Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி.

“அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை.

கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள். 🤕

http://oomaipuli.blogspot.com/2019/05/prayfornesamani.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#Pray_for_Neasamani டிரெண்டானது ஏன்? யார் இந்த நேசமணி?

2000-ம் ஆண்டு வந்த இந்தக் காட்சி இப்போது வைரலாவதைப் பார்க்கும்போது ஃப்ரெண்ட்ஸ் பட காமெடிக்கும், வடிவேலுக்கும் எண்டுகார்டே கிடையாது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

காண்டிராக்டர் நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் இதுதான் நேற்று உலகம் முழுக்க டிரெண்டானது.

2000-ம் ஆண்டில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சிக்கு சிரிக்காமல் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. நம்ம பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியும், அவரது லேபர்ஸ்-ம் அள்ளித்தெளித்த நகைச்சுவை காட்சிகளை நம்மால் மறக்கவே முடியாது.

காமெடியில் அசத்திய பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி வாய மூடுறா குரங்கு, சள்ளி சள்ளியா நொறுக்கிட்டீங்களேடா, நீ புடுங்கரதெல்லாமே தேவையில்லாத ஆணிதான் என அடுக்கடுக்கான கான்ட்ராக்டர் நேசமணியின் வசனங்களை கவுண்டர் அடிக்காத ஆட்களும் தமிழகத்தில் இருக்க முடியாது.

19 ஆண்டுகள் கழித்து ட்ரெண்டான நகைச்சுவை காட்சி

பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சி 19 ஆண்டுகள் கழித்து Pray_for_Neasamani என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை வடிவேலு பாணியில் ஆழமாக போயி அலசி பார்க்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் `Civil Engineering Learners' என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கோக்குமாக்காக கமெண்ட் இட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.
nesamani-3.jpg

இது போதுமே 'விடுவோம்மா நாங்க' என்பது போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் கோதாவில் இறங்கி, பிரேக்கிங் நியூஸ், டெம்ப்ளேட் வீடியோ என பலவிதமாக மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். இதையடுத்து பேஸ்புக்கில் வைரலான நேசமணி தற்போது ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டாகி 'ஓவர் நைட்டில் ஒபாமா' ஆகிவிட்டார்.

தற்போது நேசமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 இட்லி மற்றும் கலக்கி சாப்பிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் அளித்தது போல் படுஜோரான மீம்ஸை வலைதளவாசிகள் பறக்க விட்டனர்.

https://tamil.news18.com/news/trending-news/memes-on-tamil-film-character-neasamanis-onscreen-injury-go-viral-twitter-prays-for-his-health-irl-vaij-161509.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.