Jump to content

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Risignation.jpg

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  அலரி மாளிகையில் இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 )உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்.

இந்நிலையிலேயே தற்போது நாட்டின் அரசியல் விவகாரம் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/57375

 

Link to comment
Share on other sites

போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது என்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் 2016இல் தெரிவித்திருந்தார்.

இன்றைய நிலையில், தமிழ் பேசும் மக்கள் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சகல முஸ்லீம்களும் தண்டிக்கப்பட வேண்டும் எனவோ இல்லை சிங்கள இனவாத அரசு செய்யும் குற்றங்களை ஆதரிக்கவோ மாட்டார்கள்.

ஆனால், முஸ்லீம் தலைவர்கள் தமிழர் தலைமையுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே சிங்கள பௌத்த சிந்தாத்தத்தில் இருந்து நாம் மீள முடியும். இல்லையேல் நாம் இரண்டு சிறுபான்மை இனமும் அழிந்தேவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா

 
முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா

முன்னதாக, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

"இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வேண்டியும் நான் ராஜிநாமா செய்துள்ளேன்" என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம், இந்த ராஜிநாமா மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிபிசியிடம் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா Image caption ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ மற்றும் எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ட்விட்டர் தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

அமைச்சர் ரிசாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை ஆளுநர் ராஜிநாமா

இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பில் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

அத்துடன், அத்துரெலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி தலதா மாளிகைக்கு அருகில் சென்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குறித்த அரசியல்வாதிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் காலக்கேடு விதித்தார்.

இந்த நிலையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி, கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி நகரை சேர்ந்த வர்த்தகர்கள், தேரர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவடைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48497343

Link to comment
Share on other sites

61696328_507476089790609_511547975519331

 

இருபத்திஒன்று கையொப்பங்களை கண்டு பல சிங்களவர்கள் எழுப்பும் கேள்வி : எவ்வாறு இவ்வளவு அமைச்சர்கள் உருவெடுத்தார்கள்?

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

.....முஸ்லீம் தலைவர்கள் தமிழர் தலைமையுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே சிங்கள பௌத்த சிந்தாத்தத்தில் இருந்து நாம் மீள முடியும். இல்லையேல் நாம் இரண்டு சிறுபான்மை இனமும் அழிந்தேவிடுவோம்.

தீர்க்கமான கருத்து சகோ,ஆனால் இதை உணரும் ஆற்றலும் திறமையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லையே.அவர்களின் முயற்சி ஒன்றுதான் அதாகப்பட்டது தமிழரைஏறி மிதித்து மேலாகச்சென்று தம்மையும் தமது இனத்தையும் அபிவிருத்தி செய்வது.

Link to comment
Share on other sites

சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், பௌத்த மத அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது.

இன, மதம், குல பேதங்களால் மக்களிடையே முரண்பாடுகள் உருவாகின. இதனால், பொருளாதாரரீதியிலும் வீழ்ச்சியந்தது இலங்கை.

ஒரு காலகட்டத்தில் சிங்கபூரை இலங்கைபோல் மாற்றுவேன் என அந்நாட்டு பிரதமர் லீ குவான் அறிவித்திருந்தார். ஆனால், இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?

பண்டா, செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றிருக்காது. தமிழ் மக்களும் தனிநாடு வேண்டுமென கோரியிருக்கமாட்டார்கள். பிக்குகள் சிலர் போர்க்கொடி தூக்கியதாலேயே உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டிய நிலை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது. அவர் இறுதியில் ஒரு பௌத்த பிக்குவால் கொல்லப்பட்டார். இதன் விளைவு பாரதூரமாக அமையும் என பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறியது போலவே உள்நாட்டு போர் தலைதூக்கியது.

நகத்தால் கிள்ளியெறிந்து தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினையை, அடிப்படைவாதிகளே போர்க்களத்தை நோக்கி நகர்த்தினர். இதனால் 30 ஆண்டுகள் இன்னல்களை எதிர்கொண்டோம். எமது இன்னல்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பங்கெடுக்கவில்லை, நடுநிலைமையும்  வகிக்கவில்லை. 

இன்று, சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லீம்களை குறிவைக்கிறார்கள்.

எமது தலைவர்கள் முன்னாள் இரண்டு தெரிவுகள் உள்ளன. உண்மையின் பக்கம் நிற்பது, அடுத்தது சிங்கள பேரினவாதத்துடன் இணைவது. 

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், பௌத்த மத அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது.

என்று இலங்கையில் புத்தபிக்குகளின் அரச ஆதிக்கம் உடைந்து, அரசானது பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் செயல்படத் தொடங்குகிறதோ, அன்றுதான் மொழிப் பிரச்சனையில் தொடங்கி, இலங்கை மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதவெறியும் அடங்கி, ஒரு புதுயுகம் மலர வழியேற்படும். அனைத்து மதத்தினரதும் மதக் கோட்பாடுகளும் இலங்கை அரசின் சட்டங்களை மீறாமலே கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினால்... ஆசியாவில் மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்திலேயே இலங்கை ஒரு சொர்க்கபுரியாக விளங்கும்.!  

Link to comment
Share on other sites

5 hours ago, Paanch said:

என்று இலங்கையில் புத்தபிக்குகளின் அரச ஆதிக்கம் உடைந்து, அரசானது பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் செயல்படத் தொடங்குகிறதோ, அன்றுதான் மொழிப் பிரச்சனையில் தொடங்கி, இலங்கை மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதவெறியும் அடங்கி, ஒரு புதுயுகம் மலர வழியேற்படும். அனைத்து மதத்தினரதும் மதக் கோட்பாடுகளும் இலங்கை அரசின் சட்டங்களை மீறாமலே கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினால்... ஆசியாவில் மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்திலேயே இலங்கை ஒரு சொர்க்கபுரியாக விளங்கும்.!  

 

நீங்கள் சொன்னது நடக்க சாத்தியம்  மிக குறைவு. மாறாக இலங்கை மூன்றாக பிரிய கூடிய சாத்தியம் தான் கூட. அது ஒரு அரசியல் பொறிமுறை ஊடக நடக்கலாம் (ஈராக்கில் அரசியல் சாசனத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படட  குர்திஷ் சுயநிர்வாக கட்டமைப்பு ). எல்லா சமூகங்களும் முன்னேற இதுதான் சிறந்த வழி . 

தமிழ் பேசும் முஸ்லிம்களும் நாங்களும் ஒன்று தான் என்று கற்பனை  செய்து அவர்களும் நாங்களும் ஒன்றாக ஒரு அலகின் கீழ் வாழலாம் என்று நினைத்தால் ஒருவரும் முன்னேறமாட்டார்கள். எங்கள்  இரு இனமும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலும்  அப்பாவி முஸ்லிம்கள் மீது நடக்கிற வன்முறைகளை நாங்களும் அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையிலும் மாத்திரம் எங்களுக்கும் அவர்களும் இடையில் ஒற்றுமை இன்று துளிர்விடுகிறது. ஆனால் இந்த அனுதாபபும் அரசியல் வாதிகளின் கருத்துக்களும் நிரந்தர ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பது ஒருவித அங்கலாய்ப்பு மட்டுமே. 

உலகளாவிய இஸ்லாமிய சித்தாந்தத்திலும், சவூதி வகாபி ஆதரவில் நடக்கும் மன்னர் ஆட்சி மற்றும் பலஸ்தீன-இஸ்ராயீல் பிணக்கிலும் மாற்றம் வரும் வரை பிரச்சினைகள் தொடர சாத்தியங்கள் தான் கூட. என்னை பொறுத்தவரையில் பிரச்சினைகள் இன்னும் கூர்மையடைய கூடிய வாய்ப்புகள் தான் அதிகம். தமிழரை பொறுத்தவரையில் முஸ்லீம் பெரும்பான்மை பிளவு இலங்கை இதுவரை தனது அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் கட்டமைப்பு பற்றி சர்வதேச அளவில் வைத்திருந்த பிம்பத்தை உடைக்க இன்னொரு வாய்ப்பை தந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனம் உட்பட பல அராபிய சக்திகளை தன் பக்கம் இழுத்து தன் பக்க அநியாயங்களை நியாயங்களாக இந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் ஊடக இலங்கை செய்துவந்துள்ளது. இன்று அங்கு முஸ்லிம்களுக்கு நடக்கிற விடயங்கள் இந்த அநியாயங்களை நியாயங்களாக படம்காட்டி இலங்கையின் சிறுபான்மையினரின் பாதுகாப்பை தகுந்த அரசியல் கட்டமைப்பு ஊடக உறுதிப்படுத்த தவறியதன் பின் விளைவே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த கடுப்பான உண்மையை புறம் தள்ளி நாம் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டு இருப்பதாக தான் எனக்குப்படுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தான் மட்டும் வாழ பல மெலோடிகளை வைத்திருக்கின்றது. அது தமிழர் முஸ்லீம் என்று மாற்றி மாற்றி வாசிக்கின்றது. இன்று முஸ்லீம்களை நோக்கி வாசிக்கின்றது

Link to comment
Share on other sites

முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக, கட்சி சார்பற்ற,  பதவி விலகிய, ஒற்றுமை பாரட்டத்தக்கது. 

அது, தமிழர் தரப்பில் இன்றும் இல்லை. 

நாளை சிங்கள இனவாதிகள் கட்சிரீதியாக கூட்டுச்சேரவும், உள்ளூராக மதிக்கவும் கூட முஸ்லீம் தலைவர்களுடன்  முனைவார்கள். முஸ்லீம் தலைவர்களும் தங்கள் மக்களை பல்வேறு வழிகளிலும் வளர்த்துவிடுவார்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக. . 

தமிழர் தலைமைகளை தொடர்ந்தும் பிரித்தே ஏமாற்றுவார்கள், சிங்கள இனவாதிகள்.

எமது அரசியலில் பலவேறு தலைமைகள் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், எமது மக்களுக்கா என்றும் ஒன்று சேராமல் இருப்பதே எமது ஊழ்வினை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மிகத்தெளிவான செய்தியொன்றை சிங்களத்திற்கு சொல்லியுள்ளார்கள் வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் பேசிப்பேசி வாழ்க்கையை ஒட்டுபவர்கள் அல்ல என்பதே அச்செய்தி , ஒரு காலத்தில் போர் என்றால் போர் சமாதாமனம் என்றால் சமாதானம் என்று சிங்களம் அலட்சியப்படுத்தியபோது எமது அரசியல் தலமைகள் பதவி ஆசைக்காக பாராளுமன்ற ஆசனங்களை விடமால் எமது மக்களின் உரிமைகளை அன்றும் இன்றும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும் , மறு வளமாக முஸ்லீம்களின் ஒற்றுமை உணர்வு சகல தரப்புகளிலும் காணப்படுகிறது இவர்களை தமிழரின் போராட்டத்தை அழித்தது போல் அழிக்கமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது , முஸ்லீம்களின் போர் அறைகூவலாகவே இந்த இராஜினாமா உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மிகத்தெளிவான செய்தியொன்றை சிங்களத்திற்கு சொல்லியுள்ளார்கள் வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் பேசிப்பேசி வாழ்க்கையை ஒட்டுபவர்கள் அல்ல என்பதே அச்செய்தி , ஒரு காலத்தில் போர் என்றால் போர் சமாதாமனம் என்றால் சமாதானம் என்று சிங்களம் அலட்சியப்படுத்தியபோது எமது அரசியல் தலமைகள் பதவி ஆசைக்காக பாராளுமன்ற ஆசனங்களை விடமால் எமது மக்களின் உரிமைகளை அன்றும் இன்றும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும் , மறு வளமாக முஸ்லீம்களின் ஒற்றுமை உணர்வு சகல தரப்புகளிலும் காணப்படுகிறது இவர்களை தமிழரின் போராட்டத்தை அழித்தது போல் அழிக்கமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது , முஸ்லீம்களின் போர் அறைகூவலாகவே இந்த இராஜினாமா உள்ளது.

சிங்களத்தின்....அடுத்த  தெரிவு.....அனேகமாக.....இராணுவ ஆட்சியை நோக்கியதாகவே இருக்கும்!

அந்தத் தெரிவை....எடுக்கும் போது.....போராட்டங்களை...நசுக்க வேண்டிய தேவையே வராது!

இதுவே...எமக்கான தீர்வையும் நோக்கிய பயணத்தின்.....ஆரம்பமாகவும்....அமையும் ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக, கட்சி சார்பற்ற,  பதவி விலகிய, ஒற்றுமை பாரட்டத்தக்கது. 

அது, தமிழர் தரப்பில் இன்றும் இல்லை. 

நாளை சிங்கள இனவாதிகள் கட்சிரீதியாக கூட்டுச்சேரவும், உள்ளூராக மதிக்கவும் கூட முஸ்லீம் தலைவர்களுடன்  முனைவார்கள். முஸ்லீம் தலைவர்களும் தங்கள் மக்களை பல்வேறு வழிகளிலும் வளர்த்துவிடுவார்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக. . 

தமிழர் தலைமைகளை தொடர்ந்தும் பிரித்தே ஏமாற்றுவார்கள், சிங்கள இனவாதிகள்.

எமது அரசியலில் பலவேறு தலைமைகள் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், எமது மக்களுக்கா என்றும் ஒன்று சேராமல் இருப்பதே எமது ஊழ்வினை.  

இவர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் 
குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் 
குண்டு வெடிப்பு வழக்கு வரும்போது பல சிக்கல் வர இருக்கிறது 

இவர்கள் இப்படியே இருந்தால் இவர்களில் சிலர் சிறைபோவது உறுதி 
ஆதலால் இப்படி ஒரு நாடகம் போடுகிறார்கள் இதன் மூலம் அரசை 
பணிய வைக்க பார்க்கிறார்கள் ....

சிங்களவன் இவர்களை வென்றவன் என்பதுதான் இனி சிக்கலானது. 

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சிங்களம் தான் மட்டும் வாழ பல மெலோடிகளை வைத்திருக்கின்றது. அது தமிழர் முஸ்லீம் என்று மாற்றி மாற்றி வாசிக்கின்றது. இன்று முஸ்லீம்களை நோக்கி வாசிக்கின்றது

நாங்கள் தமிழர் தலைமைகளை விமர்ச்சித்தோம், எங்களை நாங்களே விமர்ச்சித்தோமா.....? இன்றும் சிந்துநதியின் மிசை நிலவினிலே பாடலை தமிமினம் ரசிக்கத்தான் செய்கிறது. அதன் உள்ளார்த்தம் என்ன? சிங்களமா மெலோடி வைத்தது.? எந்தத் தமிழனாவது... நான் உட்பட வெகுண்டெழவில்லையே ஏன்.? எனக்கே புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப எந்த அரசு அதிகாரத்தில் இருக்கு.....இவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கினம் ......பா.உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவார்களா?

Link to comment
Share on other sites

மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆம், இதன் மூலம் இஸ்லாமிய இனத்தின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கியுள்ளது சிங்களம்.  

https://en.wikipedia.org/wiki/A._J._M._Muzammil
     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஜக்கம்மா ...ஜெய் ஜெய் ஜக்கம்மா !!!!
நல்ல காலம் பொறந்திருக்கு ...நல்ல காலம் பொறந்திருக்கு 🐃 🐃 🐃 🐃

ஆபத்தான அப்துல்லா ...அன்பழகனாகவும் 
முக்காடு முனீரா ... மீனாட்சியாகவும் 
துறந்து போன தங்கள் ஆணிவேரை 
தேடி வரும் காலம் வரும் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் சொல்லுறீங்க.. அங்கால பார்ளிமன்ரில போய் வாயால விளாசிட்டும் இருக்கினமே. எதுதான் உண்மையோ.. இல்ல வழமையை விட.. அடிக்கடி.. பிரட்டிப் பிரட்டிப் போடினமோ..?! 😂

Link to comment
Share on other sites

சுயநலம் கருதாத அரசியலே விடுதலையைப் பெற்றுத் தரும்!

கட்சி பேதங்கடந்து, தேர்தல் அரசியல் பற்றி இம்மியும் கருதாமல் முஸ்லிம் இனம் என்ற ஒரே இலக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட விதத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தமிழ் மக்கள் வன்னிப் போரில் கொன்றொழிக்கப்பட்டபோதுகூட எங்கள் அரசி யல்வாதிகள் ஒன்றுபடவில்லை.  இனியும் ஒற்றுமைப்படப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.

மிகப்பெரும் தியாகத்தை நடத்திய வீர இளைஞர்கள் பிறந்து வாழ்ந்த தமிழினத்தில் இன்று துரோகிகள் சொந்த இலாபத்துக்காகவும் பதவி ஆசையாலும் எங்கள் இனத்தை விற்றுவிட்டதுதான் மிகப்பெரிய வேதனை.
 
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதில்கூட ஒருமித்துத் தீர்மானம் எடுக்க முடியாத தமிழ் அரசியல்வாதிகளை இன்னும் நம் தமிழினம் நம்புகிறது என்றால் யார்தான் என்ன செய்ய முடியும். 
 
தமிழ் மக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரவோடு இரவாக ஆளு நர் அலுவலகத்தில் கையளிக்கின்ற கயமை நடந்தது. எப்படி இருக்கிறது எங்கள் இனத்தின் ஒற்றுமை?
 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யில் இருந்து விலகுவேன் என்று கூறுகின்ற திராணி சம்பந்தரிடம் இருந்ததா? அல்லது இதையாவது எடுத்துக்கூறும் துணிவேனும் அறம் உரைப்போரிடம் இருந்ததா?

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் அது ஒரு வரலாறாகி இருக்கும்.
 
ஆனால் நடந்தது என்ன? நீங்கள் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியாது என்று கூறி சபாநாயகர் துரத்துமளவுக்கு நிலைமை வந்தது என்றால், இனிமேலாவது; இனத்துக் காக ஒன்றுபடுவது எப்படி என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
 
குறிப்பு : வலம்புரி பத்திரிக்கை ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து 
Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

இப்படியும் சொல்லுறீங்க.. அங்கால பார்ளிமன்ரில போய் வாயால விளாசிட்டும் இருக்கினமே. எதுதான் உண்மையோ.. இல்ல வழமையை விட.. அடிக்கடி.. பிரட்டிப் பிரட்டிப் போடினமோ..?! 😂

அவர்கள் பதவியிலிருந்து தான் விலகினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து விலகவில்லை. தாம் இந்த அரசாங்கத்துக்கு பக்க பலமாக தொடர்ந்து இருப்போம் என்றும் ஹக்கீம் கூறியிருந்தார்.

இன்னொரு தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றோ மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்க மாட்டோம் என்றோ கூட யாரும் சத்தியம் செய்யவில்லை. 

Link to comment
Share on other sites

பொதுபல சேனாவை பெயர் சொல்லாமல் 'பயங்கரவாதிகள்' என றிசாத் ஆவேசத்துடன் குறிப்பிடுகின்றார். ஏன் பெயர் சொல்ல தயங்குகிறார்? என்ற கேள்வி எழுகின்றது. 

இந்த பேச்சில் தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்காவும் இவர் குரல் கொடுக்காமல் போனது வருத்தமானதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிஸ்புல்லாவின் அறக் கருத்துக்கள்.
இதை ஒரு தமிழன்  பேசி இருந்தால்,  அவன்  இனவாதி.  இதை எந்த வகையில் எடுத்து கொள்வது...??

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

கிஸ்புல்லாவின் அறக் கருத்துக்கள்.
இதை ஒரு தமிழன்  பேசி இருந்தால்,  அவன்  இனவாதி.  இதை எந்த வகையில் எடுத்து கொள்வது...??

அவர் வார்த்தைக்கு வார்த்தை புலிகளை இழுத்து கதைத்ததால் அவர் இனவாதி இல்லை. 😀

புலிகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று இஸ்லாமியர்களையும் உள்ளடக்கி தான் சொன்னார்கள். இவர் முஸ்லிம் ஒருவர் கிழக்கிற்கு முதலமைச்சராக வந்தால் பின் புலிகள் வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று சொல்லுவினமோ என்று கேட்டிருக்கிறார். 

தமிழர்கள் வேறு முஸ்லிம்கள் வேறு என்று இவர்கள் போட்ட கூத்து இப்ப இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்ற பெயரில் வந்து நிற்கிறது. சாதாரண சிங்கள மக்கள் முஸ்லிம்களை சமூக வலைத்தளங்களில் நல்லா வெளுத்து வாங்கினம்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 9/11 தாக்குதலுக்கு முன் 80% ஆன பயங்கரவாத தற்கொலைக்குண்டு தாக்குதல்களை தமிழ் புலிகள் நடத்தியிருந்தார்கள், ஆனால் அதை இந்துக்களின் தாக்குதல் என கூறவில்லை, அது உண்மை, மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என லூசுத்தனமா கூற (அவருக்கும் புலிகளை இழுக்காவிட்டால் செமிக்காது போல) அதை சில முஸ்லிம்கள் தூக்கிப்பிடித்து பகிர, சிங்களவர்கள், புலிகளின் தாக்குதல்களுக்கு அரசியல் காரணம் இருந்தது, அவர்கள் மதம் சார்ந்து இயங்கவில்லை, அவர்களில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் இருந்தார்கள் என எழுதுகிறார்கள். 😎

அதை பொறுக்கேலாமல் முஸ்லிம்கள் அவர்களுக்கெதிரா வேறு தம்மை நல்லவர்களாக காட்டி எழுதுகிறார்கள். இது ஒரு உதாரணம். 😀

F12BC848-6B42-4EB6-A9F5-B9E1D4F7D4B4.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.