Jump to content

ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட்

ஜென்டில்மன் ஜகேம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டமானது உலகின் அதிகம் பேரால் கவரப்பட்ட ஒரு விளையாட்டாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப உலக மாறுதல், தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் உலகத்தோடு வேகநடை போட்டு வருகின்றது.

icc__2_.jpg

ஆம்... எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது இன்று 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் காண்கின்றது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான்.

காரணம்... கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது... 

கிரிக்கெட் ஆட்­டத்தின் வர­லாற்றைத் தேடிப் போனால் எமக்கு ஒரு சில ஆதா­ரங்கள் கிடைத்­தாலும் அதில் பல ஊகத்தின் அடிப்­ப­டையில் சொல்­லப்­பட்­ட­வையும் எழு­தப்­பட்­ட­வை­யாகவும் இருக்­கின்­றன. ஆக கிரிக்­கெட்­டா­னது ஆராய்ச்­சிக்கும் அப்­பாற்­பட்ட வர­லாற்றை தன்­ன­கத்­தே கொண்­டி­ருக்­கி­றது என்­பதும்... அந்த ஆராய்ச்­சிக்கு அப்­பாற்­பட்ட விளை­யாட்டில் இலங்கை உலகக் கிண்­ணத்தை வென்று சம்­பி­ய­னா­கி­ய­மையும் எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விட­யம்தான்.

கிரிக்­கெட்டின் ஆதியைத் தேடி பலரும் தோற்­றுத்தான் போயி­ருக்­கி­றார்கள். இங்­கி­லாந்தில் தோன்­றி­யது என்றும் இங்­கி­லாந்து அணிதான் கிரிக்­கெட்டின் தலை­ம­கன் என்றும் பல­ராலும் அறி­யப்­பட்­டாலும் இடம், நாள், நாடு என்று எந்­த­வித உறு­திப்­பாடும் இல்­லா­மல்தான் கிரிக்­கெட் வர­லாறு கூறப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

பிரான்ஸ்தான் பிறப்பிடமா?

அடி நுனி தெரி­யாமல் கிரிக்கெட் வர­லாறு போய்க்­கொண்­டி­ருந்­தாலும் பிரான்ஸில் விளை­யா­டப்­பட்ட கிரோகெட் (Croquet) என்ற விளை­யாட்­டி­லி­ருந்து கிரிக்கெட் தோன்­றி­ய­தாக பல ஆராய்ச்­சி­யா­ளர்கள் அபிப்­பி­ரா­யங்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பிரான்ஸில் விளை­யாடப்­பட்­டு­வந்த கிரோகெட் எனும் ஆட்­ட­மா­னது திருத்­த­ம­டை­யாத ஒரு­விதத் தொடக்க நிலையில் இருந்­த­தா­கவும் அதை பிரான்ஸ் மக்கள் மிகவும் உற்­சா­கத்­துடன் ஆடி மகிழ்ந்­தி­ருக்­கலாம் என்றும், கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்தே தற்­பொ­ழுது அழைக்­கப்­படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டு கிளை­விட்டுப் பிரி­வது போல் உரு­மாறி வந்­தி­ருக்­கலாம் என்றும் இந்த இனிய ஆட்­டத்தைக் கண்ட ஆங்­கி­லே­யர்கள் ஆட்­டத்தின் அமைப்­பையும் கருத்­தையும் ஏற்று இங்­கி­லாந்­துக்குக் கொண்டு வந்து திருந்­திய ஆட்­ட­மாகப் பொலி­வு­பெற அமைத்துக் கொண்­டி­ருக்­கலாம் என்றும் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்­துக்கும் பிரான்ஸுக்  கும் அந்தக் காலத்தில் மிகவும் நெருக்­க­மான அர­சியல் மற்றும் மண உறவு இருந்­த­தால் கிரிக்கெட் ஆட்டம் பிரான்ஸ்­கா­ரர்­களின் கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்து உரு­வா­கி­யி­ருக்­கலாம் என்று கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்தில் கிரிக்கெட் ஆட்டம் மிகப்­பெ­ரிய இடத்தைப் பிடித்து மக்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த காலத்தில் பிரான்ஸ் நாட்­டினர் கிரிக்கெட் பற்­றியே தெரிந்­தி­ருக்­க­வில்லை என்றும் ஒரு­சாரார் தெரி­விக்­கின்­றனர்.  

எனினும்  கிரிக்கெட் ஆட்டம் எங்கே தோன்­றி­யது என்­பதைத் திட்­ட­வட்­ட­மாகக் குறிப்­பிட இய­லாது.

ஆனாலும் இலை­ம­றை காய்­களைப் போன்று இங்­கு­மங்­கு­மாக ஒரு சில குறிப்­புகள் வர­லாற்றுப் பின்­ன­ணி­யிலே ஆங்­காங்கு மறைந்து கிடப்­பதை சுட்டிக்காட்டி இப்­ப­டியும் இருக்­கலாம் என்­கின்ற தங்­க­ளது குறிப்­பையும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

கிளப் போல் (Club Ball) என்­ப­தாக ஓர் ஆட்டம் இங்­கி­லாந்தில் முன்­னாளில் ஆடப்­பட்டு வந்­துள்­ளது.

பிர­ப­ல­மாக ஆடப்­பட்டு வந்த கிளப் போல் ஆட்­டத்­தி­லி­ருந்து கிளை­விட்டுப் பிரிந்து, சிறப்­பாகத் தோன்­றிய ஆட்­டமே கிரிக்கெட் என்றும் ஒரு குறிப்­பீடு உண்டு.

கிளப் போல் எனும் ஆட்டம் பற்­றிய குறிப்பும், எந்த வித­மான விவ­ரமும் இன்னும் தெரி­யா­மலே இருக்­கி­றது என்­பதால், இதைப் பற்றி ஒரு முடி­வெ­டுக்­காத நிலையில் நின்று போக வேண்­டி­ யி­ருக்­கி­றது. 

அடுத்­த­தாக ஸ்கொட்­லாந்தில் ஆடப்­பட்­டு­வந்த கேட் அண்ட் டோக் (Cat and Doug) என்ற ஆட்­டத்தின் அடிப்­ப­டையில் தான் கிரிக்­கெட்டின் ஆரம்­ப­ காலம் அமைந்­தது என்றும் ஒரு கருத்­துண்டு. 

மூன்­றா­வ­தாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்­று­வ­தற்கும், ஆட்ட அமைப்பு உரு­வா­வ­தற்கும் ஸ்டூல் போல் (Stool Ball) தான் கார­ண­மாக இருந்­தது என்றும் கூறு­கின்ற ஆசி­ரி­யர்­களும் உண்டு. 

ஹேண்ட் இன் அல்­லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) மறு­ வ­டி­வுதான் கிரிக்கெட் என்­ப­தா­கவும் சிலர் கூறு­வார்கள். 

ஆனால் இங்­கி­லாந்தில் லண்டன் நக­ரத்திலுள்ள அர­சர்கள் நூல­கத்தில் கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ஆம் ஆண்டே எழுதப் பெற்­றி­ருக்­கி­றது என்று சான்­றுகள் கூறு­கின்­றன.

1344ஆம் ஆண்டில் வரையப் பெற்றிருந்த ஓவியம் ஒன்றில் கிரிக்கெட் குறித்து உள்ளது. இதனால் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்­டுக­ளுக்கு முன்­ன­தா­கவே இங்­கி­லாந்தில் சிறப்­பான வளர்ச்­சி­யுற்­றி­ருக்க வேண்டும் என்றும், அப்­படிப் பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்­தாழ 12 அல்­லது 13ஆவது நூற்­றாண்­டிலே தோன்­றி­யி­ருக்க வேண்டும் என்றும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வாறு பெரும் வளர்ச்­சி­யுற்­ற­தி­னாலோ என்­னவோ, இந்த ஆட்டம் 1365ஆம் ஆண்டு அர­சாள்­வோ­ருக்கு அதி­ருப்­தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மாற்­றத்­தையே ஏற்­ப­டுத்தியிருந்­தது. 

வில்­வித்தைப் பயிற்­சியில் மக்கள் விருப்­ப­முடன் ஈடு­ப­டாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட் மற்றும் கிரிக்கெட் ஆட்­டத்­திலும், அதி­க­மாக ஈடு­ப­டு­வதால், வில்­லாற்­றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்­றனர். 

10-interesting-facts-english-longbowman-

ஆகவே நாட்டின் பாது­காப்­புக்கு உரிய கலை­யான வில் பயிற்­சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்­பிட்ட இரண்டு விளை­யாட்­டு­க­ளையும் மக்­களை ஆட­வி­டா மல், தடைச்­சட்­டத்தை நான்காம் எட்வர்ட் மன்னர் இயற்றித் தடை செய்தார். 

மக்கள் இந்த ஆட்­டங்­களை ஆடக்­கூ­டாது என்று சட்டம் போட்டு தடை­ வி­தித்­ததோடல்­லாமல், மீறி­ய­வர்­க­ளுக்குக் கடு­மை­யான தண்­டனை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

மீறி விளையா­டு­ப­வ­ருக்கு இரண்­டாண்டுகள் சிறை வரை தண்­டனை நீடி­த்­தது.  அது­மட்­டு­மன்றி விளையாட இடம் தரு­ப­வ­ருக்கும் இந்த தண்­டனைச் சட்டம் பாய்ந்­தது.

இவ்­வா­றாக, 185 ஆண்­டுகள் தடை போட்ட சட்­டத்தின் கீழ் அடை­யாளம் தெரி­யாமல் இந்த இரண்டு ஆட்­டங்­களும் முடங்கிக் கிடந்­தன என்று வர­லாறு கூறு­கின்­றது. ஆயுள் காலம் வரை தடை­போட்­ட­வாறே ஆட்­சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்­ன­ருக்குப் பிறகு, தொடர்ந்து அரி­யணை ஏறி­ய­வர்கள் அனை­வரும் இவ்­வாறே தடை போட்­டனர் என்­பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்­டத்­துடன் கிரிக்­கெட்டும் இணை­யா­கவே இருந்­தது என்­பதும், அதனால் கிரிக்கெட் ஆட்­டத்தின் முன்­னோடி என்று இதனைக் கூற முடி­யாது என்றும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

எப்­படிப் பார்த்­தாலும் கிரிக்கெட் எங்கு ஆரம்­பித்­தது, யாரால் தோற்­று­விக்­கப்­பட்­டது என்­ப­தற்கு இது­வ­ரையில் சரி­வர எந்த ஆதா­ரமும் இல்லை.  இருப்­பினும் இங்­கி­லாந்தில் 15 மற்றும் 16ஆ-ம் நூற்­றாண்­டு­களில் சிறு­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

17ஆ-ம் நூற்­றாண்டில் பெரி­ய­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் 18 ஆம் நூற்­றாண்டில் ஆங்­கி­லே­யர்­களின் ஆதிக்­கத்தால் உலகின் மற்ற இடங்­க­ளுக்கும் பர­வி­யது. 

அதே வேளையில் கிரிக்­கெட்டை ஒத்த வடிவில் இரு வேறு அள­வு­களைக் கொண்ட குச்­சி­களை வைத்து சிறு­வர்­களால் கிட்­டிப்புல் விளை­யா­டப்­பட்டு வரு­கி­றது. 

தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய விளை­யாட்­டாகக் கரு­தப்­படும் இந்த விளை­யாட்டு கில்லி தாண்டு, குச்சி கம்பு, சில்­லாங்­குச்சி, கரக்­குட்டி என்று பல்­வேறு பெயர்­களில் அழைக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்தக் கிட்­டிப்­புல்­லுக்கும் கிரிக்­கெட்­டிற்கும் நிறைய ஒற்­று­மைகள் உள்ளன. ஆனாலும் இதி­லி­ருந்து கிரிக்கெட் வந்­த­தா­க எந்த ஆதா­ரமும் இல்லை.

ஆங்­கி­லே­யர்­களின் கால்லனித்துவ ஆதிக்கம் மற்றும் ரயில் போக்­கு­வ­ரத்தின் வளர்ச்­சியால் உலகின் பல்­வேறு இடங்­களில் கிரிக்கெட் விளை­யா­டப்­பட்­டாலும் முதல் சர்­வ­தேசப் போட்டி 1844இ-ல் நியூயோர்க் நகரில் அமெ­ரிக்­கா­வுக்கும், கன­டா­வுக்கும் இடையே நடை­பெற்­ற­தாக வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­ளது. 

இருந்த போதிலும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் இந்த இரு­ நா­டு­களும் தற்­போது பங்­கேற்­க­வில்லை. 

ஆதி­ கா­லத்தில் முடிவு தெரியும் வரை விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் போட்­டிகள்  காலம் கருதி முதலில் 6 நாட்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்டு பின்னர் 5 நாட்கள் என தற்­போ­தைய வடி­வத்தைப் பெற்­றன. 

கால்­பந்து மோகம் உலகில் தீயாய் பரவி இருந்த நிலையில் கிரிக்­கெட்­டையும் அவ்­வாறு பிர­ப­ல­ப்ப­டுத்­தலாம் என்ற நோக்கில் இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே 1912ஆ-ம் ஆண்டு முத்­த­ரப்பு டெஸ்ட் போட்டித் தொடர் நடத்­தப்­பட்­டது. 

இருப்­பினும் பாரம்­ப­ரி­ய­மிக்க ரசி­கர்­களால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகள் விரும்பப்­பட்­டாலும் கால்­பந்­துக்கு இருந்த மோகம் கிரிக்­கெட்­டுக்கு அப்­போது இல்லை என்றே கூறலாம். 

இந்­நி­லையில் 1962 ஆம் ஆண்டு கிரிக்கெட் வர­லாற்றில் ஒரு புது முயற்­சி­யாக இங்­கி­லாந்தில் ஒரு நாள் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. உள்ளூர் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற இந்த ஒருநாள் தொட­ருக்கு ரசிகர் மத்­தியில் பெரும் வர­வேற்பு கிடைத்­தது. 

இந்­நி­லையில் 1971ஆம் ஆண்டில் மெல்­போர்னில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் போட்டி மழை கார­ண­மாக தடைப்­பட்­டதால் அதி­ருப்­தியும், ஏமாற்­றமும் அடைந்த ரசி­கர்­களை திருப்திப்படுத்தும் வகையில் அந்த இரு அணி­களும் பங்­கேற்ற ஒருநாள் போட்­டி­யாக நடத்­தப்­பட்­டது. 

இதுவே சர்­வ­தேச அள­வி­லான முதல் ஒருநாள் போட்­டி­யாகும். ஒரு ஓவ­ருக்கு 8 பந்­துகள் வீதம் 40 ஓவர்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டிக்கு கிடைத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இதனை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஆகும். 

முதல் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடத்தும் முன்னர் பரீட்சார்த்த முயற்சியாக 1973ஆம் ஆண்டில் மகளிர்க்கான சம்பியன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 

இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, நியூஸிலாந்து என்று 7 நாடுகளுக்கு இடையே ரவுண் ரொபின் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில்  இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. 

ரசிகர்களின் மத் தியில் இந்தத் தொடர் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதலா வது உலகக் கிண் ணத்தை 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது.

அதன் தொடர்ச் சியாக இன்று 12 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அதே இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.

பிரான்ஸில் ஆடப்பட்ட அதேவேளை கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் கிரோகெட் (Croquet) விளையாட்டின் ஓவியப்படம்...

vintage-croquet.jpg

 

1975 ஆம் ஆண்டு ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்னர் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை 1973 ஆம் ஆண்டு நடத்தியது சர்வதேச கிரிக்கெட் சபை.

womens-world-cup-1973.jpg

 

ஆரம்ப நாட்களில் பந்தை கீழாகக் கையை வீசி ஏறிந்து வந்தார்கள். இதற்கு அண்டர் ஆர்ம் பெளலிங் (Undr arm bolling) என்று பெயர்.

27106D7800000578-0-image-a-4_14275215077

அவுஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளான அப்ரோஜியன்களின் முதலாவது கிரக்கெட் அணி இது. எம்.சீ.சீ.மைதானத்தின் பெவிலியனில் எடுத்துக்கொண்ட படம்...

aboriginal_cricket_team_tom_wills_1866.j

கிரிக்கெட் மட்டைகளின் வளர்ச்சியை காண்பிக்கும் ஒரு ஓவியம் 

800px-Historical_cricket_bat_art.jpg

(தொகுப்பு : எஸ்.ஜே.பிரசாத்)

 

http://www.virakesari.lk/article/57094

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.