Jump to content

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

கார்வண்ணன்Jun 02, 2019 | 4:01
by in செய்திகள்

Palaly_Airport-300x200.jpg

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

“தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது.

திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், நீர்வழங்கல், வடிகாலவமைப்பு சபை, ஆகியவற்றின் 60 அதிகாரிகளைக் கொண்ட குழு பலாலி விமான நிலையத்தில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதையடுத்து, ஏ 320 விமானங்கள் தரையிறங்கக்க கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை 3500 மீற்றர் வரை  வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம், விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2019/06/02/news/38286

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®© à®à¯à®¨à¯à®¤à®°à®¿

பலாலி விமான நிலையத்தை, யார்.... சீனாவா, இந்தியாவா, ஸ்ரீலங்காவா அபிவிருத்தி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் ஹிந்திய அரச பிச்சைக்காரர்களை ஏமாற்றும் திட்டம் தயார் ஆகிவிடும் என்கிறார்!

Link to comment
Share on other sites

On 6/2/2019 at 10:30 AM, தமிழ் சிறி said:

பலாலி விமான நிலையத்தை, யார்.... சீனாவா, இந்தியாவா, ஸ்ரீலங்காவா அபிவிருத்தி செய்கிறார்கள்.

பாலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்திய விமான நிலைய அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் என முன்பு கூறினார்கள். அதற்கான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு போன வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இந்திய விமான நிலைய அதிகார சபைக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்திய அதிகாரிகள் குழு ஏற்கனவே பலாலிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு சென்றிருந்தது. நிதியுதவி இந்தியா வழங்கவுள்ளது என்றும் கூறினார்கள். 

இதற்குள் நிமல் சிறிபால டி சில்வா அபிவிருத்தி பணியை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம், இலங்கையே அபிவிருத்தியை செய்யும் என்று சொல்லியிருந்தார்.

பின்னர் விமான ஓடுதளத்தை இலங்கை அபிவிருத்தி செய்யும், ஏனைய அபிவிருத்திப்பணிகளுக்கு இந்தியாவின் உதவியை கோரும் என்றார்கள்.

இலங்கையில் ஒரு திட்டம் நிறைவேறுவதென்றால் யார் எதை அபிவிருத்தி செய்கிறார்கள் என்று கடைசி நிமிடம் வரைக்கும் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 🙃

இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை அபிவிருத்தி செய்யும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு பொறுப்பேற்ற இந்தியா இதற்கும் பொறுப்பேற்கும் என நினைக்கிறேன்.

ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தி மாசி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்கள். இப்ப இன்னும் இரு மாதங்களுக்கிடையில் என்கிறார்கள். இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

 இப்ப விமான நிலையம் வருமா ?? வராதா ??

 

வரும் ஆனால் வராது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.