Jump to content

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சி : மங்கள


Recommended Posts

சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர

''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்கரவாதத்திற்கு குரூர அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இனவாத பிரச்சினையை ஏற்படுத்தி, இரு தரப்பினருக்கிடையே மோதலை உண்டு பண்ணில் அதில் பயனடைய முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக இலங்கையர்கள் அணி திரள வேண்டும். 83ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பக்கம் தள்ளப்பட்டனர்.

முஸ்லிம் மக்களையும் இ ந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறான நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இடையூறுகள் அவர்களை அடிப்படை வாதத்திற்குள் தள்ளிவிடக் கூடும். அதில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள 99.9 வீதமான முஸ்லிம்களுக்கும் இதற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், இன்றைய நிலையில், முஸ்லிம் மக்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அறியக்கிடைக்கிறது. அவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். நான் ஒரு மதத்தையோ, இனத்தையோ நேசிப்பதற்கு மேலாக இலங்கையை நேசிக்கிறேன். அதனால் இதனைக் கூறுகிறேன். நாமே தீவிரவாதிகளை உருவாக்குகிறோம். அதனால் அனைத்துத் தரப்பினரம் ஆபத்தில் இருக்கிறோம்.

48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இன, மத, குல ரீதியாக வேறுபட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். எனவே, இன, மத, குல ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை நாசப்படுத்தி, தமது குறுகிய இலக்கை அடைவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.'' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


https://newsline.lk/news/6689-2019-05-30-12-13-02

Link to comment
Share on other sites

ஆம், " 48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இதற்குக் காரணம்,"

இன்று ஒரு பின்தங்கிய நாடாக மாறிவருகின்றது. காரணம் என்ன என்பது மங்களவுக்கும் தெரியும்,

தெரிந்தவர்கள், பதவியில் இருக்க, பதவியை தக்கவைக்க சிறுபான்மை இனத்தை பந்தாடுவதும், அரசியலுக்காக நாட்டை ஒரு 'அரச' பயங்கரவாதத்தை வளர்ப்பதும் இந்த 70 ஆண்டு கால சாதனை. 

இந்த விடயத்தில் இரண்டு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் ஒற்றுமையாக தொடர்ந்து இருக்கும் வரை விடிவு இல்லை.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.