Jump to content

நெகிழி [பிளாஸ்டிக்]


Recommended Posts

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.

மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

  1. பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
  2. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.
  3. நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
  4. நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
  5. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

 

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்

  • பிளாஸ்டிக் பைகள்        (100-1000 ஆண்டுகள்)
  • பஞ்சுக் கழிவுகள்          (1-5 மாதங்கள்)
  • காகிதம்                  (2-5 மாதங்கள்)
  • உல்லன் சாக்ஸ்          (1-5ஆண்டுகள்)
  • டெட்ரா பேக்குகள்         (5ஆண்டுகள்)
  • தோல் காலணி            (25-40 ஆண்டுகள்)
  • டயபர் நாப்கின்            (500-800 ஆண்டுகள்)

மறுசுழற்சி மறுசுழற்சி என்பதை பொருளாதார வலுவுடன் இணைப்பதன் மூலம் நெகிழியை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். 

# 1 :  இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் தம்பதியர் நிறுவியதுதான் அக்ஷார் ஃபோரம் பள்ளி. இந்தப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை கொடுத்து மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை கொண்டு, மாணவர்கள் ‘பசுமை செங்கற்களை‘ செய்கிறார்கள். பள்ளிப்படிப்பை தொடரும் அதேவேளையில் வருவாய் ஈட்டும் வழியையும் இந்த பள்ளி காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/india-48485645

 

#2 பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

 

Link to comment
Share on other sites

பிளாஸ்டிக் தவிர்ப்போம் "சிறப்பு குழந்தைகள்" விழிப்புணர்வு ஓட்டம்

https://www.youtube.com/watch?time_continue=68&v=_rZukiSMNII

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

அம்பனை என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய சமுதாயத்திற்கு தலையிடியாக இருக்கப்போவது இந்த பிளாஸ்ரிக் பொருட்களே.
 எமது மூதாதையர்களும் நாங்களும் உபயோகப்படுத்திய சணல் சாக்கு பைகளையும் கடுதாசி பைகளையும் சூழல் பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடங்களிலும்  பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

அம்பனை என நினைக்கிறேன்

நீங்கள் எழுதியதுதான் சரி.....! இருந்தாலும் அவரை அம்பானி என்று சொல்வதை கூட உங்களுக்கு பொறுக்கவில்லை. பொறாமை......!   😄

Link to comment
Share on other sites

மகளிர்  மட்டும்  தொழில்புரியும் நெகிழி மீள்சுழற்சி தொழில் வாய்ப்பு 

இவை போன்ற முதலீடுகளை புலப்பெயர் உறவுகள் தாயக மக்களுக்கு அமைத்து உதவலாம். 

குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.

மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.

மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நெகிழி - இதை மீளாக்கம் செய்து பாடசாலை பிள்ளைகளுக்கான மேசைகள் வாங்குகளை செய்யும் பொறியியலாளர்  

q1-37.jpg

 

q2-39-768x1024.jpg

https://www.readersportaltoday.net/2019/02/20/filipino-engineer-recycles-plastic-garbage-and-made-it-into-school-chairs/?fbclid=IwAR2qneudCSNbuGgUPKvmaZcobU-m8QXX612mXDk03iqIqZnpJw2ZqlWVytI

Link to comment
Share on other sites

பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு சப்பாத்திக் கள்ளியால் தீர்வு சொல்லும் பெண்

சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பை மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை நீங்கள் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் போது.... நமக்கு மட்டும் பாதிப்புகள் இல்லை. 
மற்ற எல்லா உயிர்களும் உள்ளது. 

Link to comment
Share on other sites

நெகிழி அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

59682616_2359056400820686_45143166230410

 

நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

 

777.jpg

 

அத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

65.jpg

6.jpg

https://www.virakesari.lk/article/58720

Link to comment
Share on other sites

இந்தியாவில் எறியப்படும் நெகிழிகளை கொண்டு உருவாக்கப்படும் காலணிகள் 
இந்தியாவில் இரண்டு மில்லியன்கள் தண்ணீர் நெகிழிகள் நாள் ஒன்றிற்கு எறியப்படுகின்றன. 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு.

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன.

இத்தனைக்கும் இந்தப் பகுதிதான் இந்தப் புவியின் அழகிய சூழல் இருக்கும் பகுதி என கருதப்படுகிறது.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் எனும் சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.

பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்ல பனிபொழிவில் ரப்பர் மற்றும் ஃபைபர் துகள்களும் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

எப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?

ஸ்வால்பார்ட் தீவில் உள்ள பனியை சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஜெர்மனி ஆல்ஃபர்ட் வெகனர் மையத்தில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட துகள்கள் அதிகளவில் இருந்துள்ளன.

துகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் உள்ளதால் இவை எங்கிருந்து வந்தன என்பதை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தாவர செல்லுலோஸ் மற்றும் விலங்கின் மெல்லிய முடி ஆகியவை இந்த பனிதுகள்களில் இருந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரப்பர் டையர், வார்னிஷ், பெயிண்ட் ஆகியவற்றின் துகள்களும் இருந்துள்ளன.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, "சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.

மேலும் அவர், "இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு மனித உடலில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. நாம் சூழலியலை காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார் அவர்.

 

ஆர்க்டிக் பெருங்கடலுக்கு பிளாஸ்டிக் மாசு சென்றது எப்படி?

இதற்கு முன்பே சீனா, இரான், பாரீஸ் பகுதியில் இதுபோல பிளாஸ்டிக் துகள்கள் விழுந்துள்ளன.

காற்றில் பறந்து வளிமண்டலத்தில் கலந்து ஆர்க்டிக் பகுதியை இந்த பிளாஸ்டிக் துகள்கள் அடைந்திருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

https://www.bbc.com/tamil/science-49355021

Link to comment
Share on other sites

  • 1 month later...

பிளாஸ்டிக்குக்கான மாற்று - நீடிக்கும் சிக்கல்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/83207/பிளாஸ்டிக்குக்கான-மாற்று---நீடிக்கும்-சிக்கல்

Link to comment
Share on other sites

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்

பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .

நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக  இருக்கிறார்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.

Tamil_News_large_2384776.jpg

இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.

https://www.virakesari.lk/article/66627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

Link to comment
Share on other sites

45 minutes ago, suvy said:

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

உண்மைதான் சுவி. இதை செய்யாவிட்டால் மீன்களே இல்லாமல் போய்விடலாம். அது இல்லை என்றால், அதிகம் பாதிக்கப்படுவது உலகின் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களே. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி - ராமதாஸ்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்ததால் அரிசி கொடுக்கும் திட்டம் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ராமதாஸ், மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/87438/2-கிலோ-பிளாஸ்டிக்-கழிவுகளைகொடுப்போருக்கு-ஒரு-கிலோஅரிசி---ராமதாஸ்

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. சனத்தொகை நெருக்கம் கூடிய இந்திய மாநிலங்களில் இவ்வாறான முன்னெடுப்புகள் அவசியம். 

நல்ல பகிர்வு அம்பனை. 😊

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு

பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஐவோரி கோஸ்ட் (Ivory Coast ) பகுதியில் சிறிய செயற்கை தீவை உருவாக்கியுள்ளார்.

 படகு தொழில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்ற எரிக் பேக்கர் என்பவர், அங்கு பிளாஸ்டிக் பாட்டீல்கள் போன்ற கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டார்.

பின்னர் அவற்றை சேகரித்து, நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார்.

அந்த தீவுக்கு வாரத்துக்கு சுமார் 300 பேர் வருவதால் எரிக் பேக்கருக்கு போதிய லாபமும் கிடைக்கிறது.

https://www.polimernews.com/dnews/89730/பிளாஸ்டிக்-கழிவுகளைகொண்டு-செயற்கை-தீவு

 

French entrepreneur makes island from 700,000 plastic bottles

A French entrepreneur has made an island of plastic waste in Ivory Coast. The island consists of 700,000 plastic bottles. There is a hotel on the island where guests can stay. franse-ondernemer-maakt-eiland-van-700000-plastic-flessen.jpg

https://www.tellerreport.com/life/2019-11-21---french-entrepreneur-makes-island-from-700-000-plastic-bottles-.HJYGMG7VhB.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.