Jump to content

ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட்

ஜென்டில்மன் ஜகேம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டமானது உலகின் அதிகம் பேரால் கவரப்பட்ட ஒரு விளையாட்டாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப உலக மாறுதல், தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் உலகத்தோடு வேகநடை போட்டு வருகின்றது.

icc__2_.jpg

ஆம்... எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது இன்று 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் காண்கின்றது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான்.

காரணம்... கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது... 

கிரிக்கெட் ஆட்­டத்தின் வர­லாற்றைத் தேடிப் போனால் எமக்கு ஒரு சில ஆதா­ரங்கள் கிடைத்­தாலும் அதில் பல ஊகத்தின் அடிப்­ப­டையில் சொல்­லப்­பட்­ட­வையும் எழு­தப்­பட்­ட­வை­யாகவும் இருக்­கின்­றன. ஆக கிரிக்­கெட்­டா­னது ஆராய்ச்­சிக்கும் அப்­பாற்­பட்ட வர­லாற்றை தன்­ன­கத்­தே கொண்­டி­ருக்­கி­றது என்­பதும்... அந்த ஆராய்ச்­சிக்கு அப்­பாற்­பட்ட விளை­யாட்டில் இலங்கை உலகக் கிண்­ணத்தை வென்று சம்­பி­ய­னா­கி­ய­மையும் எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விட­யம்தான்.

கிரிக்­கெட்டின் ஆதியைத் தேடி பலரும் தோற்­றுத்தான் போயி­ருக்­கி­றார்கள். இங்­கி­லாந்தில் தோன்­றி­யது என்றும் இங்­கி­லாந்து அணிதான் கிரிக்­கெட்டின் தலை­ம­கன் என்றும் பல­ராலும் அறி­யப்­பட்­டாலும் இடம், நாள், நாடு என்று எந்­த­வித உறு­திப்­பாடும் இல்­லா­மல்தான் கிரிக்­கெட் வர­லாறு கூறப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

பிரான்ஸ்தான் பிறப்பிடமா?

அடி நுனி தெரி­யாமல் கிரிக்கெட் வர­லாறு போய்க்­கொண்­டி­ருந்­தாலும் பிரான்ஸில் விளை­யா­டப்­பட்ட கிரோகெட் (Croquet) என்ற விளை­யாட்­டி­லி­ருந்து கிரிக்கெட் தோன்­றி­ய­தாக பல ஆராய்ச்­சி­யா­ளர்கள் அபிப்­பி­ரா­யங்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பிரான்ஸில் விளை­யாடப்­பட்­டு­வந்த கிரோகெட் எனும் ஆட்­ட­மா­னது திருத்­த­ம­டை­யாத ஒரு­விதத் தொடக்க நிலையில் இருந்­த­தா­கவும் அதை பிரான்ஸ் மக்கள் மிகவும் உற்­சா­கத்­துடன் ஆடி மகிழ்ந்­தி­ருக்­கலாம் என்றும், கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்தே தற்­பொ­ழுது அழைக்­கப்­படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டு கிளை­விட்டுப் பிரி­வது போல் உரு­மாறி வந்­தி­ருக்­கலாம் என்றும் இந்த இனிய ஆட்­டத்தைக் கண்ட ஆங்­கி­லே­யர்கள் ஆட்­டத்தின் அமைப்­பையும் கருத்­தையும் ஏற்று இங்­கி­லாந்­துக்குக் கொண்டு வந்து திருந்­திய ஆட்­ட­மாகப் பொலி­வு­பெற அமைத்துக் கொண்­டி­ருக்­கலாம் என்றும் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்­துக்கும் பிரான்ஸுக்  கும் அந்தக் காலத்தில் மிகவும் நெருக்­க­மான அர­சியல் மற்றும் மண உறவு இருந்­த­தால் கிரிக்கெட் ஆட்டம் பிரான்ஸ்­கா­ரர்­களின் கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்து உரு­வா­கி­யி­ருக்­கலாம் என்று கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்தில் கிரிக்கெட் ஆட்டம் மிகப்­பெ­ரிய இடத்தைப் பிடித்து மக்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த காலத்தில் பிரான்ஸ் நாட்­டினர் கிரிக்கெட் பற்­றியே தெரிந்­தி­ருக்­க­வில்லை என்றும் ஒரு­சாரார் தெரி­விக்­கின்­றனர்.  

எனினும்  கிரிக்கெட் ஆட்டம் எங்கே தோன்­றி­யது என்­பதைத் திட்­ட­வட்­ட­மாகக் குறிப்­பிட இய­லாது.

ஆனாலும் இலை­ம­றை காய்­களைப் போன்று இங்­கு­மங்­கு­மாக ஒரு சில குறிப்­புகள் வர­லாற்றுப் பின்­ன­ணி­யிலே ஆங்­காங்கு மறைந்து கிடப்­பதை சுட்டிக்காட்டி இப்­ப­டியும் இருக்­கலாம் என்­கின்ற தங்­க­ளது குறிப்­பையும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

கிளப் போல் (Club Ball) என்­ப­தாக ஓர் ஆட்டம் இங்­கி­லாந்தில் முன்­னாளில் ஆடப்­பட்டு வந்­துள்­ளது.

பிர­ப­ல­மாக ஆடப்­பட்டு வந்த கிளப் போல் ஆட்­டத்­தி­லி­ருந்து கிளை­விட்டுப் பிரிந்து, சிறப்­பாகத் தோன்­றிய ஆட்­டமே கிரிக்கெட் என்றும் ஒரு குறிப்­பீடு உண்டு.

கிளப் போல் எனும் ஆட்டம் பற்­றிய குறிப்பும், எந்த வித­மான விவ­ரமும் இன்னும் தெரி­யா­மலே இருக்­கி­றது என்­பதால், இதைப் பற்றி ஒரு முடி­வெ­டுக்­காத நிலையில் நின்று போக வேண்­டி­ யி­ருக்­கி­றது. 

அடுத்­த­தாக ஸ்கொட்­லாந்தில் ஆடப்­பட்­டு­வந்த கேட் அண்ட் டோக் (Cat and Doug) என்ற ஆட்­டத்தின் அடிப்­ப­டையில் தான் கிரிக்­கெட்டின் ஆரம்­ப­ காலம் அமைந்­தது என்றும் ஒரு கருத்­துண்டு. 

மூன்­றா­வ­தாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்­று­வ­தற்கும், ஆட்ட அமைப்பு உரு­வா­வ­தற்கும் ஸ்டூல் போல் (Stool Ball) தான் கார­ண­மாக இருந்­தது என்றும் கூறு­கின்ற ஆசி­ரி­யர்­களும் உண்டு. 

ஹேண்ட் இன் அல்­லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) மறு­ வ­டி­வுதான் கிரிக்கெட் என்­ப­தா­கவும் சிலர் கூறு­வார்கள். 

ஆனால் இங்­கி­லாந்தில் லண்டன் நக­ரத்திலுள்ள அர­சர்கள் நூல­கத்தில் கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ஆம் ஆண்டே எழுதப் பெற்­றி­ருக்­கி­றது என்று சான்­றுகள் கூறு­கின்­றன.

1344ஆம் ஆண்டில் வரையப் பெற்றிருந்த ஓவியம் ஒன்றில் கிரிக்கெட் குறித்து உள்ளது. இதனால் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்­டுக­ளுக்கு முன்­ன­தா­கவே இங்­கி­லாந்தில் சிறப்­பான வளர்ச்­சி­யுற்­றி­ருக்க வேண்டும் என்றும், அப்­படிப் பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்­தாழ 12 அல்­லது 13ஆவது நூற்­றாண்­டிலே தோன்­றி­யி­ருக்க வேண்டும் என்றும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வாறு பெரும் வளர்ச்­சி­யுற்­ற­தி­னாலோ என்­னவோ, இந்த ஆட்டம் 1365ஆம் ஆண்டு அர­சாள்­வோ­ருக்கு அதி­ருப்­தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மாற்­றத்­தையே ஏற்­ப­டுத்தியிருந்­தது. 

வில்­வித்தைப் பயிற்­சியில் மக்கள் விருப்­ப­முடன் ஈடு­ப­டாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட் மற்றும் கிரிக்கெட் ஆட்­டத்­திலும், அதி­க­மாக ஈடு­ப­டு­வதால், வில்­லாற்­றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்­றனர். 

10-interesting-facts-english-longbowman-

ஆகவே நாட்டின் பாது­காப்­புக்கு உரிய கலை­யான வில் பயிற்­சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்­பிட்ட இரண்டு விளை­யாட்­டு­க­ளையும் மக்­களை ஆட­வி­டா மல், தடைச்­சட்­டத்தை நான்காம் எட்வர்ட் மன்னர் இயற்றித் தடை செய்தார். 

மக்கள் இந்த ஆட்­டங்­களை ஆடக்­கூ­டாது என்று சட்டம் போட்டு தடை­ வி­தித்­ததோடல்­லாமல், மீறி­ய­வர்­க­ளுக்குக் கடு­மை­யான தண்­டனை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

மீறி விளையா­டு­ப­வ­ருக்கு இரண்­டாண்டுகள் சிறை வரை தண்­டனை நீடி­த்­தது.  அது­மட்­டு­மன்றி விளையாட இடம் தரு­ப­வ­ருக்கும் இந்த தண்­டனைச் சட்டம் பாய்ந்­தது.

இவ்­வா­றாக, 185 ஆண்­டுகள் தடை போட்ட சட்­டத்தின் கீழ் அடை­யாளம் தெரி­யாமல் இந்த இரண்டு ஆட்­டங்­களும் முடங்கிக் கிடந்­தன என்று வர­லாறு கூறு­கின்­றது. ஆயுள் காலம் வரை தடை­போட்­ட­வாறே ஆட்­சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்­ன­ருக்குப் பிறகு, தொடர்ந்து அரி­யணை ஏறி­ய­வர்கள் அனை­வரும் இவ்­வாறே தடை போட்­டனர் என்­பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்­டத்­துடன் கிரிக்­கெட்டும் இணை­யா­கவே இருந்­தது என்­பதும், அதனால் கிரிக்கெட் ஆட்­டத்தின் முன்­னோடி என்று இதனைக் கூற முடி­யாது என்றும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

எப்­படிப் பார்த்­தாலும் கிரிக்கெட் எங்கு ஆரம்­பித்­தது, யாரால் தோற்­று­விக்­கப்­பட்­டது என்­ப­தற்கு இது­வ­ரையில் சரி­வர எந்த ஆதா­ரமும் இல்லை.  இருப்­பினும் இங்­கி­லாந்தில் 15 மற்றும் 16ஆ-ம் நூற்­றாண்­டு­களில் சிறு­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

17ஆ-ம் நூற்­றாண்டில் பெரி­ய­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் 18 ஆம் நூற்­றாண்டில் ஆங்­கி­லே­யர்­களின் ஆதிக்­கத்தால் உலகின் மற்ற இடங்­க­ளுக்கும் பர­வி­யது. 

அதே வேளையில் கிரிக்­கெட்டை ஒத்த வடிவில் இரு வேறு அள­வு­களைக் கொண்ட குச்­சி­களை வைத்து சிறு­வர்­களால் கிட்­டிப்புல் விளை­யா­டப்­பட்டு வரு­கி­றது. 

தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய விளை­யாட்­டாகக் கரு­தப்­படும் இந்த விளை­யாட்டு கில்லி தாண்டு, குச்சி கம்பு, சில்­லாங்­குச்சி, கரக்­குட்டி என்று பல்­வேறு பெயர்­களில் அழைக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்தக் கிட்­டிப்­புல்­லுக்கும் கிரிக்­கெட்­டிற்கும் நிறைய ஒற்­று­மைகள் உள்ளன. ஆனாலும் இதி­லி­ருந்து கிரிக்கெட் வந்­த­தா­க எந்த ஆதா­ரமும் இல்லை.

ஆங்­கி­லே­யர்­களின் கால்லனித்துவ ஆதிக்கம் மற்றும் ரயில் போக்­கு­வ­ரத்தின் வளர்ச்­சியால் உலகின் பல்­வேறு இடங்­களில் கிரிக்கெட் விளை­யா­டப்­பட்­டாலும் முதல் சர்­வ­தேசப் போட்டி 1844இ-ல் நியூயோர்க் நகரில் அமெ­ரிக்­கா­வுக்கும், கன­டா­வுக்கும் இடையே நடை­பெற்­ற­தாக வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­ளது. 

இருந்த போதிலும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் இந்த இரு­ நா­டு­களும் தற்­போது பங்­கேற்­க­வில்லை. 

ஆதி­ கா­லத்தில் முடிவு தெரியும் வரை விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் போட்­டிகள்  காலம் கருதி முதலில் 6 நாட்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்டு பின்னர் 5 நாட்கள் என தற்­போ­தைய வடி­வத்தைப் பெற்­றன. 

கால்­பந்து மோகம் உலகில் தீயாய் பரவி இருந்த நிலையில் கிரிக்­கெட்­டையும் அவ்­வாறு பிர­ப­ல­ப்ப­டுத்­தலாம் என்ற நோக்கில் இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே 1912ஆ-ம் ஆண்டு முத்­த­ரப்பு டெஸ்ட் போட்டித் தொடர் நடத்­தப்­பட்­டது. 

இருப்­பினும் பாரம்­ப­ரி­ய­மிக்க ரசி­கர்­களால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகள் விரும்பப்­பட்­டாலும் கால்­பந்­துக்கு இருந்த மோகம் கிரிக்­கெட்­டுக்கு அப்­போது இல்லை என்றே கூறலாம். 

இந்­நி­லையில் 1962 ஆம் ஆண்டு கிரிக்கெட் வர­லாற்றில் ஒரு புது முயற்­சி­யாக இங்­கி­லாந்தில் ஒரு நாள் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. உள்ளூர் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற இந்த ஒருநாள் தொட­ருக்கு ரசிகர் மத்­தியில் பெரும் வர­வேற்பு கிடைத்­தது. 

இந்­நி­லையில் 1971ஆம் ஆண்டில் மெல்­போர்னில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் போட்டி மழை கார­ண­மாக தடைப்­பட்­டதால் அதி­ருப்­தியும், ஏமாற்­றமும் அடைந்த ரசி­கர்­களை திருப்திப்படுத்தும் வகையில் அந்த இரு அணி­களும் பங்­கேற்ற ஒருநாள் போட்­டி­யாக நடத்­தப்­பட்­டது. 

இதுவே சர்­வ­தேச அள­வி­லான முதல் ஒருநாள் போட்­டி­யாகும். ஒரு ஓவ­ருக்கு 8 பந்­துகள் வீதம் 40 ஓவர்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டிக்கு கிடைத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இதனை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஆகும். 

முதல் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடத்தும் முன்னர் பரீட்சார்த்த முயற்சியாக 1973ஆம் ஆண்டில் மகளிர்க்கான சம்பியன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 

இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, நியூஸிலாந்து என்று 7 நாடுகளுக்கு இடையே ரவுண் ரொபின் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில்  இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. 

ரசிகர்களின் மத் தியில் இந்தத் தொடர் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதலா வது உலகக் கிண் ணத்தை 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது.

அதன் தொடர்ச் சியாக இன்று 12 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அதே இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.

பிரான்ஸில் ஆடப்பட்ட அதேவேளை கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் கிரோகெட் (Croquet) விளையாட்டின் ஓவியப்படம்...

vintage-croquet.jpg

 

1975 ஆம் ஆண்டு ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்னர் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை 1973 ஆம் ஆண்டு நடத்தியது சர்வதேச கிரிக்கெட் சபை.

womens-world-cup-1973.jpg

 

ஆரம்ப நாட்களில் பந்தை கீழாகக் கையை வீசி ஏறிந்து வந்தார்கள். இதற்கு அண்டர் ஆர்ம் பெளலிங் (Undr arm bolling) என்று பெயர்.

27106D7800000578-0-image-a-4_14275215077

அவுஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளான அப்ரோஜியன்களின் முதலாவது கிரக்கெட் அணி இது. எம்.சீ.சீ.மைதானத்தின் பெவிலியனில் எடுத்துக்கொண்ட படம்...

aboriginal_cricket_team_tom_wills_1866.j

கிரிக்கெட் மட்டைகளின் வளர்ச்சியை காண்பிக்கும் ஒரு ஓவியம் 

800px-Historical_cricket_bat_art.jpg

(தொகுப்பு : எஸ்.ஜே.பிரசாத்)

 

http://www.virakesari.lk/article/57094

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.