Jump to content

மெகா ஊழல்


Recommended Posts

படிக்க படிக்க தலை சுத்துது !

Dr. Swamy letter to PM on P Chidambaram.

வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல்  அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. 

பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார். 

ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன.

வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல சோதனைகளின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கையாக அளிக்கப்பட விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை சமூகப் பொறுப்புணர்வு உடைய எம்மைப் போன்ற செய்தி தளங்களுக்கு இருப்பதால் அவற்றை நாங்கள் இங்கு வாசகர்கள் வாசித்து அறிவதற்காகத்  தருகிறோம்.

கார்த்தி சிதம்பரத்துக்கும் அவரது நிறுவனத்துக்கும் பிரிட்டனில் மெட்ரோ வங்கியில் 21 வங்கிக் கணக்குகள் உள்ளன. 

சிங்கப்பூரில்  உள்ள ஓ சி பி சி வங்கியில் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய கார்த்தியின் Advantage Strategic Consulting Pte Ltd, என்ற நிறுவனத்துக்கு நான்கு வங்கிக் கணக்குகள் உண்டு. 

 ஸ்பெயின் நாட்டில் சபாடேல் அட்லாண்டிக்கோ மற்றும் லா காக்சியா வங்கி ஆகிய இரண்டிலும் கணக்குகள் உள்ளன. 

மொனாக்கொவில் பார்க்லேஸ் வங்கியில் கணக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அது போல பிரான்சு நாட்டில் மார்செயில் பி என் பி பரிபாஸ் வங்கியிலும் சுவிட்சர்லாந்து நாட்டில் யூ பி எஸ் வங்கியிலும் கார்த்திக்கு வங்கி கணக்குகள் உண்டு.  

இந்த செய்தியின் கீழ் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த கார்த்திக்கு 21 வெளி நாட்டு வங்கிகளில் இருக்கும் ரகசிய வங்கி கணக்கின் முழு விவரங்களும்  தரப்பட்டுள்ளது.

புலனாய்வு குழுவினர் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் நடத்திய சோதனையின் போது அங்கு பறிமுதல் செய்த கணினி வன்கலத்தின் உதவியுடன் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி,  மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரின் பேரில் கூட்டாக  பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒரு சொகுசு பங்களா வாங்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. 

இந்த பங்களாவின் முகவரி 5, ஹோய்பேன் க்ளோஸ், கேம்ப்ரிட்ஜ்,  CB237AQ. இந்த பங்களா இலண்டனில் உள்ள எட்மன்ட் சுலே ஹோல்ட் மற்றும் ஹீதர் ஹோல்ட்  என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 

இதற்கான பணம் இலன்டன் மெட்ரோ வங்கியில் உள்ள கார்த்தியின வங்கி கணக்கான 16714313 இல் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த சொகுசு பங்களா பற்றிய தகவலை ப. சிதம்பரமோ கார்த்தியோ இந்தியாவில் காட்டிய சொத்து விவரப் பட்டியலில் காட்டவே இல்லை. மறைத்து விட்டார்கள். 

ப. சிதம்பரம் தான் இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போதும் அமைச்சரான போதும் அரசுக்கு அளித்த சத்தியப் பிரமாணத்தில் இந்த சொகுசு பங்களாவைத்  தனது  சொத்து விவரப் பட்டியலில் சேர்க்கவில்லை.

 2௦16ஆம் ஆண்டு மே மாதம் அளித்த சொத்துப் பட்டியலில் நளினியின் சொத்து விவரத்தில் 3இல் ஒரு பங்கை மட்டுமே காட்டியுள்ளனர். அந்த சொத்தின் மதிப்பையும் மிகவும் குறைத்து வெறும் 1.55 கோடியாக மட்டுமே காண்பித்துள்ளனர். ஆனால் இலண்டனில் இவர்களுக்கு இருக்கும் சொகுசு பங்களாவின்  மதிப்பு மட்டுமே  85 கோடி ரூபாய் ஆகும்.

பிரிட்டனில் சொமேர்செட் என்ற ஊரில் சரிட்ஜ் ஃபார்ம் என்ற பண்ணை வீடு  88 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதை வாங்க கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக்  பிரைவேட் லிமிட்டட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் வங்கி கணக்கில்  இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. 

சொத்துப் பதிவேட்டில் இதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

கேம்ப்ரிட்ஜில் இன்னொரு சொத்தும் கார்த்தியால் வாங்கப்பட்டுள்ளது. இதன் முகவரி 29, Meade House, ceres என்பதாகும்.

வெளி நாடுகளில் கார்த்தி சிதம்பரம் பல்வேறு முதலிடுகளை ரியல் எஸ்டேட் அல்லது மனையடி தொழிலில்  செய்துள்ளார். 

இலண்டன், துபாய், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீ லங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின், பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீசு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல தொழில்களைச் செய்து வருகிறார்.  

ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அதாவது 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கார்த்தி இந்நாடுகளில் ஏராளமாக முதலீடு செய்திருக்கிறார்.  

இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் டாலர்களுக்கும்  அதிகமாகும் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.  

முதல் உலக நாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் ஏன் மனையடி தொழிலில்  முதலீடு செய்தனர்  என்பதற்கான காரணத்தை  நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ லங்காவில் லங்கா பார்ச்சூன் ரெசிடன்சிஸ் என்ற நிறுவனம் ஆடம்பர சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் ஏராளமான பங்குகளை வாங்கியிருக்கிறது.

The Waterfront’, ‘Weligama Bay Resort’ மற்றும் Emerald Bay Hotel என்ற சொகுசு  விடுதி நிறுவனங்களிலும் கார்த்தியின்  நிறுவனத்துக்குச் சொந்தமான பல  ஆடம்பர விடுதிகள் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் மூன்று திராட்சை தோட்டங்களும் பண்ணை வீடுகளும் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமாக உண்டு. இவற்றை அவர் துபாய் மூலமாக பணம் செலுத்தி வாங்கினார். 

கிராபோவ் என்ற நகரத்தில் உள்ள ரோவே ஃபார்ம் , ஆஷ்டன் நகரில் உள்ள கேப் ஆர்ச்சட்ஸ் மற்றும் வைன் யார்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட், மற்றும் சென்த்விலேட் என்டேர்பிரைசெஸ் ஆகிய நிறுவனங்களில் கார்த்திக்கு பண்ணை  வீடுகளும் திராட்சை தொழிற்சாலைகளும் உண்டு.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் அட்வாண்ட்டேஜ், துபாயில் உள்ள டேசர்ட் டியுன்ஸ் பிராப்பர்ட்டிஸ்  லிமிட்டட் என்ற நிறுவனத்திலும் பங்குவாங்கி இருக்கிறது. 

இந்த இரு நிறுவனங்களுக்குள் 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்ஸ் பரிவர்த்தனை நடந்திருப்பதைப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் கூட்டுப் பங்கு வைத்திருந்து அதன் மூலமாக ஆசியாவின் சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றது. 

இவ்வாறு கார்த்தியின் அட்வாண்ட்டேஜ்  நிறுவனத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த SM Arena Complex Corporation, Sports Entertainment Events Management Inc. ஆகிய நிறுவனங்கள் கூட்டு வைத்திருந்தன.

கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் உள்ள Real Beyond Pte. Ltd. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் உண்டு. 

இநத நிறுவனத்துக்கு மலேசியாவிலும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்நிறுவனம் தாய்லாந்தில் பதினாறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் Somerset Surridge Ltd. என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்திருந்தது. 

இது தவிர Full Innovations Ltd என்ற நிறுவனத்திலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனமும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில்தான் உள்ளது. 

அங்கெ உள்ள Geben Trading Limited என்ற நிறுவனத்திலும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சில அலுவலகங்களிலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார்.

 கார்த்தி நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் புகழ் பெற்ற சுவிஸ் வங்கியான யூ பி எஸ் வங்கி மூலமாகவே நடைபெற்றுள்ளது.  

இந்த வங்கியில் யுரோ மற்றும் டாலர் செலாவணி மதிப்பில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 சிங்கப்பூரில் உள்ள யுனிசன் க்ளோபல் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் என்ற நிறுவனத்துடனும் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு  பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. 

இந்த நிறுவனத்துக்கு கார்த்தியின் நிறுவனம் தனது ஐந்து மில்லியன் சிங்கப்பூர் டாலரை  மாற்றியுள்ளது.

மனில்லா மாவேரிக்ஸ் என்ற டென்னிஸ் விளையாட்டு குழுவை வாங்குவதற்காக கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கிராவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. 

இந்த டென்னிஸ் குழுவின் மொத்த மதிப்பு பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இத் தொகையை பத்துத்  தவணைகளில் கார்த்தி செலுத்தினார்.

கார்த்தி மலேசியாவில் உள்ள பெனின்சுலார் ஸ்மார்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.9 மில்லியன் மலேசிய ரின்கிட்சுக்கு ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளார். 

மலேசியாவில் பல இடங்களில் உள்ள Café’ Coffee Day என்ற கடையை கார்த்தியின் நிறுவனம் பிரான்சைஸ் எடுத்து  நடத்தி வருகிறது. 

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துடன் மலேசியா நிறுவனங்கள் பல பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்கான ஆவணங்களைப் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

 2௦௦6 இல் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய  மேக்சிஸ் நிறுவனம் ஊழலில் சிக்கிய மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

 வருமான வரி துறையினரும் அமலாக்கத் துறையினரும் முப்பது கோடிக்கும் மேலாக அந்நிய செலாவணியில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் Advantage Estrategia Esportiva  என்ற நிறுவனத்தை பார்சிலோனா என்ற நகரில் 2௦12ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. 

இது ஏழு டென்னிஸ் மைதானங்களைக்  கொண்ட விளையாட்டு  பயிற்சி கல்லூரி ஆகும்.

பிரான்சில் உள்ள பெம்ப்பிலோன் ஆர்கனைசேஷன் என்ற நிறுவனத்தில் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. 

இது தவிர கார்த்தி கிரேக்க நாட்டிலும் ஏதென்ஸ் நகரில் பிசானி ஜான் சகேல்லேரியோஸ்  என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் வைத்துள்ளார்.

கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துடன் பின் வரும் நிறுவனங்கள் தொழில் தொடர்பு வைத்திருந்தன. 

Aircel Televentures, DCB Client, Diageo Scotland Limited, Katra Group, Sri Lanka Export Development Board, Unifi Wealth Management Ltd, VST Tillers Tractors, Carlton Trading Company, Claris Life Sciences’, ITC Centre, Best Land Realty Limited, Essar Steel Limited, Gokul Builders and Estates, S Kumar, INX Media, Reflections, Thiagarajar Mills Private Limited, Saksoft, EL Forge Limited. Saksoft, EL Forge Limited.

வருமான வரி துறையினர் கார்த்தியின் அலுவலகத்தை சோதனை செய்த போது அங்கு கிடைத்த கணினி வன்கலங்கள் [ஹார்டுவேர்] அவர் பலரிடம் பெருந்தொகை கோடி கோடியாகப் பெற்றிருப்பதையும் காட்டுகின்றது.

 அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் கார்த்தியின் தந்தை நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் கை எழுத்துக்காக முடங்கிக் கிடக்கும் ஆவணங்களில் அவரது கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக கோடி கோடியாக கார்த்தி இலஞ்சம் வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஐ என் எக்ஸ் மீடியா 2௦௦ கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு அவரிடம்  ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக சி பி என் ரெட்டி என்பவர் பெரும் பங்குகள் வைத்திருக்கும் நார்த் ஸ்டார் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு அறுபது இலட்சம் ருபாய் இலஞ்சம் கொடுத்தது. 

இந்த சி பி என் ரெட்டி கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவத்தின் இயக்குனர் ஆவார்.  கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொறுப்பும் இவர் வசமே உள்ளது. இவர் கார்த்தியின் பினாமி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2008  ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி ஐ என் எக்ஸ் மீடியா  இன்னொரு இருபதினாயிரம் டாலரை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வங்கி முலமாக வழங்கியுள்ளது.  அதற்கான ஆவணங்கள் வருமான வரித் துறையினருக்கு கிடைத்து இருக்கிறது.

கிரீசு நாட்டின் தலை நகர் அதேன்சு நகரில் உள்ள கேபேன் டிரேடிங் லிமிட்டட் என்ற நிறுவனத்தில் இருந்து ஐம்பதினாயிரம் டாலர் சிங்கப்பூரில்  உள்ள கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.  

இந்த நிறுவனம் 4,Zaf.Matsa Street, 14564 Athens என்ற முகவரியில் உள்ளது. பி வி ஐ எனப்படும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள கார்த்தியின்  நிறுவனத்துடன் இந்த கேபேன் நிறுவனம் இணைக்கப்பட்டு உள்ளது.

 சுவிட்சர்லாந்தின் தலைநகராக  உள்ள ஜெனீவா நகரில் கார்த்தியின் நிறுவனத்துக்கும் இந்த கேபேன் டிரேடிங்க் நிறுவனத்தில் இருந்து பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த பரிவர்த்தனைகளுக்கான மின்னஞ்சல் நகல்கள் கார்த்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

கிரீசு நாட்டில் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு பணம் அனுப்புவதாக இந்த பணப் பரிவர்த்தனைகளுக்குக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. 

இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ப. சிதம்பரத்தின் மேசையில் ஐ ன் எக்ஸ் மீடியா கோப்பு 2௦௦ கோடிக்காக அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளன. 

தங்களது ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்தை இப்போது விற்று விட்ட கொலை குற்றவாளிகளான பீட்டரும் இந்திராணி முகர்ஜியும் அந்நிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறுவதற்காக ஒன்பது கோடி ருபாய் வரை கார்த்திக்கு இலஞ்சம் கொடுத்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டனில் உள்ள நெட் ஓர்க் 18 என்ற ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த அர்டிவியா டிஜிட்டல் யூ கே என்ற நிறுவனத்தில் இருந்து அறுபது இலட்சம் பங்குகளை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியது. 

இது நெட் ஒர்க் 18 என்ற நிறுவனம் ப. சிதம்பரத்திடம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின்  ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளது. 

நிதி அமைச்சர்  ஒப்புதலுக்காக சுமார் 25 கோடி ருபாய் கார்த்தியின் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது.

வருமான வரி துறை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும்  சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக பல நிறுவனங்கள் கார்த்தியின் நிறுவனங்களுக்கு அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டன.

 இவ்வாறு கார்த்தியின் அட்வான்டேஜ்  [ASCPL] நிறுவனங்களுக்கு பணம் அனுப்பியவற்றின் பட்டியலில்  கிலாரிஸ் லைஃப் சயின்சஸ் மற்றும் டியாஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

டியாஜியோ நிறுவனம்  கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த இயலாமல் நாட்டை விட்டு ஓடிப் போன விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டது. 

இவை தவிர [Katra Group, Arcelor Mittal நிறுவனத்தோடு சேர்ந்த Saksoft, Reflections [Spark Capital Advisory Private Limited].ஆகிய நிறுவனங்களும் கார்த்தியின் நிறுவனமான அட்வான்டேஜ்ஜில் [ASCPL] பணம் செலுத்தியுள்ளன. 

அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும்  சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக காத்திருந்த காலங்களில் இந்நிறுவனங்கள் சுமார் 5௦௦ கோடி ருபாய் வரை கார்த்தியின் பல்வேறு  நிறுவனங்களில் பணம் செலுத்தியுள்ளன என்பதை வருமான வரித் துறை ஆய்வறிக்கை தெளிவாக்குகிறது.

PSU வங்கிகள் எனப்படும் பொது துறை வங்கிகளிடம் இருந்து 300 கோடி வரை கடன் வாங்கியதற்காகவும் பேஸ்ட் லேண்டு ரியாலிட்டி என்ற மனையடி வியாபார நிறுவனம் கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு இலஞ்சம் கொடுத்துள்ளது. இதுவும் வருமான வரி துறையினர் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் சிக்கியுள்ளது.

விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய பிரிட்டனை சேர்ந்த டியஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட்  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரைச்  சந்திப்பதற்கு நேரம் வாங்கி தருவதற்காக கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு 15,௦௦௦ டாலர் இலஞ்சமாகக் கொடுத்துள்ளது.

 பிரிட்டன் நிறுவனத்தின் அதிபர் லார்ட் ப்லைத் என்பவர் இந்தியப் பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்ததற்காக கார்த்திக்கு  நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

 இந்த மின்னஞ்சலில் இந்த சந்திப்பு நேரம் அமைத்து கொடுத்ததற்கான சேவை கட்டணமாக 15,000 டாலருக்கான ரசீதும் இணைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்புத்  தடை சட்டத்தின் கீழ் பதிவாக வேண்டிய வழக்கு இது என்பதில் ஐயமில்லை.

இந்திய ஓவர்சீஸ் வங்கியுடன் ரஷ்யாவின் நேஷனல் இன்ஸ்டிடியுட் வங்கி [Nazprom] கூட்டாகச் செயல்பட கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தை ஆலோசகராக 2௦௦6 ஆம் ஆண்டில் நியமித்தது. 

இதற்கான ஆவணத்தை வருமான வரித்துறையினர் தாம் நடத்திய சோதனையின் போது கண்டுபிடித்தனர்.

 ரஷ்ய நிறுவனம் மற்றும் கார்த்தியின் அட்வான்ட்டேஜ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்  சென்னையில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர். 

ஒவ்வொரு முறையும் ஆலோசனை வழங்குதல் என்ற பெயரில் இரண்டு வங்கிகளிடம் இருந்தும் கார்த்தியின் நிறுவனம் அதிகளவில் பணம் பிடுங்கியுள்ளது. 

ஐ ஓ பி வங்கி ஆரம்பத்தில் கார்த்திக்கு கொடுத்த சேவை கட்டணமான 25,௦௦௦ டாலர் தவிர ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவரது சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஐந்து சதவிதம் கமிஷனும் தர வேண்டும். 

பொது துறை நிறுவனமான ஐ ஓ பி வங்கிக்கும் ரஷ்ய வங்கிக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்த்தியின் ஆலோசனை நிறுவனத்துக்கு சேவை கட்டணம் வழங்க  வேண்டும் என்பது கன்சல்ட்டன்சி என்ற பெயரில் கார்த்தியும் ப. சிதம்பரமும் நடத்திய பகல் கொள்ளை ஆகும்.

தென் ஆப்பிரிக்காவின்  நிக்கோலஸ் ஸ்டைன்ஸ் அசோசியேட்ஸ் லிமிட்டட்   நிறுவனத்தில் இருந்து கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு பெருந்தொகை ஒன்று கை மாறியுள்ளது.

 இந்த ஆப்பிரிக்க நிறுவனம் ஐ பி எல் கிரிக்கட்டுக்கு பாதுகாப்பு வழங்கியது. ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது இந்த பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது  நபார்டு பத்திரங்களை [NABARD Bonds] விற்பதற்காக அலையன்ஸ் செக்யுரிட்டிஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கார்த்தியின் அட்வான்ட்டேஜ் [ ASCPL] பெருந்தொகையை கமிஷனாகப் பெற்றுள்ளது. 

வருமான வரி துறையினரின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து இத்தகவல் தெரியவந்துள்ளது.

மைசூரில் உள்ள மிகப் பெரிய பரப்பளவு நிலத்தை வி எஸ் டி டில்லர்ஸ் அன்ட் டிராக்டர்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்துக்கு விற்றதில் இருந்தும் கார்த்தியின் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தில் பெரியளவில் பங்குகள் விற்றதில் இருந்தும் பெருந்தொகை நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு வந்துள்ளது. 

இந்த நிலம் யூனியன் வங்கியிடம் [Union Bank of India] அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தின் சார்பில் இந்த அடமானத்தினால் பணம் பெற்றுள்ளார்.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தில் ஐந்து இயக்குனர்கள் உண்டு. அவர்கள் சி பி என் ரெட்டி, பாஸ்கர் ராமன்,  மோகனன் ராஜேஷ், ரவி விஸ்வநாதன், மற்றும் வி பத்மா.

 இவர்கள் ஐந்து பேரும் ப. சிதம்பரத்தின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும்  தங்களது அனைத்து சொத்துக்களையும் வருமானத்தையும் கார்த்திக்கும் அவர் மகள் அதிதிக்கும் வழங்குவதாகக் கூட்டாக உயில் ஒன்றைத் தயாரித்துள்ளனர். 

இதனால் இவர்கள் ஐந்து பேரும் கார்த்தி மற்றும் ப. சிதம்பரத்தின் பினாமிகள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

குரோஷியாவில் ‘ஹோட்டல் மொசார்ட்’ என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் புகழ் பெற்ற ஓட்டல் ஆகும்.  

இந்த ஓட்டல் கட்டிடம் தான் இரண்டாம் உலகப் போரின் போது யுகோஸ்லேவியா நாட்டின் இராணுவத் தலைமையகமாக இருந்து  வந்தது.

 இந்த ஓட்டலில் கார்த்தி ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

ப. சிதம்பரம் நான்கு மாடி கொண்ட ஜோர் பாக் வீட்டில் தங்கியிருப்பதற்காக தன் மகனுக்கும் மனைவிக்கும் மாதந்தோறும் ஒரு லட்ச ருபாய் கொடுத்து வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

அப்படி என்றால் இந்த ஒரு மாடியை மட்டும் தான் ப. சிதம்பரம் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா? மற்ற மூன்று மாடிகளும் யாருக்கு உரியன?

இந்திய அரசியல்வாதிகளில் ப. சிதம்பரத்தை போல அதிகளவில் கருப்புப் பணம் வைத்திருப்பவர் வேறு எவரும் இல்லை.

ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க அரசு எப்போது சி பி ஐ, அமலாக்க துறை, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு  கருப்பு பணத்தடை சட்டம் , PMLA, பினாமி பரிவர்த்தனைச் சட்டம், கருப்பு பணத்தை கைப்பற்றுதல், ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் முறைப்படி நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்று தரும்?

Dr. Swamy letter to PM on P Chidambaram

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.