Jump to content

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார்.

இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Viyalandern.jpg

http://www.virakesari.lk/article/57246

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முற்போக்கான முடிவு உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ..👍

Link to comment
Share on other sites

நல்ல முடிவு. ராஜதந்திரமென்று ஒன்றும் சொல்லாமலும் செய்யாமலும் இருப்பதிலும் பார்க்க ஐஎஸ் ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாக பதவி இறக்கப்பட வேண்டும். இந்த உண்ணாவிரதத்துக்கு முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Dash said:

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

காசுக்கு விலைபோய் மகிந்த கும்பலுடன் சேர்ந்த இவர் வேறுவழிகளின்றி இப்போது கொஞ்சகாலமா மகிந்தவின் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் சதித்திட்டங்களுக்கு ஏற்ப சதிராடி வருகிறார்!

இன்னொரு விதமாக சொல்லப்போனால் முன்னர் முஸ்லிம்கள் எப்படி சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு துணை போனார்களோ அதைப் போன்றதொரு வழியில் வியாழேந்திரன் பயணிக்க எத்தனிக்கிறார்!

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு முஸ்லிம் பயங்கரவாதக் கும்பலுக்கு எதிராக நடக்கும் எதையும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதில் தவறில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

புதனுக்கு அடுத்ததா நிற்கிறார்.

Link to comment
Share on other sites

உண்ணாவிரத்தை நிறைவுசெய்தார் வியாழேந்திரன்

Viyalenthiran-Protest-700x450.jpg

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவுசெய்தார்.

அவர், நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, உண்ணவிரதத்தை முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன்,  “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தர்.

http://athavannews.com/உண்ணாவிரத்தை-நிறைவுசெய்/

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

போன வருடம் நடந்த குளறுபடியின் போது அதுரலிய ரத்ன தேரர் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். வியாழேந்திரனும் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். இப்ப அதுரலிய ரத்ன தேரரை ஆதரித்து இவரும் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் பின்னணியில் அரசியல் உள்ளது.

இலங்கையில் தாக்குதல் நடக்கவிருப்பது மைத்திரி, ரணில், மகிந்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்தே நடந்தது. இப்பொழுது அவர்கள் அரசியலுக்கு மீண்டும் ஒருமுறை வியாழேந்திரன் பலிக்கடாவாக்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

ஒருக்கா ராசிபலன் பாத்திட்டாப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான கடைந்தெடுத்த இனவிரோதிகளுடன் சேர்ந்து நாங்கள் இதில் பங்கு பற்றுவது தேவையற்றது. இவர்கள் எங்களை கணக்கிலேயே எடுக்க மாட்டார்கள், தேவையேற்படின் எங்களுக்கு எதிராக உடனடியாகவே திரும்புவார்கள். வரலாறு அப்பிடித்தான்  எங்களுக்கு சொல்லி தந்திருக்கு. இது பெயரைக் கெடுக்கவே உதவும். பேசாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தாலே போதுமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

அவர் அரசியலுக்காய் தான் இதைத் செய்கிறார். அங்கு இருப்பவர்களும் அப்படித் தான் சொல்கிறார்கள்...ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...ஒரு சிலரைத் தவிர அநேகமானோருக்கு யாழ்ப்பாண மெண்டாலிட்டி மாத்துவது கஸ்டம்

.
அவரை எதிர்க்க வேண்டும் என்று இங்கிருந்து காசு அனுப்பி அவருக்கு எதிராய் சில பேரை கிளப்பி விடுவினம்..இரண்டு பேரும் புடுங்குப்பட  மூனாக்கள்  எதிர்ப்பில்லாமல் முன்னுக்கு வந்து விடுவினம். அது தான் அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கு 
 

7 hours ago, Maruthankerny said:

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

 

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

என்ன கொள்கை? 

Link to comment
Share on other sites

19 hours ago, Lara said:

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

இவரை கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக போன வருடம் ஊடகங்கள் முன் கூறியிருந்தாலும் “உத்தியோகபூர்வமாக” நீக்கப்பட்டாரா என்பது கேள்வி.

பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே இவர்கள் போட்டியிட்டிருந்தார்கள். அதன்படி பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் இன்னும் அவ்வாறே உள்ளார்.

https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3251 

இவரை உத்தியோகபூர்வமாக நீக்கியிருந்தால் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் ஆப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

அதற்குத்தான் தனி ஆவர்த்தனம் செய்கிறார் 

7 hours ago, ரதி said:

ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...

கண்டபடி சாபம் இட்டு விடுவேன் என்று பயமா இருக்கு போங்க தங்கச்சி ஓரமாக போய் விளையாடுங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் தேங்காய் பூவும் என்று சொந்தம் கொண்டாடிய தமிழர்களைக் கூட இருந்தே சிங்களவனோடும் அரேபியர்களோடும் பாகிஸ்தானியர்களோடும்.. கூட்டு நின்று.. கருவறுத்த.. கருவறுக்கும்.. முஸ்லீம்களை விட... எதிரியாக தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக நின்ற சிங்களவன் எவ்வளவோ மேல்.

சம் சும் கும்பல்.. சொறீலங்கா சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்து.. இனப்படுகொலை சிங்கள இராணுவ அணிவகுப்பை பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிந்ததை விட..

தமிழ் மக்களுக்கு எதிரான இன்னொரு காட்டிக்கொடுப்பு எதிரியை.. அவர்களின் முன்னை நாள் நண்பர்களோடு நின்று எதிர்ப்பது நல்லது. அப்போது தான் இரு தரப்பும் தமிழர்களுக்கு தாம் செய்த துரோகத்தை அடையாளம் கண்டுகொள்ளும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.