Jump to content

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !

அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது.
இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.  அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது அமெரிக்காவின் உள்வீட்டு வேலைதான் என்பதில் பிடிவாதமாக இருந்த அவர், என்னுடன் வழமைக்கு மாறாக அதிகமாகப் பேசினார். சிலவிடங்களில் மெளனம், இன்னும் சில இடங்களில் பாடமாக்கி ஒப்புவித்தது போன்ற ஆற்றொழுக்கான சாட்சிய அடுக்குகள்...இப்படி தனது சதிக் கோட்பாடிற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து விவாதித்துக்கொண்டிருந்தார். அவருடனான எனது சுவாரசியமான உரையாடலின் சில நகைச்சுவையான பதிவுகளை இங்கே எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நீர்வேலியான் said:

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

இப்படியான கனவுகளிலும் சதிக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடப்பதும் ஒருவகையான போதை தான். தம்மைத் தவிர மற்ற அனைவரும் பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இந்த உலகமே பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கனவுக்குல் மீழ்கிக் கிடப்பர்.

இப்படியானவர்களுடன் விவாதிப்பதே வீணான விடயம் என நான் விலகிச் செல்வதுண்டு. நேரம் பொன்னானது

Link to comment
Share on other sites

17 minutes ago, நிழலி said:

இப்படியான கனவுகளிலும் சதிக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடப்பதும் ஒருவகையான போதை தான். தம்மைத் தவிர மற்ற அனைவரும் பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இந்த உலகமே பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கனவுக்குல் மீழ்கிக் கிடப்பர்.

இப்படியானவர்களுடன் விவாதிப்பதே வீணான விடயம் என நான் விலகிச் செல்வதுண்டு. நேரம் பொன்னானது

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

Link to comment
Share on other sites

18 minutes ago, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

 

நன்றி
 
எனக்கு நேரம் பொன்னானது

Link to comment
Share on other sites

அடுத்த நாடுகளில் இடம்பெறும் தாக்குதல்களின் உண்மை சூத்திரதாரிகள் பற்றி அறிய சிறிதும் முயற்சி செய்யாமல் அனைத்ததையும் கொன்ஸ்பிரஸி குப்பை என தூக்கி எறிபவர்கள், தமது நாடுகளில் நடக்கும் தாக்குதல் பற்றியோ நடந்த இனப்படுகொலை பற்றியோ அதன் பின்னணி பற்றியோ அறிய மாட்டார்கள். 

ஆனால் தமது நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களின், இனப்படுகொலையின் வெளிப்படை சூத்திரதாரிகளை மட்டும் மற்றவர்கள் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் இந்நாட்டில் நடந்தது என கூறுபவை வேறு நாடுகளிலுள்ள பலருக்கு கொன்ஸ்பிரஸி தியறியாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேலைத்தள நண்பர் போன்று இன்னும் பலர் இருக்கலாம். இவ்வாறானவர்கள் எதற்காகச் சதிக் கோட்பாடுகளை உண்மையென்று நம்புகிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்ததினால், சில விடயங்களை அறிந்துகொண்டேன்.

அண்மையில் இங்கிலாந்தில் சதிக்கோட்பாடுகளை மக்கள் எதற்காக உண்மையென்று நம்புகிறார்கள் என்பதைக் கண்டறிய மூன்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளின்படி பின்வரும் மூன்று காரணங்களுக்காக சதிக்கோட்பாடுகளை அவர்கள் நம்புவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

1. ஒரு விடயம் தொடர்பான உண்மையை அறிந்துகொள்வதற்கான அல்லது உறுதிப்படுத்திகொள்வதற்கான ஆர்வம்.

2. தமது வாழ்க்கை தமது முழுக் கட்டுப்பாட்டினுள் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம்.

3. சமூகத்தில் தனது நற்பெயருக்கான அல்லது அந்தஸ்த்திற்கான ஆர்வம். 

இம்மூன்று விடயங்களையும் பின்வருமாறு இந்த ஆராய்ச்சியாளர்கள் விளங்கப்படுத்துகிறார்கள்.

ஒரு விடயம் நடைபெறும்பொழுது அது எதற்காக அப்படி நடக்கிறது என்று அறியவிரும்புவது மனித இயல்பு. ஆனால், அது நடப்பதற்கான காரணம் என்று நாம் நினைப்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. ஆனாலும், எமக்குத் திருப்தியளிக்கும் விடையாக இருக்கும் பட்சத்தில், அக்காரணத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். உதாரணத்திற்கு, நாம் வெளியே போகும் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது எதேச்சையாக இருந்தாலும் கூட, நாம் துரதிஷ்ட்டசாலிகள், அதுதான் நாம் வெளியே போகும்போதெல்லாம் மழை பெய்கிறதென்று ஒரு முடிவிற்கு வந்துவிடும் நாம், அதையே நம்பத் தொடங்குகிறோம். இப்படியானவர்களைப் பொறுத்தவரை எதேச்சையென்பதற்குச் சந்தர்ப்பமே இருக்கப்போவதில்லை. 

அடுத்தது, எமது வாழ்க்கை எமது கைகளில், எமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம். இது ஓரளவிற்கு நியாயமாகப் பட்டாலும்கூட, இதை நாம் கைக்கொள்ளும் விதம் அலாதியானது. உதாரணத்திற்கு, வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பென்பது பற்றிய எமது நம்பிக்கை. வெளியுலகில் எவர் இதுபற்றி நம்ப மறுத்தாலும்கூட, நாம் வேற்றுக்கிரக வாசிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எம்மை ஆயத்தப்படுத்துவது. அல்லது உலக வெப்பமாதலில் இருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எமக்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொள்வது. 

மூன்றாவது, சமூகத்தில் தனக்கான விம்பத்தை ஏற்படுத்திக்கொள்வது, அல்லது நிறுவிக்கொள்வது. இவ்வாராய்ச்சிகளின் முடிவுகளின்படி, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் சதிக்கோட்பாடுகளை விரும்பி நம்புவதாகக் கணித்திருக்கிறார்கள். சாதாரணமாக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மற்றையவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நண்மையாக, உதாரணமாக இருப்பதைப் பார்க்கும் இவ்வாறான தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், தம்மையும் இவர்களைப் போன்றே நிலைநிறுத்திக்கொள்ள சதிக் கோட்பாடுகளை நம்பி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள். சமூகத்திலிருந்து எப்போதும் தனித்தே வாழும் இவர்களுக்குக் கிடைக்கும் தனிமையான நீண்ட பொழுதுகள் இணையத்தில் இவர்கள் சதிக் கோட்பாடுகளை விரும்பித் தேடவும் , உண்மையென்று நம்பி வாழவும் வழிசமைத்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஆக, எனது வேலைத்தள நண்பரைப் பொறுத்தவரையில், அவருக்கு இருப்பது நான் இங்கே குறிப்பிட்டவற்றில் மூன்றாவது வகை. அவருடன் தொடர்ந்து பேசலாம். 

1 minute ago, நீர்வேலியான் said:

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

மிகச்சரியாகக் கணித்திருக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

என்னைப்பொறுத்தவரையில், இவர்கள் முன்வைக்கும் சதிக் கோட்பாடுகளைக் காட்டிலும், இவர்கள் ஏன் இதை நம்புகிறார்கள் அல்லது இவர்களது மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதிலேயே ஆர்வம் இருக்கிறது. 
வெளிபார்வைக்கு இவர்களின் வாதம் விசித்திரமாக இருந்தாலும் கூட சுவாரசியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

என்னைப்பொறுத்தவரையில், இவர்கள் முன்வைக்கும் சதிக் கோட்பாடுகளைக் காட்டிலும், இவர்கள் ஏன் இதை நம்புகிறார்கள் அல்லது இவர்களது மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதிலேயே ஆர்வம் இருக்கிறது. 
வெளிபார்வைக்கு இவர்களின் வாதம் விசித்திரமாக இருந்தாலும் கூட சுவாரசியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

நானும் இப்பிடி வியற்பதுண்டு. சில வேளைகளில் இவ்விவாதங்கள் மனஸ்தாபத்தில் முடிந்துவிடும்.  உங்கள் அனுபவத்தை தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்   

Link to comment
Share on other sites

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

Link to comment
Share on other sites

உலகத்தில் நடக்கும் பலகொலைகள், தாக்குதல்கள், யுத்தங்களை திட்டமிடுவது யூதர்கள். உலகம் அவர்கள் கையில். இதை புரிந்து கொள்பவர்களுக்கு உலக அரசியல் விளங்கும்.

அது விளங்கினால் அமெரிக்கா ஏன் தொடர்ந்து இஸ்ரேலுக்கு பின்னால் சுற்றித்திரிகிறது என்பதும் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருடனான சம்பாஷணைகளிருந்து இன்னொரு விடயமும் எனக்குப் புரிந்தது. யூதர்கள் தொடர்பான அவரது நிலைப்பாடு.

இதற்குக் காரணம், யூதர்களை மைய்யப்படுத்தி அவர் தனது சதிக் கோட்பாடுகளை வரைந்துகொண்டது.

உதாரணத்திற்கு, ஹொலொகோஸ்ட் எனப்படும் நாசிகளினால் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பு. சுமார் 6 மில்லியன் யூதர்கள் வரை இதில் கொல்லப்பட்டதாக நன்றாக சாட்சியப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வாறானதொன்றே நடைபெறவில்லையென்பதும், இது முற்றாக யூதர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கதையென்றும் அவர் நம்புகிறார்.

அவ்வாறே, ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கள் பற்றி யூதருக்கு முன்னமே தெரிந்திருந்ததினால்த்தான், இத்தாக்குதலில் யூதர்கள் எவருமே கொல்லப்படவில்லை என்றும் அடித்துக் கூறுகிறார். ஆனால், கொல்லப்பட்ட 2997 பேரில் யூதர்கள் 300 பேரும் அடங்குவதுபற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

யூதர்களை மைய்யப்படுத்தி இவர் நம்பிக்கொண்டிருக்கும் இன்னும் பல சதிக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பின்னர் எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

இன்னொரு திரியில் யூதர்கள் உலகை ஆள முற்பட்டமை ஒரு காரணம் ஹிட்லர் அவர்களை கொல்வதற்கு என எழுதியிருந்தேன். 

ஹிட்லர் anti-semitism வழி நடந்தவர்.

இப்ப உலகம் Zionism வழி செல்கிறது.

Link to comment
Share on other sites

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

இந்த திரியில் லாறாவிற்கு எனது ஆதரவு என்றும் உண்டு. உண்மைகளை எழுதுங்கள்.👍

Link to comment
Share on other sites

On 6/7/2019 at 1:32 AM, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

 

On 6/7/2019 at 3:06 AM, Lara said:

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

On 6/7/2019 at 4:09 AM, பிரபா சிதம்பரநாதன் said:

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

 

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து 

On 6/7/2019 at 3:57 AM, Lara said:

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2019 at 11:48 AM, ரஞ்சித் said:

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

 

On 6/6/2019 at 12:06 PM, ரஞ்சித் said:

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து

உண்மைதான்,

The Da Vinci Code -Secret Society, Angels & Demons - Illuminati, Inferno - Reduce the population பற்றி கூறும் படங்கள் என்பது சரியென நினைக்கிறேன்..

தவறாக எழுதியதை திருத்தியமைக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

5 hours ago, அபராஜிதன் said:

 

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

நிழலி, ரஞ்சித் இருவரும் வேறு திரிகளிலும் என்னை முட்டாள் ரேஞ்சில் கருத்து எழுதியவர்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். 

சதிக்கோட்பாடுகளை நம்புவோர் சமூகத்தில் தமது அந்தஸ்திற்கான அல்லது நற்பெயருக்கான ஆர்வத்தில் அதை செய்கிறார்கள் என்றும் ரஞ்சித் இங்கு எழுதினார். அப்படியான கருத்துகள் உங்களுக்கு தவறாக தெரியவில்லை.

நான் ஏற்கனவே சில ஆதாரங்களை நான் இணைத்த இணைப்பில் கொடுத்துள்ளேன். இங்கும் இணைத்துள்ளேன்.

யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று முடிந்தவரை கவனமெடுப்பார்கள். அதற்காக யாரும் கொல்லப்படக்கூடாது என நினைக்கப்போவதில்லை.

யூதரான Larry Silverstein, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் அன்றைய தினம் அங்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் medical appointment, அல்லது sick  என்று சொல்லிட்டு நின்றார்கள்.

WTC ஐ அவரது பெயரில் எடுத்ததே தாக்குதலை ஒழுங்கு படுத்த.

5326AFC2-E47D-423A-9897-26DA57E932B2.jpg

83988CC0-45BF-48AF-8C16-3E01B078BB3D.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.