Jump to content

“வடக்கின் முதலமைச்சரும் நானே அமைச்சர்களும் நானே! “ - ஆளுநர் சுரேன் ராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“வடக்கின் முதலமைச்சரும் நானே அமைச்சர்களும் நானே! “ - ஆளுநர் சுரேன் ராகவன்

June 1, 2019
Suren-Ragavan.jpg?resize=800%2C533

வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது இல்லாமையினால், முதலமைச்சரும், அமைச்சர்களும் நானே என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வட மாகாண தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து லட்சம் மக்களின் வாக்குகளிலேயே அவர்களுக்கு கண் என தெரிவித்துள்ள அவர், இங்குள்ள மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்

மேலும் வெளிநாட்டில், நாடு கடந்த அரசாங்கம் நடாத்தும் ஒருவர் இங்குள்ள விடயங்களை கிண்டிக் கொண்டிருப்பதாகவும், என்ன நடந்தாலும் ஐ.நாவுக்கு ஓடிச் சென்று முறையிடுவதாகவும் தெரிவித்த அவர் அவருக்குப் பின்னால், இங்குள்ள சில சட்டத்தரணிகளும் செல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிணறுகளில் எடுக்கும் தண்ணீருக்காக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக நீர்வாசிப்புமானி பொருத்தப்படும் எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுகாதரத் துறை பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

#வடமாகாணசபை #வட மாகாணஆளுநர் #சுரேன்ராகவன்

 

http://globaltamilnews.net/2019/123281/

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது இல்லாமையினால், முதலமைச்சரும், அமைச்சர்களும் நானே என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

மைத்திரியும் நானே, ரணிலும் நானே, மகிந்தரும் நானே. ஆலையில்லா வடமாகாணத்திற்கு நானே இலுப்பைப்பூச் சர்க்கரை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு மாதத்தில மைத்திரி கிளம்ப, இவரும் பெட்டிய தூக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

10 minutes ago, Nathamuni said:

நாலு மாதத்தில மைத்திரி கிளம்ப, இவரும் பெட்டிய தூக்க வேண்டியது தான்.

இவர் பெட்டியைத் தூக்காவிட்டாலும் பரவாயில்லை..... ஆனால் இவரைப் பெட்டியில் வைத்துத் தூக்கி பழியை அப்பாவித் தமிழர்கள்மேல் போடாதுவிட்டாலே போதும். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதவடமகாணத்தில் ஒரு தமிழ் ஆளுனர்  முதலமைச்சரும் நானே மந்திரிகளும் நானே என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும்  சந்தர்ப்பம் இன்னும் ஒரு முறை வராதும் போகலாம். இங்கு கேள்வி என்னவென்றால் இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழினத்துக்கு சாதமாக மாற்ற இந்த தமிழன் என்ன செய்தான் என்பதுதான். ஒரு இஸ்லாமிய ஆளுனருக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்திருப்பார். ஒரு சிங்கள ஆளுனர் என்ன செய்திருப்பார்.  ஒரு பொம்மை தர்பாரில் இருந்து கொண்டு முதலமைச்சரும் நானே மந்திரிகளும் நானே என்று  ஆட்சி நடாத்துகிறார் என்பதை உணராத கபோதி இவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

6 hours ago, கிருபன் said:

வடக்கின் முதலமைச்சரும் நானே அமைச்சர்களும் நானே! “ 

திருவிளையாடல் மதிய காட்சி பார்த்திருப்பார் போல கிடக்கு ☺️

Link to comment
Share on other sites

4 hours ago, vanangaamudi said:

இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழினத்துக்கு சாதமாக மாற்ற இந்த தமிழன் என்ன செய்தான் என்பதுதான்.

உடனடியாக ஒரு பவுத்த பயங்கரவாதிகளின் மாநாட்டை வடமாகாணத்தில் நடத்தி முடித்துள்ளார்!

ஜெனிவா சென்று தமிழினப் படுகொலைகாரர்களை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார்!

தமிழினத்துக்கு எதிராக செயற்பட்டால் தான் சொகுசு வாழ்க்கையை தொடர முடியும் என்பதை ஒவ்வொரு செயலிலும் கடைபிடித்து நிரூபித்து வருகிறார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.