Jump to content

தாக்குதல் அச்சுறுத்தலால் களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டதா?


Recommended Posts

களனி பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியாகிய எச்சரிக்கை பிரசுரத்திற்கு பின்னர் பல்கலைகழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய தெரிவித்தார்.

மட்டக்களப்பு சட்டவிரோத 'சர்யா' பல்கலைகழகத்திற்கு எதிராக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து இன்று கூடி திட்டமிட எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு எச்சரிக்கை கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த கடிதம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த எச்சரிக்கை குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://newsline.lk/news/6685-2019-05-30-06-06-05?fbclid=IwAR33CWMS6Ai_2wFioglSsJcZVQ3oicRgwtTTalWYST4ue6tZZJCYrfp8BSw

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

closed.jpg?resize=700%2C470
ராகம மருத்துவ பீடம் தவிர்ந்த, களனி பல்கலைக்கழகத்தின் ஏனைய அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட அனைத்து மண்டபங்களையும் இரவு 9 மணிக்கு பின்னர் மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் வார இறுதி கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகம் மேலும் அறிவித்துள்ளது. #ராகமமருத்துவபீடம் #களனிபல்கலைக்கழகம் #விஜயாநந்த ரூபசிங்க

http://globaltamilnews.net/2019/123114/

Link to comment
Share on other sites

மாணவர்கள் தாம் இரவு 10, 12 மணிவரை ஊர் வலம் போய் வரும் சுதந்திரத்தை பறித்தமையை எதிர்த்ததாலும் பாதுகாப்புப்படையின் பிரசன்னம் சோதனைகளை எதிர்த்ததாலும் தான் பல்கலைக்கழகம் மூடப்பட்டதாக அங்கு படிக்கும் தமிழ் மாணவர் ஒருவர் சொன்னார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.