Jump to content

ஸ்பெயின் நாட்டில் ஒரு தமிழரின் உணவு விடுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா 2000.. வந்தாரு.. பாசிலோனால பிறந்த அக்காவுக்கு.. 23 வயசு.. அப்புறம்.. அப்பா அடிக்கடி வந்து போனாரு.. அப்பா என்னத்துக்கு வந்தாரு.. ஸ்பெயினுக்கு...

குழப்பமான பதில்கள்.

எதுஎப்படியோ.. பாசிலோனாவில்.. தோசைக் கடை.. என்பது என்னவோ.. வரவேற்க வேண்டிய ஒன்று தான்.

கதை போல் சுத்துமாத்து வைக்காமல்...... உணவு தரமாக இருந்தால் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nedukkalapoovan said:

அப்பா 2000.. வந்தாரு.. பாசிலோனால பிறந்த அக்காவுக்கு.. 23 வயசு.. அப்புறம்.. அப்பா அடிக்கடி வந்து போனாரு.. அப்பா என்னத்துக்கு வந்தாரு.. ஸ்பெயினுக்கு...

குழப்பமான பதில்கள்.

எதுஎப்படியோ.. பாசிலோவில்.. தோசைக் கடை.. என்பது என்னவோ.. வரவேற்க வேண்டிய ஒன்று தான்.

கதை போல் சுத்துமாத்து வைக்காமல்...... உணவு தரமாக இருந்தால் சரி. 

நானும் நீங்கள் நினைச்ச மாதிரித் தான் யோசித்தன்...என்னை பொறாமை பிடிச்சவள் என்று சொல்லி விடுவினம் என்று பேசாமல் இருந்திட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைச்ச மாதிரித் தான் யோசித்தன்...என்னை பொறாமை பிடிச்சவள் என்று சொல்லி விடுவினம் என்று பேசாமல் இருந்திட்டன் 

என்ன தங்கச்சி.....தோசைக்கடை மூனா அசூல் கேஸ் எண்டு சொல்ல வாறியளோ????? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்ன தங்கச்சி.....தோசைக்கடை மூனா அசூல் கேஸ் எண்டு சொல்ல வாறியளோ????? 😎

உங்க நிறைய மலையாளிகளும்.. புதுச்சேரிக்காரர்களும்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த கேடிகள் பலரும்.. ஊரில சொல்லிக் கொண்டு திரிவது.. தங்களை மேற்கு நாடுகள்.. கூவி அழைத்து வைச்சிருப்பதாக. ஆனால்.. உண்மை அதுவல்ல. பலர் ஈழத்தமிழர்களின் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி.. அசூல் அடித்தது தான் அதிகம். ஆனால் அளக்கிற கதையோ...???! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

அப்பா 2000.. வந்தாரு.. பாசிலோனால பிறந்த அக்காவுக்கு.. 23 வயசு.. அப்புறம்.. அப்பா அடிக்கடி வந்து போனாரு.. அப்பா என்னத்துக்கு வந்தாரு.. ஸ்பெயினுக்கு...

குழப்பமான பதில்கள்.

எதுஎப்படியோ.. பாசிலோனாவில்.. தோசைக் கடை.. என்பது என்னவோ.. வரவேற்க வேண்டிய ஒன்று தான்.

கதை போல் சுத்துமாத்து வைக்காமல்...... உணவு தரமாக இருந்தால் சரி. 

தோசைகடை மூனான்றமகள் கணக்கில வீக்...

கல்லாவில நிக்கிற நேரம் பார்த்து போகனும்....

யாழ் மொக்கன் கடை நிணைவு வருது. :grin: 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படித்த மொழியில் பேசாமல் கூடிய வரை தமிழில் பேச விரும்பிய அந்த சின்னபெண்ணை வாழ்த்துவோம்.  நிச்சயம் ஒருநாள் பசிலோனா வருவேன். சென்னை தோசைக் கடையில் சாப்பிடுவேன்.  காரைகுடி செட்டிமார் இன்று நேற்றல்ல சோழர்காலங்களில் இருந்தே - பல நூற்றாண்டுகளாக கடல் கடந்து தொழில் செய்கிறவர்கள். அப்பவே கோட்டை கண்டி யாழ்பாண அரசர்களுக்கு கடன்கொடுத்த சமூகம். அவர்கள் பசிலோனாவில் கடைவைத்திருப்பது ஒன்றும்   அதிசயமல்ல.

கடந்த 20 வருடங்களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழரைவிட பலமடங்கு அதிகமான தமிழ்நாட்டவர்கள் விஞானிகளாகவும் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகவும் வர்த்தகம் தொழில்துறை முனைவோர்களாகவும் உலகம் முழுவதும் பரவியுள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழரைவிட அமரிக்காவில் அதிகமான தமிழ் நாட்டு தமிழர்கள் இருப்பதாக தெரிகிறது . ஈழத்தமிழர்களுக்கும் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குமிடையில் புரிந்துணர்வும் நல்லுறவும் வளர வேண்டும்.

ஜல்லிக்கட்டு தூத்துகுடி ஆலை போராட்டம் போன்றவற்றுக்கு பெருமளவு புலம்பெயர்ந்த உலக தமிழ்நாட்டு மக்கள் பக்கபலமாக இருந்தனர். லண்டனில் தூத்துக்குடி ஆலைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராடிவருகிறார்கள்.

ஸ்பெயினில் பிறந்து வளர்ந்தபெண் ஸ்பெயின் மொழியில் பேசி இருந்தால் தப்பு வந்திருக்காது. குறை காணாமல் அந்த பெண்பிள்ளையின் தமிழ் ஆர்வத்தை பாராட்டுவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.