Jump to content

முதல்பதிவு


Recommended Posts

அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள்.
பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம்.

77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன்.

சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகளும் அம்மாவின் தலைக்கு ஒரேநாளில் இடம் மாறியது. அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம். அப்பாவின் பென்சனில் ஐந்துபேரின் படிப்பையும் செலவையும் சமாளிக்க சிரமப்பட வேண்டிஇருந்தது. ஒருவருடைய படிப்பையாவது நிறுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும்படி அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி சிக்கலை கடப்பதில் அம்மாவுக்கு பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. செலவுகளின் துண்டு விழும் தொகையை சமாளிக்க அம்மாவின் ஒவ்வொரு நகையாக அடவு கடைக்கு போனது.

அண்ணா படிப்பை முடித்து வேலைக்கும் அக்கா மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கும் போகிறபோது ஏறத்தாள அம்மாவின் எல்லா நகைகளும் அடவு கடைக்கோ அல்லது விற்பனைக்கோ போயிருந்தது. ஆயினும் அம்மா விரும்பியதை போலவே ஐந்து பேரும் இலங்கையிலேயே பல்கலைக்கழக படிப்பை பூர்த்திசெய்ய முடிந்தது.

பிறகு மீண்டும் வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நகைகளை போட்டு மகிழ்கிற வயது கடந்து போயிருந்தது.

இப்படித்தானே அம்மாக்களின் அர்ப்பணிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் துளிர்த்த குடும்பங்கள் ஊர் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது. அரைவயிரோடும கால்வயிரோடும் பிள்ளைகள் பற்றிய கனவுகளோடு வாழ்ந்த வாழ்கிற எல்லா அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

Link to comment
Share on other sites

5 hours ago, நிலாமதி said:

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

ஆலோசனைக்கு நன்றி .

நீண்ட நாட்களாக அடிக்கடி மேச்சலிடுகிற இடம் .
 ஏதோ ஒரு அசட்டு துணிவில் முகநூலில் எழுதியதை  இங்கும் இறக்கி விட்டேன் .

4 hours ago, suvy said:

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

நன்றி .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

நன்றி .

2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி தானே!

கொஞ்சம் மனதைப் பாதித்த பகிர்வு!

வணக்கம் ....வாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
உங்கள் அம்மா தன்னந்தனியாக.... ஐந்து பிள்ளைகளையும், 
இலங்கையிலேயே பல்கலைக்கழகம் வரை கற்பிக்க வைத்த,
தன்னம்பிக்கைக்கும், வைராக்கியத்துக்கும்... தலை வணங்குகின்றேன்.

Link to comment
Share on other sites

வரவேற்று ஊக்கப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள், உங்கள் அம்மாவின் முயற்சி கண்கலங்க வைக்குது 

Link to comment
Share on other sites

வணக்கம், வாருங்கள். கண்கலங்க வைக்கும் பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

🤦‍♂️

Link to comment
Share on other sites

On 6/1/2019 at 11:15 PM, pri said:

அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம்.

5 பேர் தான்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

Link to comment
Share on other sites

On 6/17/2019 at 10:06 PM, சாமானியன் said:

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

நன்றி சாமானியன் .

நீங்கள் குறிப்பிட்ட தகவலோடு ஒத்துப்போகிற குடும்பம் ஒன்றை நானும் அறிவேன் .
அவர்களுடைய  கடைசி மகனோடு கொழும்பிலும் பின்னர் ஹாட்லியிழும்   ஒன்றாக  படித்திருக்கிறேன் .

அவனுடைய அப்பா வருமான வரி திணைக்களத்தில் வேலை செய்ததாக ஞாபகம் . சுங்க திணைக்களத்தில் அல்ல .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ  பிரி

அம்மாக்களின் வலிகளோடு  வந்திருக்கின்றீர்கள்

தொடருங்கள்

கதைப்பகுதி  இருக்கிறது

அங்கே  பதியுங்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.