Jump to content

இன்றைய உலகின் உலக யுத்தம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

US ஏன் சீனாவை பார்த்து அதன் வரலாற்றில் இல்லாத கிலி கொள்கிறது என்பதற்கு ஓர் சிறு சான்று.

 

Link to comment
Share on other sites

1995இல் நுழைந்த சீனாவின் வளர்ச்சி - அதிரவைக்கின்றது !

நாளைக்கே சீன மொழியை கற்பதை ஆரம்பிப்பது நன்று !

Link to comment
Share on other sites

இன்னும் முப்பது ஆண்டுகளில் சீனா தான் உலகின் பொருளாதார வல்லரசு? 
அதை தடுக்க முயலும் அமேரிக்கா ?? 

 

Link to comment
Share on other sites

இந்த நான்கு தரவுகளும், எவ்வாறு தொடரும் வர்த்தக சண்டை உலக வர்த்தகத்தினை பாதிக்கின்றது என பார்க்கலாம். 

USChinaTariffs.1568625437731.png

USChinaTrade.1568625455138.PNG

USChinaIndustries.1568625470184.PNG

USChinaSoybeans.1568625485996.PNG

Link to comment
Share on other sites

 

'வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும்' - ஐ.நா.வில் சீனாவை விளாசிய ட்ரம்ப்!

 

சீனாவின் வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும், இனி அதற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஐ.நா.சபையில் பேசியுள்ளார். 

வல்லரசு நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே, வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அரசு கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்தது. 

இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தி வருவதாலும், பொருட்களுக்கு தடை விதிப்பதாலும் மற்ற நாடுகளின் சந்தைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. 

இந்த நிலையில் ஐ.நா.சபையில் உரையாற்றிய ட்ரம்ப் சீனாவை விளாசித் தள்ளினார். ஐ.நா.வில் அவர் பேசியதாவது-

கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் சீனா செய்து வந்த மோசடியை பொறுத்துக் கொண்டோம். அதனை கண்டுகொள்ளவில்லை; அல்லது அதனை ஊக்கப்படுத்தினோம் என்றே வைத்துக்கொள்ளலாம்.

உலகமயமாக்கல் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது சொந்த நாடுகளின் நலன்களை சற்று கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் அந்த நாட்கள் எல்லாம் முடிந்து விட்டன. ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை மிகுந்த கவனத்துடன் கண்காணிப்போம். ஹாங்காங்கின் ஜனநாயகத்தை அமெரிக்கா பாதுகாக்கும்.

இவ்வாறு ட்ரம்ப் கூறினார். 

https://www.ndtv.com/tamil/us-china-trade-war-donald-trump-at-un-on-us-china-trade-says-time-for-tolerating-chinas-trade-abuses-2106583?pfrom=home-topscroll

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 10ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீன துணை பிரதமர் லியு ஹீ  அமெரிக்கா செல்ல உள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்க தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனாவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்முடைய வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24  டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=531840

Link to comment
Share on other sites

Trump tweets he will meet with Chinese vice premier on Friday

In a tweet, Trump said: “Big day of negotiations with China. They want to make a deal, but do I? I meet with the Vice Premier tomorrow at The White House.”

Trump’s tweet was the latest headline after a slew of conflicting reports overnight sent investors for a wild ride.

https://www.cnbc.com/2019/10/09/us-futures-drop-after-chinese-media-reports-that-us-and-china-have-made-no-progress-in-trade-talks.html

Link to comment
Share on other sites

US and China reached a partial trade deal - Report

Bloomberg News reported the two sides struck a partial trade deal, adding this could set up a truce to the ongoing U.S.-China trade war. China would agree to some agricultural concessions while the U.S. would agree to some tariff relief.

To be sure, the two countries have been close to reaching a deal before and then failed to strike an accord. Talks broke down in May, which resulted in China letting its currency weaken versus the dollar.

https://www.cnbc.com/2019/10/10/stock-futures-open-higher-after-optimistic-trump-comments-on-us-china-trade.html

Link to comment
Share on other sites

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.


நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6 சதவீதமாக குறைந்துள்ளது. சீனா நடப்பு நிதியாண்டுக்கு 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவுக்கே பொருளாதார வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இருப்பினும், மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் மிகக்குறைவான காலாண்டு பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடர்ப்பாடுகளும், சவால்களும் உள்ளன என்றும், இருப்பினும் தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நிலைத்தன்மையோடு இருப்பதோடு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் சீனாவின் தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/85374/அமெரிக்காவுடனான-வர்த்தகப்போரின்-விளைவாக-சீனாவின்பொருளாதார-வளர்ச்சி-6சதவீதமாக-சரிவு

  • China released third-quarter GDP figures on Friday showing the economy grew 6.0% from a year ago.
  • Analysts polled by Reuters had expected China’s third-quarter GDP to grow 6.1%.
  • The third-quarter GDP growth was the slowest since the first quarter of 1992, according to Reuters.

China’s economy is likely to slow further, say experts

Economists are pessimistic about the immediate outlook for China even though there were some bright spots in the September data released on Friday, with retail sales up 7.8% from a year ago and industrial output rising 5.8%. Fixed asset investment rose 5.4% from January to September.

https://www.cnbc.com/2019/10/18/china-q3-gdp-beijing-posts-economic-data-amid-trade-war-with-us.html

Link to comment
Share on other sites

 

14 hours ago, ampanai said:

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு புதிய இடம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன் பின்னர் இந்த இடம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தேர்வு செய்ய சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

https://www.polimernews.com/dnews/86970/சீனாவுடனான-வர்த்தகஒப்பந்தத்திற்கு-புதிய-இடம்-அதிபர்-டிரம்ப்-அறிவிப்பு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைக்க ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரியைக் குறைக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரியைக் குறைக்கவேண்டும் என சீனா விரும்புவதாகவும், அதற்கு தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். சிறிதளவாவது வரியைக் குறைக்குமாறு சீனா எரிர்பார்ப்பதாகவும், அது நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

https://www.polimernews.com/dnews/88114/சீனாவின்-இறக்குமதிப்பொருட்களுக்கான-வரிகுறைக்கப்பட்டதாக-வெளியானதகவலுக்கு-அதிபர்-டிரம்ப்மறுப்பு

Link to comment
Share on other sites

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுறுமா?

பரஸ்பரம் இறக்குமதி வரிகளை குறைப்பது தொடர்பாக, அமெரிக்காவோடு, உள்ளார்ந்த ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக, சீனா தெரிவித்திருக்கிறது.

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும், போட்டிப்போட்டுக் கொண்டு, பரஸ்பரம் இறக்குமதி வரிகளை உயர்த்தியதால், இருநாடுகளிடையே வர்த்தகப் போர் மூண்டது. இதனால், இருநாடுகளின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீன வர்த்தகத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங்((Gao Feng)), முதற்கட்டமாக, பரஸ்பரம் விதித்துள்ள கூடுதல் வரிகளை திரும்ப பெறுவது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவும், சீனாவும் இணைந்து, இறக்குமதி வரிகளை, யாருக்கும் பாதகமின்றி நிர்ணயிப்பதுத் தொடர்பாக, உள்ளார்ந்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாகவும், சீன வர்த்தகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

https://www.polimernews.com/dnews/88771/அமெரிக்கா-சீனா-இடையிலானவர்த்தகப்-போர்-முடிவுறுமா?

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில சோயாபீன்ஸ் வகைகள், பன்றி இறைச்சிக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.
உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்கா -சீனா இடையே கடந்த ஒரு ஆண்டாக வர்த்தக போர் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக இரு நாடுகளும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு பொருட்களுக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதர்களுக்கு கட்டுப்பாடு கடந்த அக்டோபரில் சீன தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோன்ற நடவடிக்கையை தற்போது சீனா மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாக ஹூவா சுனிங் கூறுகையில், “சீனாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடந்த அக்டோபரில் சீன தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட வாஷிங்டன்னின் முடிவுக்கான எதிர்நடவடிக்கையாகும். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்யவும், அது தொடர்பான விதிகளை திரும்ப பெறவும் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்றார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546696

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.

வர்த்தக போர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளும் அண்மையில் பேச்சு நடத்தின. இதன்பின்னர் பிரச்னைக்கு தீர்வு காண முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு எடுத்தன.

இதன்படி வெள்ளை மாளிகையில்  வரும் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சீனாவுடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட இருப்பதாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், 2ஆவது கட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த சீனாவுக்கு தாம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

https://www.polimernews.com/dnews/95212/சீனாவுடன்-அமெரிக்கா-வரும்15ஆம்-தேதி-முதற்கட்ட-வர்த்தகஒப்பந்தம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.