந்து துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமையும். அதேசமயம் மழை பெய்தாலோ அல்லது மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானாலோ காற்றின் ஈரப்பதம் காரணமாக ஆடுகளத்தன்மை உடனடியாக மாறி விடும். 

அத்துடன் பந்து நன்கு ஸ்விங் ஆகி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதற்கு ஏற்ப ஆடுவது தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு உள்ள சவாலாகும். 

icc2.JPG

லண்டன் லார்ட்ஸ்: 205 வருடம் பழைமை வாய்ந்த இந்த மைதானத்தில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 5 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இங்கு உலகக் கிண்ண இறுதிப்போட்டி ஐந்தாவது முறையாக இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

லண்டன் ஓவல் : 25 ஆயிரத்து 500 இருக்கை வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 5 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 

பேர்மிங்காம் :  25 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் அரையிறுதிப் போட்டி உட்பட மொத்தம் ஐந்து போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 

பிரிஸ்டல் : 17 ஆயிரத்து 500 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 3 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கார்டிப் : 15 ஆயிரத்து 643 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 4 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

செஸ்டர்-லீ-ஸ்டிரிட் : 20 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தமாக 3 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லீட்ஸ் : 18 ஆயிரத்து 350 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தமாக 4 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மான்செஸ்டர் : 26 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் அரையிறுதிப் போட்டி உட்பட மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

நொட்டிங்காம் : 17 ஆயிரத்து 500 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 5 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

சவுத் ஹாம்ப்டன் : 25 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 5 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

டவுன்டான் : 12 ஆயிரத்து 500 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தில் மொத்தம் 3 லீக் போட்டிக்ள இடம்பெறவுள்ளன.

இந்தமுறை உலகக் கிண்ணத்தின் மொத்த பரிசுத் தொகை  10 மில்லியன்களாகும். 

இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் வழங்கப்படவுள்ளது (இலங்கை ரூபாவில் 70 கோடி). உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப்பெரிய பரிசுத் தொகையாக இது திகழ்கிறது.

அத்துடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் வழங்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250,000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாது வெளியேறும் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

கிரிக்கெட் உலகில் 5 முன்னணி வீரர்காளான இந்திய அணியின் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல், நியூஸிலாந்து அணியின் ரோஷ் டெய்லர், தென்னாபிரிக்க அணியின் ஸ்டெய்ன், ஹசிம் அம்லா மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்க ஆகியோர் இறுதியாக விளையாடும் உலகக் கிண்ணத் தொடர் இதுவாகும்.

இதுவரை நடைபெற்று முடிந்த 11 ஐ.சி.சி. உலகக்க கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி ஐந்து முறை சம்பியனாகியுள்ளது (1987, 1999, 2003, 2007, 2015), மேற்கிந்தியத்தீவுகள் அணி இரு முறை சம்பியனாகியுள்ளது (1975, 1979), இந்திய அணியும் இரு முறையும் (1983, 2011), இலங்கை அணி ஒரு முறையும் (1996), பாகிஸ்தான் அணி ஒரு முறையும் (1992) கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான முழு அட்டவணை :

ICC-worldcup-2019-.png

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

photo credit : ICC

 

http://www.virakesari.lk/article/57074

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.