Jump to content

உலகக்கிண்ண தொடரில் எங்களை வீழ்த்தவே முடியாது: பங்களாதேஷிற்கு உணர்த்தியது நியூஸிலாந்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண தொடரில் எங்களை வீழ்த்தவே முடியாது: பங்களாதேஷிற்கு உணர்த்தியது நியூஸிலாந்து!

 

290304-720x450.jpg

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணியால், தம்மை வீழ்த்தவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது நியூஸிலாந்து அணி.

உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, வரலாற்று பதிவை மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் நேற்று, கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொண்டது.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, ஆடுகளத்திற்கு சாதகமான, இரண்டாவது துடுப்பாட்டதை தெரிவுசெய்தது.

இதற்கமைய முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தாலும் அதனை திறம்பட சமாளித்து முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை, பெற்றுக்கொண்டது.

8.3ஆவது ஓவரில் சௌமியா சர்கார், 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு துடுப்பாட்ட வீரரான டமீம் இக்பால் 13.2ஆவது ஓவரில் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சகலதுறை வீரர் சகிப் ஹல் ஹசன், முஸ்பிகுர் ரஷீமுடன் இணைந்து அணிக்காக 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் முஸ்பிகுர் ரஷீம், 19 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துவந்த சகிப் ஹல் ஹசன், 30.2ஆவது ஓவரில் 64 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள், அணிக்கு பெரிதளவான பங்களிப்பை வழங்காவிட்டாலும், 30இற்கும் குறைவான ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய, மொஹமட் மிதுன் 26 ஓட்டங்களையும், மொஹமதுல்லா 20 ஓட்டங்களையும், மொசெடக் ஹூசைன் 11 ஓட்டங்களையும், மொஹமட் சய்ப்பூதின் 29 ஓட்டங்களையும், மெயிடி ஹசன் 7 ஓட்டங்களையும், மோர்டாசா 1 ஓட்டத்தினையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது, நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், மெட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுளையும், லொக்கி பெர்குசன், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் மிட்செல் சான்ட்சனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை, முறையே 35 மற்றும் 55 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இழந்தது.

இதன்போது, பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் போலவே, மார்டின் கப்டில் 25 ஓட்டங்களுடனும், கொலின் முன்ரோ 24 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் களத்தில் நங்கூரமிட்டனர். இருவரும் இணைந்து அணிக்காக 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர். இதில், 31.1ஆவது ஓவரில் அணி 160 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இந்த இணைப்பட்டம் பிரிந்தது. இதன்போது கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களமிறங்கிய டொம் லதம் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஏமாற்ற, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஸம் 25 என்ற கௌரவமான ஓட்டத்தினை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதனைதொடர்ந்து, அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்து வந்த ரோஸ் டெய்லர், 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் 15 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

இதனையடுத்து, மிட்செல் சான்ட்னர் களத்தில் நிற்க, மெட் ஹென்ரி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, மிட்செல் சான்டனருடன், ஜோடி சேர்ந்த லொக்கி பெர்குசன் 47.1ஆவது ஓவரில் அணியை வெற்றிபெற செய்தனர். இதற்கமைய நியூஸிலாந்து அணி இறுதியில் 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது, மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களையும், லொக்கி பெர்குசன் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு சார்பில், மெயிடி ஹசன், சகிப் ஹல் ஹசன், மொஹமட் சய்ப்பூதின் மற்றும் மொசெடக் ஹூசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக 91 பந்துகளில் 9 பவுண்ரிகள் அடங்களாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு அணியின் வெற்றிக்கு துணைநின்ற ரோஸ் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

உலகக்கிண்ண வரலாற்றில் இதுவரை, அதாவது இப்போட்டியுடன் சேர்த்து பங்களாதேஷ் அணி, ஐந்து முறை நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலுமே நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.