Jump to content

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !


Recommended Posts

இதை மற்ற திரியில் ஏற்கனவே இணைத்திருந்தேன்.

1.40 இலிருந்து பாருங்கள் கட்டடம் வெடித்து தகர்ந்து விழுவதை.

 

Link to comment
Share on other sites

அமெரிக்க அரசு CGI ஐ புகுத்தி பல காணொளிகளை வெளியிட்டது. உண்மையான காணொளிகளை கண்டறிவது மக்கள் கடமை.

Link to comment
Share on other sites

Pentagon ஐ மக்களுடன் வந்த விமானம் எதுவும் தாக்கவில்லை என இவர் உறுதிப்படுத்துகிறார். குண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

உண்மையை வெளியிட்டதற்காக இவரை போட்டுத்தள்ளி விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இவரை மட்டுமல்ல உண்மை தெரிந்த பலரை கொன்று விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

விமானம் வந்து தாக்கியது போல் காட்டப்பட்டது set up.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதிக் கோட்பாடுகள் மீதான பலரின் விருப்புப் பற்றி நான் அறியவேண்டுமென்று விரும்பியது தற்செயலானது அல்ல. ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய டி.வி.டி ஒன்றை நண்பன் ஒருவனிடமிருந்து 2003 இல் நான் பெற்றுக்கொண்டதுமுதல், இச்சதிக் கோட்பாடுகள் பற்றி அறியும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. மிக அண்மைக் காலம்வரை சதிக்கோட்பாடுகள் பற்றி, குறிப்பாக ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி என்னால் தெளிவான ஒரு முடிவிற்கு வர முடிந்திருக்கவில்லை. இது உண்மைதான் என்று நான் சில காலம் எண்ணியிருந்தேன். ஏனென்றால், இத்தாக்குதல் தொடர்பாகப் பலராலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலைப் பெற முடியாமையும், நான் தொடர்ச்சியாக இச்சதிக் கோட்பாடு உண்மையென்று நம்பி, அதற்கு வலுச் சேர்க்கும் தகவல்களைத் தேடியதனாலும், இச்சதிக் கோட்பாடுகள் ஏன் செயற்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று என்னை நானே கேட்க மறந்துவிட்டேன்.

இப்போது ஒரு தெளிவு இருக்கிறது. சதிக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் காரணங்கள் தவறானவை, சோடிக்கப்பட்டவை என்பது பலராலும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இதுபற்றித் தொடர்ந்தும் எழுதப்போகிறேன்.

அதன் முதற்படியாக பி பி ஸி யில் சில மாதங்களுக்கு முதல் வெளிவந்த சதிக் கோட்பாடுகளை மக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்கான ஆய்வுக் கட்டுரையுடன் இதை ஆரம்பிக்கிறேன்.

அத்துடன், இச்சதிக் கோட்பாடுகள் தவறானவை என்பதை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் இணையத்தளமான "ஸ்நோப்ஸ்" இனது இணைப்பையும் இங்கே இணைக்கிறேன்.

நான் எழுதுவது எவரையும் தவறானவர்கள் என்று நிரூபிப்பதற்கல்ல, மாறாக அவர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று விளக்குவதற்கே. 

http://www.bbc.com/future/story/20180124-the-enduring-appeal-of-conspiracy-theories

https://www.snopes.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் 40 ஆயிரம் வரையான அப்பாவி மக்கள் இறந்தது 
சதிக்கோட்டு பிரச்சாரம் என்றுதான் பல சிங்களவர்களும் சொல்கிறார்கள்.

யுடூப்  பேஸ்புக் போன்றவை எமது சார்பான ஆதாரங்களை 
அழித்து  வருகிறார்கள்.

சென்ற கிழமை எனது  இரண்டு  கணக்குகளை யூடுப் முடக்கி உள்ளது 
ஒன்று தீவிரவாதம் சார்பு நிலை  அண்ட் பரோபகாண்டா என்று சொல்லி உள்ளார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இறுதிப்போரில் 40 ஆயிரம் வரையான அப்பாவி மக்கள் இறந்தது 
சதிக்கோட்டு பிரச்சாரம் என்றுதான் பல சிங்களவர்களும் சொல்கிறார்கள்.

யுடூப்  பேஸ்புக் போன்றவை எமது சார்பான ஆதாரங்களை 
அழித்து  வருகிறார்கள்.

சென்ற கிழமை எனது  இரண்டு  கணக்குகளை யூடுப் முடக்கி உள்ளது 
ஒன்று தீவிரவாதம் சார்பு நிலை  அண்ட் பரோபகாண்டா என்று சொல்லி உள்ளார்கள். 
 

இறுதிப்போரில் இறுதி இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என்று ஐ. நா வின் அமைப்புகள் உற்பட, இன்னும் சில அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. ஆகவே, இது சதிக்கோட்பாடு என்கிற சிங்களவரின் கூப்பாடு அடிபட்டுப் போய்விடுகிறது. 

சிங்களவர்மேல் வீண்பழி போட, ஐ. நா அடங்கலான அமைப்புகள் முற்படுகின்றன என்று அவர்கள் கருதினால், இலங்கை இனக்கொலையைத் தங்கு தடையின்றி நடத்துவதற்கு அவர்களின் உதவ வேண்டிய தேவை என்ன? 

ஒரு உண்மைச் சம்பவத்தை, சதிக்கோட்பாடு என்று கூறுவதன்மூலம், சதிக்கோட்பாட்டாளர்கள் செய்ய முற்படுவதெல்லாம், மக்கள் மனதில் சந்தேகங்களை விதைப்பதுதான். சந்தேககங்களை விதைத்துவிட்டால், அவர்களின் நம்பிக்கை தகர்ந்துவிடும், ஒரு கட்டத்தில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே அவர்களுக்கு மறந்துவிடும்.

மருது, எங்களை விடுங்கள். ஜேர்மனியர்களால் இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட ஆறு மில்லியன் யூதர்கள் பற்றி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாட்சியங்களும், தடயங்களும், புதைகுழிகளும் இருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு இனவழிப்பு நடைபெறவில்லை என்று சதிக் கோட்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதை யாருமே நம்பப் போவதில்லை, அவர்களைத்தவிர.

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

இறுதிப்போரில் இறுதி இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என்று ஐ. நா வின் அமைப்புகள் உற்பட, இன்னும் சில அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. ஆகவே, இது சதிக்கோட்பாடு என்கிற சிங்களவரின் கூப்பாடு அடிபட்டுப் போய்விடுகிறது. 

சிங்களவர்மேல் வீண்பழி போட, ஐ. நா அடங்கலான அமைப்புகள் முற்படுகின்றன என்று அவர்கள் கருதினால், இலங்கை இனக்கொலையைத் தங்கு தடையின்றி நடத்துவதற்கு அவர்களின் உதவ வேண்டிய தேவை என்ன? 

ஒரு உண்மைச் சம்பவத்தை, சதிக்கோட்பாடு என்று கூறுவதன்மூலம், சதிக்கோட்பாட்டாளர்கள் செய்ய முற்படுவதெல்லாம், மக்கள் மனதில் சந்தேகங்களை விதைப்பதுதான். சந்தேககங்களை விதைத்துவிட்டால், அவர்களின் நம்பிக்கை தகர்ந்துவிடும், ஒரு கட்டத்தில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே அவர்களுக்கு மறந்துவிடும்.

மருது, எங்களை விடுங்கள். ஜேர்மனியர்களால் இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட ஆறு மில்லியன் யூதர்கள் பற்றி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாட்சியங்களும், தடயங்களும், புதைகுழிகளும் இருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு இனவழிப்பு நடைபெறவில்லை என்று சதிக் கோட்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதை யாருமே நம்பப் போவதில்லை, அவர்களைத்தவிர.

நான் இன்னொரு திரியில் கூறியது போல் சதிக்கோட்பாடு பற்றி கூறப்படும் அனைத்தையும் நான் நம்பும் ஒருவர் கிடையாது. ஆனால் ஆராய்ந்து சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் தன்மை என்னிடம் உள்ளது, ஆனால் உங்கள் போன்றவர்களிடம் அது இல்லை.

ஹிட்லருக்கெதிராக யூதர்களால் ஒன்று திரட்டப்பட்ட நாடுகள் தான் பின் UN என உருவானது என்பது ஒரு காரணம் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தீர்ப்பை பலர் ஏற்காததற்கு. இதே UN ஐ வைத்து தான் யூதர்களின் பலகால திட்டமான இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் உருவாக்கினார்கள்.

ஹிட்லர் யூதர்களை கொல்ல முடிவெடுக்க முன்னர் முடிந்தவரை அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 1933 இல் Haavara உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களை சிறிது சிறிதாக பலஸ்தீனத்திற்கு அனுப்பி வந்தார். அதே போல் யூதர்களை மடகஸ்காருக்கும் அனுப்பி வைக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இப்படி ஏற்கனவே யூதர்கள் பலர் வெளியேறி சென்றதாலும் எஞ்சியுள்ள யூதர்களின் கணக்கீட்டை போருக்கு முன்னரும் போருக்கு பின்னரும் நடத்திய போது அதில் 6 மில்லியன் குறைவு இருந்திருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். பலர் நம்புவது அதை விட குறைந்த தொகையிலேயே யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது.

இறுதிப்போரில் ஒன்றரை இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 40000 பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐநாவையும் பலர் இங்கு நம்பத்தான் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

இறுதிப்போரில் ஒன்றரை இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 40000 பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐநாவையும் பலர் இங்கு நம்பத்தான் இருக்கிறார்கள்.

அவசரப்பட்டு பதிலளிக்கு முன்னர் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

40,000 என்பது முழு யுத்தத்திலும் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை, இறுதி இரு மாதங்கள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேர்மனியர்களால் ஆறு மில்லியன்கள் யூதர்கள் கொல்லப்படவில்லையென்பதோ அல்லது ஒரு யூதனுமே கொல்லப்படவில்லையென்பதோ ஏன் தவறானது என்பதுபற்றி கீழ்வரும் ஆய்வுக்குறிப்புக் குறிப்பிடுகிறது. முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://www.snopes.com/news/2017/04/17/how-holocaust-denial-works/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன்னமே இஸ்ரேல் உளவுப்பிரிவினருக்குத் தகவல் தெரிந்திருந்ததினால்த்தான் அங்கே பணிபுரிந்துவந்த சுமார் 4,000 யூதர்கள் அன்று "சுகயீனம் காரணமாக" வேலைக்குச் செல்லவில்லையென்றும், இதை மிகவும் மறைவாக வைத்திருந்து, அமெரிக்காவை அரபு நாடுகளுடன் வலிந்த போர் ஒன்றிற்குள் இழுத்துவிடவே இதைச் செய்தனர் என்னும் சதிக்கோட்பாட்டினைப் பொய்யென்று நிரூபிக்கும் சான்று,

https://www.snopes.com/fact-check/absent-without-leave-2/

Link to comment
Share on other sites

14 minutes ago, ரஞ்சித் said:

அவசரப்பட்டு பதிலளிக்கு முன்னர் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

40,000 என்பது முழு யுத்தத்திலும் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை, இறுதி இரு மாதங்கள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

நானும் முழு யுத்தத்திலும் என கூறவில்லை. இறுதிப்போரில் என்றே கூறியிருந்தேன். அது பொதுவாக பயன்படுத்திய பிரயோகம்.

ஐநாவும் இறுதி இரு மாதங்கள் என கூறவில்லை, இறுதி மாதங்களில் எனவே கூறியிருந்தது. 

இலங்கை அரசு போர் முடிந்த பின்னர் எஞ்சியிருந்த தடயங்களை முடிந்தவரை அழித்து விட்டு தான் ஐநாவை உள்ளே விட்டது. அதன் பின்னர் எடுத்த ஐநா கணக்கெடுப்பு தான் இந்த இறுதி மாதங்களில் 40000. அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை 40000 ஐ விட அதிகம் என்பது பலருக்கும் தெரியும். அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என கூறப்பட்ட தொகையை தான் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்கள் தொகை என பல நாடுகளும் கணக்கில் கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே என் பதிலை எழுதியிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனைத் தாக்கியது தீவிரவாதிகள் கடத்திச்சென்ற விமானம் - 77 கிடையாது, அது ஏவுகணைதான் என்னும் சதிக் கோட்பாட்டை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேயும் ஆய்வறிக்கை கீழே,
https://www.snopes.com/fact-check/911-pentagon-attack/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நானும் முழு யுத்தத்திலும் என கூறவில்லை. இறுதிப்போரில் என்றே கூறியிருந்தேன். அது பொதுவாக பயன்படுத்திய பிரயோகம்.

ஐநாவும் இறுதி இரு மாதங்கள் என கூறவில்லை, இறுதி மாதங்களில் எனவே கூறியிருந்தது. 

இலங்கை அரசு போர் முடிந்த பின்னர் எஞ்சியிருந்த தடயங்களை முடிந்தவரை அழித்து விட்டு தான் ஐநாவை உள்ளே விட்டது. அதன் பின்னர் எடுத்த ஐநா கணக்கெடுப்பு தான் இந்த இறுதி மாதங்களில் 40000. அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை 40000 ஐ விட அதிகம் என்பது பலருக்கும் தெரியும். அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என கூறப்பட்ட தொகையை தான் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்கள் தொகை என பல நாடுகளும் கணக்கில் கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே என் பதிலை எழுதியிருந்தேன்.

கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அதே ஐநாவை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். 

கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்களின் கணக்குப்படி போர் ஆரம்பிக்குமுன்னர் வன்னி நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை சுமார் 420,000. போர் முடிந்த பின்னர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டவர்கள் 280,000. ஆக சுமார் 140,000 பொதுமக்கள் காணாமல்ப் போயிருக்கிறார்கள். இந்திய கடற்படை வட கிழக்குக் கடல்களில் முற்றான முற்றுகை ஒன்றினை இட்டிருக்க, தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் வழிகளும் அடைபட்டிருக்க, மக்கள் வேறிடம் ஒன்றிற்கு செல்வது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த 140,000 பொதுமக்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதையே முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு யோசேப் அவர்களும் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். 

ஆக, நான் எந்தவிடத்திலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 மட்டும்தான் என்று கூறவில்லை. இறுதிப்பகுதி என்று தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன்னமே இஸ்ரேல் உளவுப்பிரிவினருக்குத் தகவல் தெரிந்திருந்ததினால்த்தான் அங்கே பணிபுரிந்துவந்த சுமார் 4,000 யூதர்கள் அன்று "சுகயீனம் காரணமாக" வேலைக்குச் செல்லவில்லையென்றும், இதை மிகவும் மறைவாக வைத்திருந்து, அமெரிக்காவை அரபு நாடுகளுடன் வலிந்த போர் ஒன்றிற்குள் இழுத்துவிடவே இதைச் செய்தனர் என்னும் சதிக்கோட்பாட்டினைப் பொய்யென்று நிரூபிக்கும் சான்று,

https://www.snopes.com/fact-check/absent-without-leave-2/

FEBA5489-183A-4BF8-B784-5BBFA6E4D25F.jpg

 

E496C43E-51BE-4046-BFEC-79C11127B7F2.jpg

Link to comment
Share on other sites

3 minutes ago, ரஞ்சித் said:

கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அதே ஐநாவை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். 

கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்களின் கணக்குப்படி போர் ஆரம்பிக்குமுன்னர் வன்னி நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை சுமார் 420,000. போர் முடிந்த பின்னர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டவர்கள் 280,000. ஆக சுமார் 140,000 பொதுமக்கள் காணாமல்ப் போயிருக்கிறார்கள். இந்திய கடற்படை வட கிழக்குக் கடல்களில் முற்றான முற்றுகை ஒன்றினை இட்டிருக்க, தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் வழிகளும் அடைபட்டிருக்க, மக்கள் வேறிடம் ஒன்றிற்கு செல்வது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த 140,000 பொதுமக்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதையே முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு யோசேப் அவர்களும் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். 

ஆக, நான் எந்தவிடத்திலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 மட்டும்தான் என்று கூறவில்லை. இறுதிப்பகுதி என்று தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்காவிட்டால் மீண்டும் வாசியுங்கள். நான் ஐநாவை மேற்கோள் காட்டவில்லை. நீங்கள் இறுதி இரு மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை என ஐநா கூறியது என்பதற்கு தான் நான் இறுதி இரு மாதங்களில் என அவர்கள் கூறவில்லை, இறுதி மாதங்களில் என கூறினார்கள் என எழுதினேன்.

நீங்கள் கருதுவதற்கும் ஐநா கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஐநா இறுதி மாதங்களில் 40000 பேர் என கூறியது இறுதிப்போரில் கிட்டத்தட்ட அவ்வளவு பேர் தான் இறந்தார்கள் என கூறுவது போன்றது. (அதை விட ஒரு சிறு தொகையில் மட்டும் அதிகரிப்பு இருக்கலாம் என்பது போன்றது).

காரணம் இறுதிப்போரின் போது இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட மக்கள் தொகை தான் மிக அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Lara said:

FEBA5489-183A-4BF8-B784-5BBFA6E4D25F.jpg

 

E496C43E-51BE-4046-BFEC-79C11127B7F2.jpg

இதுகூட கட்டப்பட்ட பொய்தான், ஆதாரம் கீழே, 

Is PM staffer Benjamin Chertoff a cousin of Michael Chertoff, Secretary of the Department of Homeland Security?

As we explain in our book, it appears that they could be distant relatives. The connection, if any exists, dates back to the 19th century, before either family immigrated to the U.S. They have never met, and never spoken to one another. Michael Chertoff has never spoken with any member of the Popular Mechanics staff, nor with any member of Benjamin Chertoff's family.

The speculation concerning the supposed Chertoff connection is a good example of how conspiracy theorists often latch on to shreds of information, but get the details wrong. Ben Chertoff ran PM's research and fact-checking department at the time of the original magazine article, and conducted some reporting for the story. He was not the "senior editor," "head writer," or any of the other incorrect titles lofted by theorists. (Ben was later promoted to online editor, and recently left the magazine to pursue work as a freelance writer and producer.)

Moreover, Michael Chertoff was not secretary of Homeland Security at the time PM researched the original story. He was sworn in on Feb. 15, 2005, more than a month after the piece went to the printers.

Conspiracy theorists often present the supposed connection between Benjamin and Michael Chertoff as ipso facto proof of some sort of collaboration. But why would that be? There are nearly 30 people on the editorial staff of PM. Virtually none of them knew each other--or Ben--before coming to work here. So far, no one has explained to us how they believe a relatively junior magazine staffer could convince dozens of his colleagues to become complicit in a cover-up of one of the worst attacks in U.S. history.

Link to comment
Share on other sites

40 minutes ago, ரஞ்சித் said:

இதுகூட கட்டப்பட்ட பொய்தான், ஆதாரம் கீழே, 

Is PM staffer Benjamin Chertoff a cousin of Michael Chertoff, Secretary of the Department of Homeland Security?

As we explain in our book, it appears that they could be distant relatives. The connection, if any exists, dates back to the 19th century, before either family immigrated to the U.S. They have never met, and never spoken to one another. Michael Chertoff has never spoken with any member of the Popular Mechanics staff, nor with any member of Benjamin Chertoff's family.

The speculation concerning the supposed Chertoff connection is a good example of how conspiracy theorists often latch on to shreds of information, but get the details wrong. Ben Chertoff ran PM's research and fact-checking department at the time of the original magazine article, and conducted some reporting for the story. He was not the "senior editor," "head writer," or any of the other incorrect titles lofted by theorists. (Ben was later promoted to online editor, and recently left the magazine to pursue work as a freelance writer and producer.)

Moreover, Michael Chertoff was not secretary of Homeland Security at the time PM researched the original story. He was sworn in on Feb. 15, 2005, more than a month after the piece went to the printers.

Conspiracy theorists often present the supposed connection between Benjamin and Michael Chertoff as ipso facto proof of some sort of collaboration. But why would that be? There are nearly 30 people on the editorial staff of PM. Virtually none of them knew each other--or Ben--before coming to work here. So far, no one has explained to us how they believe a relatively junior magazine staffer could convince dozens of his colleagues to become complicit in a cover-up of one of the worst attacks in U.S. history.

உங்களுக்கு Michael Chertoff அந்நேரம் Criminal division of the department of justice இல் இருந்தார் என்பதற்கும் இச்செய்திக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வக்காலத்து கூடிப்போச்சு. உங்களுடன் எனது நேரம் தான் வீணாகிறது. 😭

 68C3DB62-254D-4373-8352-A19FB9464AB4.jpg

A100A127-C591-4462-AD58-86EA1638EEA7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

Link to comment
Share on other sites

9 minutes ago, Justin said:

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

அப்படியல்ல, ரஞ்சித் அவருக்கு மட்டுமே அந்த பதில். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

 

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

ஜஸ்டீன் அண்ணா,

இந்த ரண களத்திலும் உங்களுக்கு கிளு கிளுப்பு கேட்குதோ😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜஸ்டீன் அண்ணா,

இந்த ரண களத்திலும் உங்களுக்கு கிளு கிளுப்பு கேட்குதோ😜

அதில்லை, அவருக்கு நேரத்தின் அருமை தெரிந்து விட்டதாக நினைத்துக் குதூகலம் தான்! உடனே மறைந்து விட்டது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.