Jump to content

'காண்ராக்டர்.. நேசமணி'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நà¯à®à¯à®à®¿à®à®©à¯à®à®³à¯

PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ

தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி.

தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி.

பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்போது இணையதளங்களை கலக்கி வருகின்றனர். இன்று இந்த நேசமணி ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேசமணிக்கு என்னாச்சு, நேசமணி குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று பல விதமான பெயர்களில் நேசமணியை டிரெண்ட் ஆக்கி வளைத்து வளைத்து விளையாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ஏன் இப்படி திடீரென கிளம்பினர் என்று தெரியவில்லை. ஆனால் பிரதமர் மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் இந்த டிரெண்ட் கிளம்பியுள்ளதால் மோடி பதவியேற்பை இருட்டடிப்பு செய்யும் நோக்கமா என்ற சிந்தனையும் நமக்கு வருகிறது.

à®à¯à®¤à¯à®¤à®¿à®¯à®²à¯


சுத்தியல்: சரி அதை விடுங்க.. நேசமணி மேட்டர் இந்த அளவுக்கு பரபரப்பாக யார் காரணம் தெரியுமா.. அந்த விக்னேஷ் பிரபாகர்தான் காரணம். ஒரு பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து அவர் கொடுத்த விளக்கம்தான் இன்று வைரலாகி நேசமணி ஹேஷ்டேக்கை உலா வர வைத்து விட்டது.

டங்.. டங்: அந்த பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து பிரபாகர் கூறுகையில், இதுதான் சுத்தியல். இதை எது மீதாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். இதேபோன்ற ஒரு சுத்தியலால்தான் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் மண்டையை ஜமீன் பாலஸில் உடைத்தனர். பாவம் என்று கூறப் போக, இன்னொருவர் பின்னாடியே வந்து இப்படி எப்படி இருக்கிறார் நேசமணி என்று கேட்க, பரவாயில்லை, குணமாகி வருகிறார் என்று பிரபாகர் பதிலளிக்க.. அவ்வளவுதான் இது காட்டுத் தீ போல பரவி விட்டது.

View image on Twitter

கலாய்ப்பு: பிறகென்ன ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்து இன்று விதம் விதமான டிசைன்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர் மக்கள். அதில் ஒன்று இது. அதாவது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், நேசமணியின் இந்த நிலைக்குக் காரணமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கடிதம் எழுதுவது போல ஒரு டிவீட்

தமிழர்களே.. தமிழர்களே....: ஒரே ஒரு மனுஷன் போட்ட ஒரே ஒரு கமெண்ட். மொத்த டிவிட்டரும் குளோஸ். .தமிழர்களே. தமிழர்களே.. உங்களை கடலில் தூக்கிப் போட்டாலும் மீம்ஸ் போட மறக்க மாட்டீர்கள்... இப்படித்தான் நமக்குத் தோணுது. என்னவோ போங்கப்பா.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nesamani-hashtag-national-trending-in-twitter-352461.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

This man brings back Nesamani

அப்பலோவில் நேசமணி 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார்

:ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசமணி இரண்டு இட்லி, கலக்கி சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி கையில் இருந்த சுத்தியல் கான்டிராக்டர் நேசமணி தலையில் விழுந்ததால் அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேசமணி விரைவில் குணமடைய தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிகிச்சை செலவு:  நேசமணியின் சிகிச்சை செலவை தானே ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளாராம்.

முன்னாள் முதல்வர்:  நேசமணியின் தந்தை முன்னாள் தமிழக முதல்வர் என்பதும், தமிழகத்தை டெல்லிக்கு அருகில் கொண்டு செல்ல திட்டமிட்டவர் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

என்.ஜி.கே.:  நேசமணியை இந்த நிலைக்கு ஆளாக்கிய சந்துரு போலீசிடம் சிக்கினார். ஆனால் விசாரணையில் தனது பெயர் நந்த கோபாலன் குமரன் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்:  நேசமணி கான்டிராக்டர் ஆகும் முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார்.

View image on Twitter

அறிக்கை:  நேசமணியின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார் என்று கலாய்த்துள்ளனர்.

பிற மாநில மக்கள்:  தமிழக மக்கள் நேசமணிக்காக பிராத்தனை செய்ய பிற மாநில மக்கள் நடப்பது புரியாமல் உள்ளனர். ஃபேக்ட்டு, ஃபேக்ட்டு.

Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-eats-2-idli-kalakki-at-the-hospital/articlecontent-pf95699-059873.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பலோவில் நேசமணி: சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு

நேசமணியை சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்த்ததில் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடி ஆகியுள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

மமதா:  நேசமணியின் நிலையை கண்டறிய மமதா பானர்ஜி அப்பலோ மருத்துவமனைக்கு வருகிறார். டெல்லியில் நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை விட எனக்கு நேசமணி தான் முக்கியம் என்று அவர் தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார் என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.

சிகிச்சை:  சித்தப்பா நேசமணியின் சிகிச்சை செலவுக்காக நிதி எல்லாம் திரட்டத் துவங்கிவிட்டார்கள். ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா

உணவு செலவு:  நேசமணியை அப்பலோவில் சேர்த்ததில் உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு.

சூர்யா:  மருத்துவமனையில் இருக்கும் நேசமணியை விஜய் மற்றும் சூர்யா சென்று பார்த்தார்களாம்.

அய்யோ பாவம்:  யாரோ நேசமணி தலையில் சுத்தியலை போட்டுட்டாங்கடா

Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-admitted-in-apollo-hospital-food-expense-is-rs-1-5-crore/articlecontent-pf95693-059872.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: 1 person, text

 

 

Image may contain: 4 people, people smiling, hat and text

 

Image may contain: one or more people and text

 

Image may contain: 3 people, text

 

Image may contain: text

பிபிசி வரைக்கும் நேசமணி போயிட்டுது 😆

Image may contain: text

 

Australia முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான sbs தொலைக்காட்சியின் இணையத்தில் வந்த வந்த நேசமணி.

 

 

Image may contain: 4 people, meme and text

 

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.