Jump to content

இந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு


Recommended Posts

இன்று தாய்த்தமிழகம் தொடக்கம் உலகம் முழுவதும் தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாத நிலையில் தமிழ் மொழியை நாம் திணிப்பதில் தான் நாம் வெற்றிபெற முடியும். 

இதில் தமிழ் இசையமைப்பாளர்கள் பங்கு,  திரைப்படம் மற்றும் அதன் தொன்மை பற்றை நாம் அனைவரும் பேச வேண்டிய தேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. 

#1 : இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். 

தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும்.

உலகிலேயே சுத்தமான மொழி தமிழ்தான், இந்தி அல்ல என்று கூறியிருப்பதுதான். இவரது பேச்சால் இந்தித் திரையுலகிலும் கூட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடிகர் பெயர் ஆயுஷ்மான் குரானா. இந்திப் படங்களில் நடித்து வருபவர். சொந்த ஊர் சண்டிகர். இந்தித் திணிப்புக்கு எதிராக இவர் வலுவான குரல் கொடுத்துள்ளார். அதில் தான் இந்தித் திணிப்பு தவறானது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தி பேசுவோர் அனைவரும் நிதானமாக யோசிக்க வேண்டும். பேசாதவர்களிடம் போய் பேசு பேசு என்று கட்டாயப்படுத்துவது தவறு என்றும் அவர் தலையில் குட்டியுள்ளார்.

"உங்களது மொழியை விரும்புவது நல்ல விஷயம்தான். அந்த மொழி உலகப் புகழ் பெற வேண்டும் என்று நினைப்பதும் கூட நல்ல விஷயம்தான். ஆனால் நம்ம மொழி மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் தவறானது மட்டுமல்ல. அது ஆபத்தானதும் கூட. இந்தியை கொண்டு போய் எப்படி தென் இந்தியாவிலும், வட கிழக்கு இந்தியாவிலும் நாம் கட்டாயப்படுத்த முடியும். அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத மொழி இந்தி.

இப்போதைய நமது முன்னுரிமை நாட்டை வளப்படுத்துவது, மேம்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறி ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு போய் இன்னொரு கலாச்சாரத்தில் திணிப்பதாக இருக்கக் கூடாது. காரணம் இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்களின் கூட்டமைப்பு. அது வலுவாக இருப்பதால்தான் இந்தியாவும் வலுவாக இருக்கிறது. அதை சீர்குலைக்க முயற்சிப்பதும், ஆதிக்கத்தை செலுத்த நினைப்பதும் அந்த அமைப்பை குலைத்து விடும். அது ஜனநாயகமும் அல்ல.

மொழி கலப்பு தேசபக்தியுடன் நெஞ்சு நிமிர்த்தி பேசும் இந்தி மொழி விரும்பிகளில் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பெர்சிய, அரபு மொழிகளின் தாக்கத்தால் உருவான மொழிதான் இந்தி. உண்மையிலேயே நீங்கள் சுத்தமான மொழி பேச வேண்டுமானால் திராவிட மொழிகளைத்தான் நீங்கள் பேச வேண்டும். அவைதான் 100 சதவீத இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிக் கலப்பில்லாதவை அவைதான். 

 


 

#2 : தமிழை மற்றை மாநிலங்களில் கல்வி கற்க வைக்க முதலமைச்சர் கோரிக்கை !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, பà¯à®©à¯à®©à®à¯, à®à®°à¯

Link to comment
Share on other sites

#3: தனது குறுஞ்செய்தி ஊடாக ஏ ஆர் ரகுமான் வாழ்த்திய வேற்றுமொழி பாடகர் 

1135056979456479232

 

Link to comment
Share on other sites

"அழகிய தீர்வு"

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் அழகிய தீர்வு என்று கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை வரைவு திருத்தப்பட்டது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ரஹ்மானின் இந்த ட்வீட் சுமார் 16,000 முறை மீள்பகிர்வு செய்யப்பட்டிருந்தது.

à®à¯à®µà®¿à®à¯à®à®°à¯ à®à®µà®°à®¤à¯ பதிவ௠@arrahman: à®à®´à®à®¿à®¯ தà¯à®°à¯à®µà¯ ð¹ð®ð³   âதமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®¿ à®à®à¯à®à®¾à®¯à®®à®²à¯à®²... திரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯ வரà¯à®µà¯!â

Link to comment
Share on other sites

நான் இந்தி கற்கிறேன்; வடமாநிலத்தவர்கள் தமிழ் கற்பார்களா? - மக்கள் கருத்து என்ன?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார வசதிகளே இல்லாத ஊர்களும் இருக்கும் அதே வேளை, உலகின் எந்தப் பகுதியில் இருந்து கொண்டும் உங்கள் வீட்டின் மின் விளக்குகள் விசிறிகளை அணைக்கவும் ஏற்றவும் கூடியதான தொழில் நுட்பம் எல்லா இடமும் வந்து விட்டது.


இதே மாதிரி   வெவ்வேறு  மொழிப் பாவனைகளின்  முக்கியத்துவம் வருங்காலங்களில் அருகிப் போகக் கூடிய தன்மை தென்படுகிறது - இன்னொரு 50  வருடங்களுக்கிடையில் ??।   சொந்த மொழியில் இருந்து வேறு மொழிகளுக்கு ரியல் Time இல் தொடர்பு கொள்வதற்கான தொழில் நுட்பம்.
அது வரையும் மொழிப் பிரச்சினையை வைத்து ஆட்டையைப் போடுகின்றவர்கள் இன்னும் நல்லா ஆட்டையைப் போடுங்கோ 

இப்படியான விடங்களில் எங்கேயே இந்தியா முந்தி விடுமோ என்ற பயமும்  ராஜீவின் மரணத்துக்கு ஒரு காரணம் என்றொரு கருதுகோள்  உண்டு.

சீனர்களை அவர்களால் மணிப்புலட் பண்ணமுடியவில்லை என தோன்றுகிறது.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ampanai said:

#2 : தமிழை மற்றை மாநிலங்களில் கல்வி கற்க வைக்க முதலமைச்சர் கோரிக்கை !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, பà¯à®©à¯à®©à®à¯, à®à®°à¯

Edappadi-Palaniswami.jpg

தமிழை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்கக் கோரும் டுவீட்டை நீக்கினார் முதல்வர்

தமிழ் மொழியை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பதிவை அவர் தற்போது நீக்கியுள்ளார்.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது. இந்தப் புதிய வரைவுத் திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், “தமிழை 3 ஆவது மொழியாக்குங்கள். பிற மாநிலங்களில் தமிழை 3 ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.

அவ்வாறு விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும்.” என அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பிரதமர் மோடியை நேரடியாக கோடிட்டு பதிவிட்டிருந்த காரணத்தால், அதை நீக்குமாறு முதல்வருக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

http://athavannews.com/தமிழை-பிற-மாநிலங்களில்-வ/

############   #############  ############    ############

61874055_2381302208587400_7805148207645720576_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent-frt3-2.xx&oh=177bb4c2b8db894fde3cd11f0c7ad538&oe=5D91DCC4

Link to comment
Share on other sites

முடிவையெடுக்கவும் எடுத்த முடிவை முன்னேட்டுக்கவும் முடிந்தவன் தலைவனாகிறான்.

மற்றையவன் தொண்டனாகிறான்.

இங்கே ஐயா எடப்பாடி, அந்த செய்தியை நீக்கியதன் மூலம்.மோடிக்கு தொண்டனாககிவிட்டார். 
 

Link to comment
Share on other sites

தமிழ் படித்து என்ன செய்ய முடியும்?

இது தமிழர் மீது தொடுக்கப்படும் வினா. இந்த வினா புறத்திலிருந்தும் அகத்திலிருந்தும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டும் கொள்ளாதவரிடமிருந்தும் கேட்கின்ற வினா. எதற்காக இந்த வினா அத்தகையயோர் உள்ளத்தில் எழுகின்றன?

தமிழ் படிப்பு என்பதற்கும் தமிழில் படிப்பு என்பதற்குமுள்ள வேறுபாட்டை குழப்பி இந்த வினாவினை எழுப்புகின்றனர். தமிழில் படிப்பு என்பதைதான் சுருக்கி தமிழ் படித்தால் பயனில்லை என்கின்றனர். முழுக்க முழுக்க தமிழ் இலக்கண இலக்கிய படிப்பு மட்டுமே தமிழ் படிப்பு எனப்படும். இத்தகைய படிப்பு இன்றைய கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் வாய்ப்பில்லை. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து இளம்,முது,ஆய்வு பட்டப்படிப்பு மூலம்தான் அதனை நிறைவு செய்ய இயலும். இதுதான் தமிழ் படிப்பு என்ற வினாவிற்கான விடையாகும். எனவே அந்த வினா சூழ்ச்சி நிறைந்தது. அது தமிழருக்கு எதிரானது.

பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை எல்லாரும் தமிழ் மட்டுமே படிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை தமிழில் படிக்கவேண்டும் என்றுதான் சொல்கின்றோம். ஏன்? கல்வி ஆய்வாளர், சமூக அறிவியல்படி சிந்தித்து செயல்படுபவர், குழந்தையின் நலன் அதன் உளவியலாளர், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கல்வி எத்தகைய நடைமுறைகளில் உள்ளன என்பன போன்று பலவற்றை புரிந்துகொண்ட அறிவார்ந்த நிபுணர் ஆகியோர் முன்வைக்கும் கருத்தின் வாயிலாக தமிழ் வழிக்கல்விதான் பின்பற்ற வேண்டும் எனக் கோருகின்றோம்.

பள்ளிக்கூட ஒன்றாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது வேறு மொழி கூடவே கணக்கு, சமூக அறிவியல் ஆகிய பாடங்கைப் படிக்கும் மாணவர் தேர்ச்சி பெற்று அடுத்து இரண்டாம் வகுப்புக்குதான் செல்ல முடியும். இதனால் வேலைக்கோ வெளிநாட்டிற்கோ செல்ல முடியாது. பிறகு எதற்காக பள்ளிக்கல்வியில் இத்தனை மொழிகள் கற்கவேண்டும். அந்த குழந்தை எளிதில் பிறமொழிகளைக் கற்று என்ன செய்ய முடியும். மாறாக நாம் அந்த குழந்தையின் முதுகில் மட்டுமல்ல மூளையிலும் கூடுதலான சுமையை ஏற்றுகின்றோம். இவை குழந்தையைச் சோர்வடைய செய்கின்றன. சிந்திக்கும் திறனை இழந்துவிடுகின்றது.

எப்படி என்று ஒரு விளகத்தின் மூலம் நாம் புரிந்து கொள்வோம். சான்றாக ஆங்கில வகுப்பில் அதன் எழுத்தில் ஒன்றான "ஓ(O)" எனப் பாடம் எடுப்போம். அடுத்து வரும் கணித வகுப்பில் அதே வடிவத்தை சுழி(O) எனச் சொல்லி கொடுப்போம். வேறு வகுப்பில் அதனை வட்டம் எனக் கற்பிப்போம். மொழிப்பாடத்திலும் இப்படித்தான் தமிழில் "அ" என்பதனை இந்தியிலுள்ள "அ" ஒலிப்பு ஒன்றானாலும் வரிவடிவம் வேறாகும். இவ்விரு மொழிகளில் முதல் எழுத்து ஒலிக்கும் முறையிலிருந்து முற்றிலுமாக மாறாக ஆங்கிலத்தில் "ஏ(A)" என ஒலிக்கும் போதும் உண்மையில் குழந்தையின் மனம் குழம்பி சோர்வடைகின்றது. ஆனால் அதேசமயம் தான் நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கும் மொழியைங ஆர்வத்தோடு எழுதி படிக்கும் பொழுது அந்த குழந்தையின் மனதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அதற்கு மூளையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகின்றன. கற்பதை எளிதாகி விரைவுபடுத்துகின்றது. புரிதல் தன்மையை உருவாக்கி சிந்தனையும் தூண்டுகின்றது. இதன்மூலம் படைப்பாற்றல் வளர்கின்றது.

ஆகவே நாம் பள்ளிக்கல்வி காலங்களில் தமிழில் மட்டுமே படிக்கவேண்டும் என உரத்து கூறுகின்றோம். கல்லூரி காலங்களில் வேறு ஒரு அயல் மொழியை விருப்பத்தின் பெயரில் அல்லது தேவையின் பொருட்டு படிப்பதில் தவிர்க்க வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் சிக்கலாக இந்தியா இருக்கின்றது என்றால் கடந்த 72 ஆண்டுகளாக அச்சிக்கல்களுக்கு தீர்வு காண இந்தியாவிற்குள் முயன்றோம் முடியவில்லை காரணம் இந்தியாவிற்கு விருப்பமில்லை.

ஆகையால், தீர்வு காணாது என்ற உண்மை உணர்ந்து இனி இந்தியாவோடு சேர்ந்திருப்பதில் நமக்கு நன்மையை விட தீமையே என்பதால் காலங்கடத்தாமல் இந்தியாவிலிருந்து விலகி தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே சிறப்பாகும்.

(முகநூல் பக்கத்தில் இருந்து இரு கருத்துறவு )

Link to comment
Share on other sites

1965... தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு!

தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு 1965. இனத்தின் விழியாம் மொழியைக் காக்க, உயிராம் உயிரைத் தந்த ஆண்டு.

‘‘நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட பயங்கரச் சிக்கலில், சென்னை ரத்தத் தடாகத்தில் குதித்து எழுந்தது. பெரியவர்களின் கூற்றுப்படி 1942 ஆகஸ்ட் புரட்சியை விட இது கடுமையாக இருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நகரத்தில் மட்டும் இருந்தது... மொழிக் கிளர்ச்சி நகர எல்லையைத் தாண்டி கிராமத்துக்கும் பரவியது” என்று அன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை எழுதியது.

1965 ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை 50 நாட்கள் தமிழகம் அனலாய் அச்சம் தரத்தக்க மாநிலமாய் மாறிப்போனது. தமிழகத்தில் அப்போது இருந்த 33 ஆயிரம் காவலர்கள் போதாது என்று ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவையும் போதாது என்பதால் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்தார்கள். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடக்க ராணுவம் முதன்முதலாக தமிழகத்துக்குள் வந்தது.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 70 இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட 5 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள். 25 அஞ்சல் நிலையங்கள் தாக்கப்பட்டன. 5 அஞ்சல் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. 25 புகை வண்டி நிலையங்கள் தாக்கப்பட்டன. 10 புகை வண்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. 5 அரசு அலுவலகங்களும், ஒரு தொலைபேசி நிலையமும் கொளுத்தப்பட்டன. 5 காவல் நிலையங்கள், ஒரு பஞ்சாலை, ஒரு திரையரங்கம் தீ வைக்கப்பட்டன.

பிப்ரவரி 10 முதல் மார்ச் 2-ம் நாள் வரை தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஒருவார காலத்துக்கு சென்னையில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை. மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. ஒருவார காலத்துக்கு தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கீழப்பளுவூர் சின்னச்சாமி, சென்னை சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து ஆகியோர் மொழி காக்க தீ குளித்தும், நஞ்சு அருந்தியும் உயிர் மாய்த்தார்கள். இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம் அடைந்தார்கள். மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் புத்திரசிகாமணி, தனது துப்பாக்கியைவைத்து தபால் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்தைப் பார்த்து சுட்டுத்தள்ளினார்.

சென்னை - மாநிலக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, மதுரை - தியாகராயர் கல்லூரி, தியாகராயர் பொறியியல் கல்லூரி, திருச்சி - நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, கோவை - நிர்மலா கல்லூரி, அவினாசிலிங்கம் குடும்ப இயல் கல்லூரி, நெல்லை - செயின்ட் சேவியர்ஸ், செயின்ட் ஜான்ஸ், மதிதா இந்துக் கல்லூரி, சிதம்பரம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி- அழகப்பா பல்கலைக்கழகம், நாகர்கோவில் - இந்துக் கல்லூரி, தஞ்சை - கரந்தை புலவர் கல்லூரி, பேரூர் - தமிழ்க் கல்லூரி, ராஜபாளையம் - ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர் - செந்தில்குமார நாடார் கல்லூரி, திண்டுக்கல் சி.டி.என் கல்லூரி - என தமிழ்நாட்டு மாணவச் சமுதாயம் அனைத்தும் தமிழுக்காகக் களத்தில் நின்றது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களும் புற்றீசல்போலப் புறப்பட்டார்கள். பிப்ரவரி 13-ம் நாள் மட்டும் தமிழகத்தில் 1,028 பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

உலகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், இதனை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டும்தான் பார்த்தார். அன்று முக்கியக் கட்சியாக வளர்ந்து கொண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதலால் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று நினைத்தார். ‘‘இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று அறிவித்தார். மாணவர்கள் மிகச் சாதாரணமாக நடத்திய முதல்கட்ட ஊர்வலங்களின் மீது காங்கிரஸ்காரர்கள் சிலர் செருப்பு வீசியதும், கல் கொண்டு தாக்கியதும் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாக மாறும் என்பதை பழுத்த அனுபவஸ்தரான பக்தவத்சலத்தால் உணர முடியவில்லை.

அது தி.மு.க நடத்திய போராட்டம் அல்ல... பிப்ரவரி 6-ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசிய அண்ணா, ‘‘போராட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. எனவே, போராட்டத்தை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இதனை மாணவர் தலைவர்கள் ஏற்கவில்லை. அண்ணா சொன்னதற்குப் பிறகு தான் போராட்டமே தீவிரம் பெற்றது. போராட்டத்தை முன்னெடுத்த தஞ்சை எல்.கணேசனும், விருதுநகர் சீனிவாசனும்தான் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். மீர்சா, ராமன் போன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். போராட்டத் தலைவரான ரவிச்சந்திரன் கட்சி சார்பற்றவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஊர்வலம் சென்றதால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தைத் தூண்டியதாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்ததாக மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். நெல்லை மதிதா இந்துக் கல்லூரி துணை முதல்வர் கே.அருணாசல கவுண்டர் கைதுசெய்யப்பட்டார். ஏராளமான தமிழாசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1937-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தியைப் புகுத்தி கொந்தளிப்பைத் தொடங்கி வைத்த மூதறிஞர் ராஜாஜி, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கும் அணியில் இருந்தார். திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய ராஜாஜி, ‘‘வடநாட்டவர் கையில் உள்ள மத்திய அரசு, இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல்செய்தால் இந்தியத் துணைக் கண்டம் 15 பகுதிகளாகத் தனித்துப் பிரிந்துவிடும். இதுவரை எனக்குப் பிரிவினை எண்ணம் துளிர்விடவில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் அரசு நடவடிக்கைகளால் அப்படியொரு பிரிவினை உணர்வு என் உள்ளத்தில் தோன்றி வளர்ந்து இருக்கிறது” என்று பேசினார். ‘‘இந்தித் திணிப்பு என்பது புத்திசாலித்தனமற்றதும் அநியாயமானதும் பாரபட்சமுள்ளதும், அடக்குமுறையைக் கொண்டதுமான ஒரு நடவடிக்கை” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டில் தமிழகத்தின் மிக முக்கியத் தொழிலதிபரான கருமுத்து தியாகராஜ செட்டியாரும், புகழ்பெற்ற அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த கி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் ஆகியோர் தங்கள் பதவியைவிட்டு விலகினார்கள். தமிழக நிலைமைகளைப் பார்த்து உண்ணாவிரதம் உட்கார்ந்த வினோபா, ‘‘ஆங்கிலம் வேண்டுவோர் மீது இந்தி திணிக்கப்படவும் கூடாது; இந்தி விரும்புவோர் மீது ஆங்கிலம் திணிக்கப்படவும் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் பக்தவத்சலம், இது தி.மு.க-வின் தூண்டுதல் என்று மட்டுமே பார்த்து கலைஞர் கருணாநிதியை கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் வைத்தார். தி.மு.க-வின் தூண்டுதலால் மாணவர்கள் காலித்தனம் செய்வதாகத் தந்தை பெரியார் குற்றம்சாட்டினார். ‘இது இந்தி எதிர்ப்பு அல்ல; காங்கிரஸ் எதிர்ப்பு’ என்று அவர் விளக்கம் அளித்தார். தி.மு.க மீதான கோபம் பெரியாரை இப்படிப் பேசவைத்தது. தி.மு.க-வையும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் தடை செய்யச் சொன்னார் பெரியார். ராஜாஜி கேட்டுக் கொண்ட பிறகும், அண்ணா வேண்டுகோள் வைத்த பிறகும் போராட்டம் நிறுத்தப்படவில்லை என்பதை தந்தை பெரியாரும், பெரியவர் பக்தவத்சலமும் உணரவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் போராட்டமாக இதை நினைத்தார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியில் 343 முதல் 351 வரையிலான விதிகள் ஆட்சி மொழி (official Language) பற்றிப் பேசுகிறது. இதன்படி மத்திய அரசின் ஆட்சி மொழியாக தேவநாகரி லிபியைக் கொண்ட இந்தி இருக்கும். இந்தியை முழுமையாகக் கொண்டு வருவதற்கு முன்னதாக 15 ஆண்டு காலத்துக்கு ஆங்கிலத்தை நிர்வாக நடவடிக்கைகளுக்கு (For all official purposes of union) ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியலைப்புச் சட்டம். 15 ஆண்டுகள் என்றால், 1965 வரை என்று பொருள்.

இந்தி ஆட்சிமொழி என்பதால், அதனை வளர்த்தெடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்தது. அப்போதெல்லாம் கடும் எதிர்ப்பைத் தமிழகம் தெரிவித்தது. ‘‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே நீடிக்கும்” என்று பிரதமர் நேரு கூறினார். ‘‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். அதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் (1959 ஆகஸ்ட் 7) பிரதமர் நேரு கூறினார். நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் ஆன லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்த உறுதி மொழி மீறப்பட்டது. இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழி என்று சொல்லாமல், இந்தி ஆட்சி மொழி, ஆங்கிலமும் அத்தோடு இருக்கலாம் என்று ஆட்சிமொழி ஆட்சிக் குழு கூறியது. இதன்படி 1965 ஜனவரி 25 முதல் இந்தி ஆட்சிமொழி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என்பதல்ல, மாணவர்களது பயம். இந்தி படிக்காதவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் பயந்தார்கள். அதனால்தான் இதனை தங்கள் வாழ்க்கைப் பிரச்னையாக, எதிர்காலப் பிரச்னையாக மாணவர்கள் பார்த்தார்கள்.

ஆக்ஸ்போர்டு எழுத்தாளர்களில் ஒருவரான மைக்கேல் பிரீச்சர் (Michael Brecher) எழுதினார். ‘‘1965-ல் இந்திய மக்கள்தொகையில் 8 சதவிகித அளவே உள்ள தமிழர்கள், அனைத்திந்திய வேலைவாய்ப்புகளில் 18 சதவிகித இடங்களைப் பெற்றிருந்தனர். இதற்கும் மேலாக மிக உயர்ந்த பதவிகளையும் வகித்து வந்தனர். இவ்வளவும் ஆங்கிலத்தில் அவர்களுக்குள்ள திறமையினால் தான் கிடைத்தது. இந்தி ஆட்சிமொழியானால், ஆங்கிலம் படித்த தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்” என்று எழுதினார்.

இந்திபேசும் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதையும் உலகம் முழுக்கச் சென்று தமிழர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தியாகிகளின் தியாகம் உணரலாம்.

- ப.திருமாவேலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தி பேசறவங்கள் இந்திதான் பேசுறாங்களா ? அரைவாசிக்கு மேல் அங்கிலம் தான் இந்தகேட்டில் அடுத்த மொழிக்காரனுக்கு என்று  கிளம்பிட்டான்கள் .

Link to comment
Share on other sites

தமிழ் என்பது "உணர்வு" இந்த ஒரு வார்த்தைக்கு கோடி வணக்கங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் சொல்கிறது பொதுவாக சராசரியாக  மனித மூளையின் பத்து விகிதமான கொள்ளளவே மனிதப் பதர்களால்    பயன்படுத்தப் படுகின்றது என்று

பன்மொழி அறிவுள்ள மனிதப் பதர்களுக்கு வாழ்நாளின் பின்பகுதியில் ஞாபக மறதி  நோய்  வரும் சாத்திய பாடுகள் குறைவு என்றும் சொல்கிறார்கள்.

உலகத்தில் நாங்கள் தான் பெரும்பான்மை என தற்போது கொக்கரித்துக் கொண்டிருக்கும் இலங்கைச் சோனகர் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ( சமய புலத்திற்கு வெளியே ) அராபிய மொழியை பெரும் எடுப்பில் பயன்படுத்திக் கொண்டு வருவது தெரிய வந்திருக்கிறது.

நாலு வயதில் திருகோணமலையில் இருந்த போழ்தில் எது வித கட்டாயமும் இன்றி எனது தந்தையார் எனக்கு சிங்களம் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருந்தார். அதன் நன்மையினை வாழ்நாளின் எத்தனையோ பகுதிகளில் உணர்ந்திருந்தேன் .

நான் தமிழ்நாட்டு பெற்றோராக இருந்தால் எனது குழந்தைகளுக்கு கட்டாயம் இந்தி படிப்பிப்பேன்.  தற்-சோம்பேறித்தனம் கொள்ளாமல் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர்கள் புலமை அடைவதனை உறுதி செய்து கொள்வேன்.

இளமையில் கல் ..

மற்றும் கவிஞரின் கூற்று : புத்தம் புதிய கலைகள் - பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே - அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவதில்லை - அவைசொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61914935_10219452634009802_5513961100019

Link to comment
Share on other sites

இன்றைய தலைமுறையினர் பலரும் இந்தியை அவர்களே விரும்பி படிக்கும் நிலைக்கு மாறிவிட்டார்கள்.

ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தி என்பது இன்றைக்கும் அரசியல்தான். இப்படி அரசியலாக மாற்றப்பட்டதற்கான காரணம். ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட அரசியல்வாதிகளால் ஏன் இந்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ?, என்ற இன்றைய தலைமுறையினரின் கேள்விக்கும் பதிலளிக்கும் விதமாக பேரறிஞர் அண்ணாவின் பேச்சு இருக்கிறது. இதனை முழுமையாக கேட்டு அன்றைய அரசியலையும் இன்றைய சூழலையும் புரிந்துகொள்ளலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே காமெடி என்னவென்றால் மொத்த இந்தியாவிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் புள்ளிவிவரங்களின்படி தோராயமாக நாற்பது சதவீதம் மட்டுமே. ஆனால் வடக்கத்தியானுகளைக் கேட்டால் நாட்டில் இந்தி பேசுபவர்கள் எணிக்கை 85% சதவீததிற்கும் மேல் என கதைவிடுவார்கள். அதனால் இந்தி தேசிய மொழியாம் (அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாவிட்டாலும்).

Link to comment
Share on other sites

On 6/7/2019 at 1:48 PM, ampanai said:

1965... தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு!

தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு 1965. இனத்தின் விழியாம் மொழியைக் காக்க, உயிராம் உயிரைத் தந்த ஆண்டு.

‘‘நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட பயங்கரச் சிக்கலில், சென்னை ரத்தத் தடாகத்தில் குதித்து எழுந்தது. பெரியவர்களின் கூற்றுப்படி 1942 ஆகஸ்ட் புரட்சியை விட இது கடுமையாக இருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நகரத்தில் மட்டும் இருந்தது... மொழிக் கிளர்ச்சி நகர எல்லையைத் தாண்டி கிராமத்துக்கும் பரவியது” என்று அன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை எழுதியது.

1965 ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை 50 நாட்கள் தமிழகம் அனலாய் அச்சம் தரத்தக்க மாநிலமாய் மாறிப்போனது. தமிழகத்தில் அப்போது இருந்த 33 ஆயிரம் காவலர்கள் போதாது என்று ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவையும் போதாது என்பதால் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்தார்கள். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடக்க ராணுவம் முதன்முதலாக தமிழகத்துக்குள் வந்தது.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 70 இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட 5 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள். 25 அஞ்சல் நிலையங்கள் தாக்கப்பட்டன. 5 அஞ்சல் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. 25 புகை வண்டி நிலையங்கள் தாக்கப்பட்டன. 10 புகை வண்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. 5 அரசு அலுவலகங்களும், ஒரு தொலைபேசி நிலையமும் கொளுத்தப்பட்டன. 5 காவல் நிலையங்கள், ஒரு பஞ்சாலை, ஒரு திரையரங்கம் தீ வைக்கப்பட்டன.

பிப்ரவரி 10 முதல் மார்ச் 2-ம் நாள் வரை தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஒருவார காலத்துக்கு சென்னையில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை. மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. ஒருவார காலத்துக்கு தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கீழப்பளுவூர் சின்னச்சாமி, சென்னை சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து ஆகியோர் மொழி காக்க தீ குளித்தும், நஞ்சு அருந்தியும் உயிர் மாய்த்தார்கள். இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம் அடைந்தார்கள். மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் புத்திரசிகாமணி, தனது துப்பாக்கியைவைத்து தபால் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்தைப் பார்த்து சுட்டுத்தள்ளினார்.

சென்னை - மாநிலக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, மதுரை - தியாகராயர் கல்லூரி, தியாகராயர் பொறியியல் கல்லூரி, திருச்சி - நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, கோவை - நிர்மலா கல்லூரி, அவினாசிலிங்கம் குடும்ப இயல் கல்லூரி, நெல்லை - செயின்ட் சேவியர்ஸ், செயின்ட் ஜான்ஸ், மதிதா இந்துக் கல்லூரி, சிதம்பரம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி- அழகப்பா பல்கலைக்கழகம், நாகர்கோவில் - இந்துக் கல்லூரி, தஞ்சை - கரந்தை புலவர் கல்லூரி, பேரூர் - தமிழ்க் கல்லூரி, ராஜபாளையம் - ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர் - செந்தில்குமார நாடார் கல்லூரி, திண்டுக்கல் சி.டி.என் கல்லூரி - என தமிழ்நாட்டு மாணவச் சமுதாயம் அனைத்தும் தமிழுக்காகக் களத்தில் நின்றது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களும் புற்றீசல்போலப் புறப்பட்டார்கள். பிப்ரவரி 13-ம் நாள் மட்டும் தமிழகத்தில் 1,028 பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

உலகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், இதனை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டும்தான் பார்த்தார். அன்று முக்கியக் கட்சியாக வளர்ந்து கொண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதலால் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று நினைத்தார். ‘‘இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று அறிவித்தார். மாணவர்கள் மிகச் சாதாரணமாக நடத்திய முதல்கட்ட ஊர்வலங்களின் மீது காங்கிரஸ்காரர்கள் சிலர் செருப்பு வீசியதும், கல் கொண்டு தாக்கியதும் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாக மாறும் என்பதை பழுத்த அனுபவஸ்தரான பக்தவத்சலத்தால் உணர முடியவில்லை.

அது தி.மு.க நடத்திய போராட்டம் அல்ல... பிப்ரவரி 6-ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசிய அண்ணா, ‘‘போராட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. எனவே, போராட்டத்தை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இதனை மாணவர் தலைவர்கள் ஏற்கவில்லை. அண்ணா சொன்னதற்குப் பிறகு தான் போராட்டமே தீவிரம் பெற்றது. போராட்டத்தை முன்னெடுத்த தஞ்சை எல்.கணேசனும், விருதுநகர் சீனிவாசனும்தான் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். மீர்சா, ராமன் போன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். போராட்டத் தலைவரான ரவிச்சந்திரன் கட்சி சார்பற்றவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஊர்வலம் சென்றதால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தைத் தூண்டியதாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்ததாக மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். நெல்லை மதிதா இந்துக் கல்லூரி துணை முதல்வர் கே.அருணாசல கவுண்டர் கைதுசெய்யப்பட்டார். ஏராளமான தமிழாசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1937-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தியைப் புகுத்தி கொந்தளிப்பைத் தொடங்கி வைத்த மூதறிஞர் ராஜாஜி, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கும் அணியில் இருந்தார். திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய ராஜாஜி, ‘‘வடநாட்டவர் கையில் உள்ள மத்திய அரசு, இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல்செய்தால் இந்தியத் துணைக் கண்டம் 15 பகுதிகளாகத் தனித்துப் பிரிந்துவிடும். இதுவரை எனக்குப் பிரிவினை எண்ணம் துளிர்விடவில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் அரசு நடவடிக்கைகளால் அப்படியொரு பிரிவினை உணர்வு என் உள்ளத்தில் தோன்றி வளர்ந்து இருக்கிறது” என்று பேசினார். ‘‘இந்தித் திணிப்பு என்பது புத்திசாலித்தனமற்றதும் அநியாயமானதும் பாரபட்சமுள்ளதும், அடக்குமுறையைக் கொண்டதுமான ஒரு நடவடிக்கை” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டில் தமிழகத்தின் மிக முக்கியத் தொழிலதிபரான கருமுத்து தியாகராஜ செட்டியாரும், புகழ்பெற்ற அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த கி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் ஆகியோர் தங்கள் பதவியைவிட்டு விலகினார்கள். தமிழக நிலைமைகளைப் பார்த்து உண்ணாவிரதம் உட்கார்ந்த வினோபா, ‘‘ஆங்கிலம் வேண்டுவோர் மீது இந்தி திணிக்கப்படவும் கூடாது; இந்தி விரும்புவோர் மீது ஆங்கிலம் திணிக்கப்படவும் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் பக்தவத்சலம், இது தி.மு.க-வின் தூண்டுதல் என்று மட்டுமே பார்த்து கலைஞர் கருணாநிதியை கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் வைத்தார். தி.மு.க-வின் தூண்டுதலால் மாணவர்கள் காலித்தனம் செய்வதாகத் தந்தை பெரியார் குற்றம்சாட்டினார். ‘இது இந்தி எதிர்ப்பு அல்ல; காங்கிரஸ் எதிர்ப்பு’ என்று அவர் விளக்கம் அளித்தார். தி.மு.க மீதான கோபம் பெரியாரை இப்படிப் பேசவைத்தது. தி.மு.க-வையும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் தடை செய்யச் சொன்னார் பெரியார். ராஜாஜி கேட்டுக் கொண்ட பிறகும், அண்ணா வேண்டுகோள் வைத்த பிறகும் போராட்டம் நிறுத்தப்படவில்லை என்பதை தந்தை பெரியாரும், பெரியவர் பக்தவத்சலமும் உணரவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் போராட்டமாக இதை நினைத்தார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியில் 343 முதல் 351 வரையிலான விதிகள் ஆட்சி மொழி (official Language) பற்றிப் பேசுகிறது. இதன்படி மத்திய அரசின் ஆட்சி மொழியாக தேவநாகரி லிபியைக் கொண்ட இந்தி இருக்கும். இந்தியை முழுமையாகக் கொண்டு வருவதற்கு முன்னதாக 15 ஆண்டு காலத்துக்கு ஆங்கிலத்தை நிர்வாக நடவடிக்கைகளுக்கு (For all official purposes of union) ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியலைப்புச் சட்டம். 15 ஆண்டுகள் என்றால், 1965 வரை என்று பொருள்.

இந்தி ஆட்சிமொழி என்பதால், அதனை வளர்த்தெடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்தது. அப்போதெல்லாம் கடும் எதிர்ப்பைத் தமிழகம் தெரிவித்தது. ‘‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே நீடிக்கும்” என்று பிரதமர் நேரு கூறினார். ‘‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். அதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் (1959 ஆகஸ்ட் 7) பிரதமர் நேரு கூறினார். நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் ஆன லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்த உறுதி மொழி மீறப்பட்டது. இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழி என்று சொல்லாமல், இந்தி ஆட்சி மொழி, ஆங்கிலமும் அத்தோடு இருக்கலாம் என்று ஆட்சிமொழி ஆட்சிக் குழு கூறியது. இதன்படி 1965 ஜனவரி 25 முதல் இந்தி ஆட்சிமொழி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என்பதல்ல, மாணவர்களது பயம். இந்தி படிக்காதவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் பயந்தார்கள். அதனால்தான் இதனை தங்கள் வாழ்க்கைப் பிரச்னையாக, எதிர்காலப் பிரச்னையாக மாணவர்கள் பார்த்தார்கள்.

ஆக்ஸ்போர்டு எழுத்தாளர்களில் ஒருவரான மைக்கேல் பிரீச்சர் (Michael Brecher) எழுதினார். ‘‘1965-ல் இந்திய மக்கள்தொகையில் 8 சதவிகித அளவே உள்ள தமிழர்கள், அனைத்திந்திய வேலைவாய்ப்புகளில் 18 சதவிகித இடங்களைப் பெற்றிருந்தனர். இதற்கும் மேலாக மிக உயர்ந்த பதவிகளையும் வகித்து வந்தனர். இவ்வளவும் ஆங்கிலத்தில் அவர்களுக்குள்ள திறமையினால் தான் கிடைத்தது. இந்தி ஆட்சிமொழியானால், ஆங்கிலம் படித்த தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்” என்று எழுதினார்.

இந்திபேசும் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதையும் உலகம் முழுக்கச் சென்று தமிழர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தியாகிகளின் தியாகம் உணரலாம்.

- ப.திருமாவேலன்

"இந்திபேசும் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதையும் உலகம் முழுக்கச் சென்று தமிழர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தியாகிகளின் தியாகம் உணரலாம்."

எழுத்தாளர் மைக்கேல் மேற்குறிப்பிட்டது உண்மைதான், ஆங்கிலம் படித்ததால் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பிற நாட்டவர்க்கு இணையாக வேலை செய்து திறமையை வளர்த்துக் கொள்கின்றனர். உலகெங்கும் கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கும் தமிழர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2019 at 4:32 AM, சாமானியன் said:

அறிவியல் சொல்கிறது பொதுவாக சராசரியாக  மனித மூளையின் பத்து விகிதமான கொள்ளளவே மனிதப் பதர்களால்    பயன்படுத்தப் படுகின்றது என்று

பன்மொழி அறிவுள்ள மனிதப் பதர்களுக்கு வாழ்நாளின் பின்பகுதியில் ஞாபக மறதி  நோய்  வரும் சாத்திய பாடுகள் குறைவு என்றும் சொல்கிறார்கள்.

உலகத்தில் நாங்கள் தான் பெரும்பான்மை என தற்போது கொக்கரித்துக் கொண்டிருக்கும் இலங்கைச் சோனகர் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ( சமய புலத்திற்கு வெளியே ) அராபிய மொழியை பெரும் எடுப்பில் பயன்படுத்திக் கொண்டு வருவது தெரிய வந்திருக்கிறது.

நாலு வயதில் திருகோணமலையில் இருந்த போழ்தில் எது வித கட்டாயமும் இன்றி எனது தந்தையார் எனக்கு சிங்களம் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருந்தார். அதன் நன்மையினை வாழ்நாளின் எத்தனையோ பகுதிகளில் உணர்ந்திருந்தேன் .

நான் தமிழ்நாட்டு பெற்றோராக இருந்தால் எனது குழந்தைகளுக்கு கட்டாயம் இந்தி படிப்பிப்பேன்.  தற்-சோம்பேறித்தனம் கொள்ளாமல் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர்கள் புலமை அடைவதனை உறுதி செய்து கொள்வேன்.

இளமையில் கல் ..

மற்றும் கவிஞரின் கூற்று : புத்தம் புதிய கலைகள் - பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே - அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவதில்லை - அவைசொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை

உங்களின் கருத்து தமிழ் வேண்டாத மொழியாகிவிட்டது போல் உள்ளது உங்களுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

உங்களின் கருத்து தமிழ் வேண்டாத மொழியாகிவிட்டது போல் உள்ளது உங்களுக்கு ?

எனது கருத்து அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டைத் தந்திருந்தால் மன்னிக்க வேண்டும்.  நிசசயமாக அப்படி இல்லை .

எனது தாயார் எவரொருவரையும் விட மேலானவர் - அதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் வந்ததில்லை அதே சமயம் வாழ்வை வெற்றிகரமாக கொண்டு செல்ல மனைவி , மகள் என வேறு பெண்மணிகளும் இணைந்திருக்க வேண்டும்    அதுவே நான் சொல்ல வந்தது.

(1) இளமையில் கல் - சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பல மொழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்   இதில் தாய் மொழி தலையாயது। இன்றைய திகதியில் புலம் பெயர் தமிழர் இதில் மிகுந்த தவறு விட்டுக் கொண்டிருக்கின்றனர்   இது (பல்  மொழி அறிவு )அவர்கள் தமது எதிர்காலத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல உதவும் பலமான காரணியொன்றாகக் அமையும்

(2) சில வகை  அறிவிலக்கியங்கள் தாய் மொழியில் அமையாதிருப்பது இயற்கை। ( எனது தாயார் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை கொண்டவரல்ல ஆனால் மிகுந்த வசீகரமும் அறிவும் கொண்டவர்) எமது அறிவு தேடல் தேவைகளுக்கு ஏற்ப உரிய பிற மொழிகளில் பாண்டித்தியம் பெறுவது வெற்றிக்கான ஒரு சூத்திரமே

(3) எந்த  வகையான  உத்தியோகத்தை கைக்கொண்டாலும் - அதில் ஒரு சந்தைமயமாக்கல் தன்மை இருக்கும்போது அது வருமானத்திலும் எதிரொலிக்கும் சந்தைமயமாக்கலை முன்னேற்றுவதில் பல் மொழி அறிவு பெரும் பங்காற்றும் ( இலங்கை சோனகர் ??)

(4) இந்தி திணிப்பிலும் இந்தி எதிர்ப்பிலும் நன்மை அடைந்தவர்கள் இரு பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமே என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்। மிக கடுமையாகப் பாதிக்கப் பட்டது தமிழ் நாட்டு மக்கள் என்பதும் அதில் அடங்கும் (சமாந்தரமான   ஒரு நோக்கில்  இலங்கை தமிழரும் இதில் விலக்கல்ல)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு  வீதமே இருக்கும் ஒரு மொழிக் குழு பதினெட்டு வீதமான வாய்ப்புகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டிருப்பது நீண்ட கால நோக்கில்  ஆரோக்கியமாக அமையாது!.    

எட்டு  வீதமே இருக்கும் அந்த  மொழிக் குழு ஒரு நீண்ட கால அடிப்படையில் மிகுதி 92% இல் கூடுதலாக இருக்கும் மொழியில் பாண்டித்தியம் பெறுவதே ,  ஆகக் குறைந்தது அந்த 18% ஐ தக்க வைத்துக் கொள்ள  உதவும்;  புற உந்துதல்கள் எதுவும் இல்லாமல் இதனை செய்து முடிப்பது  கெட்டித்தனத்தின்   பால் படும் ஒரு விடயம் .

கடந்த கால சம்பவங்களில்  இருந்து பாடம் படிக்கா விட்டால் எப்படி ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது ஒரு திறமைசாலியால் இறைவன் இருக்கிறான்  என்று பெரிய கூட்டத்தை  நம்ப வைத்த அடுத்த அரைமணி நேரத்தில் இறைவன் உலகில் இல்லை என்று தன் வாத திறமையினால் அதே கூட்டத்தை மாற்ற முடியும் உங்களுக்கு அதி திறமை இருக்கு என்மொழியை பொறுத்தவரை சுயநலமிக்கவன் 

9 hours ago, சாமானியன் said:

எட்டு  வீதமே இருக்கும் ஒரு மொழிக் குழு பதினெட்டு வீதமான வாய்ப்புகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டிருப்பது நீண்ட கால நோக்கில்  ஆரோக்கியமாக அமையாது!.    

என் மொழிக்காரன் பதினெட்டு வீதம் வாய்ப்புக்களை பெற்றால் காணாது இன்னும் கூடனும் எனும் மனதை உடையவன் காரணம் உலகில் சிறிய அளவே உள்ள யூதர்களின் கையில் உள்ள உலகையே அசைக்கும் பணபலம் அவர்கள் உங்களை போல் சிந்திக்கவில்லை .

பக்கத்து நாட்டில் மலையாளி இல்லாத மத்திய அரசின் துறை கிடையாது அவர்களும் உங்களை போல் சிந்திக்கவில்லை .

10 hours ago, சாமானியன் said:

கடந்த கால சம்பவங்களில்  இருந்து பாடம் படிக்கா விட்டால் எப்படி ?

கேட்டால்த்தான் கிடைக்கும் என்பது  நம்மவர்கள் உரிய முறையில் கேட்பது இல்லை சிங்களம் மட்டுமே சட்டம் கொண்டுவந்தவர்களை தேடவேண்டி உள்ளது முதுகு முறிந்த தமிழ் அரசியல்வாதிகளால் சிங்களம் எம்மை அடக்கியது அதை சமப்படுத்த பிரபாகரன் வரவேண்டியதாய் போயிட்டுது இப்பவும் உள்ள பணம் பொருளுக்கு சோரம் போகும்   தமிழ்  அரசியல்வாதிகளினால் தமிழரின்   எதிர்காலம் பிரச்சனையே .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

.

பக்கத்து நாட்டில் மலையாளி இல்லாத மத்திய அரசின் துறை கிடையாது அவர்களும் உங்களை போல் சிந்திக்கவில்லை .

.

 

 

மலையாளியைப் பற்றி கூகிள் பண்ணிப் பார்த்தேன் - இது வந்தது

பிழைக்கத் தெரிந்த சாமர்த்திய சாலிகள் .

Is it common for Malayalis in Kerala to speak Hindi and the regional language of Malayalam?

Is it common for Malayalis in Kerala to speak Hindi and the regional language of Malayalam?
 

I am a North Indian and I finished my under-graduate studies in Kerala. So I find myself most genuine person to answer this question.

During my four years of stay in Kerala, I traveled to numerous places in Kerala. My college was located in Trivandrum. There most of the native Keralites can understand Hindi and can speak it with a little difficulty. Same is the case in Cochin also. The situation is not significantly different when you go the outskirts. I have been to outskirts several times and I found that at least shopkeepers and auto-drivers don't face much difficulty in conversing in Hi...

(more)Loading…
 

I am a North Indian and I finished my under-graduate studies in Kerala. So I find myself most genuine person to answer this question.

During my four years of stay in Kerala, I traveled to numerous places in Kerala. My college was located in Trivandrum. There most of the native Keralites can understand Hindi and can speak it with a little difficulty. Same is the case in Cochin also. The situation is not significantly different when you go the outskirts. I have been to outskirts several times and I found that at least shopkeepers and auto-drivers don't face much difficulty in conversing in Hindi. Once I went to a remote barber shop and even the barber could speak fluent Hindi. If you augment your Hindi with few Malayalam and English words, the whole Kerala welcomes you with open arms.

There are various reasons for this:-

  • Most of the Keralites go to North India or Gulf for employment. In Gulf, Indian Pakistani and Bangladeshi diaspora generally use Hindi(Hindustani) for conversation.
  • Kerala has lot of migrant laborers from Bengal, Assam and Orissa. Although their mother-tongue is not Hindi they can understand it. So the local contractors and shop keepers interact with them in Hindi.
  • There are plenty of schools in Kerala which have CBSE or ICSE affiliations. These boards teach Hindi as part of curriculum.
  • Being a tourism hub, it is imminent for the people involved in the industry to learn Hindi and English. Since the entire state has something to offer for tourism, one can easily find people who can speak Hindi everywhere. 
  • People are fond of Bollywood movies. Bollywood movies(without dubbing) often find place in theaters. Malayalam hits are often remade in Hindi. 
  • Love for bollywood songs. 
  • Hindi soap-operas are increasingly becoming popular in the state.
  • Kerala is a known center of Sanskrit learning. All the big Universities in the state have Sanskrit department. Hindi shares plenty of words from Sanskrit, so does Malayalam. In case of Tamil, it is very different from Sanskrit. This is one of the reason why Keralites find it easier to learn Hindi than Tamilians.
  • Muslim population in Kerala prefer to use Urdu over English to communicate with other Muslims in country.

Other than these reasons I found out that there is lesser hatred against Hindi in Kerala compared to Tamilnadu. Although people in Kerala are very keen to preserve their culture and language, they don't perceive Hindi as a threat to their language. I would suggest anyone who want to explore Kerala to learn basic Malayalam. Don't worry if you are new to the state. People are very helpful and language would not be a barrier.

6.2k views · View Upvoters

    

யூதரைப் பற்றி பிறகு இரு சமயம் நேரம் வசதிப்படும் போது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மல்லுகளைப் பற்றி உயர்வாய் பேசுவதால் எழுத வேண்டியுள்ளது.

எப்படி தன் சுயத்தை இழந்து இன்னொரு மொழியை புணர்ந்து மலையாளம் உருவானது என்பது அனைவருக்கும் தெரியும்.

பல மல்லுகளின் குணாதிசயங்களை கடந்த இருபது வருடங்களாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிற அனுபத்தில் சொல்கிறேன். 

'பிழைக்க வேண்டும், ஒரு காரியத்தை அவர்களுக்கு சாதகமாக முடிக்க வேண்டுமெனில்' எந்த இழிநிலைக்கும் செல்ல தயாரக இருப்பார்கள். ஆகவே  தங்கள் சுயமிழந்த மொழியைவிட்டு இந்தியை தேசியமொழியாக மல்லுகள் ஏற்றுக்கொண்டதில் அதிசயமில்லை.

மல்லுகளிடம் கேட்டால், இந்தி என்பது 'ராஷ்ட்ரா பாஷா' என்பார்கள். இதை என்னிடம் பல மல்லுகள் சொல்லி, "உங்களுக்கு ஏன் தேசிய மொழி தெரியவில்லை..?" என கேட்பதுண்டு.

"எது இந்தியாவின் தேசிய மொழி..? இந்தியாவிற்கு தேசிய மொழி என எதுவுமே இல்லை..!" என இரண்டு மூன்று ஆதாரங்களை அவர்களின் மூஞ்சியில் வீசியவுடன், கப்சிப்பென அடங்கிவிடுவார்கள். அதன் பின் என்னிடம் இந்தி மொழியைப் பற்றி பேசுவதே இல்லை. 

"என் வேலைக்கு தேவை ஏற்பட்டால், நான் அரபி மொழியை கற்றுக்கொள்வேனே தவிர, இந்தியை அல்ல..!" என சொன்னவுடன் பதிலொன்றும் வராது. 'இன்னொரு மொழியை கற்றல்' என்பது வேலையின் தேவையை பொறுத்தது.

"உனது அடையாளம் என்ன..?" என அரபிகள் மல்லுகளிடம் கேட்க, அவர்கள், 'இந்தியன்' என்றார்கள், அதே கேள்வியை என்னிடம் கேட்டவர்கள் நான் 'தமிழன்' என்றதும் அதன்பின் யாரும் 'அடையாளம்' பற்றியோ 'மொழி' பற்றியோ யாரும் வாய்பேசுவதில்லை. இதுதான் வித்தியாசம்..!

'எப்படியும் வாழலாம்' என்பது மல்லுகளின் கொள்கை!

 'இப்படித்தான் சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும், இன அடையாளத்துடனும் வாழ வேண்டுமென்பது' தமிழரின் கொள்கை!

இதில் 'எது திறம்?' என்பது அவரவர்களின் மனநிலையை பொறுத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.