Jump to content

Recommended Posts

 
 
751ef9266f6c01f973642af8acd66eb0....jpg
 
கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.
 
தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.
 
நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 
 
பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிளவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!
 
இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.
 
பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 
 
தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.
 
ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 
 
நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 
 
நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   
 
குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.
 
நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.
 
நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 
 
அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !
 
நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !
 
நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகிப் பாயலில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 
 
சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!
 

 

Link to comment
Share on other sites

யாழ் வாசகர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்யாயனரின் ஓவியம் ஒன்று நீராடுவதை கம்பன் கண்டு களித்து கையில் தூரிகை எடுத்ததுபோல் மனதை கிறக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் .......!  தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

Just now, suvy said:

வாத்யாயனரின் ஓவியம் ஒன்று நீராடுவதை கம்பன் கண்டு களித்து கையில் தூரிகை எடுத்ததுபோல் மனதை கிறக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் .......!  தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

நண்பருக்கு வணக்கம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

கற்பனைக் குதிரையை சற்றே அந்தரங்கத்துடன் ஆழமாக ஓடவிட்டதன் விளைவுவே இப்பதிவு.

பதிவின் பல்வேறு இடங்களில் பிழைகள் உள்ளதாகத் தோன்றுகிறது, யாழ் நண்பர்களின் சுட்டிக்காட்டுதலை இன்முகமாக வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அருள்மொழிவர்மன் said:

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

பாடாய்ப் படுத்தும்.....!   👍

Link to comment
Share on other sites

27 minutes ago, கிருபன் said:

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

நண்பருக்கு வணக்கம்.

என்றோ வாசித்தது போல உள்ளது. இதில் எவ்வித உண்மையுமில்லை, வெறும் மூடப்பழக்க வழக்கமாக பழங்காலத்தில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கான எந்தவொரு அறிவியல் விளக்கமும் இல்லை. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அருள்மொழிவர்மன் said:

யாழ் வாசகர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இது வேறு ரகம் அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்மனின் வர்ணனை பிரமாதம்.👍
இளந்தளிர் சிலிர்த்து நிற்க  அதன் மீது ஆங்காங்கே மழைத்துளிகள்  வீழ்ந்த பிரமை தோன்றுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இன்னொருமுறை நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் ... என்ற பாடலை 
கேட்டு பாருங்கள் ..... கிட்ட தட்ட இதே சிட்டுவேஷன்.

கடல்புறா புத்தகம் இருந்தால் ...
முதல் முறை இளமாறன் காஞ்சனாவை காணுவதை இன்னொருமுறை 
வாசியுங்கள்  ........கிட்ட தட்ட இதே சிட்டுவேஷன்.

அப்போதும் புரியாவிட்டால் ..தேம்ஸ் நதியில் ஒருமுறை சென்று இறங்கி நின்றுவிட்டு வந்து 
வாசியுங்கள் ஏதும் மாறுதல் வருகுதா என்று பார்ப்போம் ....

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

தோழிக்கு இப்போது புரியும் என்று நம்புகிறேன் !!🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அருள்மொழிவர்மன் said:

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

இப்போது நண்பருக்குப் புரியும் என்று நம்புகிறேன் !!🙂

நண்பி, நண்பா!!

Link to comment
Share on other sites

10 minutes ago, Nathamuni said:

நண்பி, நண்பா!!

😃...பிழையைத் திருத்திவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2019 at 10:17 PM, அருள்மொழிவர்மன் said:

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!

இப்படி காலம் காலமாச் சொல்லிச் சொல்லியே.. அவங்க வலில தடவுறதை எல்லாம் இவங்க.. தங்களின் கிளர்ச்சிக் களிப்பில் அடக்கிக் காட்டிக்கிட்டே வாறாய்ங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையா...??!

பெண் அழகுதான். ஆனால் அவளும்.. நோ வலி குத்து எல்லாம் இருக்கும் ஒரு சராசரி சக மனிதன் என்ற உணர்வும் ஆண்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அழகுக்குள் இருக்கும் எச்சரிக்கைகளை இந்த அழகுக் கிளர்ச்சி வசனங்களுக்கு அப்பால் மனித ஆண்கள் புரிந்து கொள்ள முடியும். பெண்களை பாலியல் பாவைகளாக நோக்கி நொடித்துப் போடும்.. நிலை மாறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அருள்மொழிவர்மன் said:

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

தோழிக்கு இப்போது புரியும் என்று நம்புகிறேன் !!🙂

எனக்கு அப்படி ஒரு எண்ணமும் வரேல்ல...ஒரு வேளை நான் பெண் இல்லையோ!😆

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவமமாற்றம் என்பது நேரம் காலம் எடுத்து 
இயற்கையின் வனப்பில் பிரவகிப்பது.

ஒரு மொட்டு ... மலர்ந்து 
பூவாகி ... கனியாகி ... கனிந்து பழமாகி 
பின் தன்னுள் இருக்கும் விதையை  வனப்பாக்கி 
மீண்டும் ஒரு மரத்தை உருவாக்கும்.

ஊரிலே பெரியவர்கள் சிலரை ஏசுவர்கள் 
பிஞ்சிலே முத்தினது என்று ....... 
சிலர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது 
பருவங்களை கடந்து விடுகிறார்கள்.

சில பாவப்படடவர்கள் காதலை நம்பி 16-17 வயதில் 
குழந்தைக்கு தாயாகிவிடுவார்கள் அவர்களால் 17-21 வயத்துக்குமான 
பருவ மாற்றங்களை உணரமுடியாது.

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள் 
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள் 
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று 
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

இப்படி காலம் காலமாச் சொல்லிச் சொல்லியே.. அவங்க வலில தடவுறதை எல்லாம் இவங்க.. தங்களின் கிளர்ச்சிக் களிப்பில் அடக்கிக் காட்டிக்கிட்டே வாறாய்ங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையா...??!

பெண் அழகுதான். ஆனால் அவளும்.. நோ வலி குத்து எல்லாம் இருக்கும் ஒரு சராசரி சக மனிதன் என்ற உணர்வும் ஆண்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அழகுக்குள் இருக்கும் எச்சரிக்கைகளை இந்த அழகுக் கிளர்ச்சி வசனங்களுக்கு அப்பால் மனித ஆண்கள் புரிந்து கொள்ள முடியும். பெண்களை பாலியல் பாவைகளாக நோக்கி நொடித்துப் போடும்.. நிலை மாறும். 

@ நெடுக்ஸ், நண்பருக்கு வணக்கம். எதிர்மறைக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்!

இதுபோன்ற விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்பதிவில் பெண்களை ஆபாசப்  பொருளாக்கி வெறும் காம நெடியுடன் சித்தரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆபாசத்தை முன்னிறுத்தி கிளர்ச்சியூட்டும் நோக்கிலும் எழுதவில்லை. ஒரு சராசரி மனித உடலின் (ஆண்/பெண்) அழகியலை இயற்கையுடன் ஒப்பிட்டு இயல்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆபாசத்தையும் உடலின் அழகியலையும் பிரித்தறிய இயலாத நிலையிலிருப்பது வருத்தமளிக்கிறது.

"நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில்!"
 
உடலின் திகம்பர நிலையில் ஆபாசத்தை மட்டுமே காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படையாக எழுதினால் ஆபாச முத்திரைக் குத்தப்படுவது இயல்பானதே, தவறாகத் தோன்றவில்லை.
 
எண்ணத்தை பின்னூட்டமாக அளித்ததற்கு நன்றிகள்.
 
 
 
 
14 hours ago, ரதி said:

எனக்கு அப்படி ஒரு எண்ணமும் வரேல்ல...ஒரு வேளை நான் பெண் இல்லையோ!😆

 

என்ன சொல்வதென்றே தெரியவில்லை😌  !!

Link to comment
Share on other sites

12 hours ago, Maruthankerny said:

பருவமமாற்றம் என்பது நேரம் காலம் எடுத்து 
இயற்கையின் வனப்பில் பிரவகிப்பது.

ஒரு மொட்டு ... மலர்ந்து 
பூவாகி ... கனியாகி ... கனிந்து பழமாகி 
பின் தன்னுள் இருக்கும் விதையை  வனப்பாக்கி 
மீண்டும் ஒரு மரத்தை உருவாக்கும்.

ஊரிலே பெரியவர்கள் சிலரை ஏசுவர்கள் 
பிஞ்சிலே முத்தினது என்று ....... 
சிலர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது 
பருவங்களை கடந்து விடுகிறார்கள்.

சில பாவப்படடவர்கள் காதலை நம்பி 16-17 வயதில் 
குழந்தைக்கு தாயாகிவிடுவார்கள் அவர்களால் 17-21 வயத்துக்குமான 
பருவ மாற்றங்களை உணரமுடியாது.

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள் 
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள் 
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று 
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள். 

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள்
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள்
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள்.

உண்மை நண்பரே.. பருவ மாற்றங்களைக் கடந்து செல்வது கடினமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கவிதையை உரைநடையாய் எழுதி வாங்கிக் கட்டுவார்கள். ஆனால் நண்பர் உரைநடை எழுதி "அட, இது கவிதை" என்று நம் பாராட்டைப் பெறுகிறார். உரையாற்றுங்கள். கவி பாடுங்கள்.

Link to comment
Share on other sites

32 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சிலர் கவிதையை உரைநடையாய் எழுதி வாங்கிக் கட்டுவார்கள். ஆனால் நண்பர் உரைநடை எழுதி "அட, இது கவிதை" என்று நம் பாராட்டைப் பெறுகிறார். உரையாற்றுங்கள். கவி பாடுங்கள்.

நண்பரின் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. விடுமுறை நாளில் எழுதியது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.