Jump to content

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !

அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது.
இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.  அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது அமெரிக்காவின் உள்வீட்டு வேலைதான் என்பதில் பிடிவாதமாக இருந்த அவர், என்னுடன் வழமைக்கு மாறாக அதிகமாகப் பேசினார். சிலவிடங்களில் மெளனம், இன்னும் சில இடங்களில் பாடமாக்கி ஒப்புவித்தது போன்ற ஆற்றொழுக்கான சாட்சிய அடுக்குகள்...இப்படி தனது சதிக் கோட்பாடிற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து விவாதித்துக்கொண்டிருந்தார். அவருடனான எனது சுவாரசியமான உரையாடலின் சில நகைச்சுவையான பதிவுகளை இங்கே எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நீர்வேலியான் said:

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

இப்படியான கனவுகளிலும் சதிக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடப்பதும் ஒருவகையான போதை தான். தம்மைத் தவிர மற்ற அனைவரும் பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இந்த உலகமே பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கனவுக்குல் மீழ்கிக் கிடப்பர்.

இப்படியானவர்களுடன் விவாதிப்பதே வீணான விடயம் என நான் விலகிச் செல்வதுண்டு. நேரம் பொன்னானது

Link to comment
Share on other sites

17 minutes ago, நிழலி said:

இப்படியான கனவுகளிலும் சதிக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடப்பதும் ஒருவகையான போதை தான். தம்மைத் தவிர மற்ற அனைவரும் பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இந்த உலகமே பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கனவுக்குல் மீழ்கிக் கிடப்பர்.

இப்படியானவர்களுடன் விவாதிப்பதே வீணான விடயம் என நான் விலகிச் செல்வதுண்டு. நேரம் பொன்னானது

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

Link to comment
Share on other sites

18 minutes ago, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

 

நன்றி
 
எனக்கு நேரம் பொன்னானது

Link to comment
Share on other sites

அடுத்த நாடுகளில் இடம்பெறும் தாக்குதல்களின் உண்மை சூத்திரதாரிகள் பற்றி அறிய சிறிதும் முயற்சி செய்யாமல் அனைத்ததையும் கொன்ஸ்பிரஸி குப்பை என தூக்கி எறிபவர்கள், தமது நாடுகளில் நடக்கும் தாக்குதல் பற்றியோ நடந்த இனப்படுகொலை பற்றியோ அதன் பின்னணி பற்றியோ அறிய மாட்டார்கள். 

ஆனால் தமது நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களின், இனப்படுகொலையின் வெளிப்படை சூத்திரதாரிகளை மட்டும் மற்றவர்கள் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் இந்நாட்டில் நடந்தது என கூறுபவை வேறு நாடுகளிலுள்ள பலருக்கு கொன்ஸ்பிரஸி தியறியாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேலைத்தள நண்பர் போன்று இன்னும் பலர் இருக்கலாம். இவ்வாறானவர்கள் எதற்காகச் சதிக் கோட்பாடுகளை உண்மையென்று நம்புகிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்ததினால், சில விடயங்களை அறிந்துகொண்டேன்.

அண்மையில் இங்கிலாந்தில் சதிக்கோட்பாடுகளை மக்கள் எதற்காக உண்மையென்று நம்புகிறார்கள் என்பதைக் கண்டறிய மூன்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளின்படி பின்வரும் மூன்று காரணங்களுக்காக சதிக்கோட்பாடுகளை அவர்கள் நம்புவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

1. ஒரு விடயம் தொடர்பான உண்மையை அறிந்துகொள்வதற்கான அல்லது உறுதிப்படுத்திகொள்வதற்கான ஆர்வம்.

2. தமது வாழ்க்கை தமது முழுக் கட்டுப்பாட்டினுள் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம்.

3. சமூகத்தில் தனது நற்பெயருக்கான அல்லது அந்தஸ்த்திற்கான ஆர்வம். 

இம்மூன்று விடயங்களையும் பின்வருமாறு இந்த ஆராய்ச்சியாளர்கள் விளங்கப்படுத்துகிறார்கள்.

ஒரு விடயம் நடைபெறும்பொழுது அது எதற்காக அப்படி நடக்கிறது என்று அறியவிரும்புவது மனித இயல்பு. ஆனால், அது நடப்பதற்கான காரணம் என்று நாம் நினைப்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. ஆனாலும், எமக்குத் திருப்தியளிக்கும் விடையாக இருக்கும் பட்சத்தில், அக்காரணத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். உதாரணத்திற்கு, நாம் வெளியே போகும் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது எதேச்சையாக இருந்தாலும் கூட, நாம் துரதிஷ்ட்டசாலிகள், அதுதான் நாம் வெளியே போகும்போதெல்லாம் மழை பெய்கிறதென்று ஒரு முடிவிற்கு வந்துவிடும் நாம், அதையே நம்பத் தொடங்குகிறோம். இப்படியானவர்களைப் பொறுத்தவரை எதேச்சையென்பதற்குச் சந்தர்ப்பமே இருக்கப்போவதில்லை. 

அடுத்தது, எமது வாழ்க்கை எமது கைகளில், எமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம். இது ஓரளவிற்கு நியாயமாகப் பட்டாலும்கூட, இதை நாம் கைக்கொள்ளும் விதம் அலாதியானது. உதாரணத்திற்கு, வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பென்பது பற்றிய எமது நம்பிக்கை. வெளியுலகில் எவர் இதுபற்றி நம்ப மறுத்தாலும்கூட, நாம் வேற்றுக்கிரக வாசிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எம்மை ஆயத்தப்படுத்துவது. அல்லது உலக வெப்பமாதலில் இருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எமக்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொள்வது. 

மூன்றாவது, சமூகத்தில் தனக்கான விம்பத்தை ஏற்படுத்திக்கொள்வது, அல்லது நிறுவிக்கொள்வது. இவ்வாராய்ச்சிகளின் முடிவுகளின்படி, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் சதிக்கோட்பாடுகளை விரும்பி நம்புவதாகக் கணித்திருக்கிறார்கள். சாதாரணமாக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மற்றையவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நண்மையாக, உதாரணமாக இருப்பதைப் பார்க்கும் இவ்வாறான தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், தம்மையும் இவர்களைப் போன்றே நிலைநிறுத்திக்கொள்ள சதிக் கோட்பாடுகளை நம்பி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள். சமூகத்திலிருந்து எப்போதும் தனித்தே வாழும் இவர்களுக்குக் கிடைக்கும் தனிமையான நீண்ட பொழுதுகள் இணையத்தில் இவர்கள் சதிக் கோட்பாடுகளை விரும்பித் தேடவும் , உண்மையென்று நம்பி வாழவும் வழிசமைத்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஆக, எனது வேலைத்தள நண்பரைப் பொறுத்தவரையில், அவருக்கு இருப்பது நான் இங்கே குறிப்பிட்டவற்றில் மூன்றாவது வகை. அவருடன் தொடர்ந்து பேசலாம். 

1 minute ago, நீர்வேலியான் said:

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

மிகச்சரியாகக் கணித்திருக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

என்னைப்பொறுத்தவரையில், இவர்கள் முன்வைக்கும் சதிக் கோட்பாடுகளைக் காட்டிலும், இவர்கள் ஏன் இதை நம்புகிறார்கள் அல்லது இவர்களது மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதிலேயே ஆர்வம் இருக்கிறது. 
வெளிபார்வைக்கு இவர்களின் வாதம் விசித்திரமாக இருந்தாலும் கூட சுவாரசியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

என்னைப்பொறுத்தவரையில், இவர்கள் முன்வைக்கும் சதிக் கோட்பாடுகளைக் காட்டிலும், இவர்கள் ஏன் இதை நம்புகிறார்கள் அல்லது இவர்களது மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதிலேயே ஆர்வம் இருக்கிறது. 
வெளிபார்வைக்கு இவர்களின் வாதம் விசித்திரமாக இருந்தாலும் கூட சுவாரசியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

நானும் இப்பிடி வியற்பதுண்டு. சில வேளைகளில் இவ்விவாதங்கள் மனஸ்தாபத்தில் முடிந்துவிடும்.  உங்கள் அனுபவத்தை தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்   

Link to comment
Share on other sites

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

Link to comment
Share on other sites

உலகத்தில் நடக்கும் பலகொலைகள், தாக்குதல்கள், யுத்தங்களை திட்டமிடுவது யூதர்கள். உலகம் அவர்கள் கையில். இதை புரிந்து கொள்பவர்களுக்கு உலக அரசியல் விளங்கும்.

அது விளங்கினால் அமெரிக்கா ஏன் தொடர்ந்து இஸ்ரேலுக்கு பின்னால் சுற்றித்திரிகிறது என்பதும் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருடனான சம்பாஷணைகளிருந்து இன்னொரு விடயமும் எனக்குப் புரிந்தது. யூதர்கள் தொடர்பான அவரது நிலைப்பாடு.

இதற்குக் காரணம், யூதர்களை மைய்யப்படுத்தி அவர் தனது சதிக் கோட்பாடுகளை வரைந்துகொண்டது.

உதாரணத்திற்கு, ஹொலொகோஸ்ட் எனப்படும் நாசிகளினால் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பு. சுமார் 6 மில்லியன் யூதர்கள் வரை இதில் கொல்லப்பட்டதாக நன்றாக சாட்சியப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வாறானதொன்றே நடைபெறவில்லையென்பதும், இது முற்றாக யூதர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கதையென்றும் அவர் நம்புகிறார்.

அவ்வாறே, ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கள் பற்றி யூதருக்கு முன்னமே தெரிந்திருந்ததினால்த்தான், இத்தாக்குதலில் யூதர்கள் எவருமே கொல்லப்படவில்லை என்றும் அடித்துக் கூறுகிறார். ஆனால், கொல்லப்பட்ட 2997 பேரில் யூதர்கள் 300 பேரும் அடங்குவதுபற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

யூதர்களை மைய்யப்படுத்தி இவர் நம்பிக்கொண்டிருக்கும் இன்னும் பல சதிக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பின்னர் எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

இன்னொரு திரியில் யூதர்கள் உலகை ஆள முற்பட்டமை ஒரு காரணம் ஹிட்லர் அவர்களை கொல்வதற்கு என எழுதியிருந்தேன். 

ஹிட்லர் anti-semitism வழி நடந்தவர்.

இப்ப உலகம் Zionism வழி செல்கிறது.

Link to comment
Share on other sites

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

இந்த திரியில் லாறாவிற்கு எனது ஆதரவு என்றும் உண்டு. உண்மைகளை எழுதுங்கள்.👍

Link to comment
Share on other sites

On 6/7/2019 at 1:32 AM, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

 

On 6/7/2019 at 3:06 AM, Lara said:

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

On 6/7/2019 at 4:09 AM, பிரபா சிதம்பரநாதன் said:

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

 

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து 

On 6/7/2019 at 3:57 AM, Lara said:

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2019 at 11:48 AM, ரஞ்சித் said:

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

 

On 6/6/2019 at 12:06 PM, ரஞ்சித் said:

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து

உண்மைதான்,

The Da Vinci Code -Secret Society, Angels & Demons - Illuminati, Inferno - Reduce the population பற்றி கூறும் படங்கள் என்பது சரியென நினைக்கிறேன்..

தவறாக எழுதியதை திருத்தியமைக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

5 hours ago, அபராஜிதன் said:

 

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

நிழலி, ரஞ்சித் இருவரும் வேறு திரிகளிலும் என்னை முட்டாள் ரேஞ்சில் கருத்து எழுதியவர்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். 

சதிக்கோட்பாடுகளை நம்புவோர் சமூகத்தில் தமது அந்தஸ்திற்கான அல்லது நற்பெயருக்கான ஆர்வத்தில் அதை செய்கிறார்கள் என்றும் ரஞ்சித் இங்கு எழுதினார். அப்படியான கருத்துகள் உங்களுக்கு தவறாக தெரியவில்லை.

நான் ஏற்கனவே சில ஆதாரங்களை நான் இணைத்த இணைப்பில் கொடுத்துள்ளேன். இங்கும் இணைத்துள்ளேன்.

யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று முடிந்தவரை கவனமெடுப்பார்கள். அதற்காக யாரும் கொல்லப்படக்கூடாது என நினைக்கப்போவதில்லை.

யூதரான Larry Silverstein, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் அன்றைய தினம் அங்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் medical appointment, அல்லது sick  என்று சொல்லிட்டு நின்றார்கள்.

WTC ஐ அவரது பெயரில் எடுத்ததே தாக்குதலை ஒழுங்கு படுத்த.

5326AFC2-E47D-423A-9897-26DA57E932B2.jpg

83988CC0-45BF-48AF-8C16-3E01B078BB3D.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.