Jump to content

நெகிழி [பிளாஸ்டிக்]


Recommended Posts

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.

மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

  1. பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
  2. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.
  3. நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
  4. நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
  5. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

 

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்

  • பிளாஸ்டிக் பைகள்        (100-1000 ஆண்டுகள்)
  • பஞ்சுக் கழிவுகள்          (1-5 மாதங்கள்)
  • காகிதம்                  (2-5 மாதங்கள்)
  • உல்லன் சாக்ஸ்          (1-5ஆண்டுகள்)
  • டெட்ரா பேக்குகள்         (5ஆண்டுகள்)
  • தோல் காலணி            (25-40 ஆண்டுகள்)
  • டயபர் நாப்கின்            (500-800 ஆண்டுகள்)

மறுசுழற்சி மறுசுழற்சி என்பதை பொருளாதார வலுவுடன் இணைப்பதன் மூலம் நெகிழியை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். 

# 1 :  இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் தம்பதியர் நிறுவியதுதான் அக்ஷார் ஃபோரம் பள்ளி. இந்தப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை கொடுத்து மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை கொண்டு, மாணவர்கள் ‘பசுமை செங்கற்களை‘ செய்கிறார்கள். பள்ளிப்படிப்பை தொடரும் அதேவேளையில் வருவாய் ஈட்டும் வழியையும் இந்த பள்ளி காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/india-48485645

 

#2 பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

 

Link to comment
Share on other sites

பிளாஸ்டிக் தவிர்ப்போம் "சிறப்பு குழந்தைகள்" விழிப்புணர்வு ஓட்டம்

https://www.youtube.com/watch?time_continue=68&v=_rZukiSMNII

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

அம்பனை என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய சமுதாயத்திற்கு தலையிடியாக இருக்கப்போவது இந்த பிளாஸ்ரிக் பொருட்களே.
 எமது மூதாதையர்களும் நாங்களும் உபயோகப்படுத்திய சணல் சாக்கு பைகளையும் கடுதாசி பைகளையும் சூழல் பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடங்களிலும்  பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

அம்பனை என நினைக்கிறேன்

நீங்கள் எழுதியதுதான் சரி.....! இருந்தாலும் அவரை அம்பானி என்று சொல்வதை கூட உங்களுக்கு பொறுக்கவில்லை. பொறாமை......!   😄

Link to comment
Share on other sites

மகளிர்  மட்டும்  தொழில்புரியும் நெகிழி மீள்சுழற்சி தொழில் வாய்ப்பு 

இவை போன்ற முதலீடுகளை புலப்பெயர் உறவுகள் தாயக மக்களுக்கு அமைத்து உதவலாம். 

குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.

மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.

மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நெகிழி - இதை மீளாக்கம் செய்து பாடசாலை பிள்ளைகளுக்கான மேசைகள் வாங்குகளை செய்யும் பொறியியலாளர்  

q1-37.jpg

 

q2-39-768x1024.jpg

https://www.readersportaltoday.net/2019/02/20/filipino-engineer-recycles-plastic-garbage-and-made-it-into-school-chairs/?fbclid=IwAR2qneudCSNbuGgUPKvmaZcobU-m8QXX612mXDk03iqIqZnpJw2ZqlWVytI

Link to comment
Share on other sites

பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு சப்பாத்திக் கள்ளியால் தீர்வு சொல்லும் பெண்

சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பை மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை நீங்கள் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் போது.... நமக்கு மட்டும் பாதிப்புகள் இல்லை. 
மற்ற எல்லா உயிர்களும் உள்ளது. 

Link to comment
Share on other sites

நெகிழி அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

59682616_2359056400820686_45143166230410

 

நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

 

777.jpg

 

அத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

65.jpg

6.jpg

https://www.virakesari.lk/article/58720

Link to comment
Share on other sites

இந்தியாவில் எறியப்படும் நெகிழிகளை கொண்டு உருவாக்கப்படும் காலணிகள் 
இந்தியாவில் இரண்டு மில்லியன்கள் தண்ணீர் நெகிழிகள் நாள் ஒன்றிற்கு எறியப்படுகின்றன. 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு.

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன.

இத்தனைக்கும் இந்தப் பகுதிதான் இந்தப் புவியின் அழகிய சூழல் இருக்கும் பகுதி என கருதப்படுகிறது.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் எனும் சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.

பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்ல பனிபொழிவில் ரப்பர் மற்றும் ஃபைபர் துகள்களும் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

எப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?

ஸ்வால்பார்ட் தீவில் உள்ள பனியை சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஜெர்மனி ஆல்ஃபர்ட் வெகனர் மையத்தில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட துகள்கள் அதிகளவில் இருந்துள்ளன.

துகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் உள்ளதால் இவை எங்கிருந்து வந்தன என்பதை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தாவர செல்லுலோஸ் மற்றும் விலங்கின் மெல்லிய முடி ஆகியவை இந்த பனிதுகள்களில் இருந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரப்பர் டையர், வார்னிஷ், பெயிண்ட் ஆகியவற்றின் துகள்களும் இருந்துள்ளன.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, "சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.

மேலும் அவர், "இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு மனித உடலில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. நாம் சூழலியலை காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார் அவர்.

 

ஆர்க்டிக் பெருங்கடலுக்கு பிளாஸ்டிக் மாசு சென்றது எப்படி?

இதற்கு முன்பே சீனா, இரான், பாரீஸ் பகுதியில் இதுபோல பிளாஸ்டிக் துகள்கள் விழுந்துள்ளன.

காற்றில் பறந்து வளிமண்டலத்தில் கலந்து ஆர்க்டிக் பகுதியை இந்த பிளாஸ்டிக் துகள்கள் அடைந்திருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

https://www.bbc.com/tamil/science-49355021

Link to comment
Share on other sites

  • 1 month later...

பிளாஸ்டிக்குக்கான மாற்று - நீடிக்கும் சிக்கல்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/83207/பிளாஸ்டிக்குக்கான-மாற்று---நீடிக்கும்-சிக்கல்

Link to comment
Share on other sites

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்

பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .

நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக  இருக்கிறார்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.

Tamil_News_large_2384776.jpg

இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.

https://www.virakesari.lk/article/66627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

Link to comment
Share on other sites

45 minutes ago, suvy said:

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

உண்மைதான் சுவி. இதை செய்யாவிட்டால் மீன்களே இல்லாமல் போய்விடலாம். அது இல்லை என்றால், அதிகம் பாதிக்கப்படுவது உலகின் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களே. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி - ராமதாஸ்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்ததால் அரிசி கொடுக்கும் திட்டம் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ராமதாஸ், மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/87438/2-கிலோ-பிளாஸ்டிக்-கழிவுகளைகொடுப்போருக்கு-ஒரு-கிலோஅரிசி---ராமதாஸ்

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. சனத்தொகை நெருக்கம் கூடிய இந்திய மாநிலங்களில் இவ்வாறான முன்னெடுப்புகள் அவசியம். 

நல்ல பகிர்வு அம்பனை. 😊

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு

பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஐவோரி கோஸ்ட் (Ivory Coast ) பகுதியில் சிறிய செயற்கை தீவை உருவாக்கியுள்ளார்.

 படகு தொழில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்ற எரிக் பேக்கர் என்பவர், அங்கு பிளாஸ்டிக் பாட்டீல்கள் போன்ற கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டார்.

பின்னர் அவற்றை சேகரித்து, நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார்.

அந்த தீவுக்கு வாரத்துக்கு சுமார் 300 பேர் வருவதால் எரிக் பேக்கருக்கு போதிய லாபமும் கிடைக்கிறது.

https://www.polimernews.com/dnews/89730/பிளாஸ்டிக்-கழிவுகளைகொண்டு-செயற்கை-தீவு

 

French entrepreneur makes island from 700,000 plastic bottles

A French entrepreneur has made an island of plastic waste in Ivory Coast. The island consists of 700,000 plastic bottles. There is a hotel on the island where guests can stay. franse-ondernemer-maakt-eiland-van-700000-plastic-flessen.jpg

https://www.tellerreport.com/life/2019-11-21---french-entrepreneur-makes-island-from-700-000-plastic-bottles-.HJYGMG7VhB.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.