Jump to content

கிரிக்கெட் உலகக் கிண்ணம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி!

 

AUS-vs-WI-10th-match-of-icc-world-cup-2019-2.jpg

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது.

உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ்மித் 73 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹரே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, கார்லஸ் பிரத்வைற் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஓஷன் தோமஸ், ஹொற்ரெல் மற்றும் அன்ரூ ருஸெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 289 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் இவ்வணி 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஷை ஹோப் 68 ஓட்டங்களையும், ஜெஸன் ஹோல்டர் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, நிக்கோலஸ் பூரன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக, மிட்செல் ஸ்ராக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நைல் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் உள்ளதோடு, மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

AUS-vs-WI-10th-match-of-icc-world-cup-20AUS-vs-WI-10th-match-of-icc-world-cup-20

 

http://athavannews.com/மேற்கிந்திய-தீவுகளை-வீழ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி தாமதிக்க கூடாது.. நேரம் நெருங்கிவிட்டது.. பரபரப்பை ஏற்படுத்திய மேற்கிந்திய தீவுகள் போட்டி..ஏன்? 

 

லண்டன்: நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நிறைய பேர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமான அணிகள் தோல்வியை தழுவுவதும், சிறிய அணிகள் வெற்றிபெறுவதும் வழக்கமாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது.

 
 
என்ன

என்ன

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. வரிசையாக 100 ரன்களை அடிப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.

   ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதன்பின் ஸ்மித் மற்றும் நாதன் நைல் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி பிழைத்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. நாதன் நைல் மொத்தம் 92 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.

 
   குறி வைக்கப்பட்டனர்

குறி வைக்கப்பட்டனர்

ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் இறங்கியதில் இருந்தே, அம்பயர்கள் தொடர்ந்து தவறான தீர்ப்புகளை வழங்கி வந்தனர். மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஹோல்டருக்கு இரண்டு முறை தவறான விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

   முக்கியம்

முக்கியம்

முக்கியமாக கெயிலுக்கு முதலில் பேட்டில் படாமலே கேட்ச் விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் தவறான எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டையும் ரிவ்யூ மூலம் தவறு என்று நிரூபித்தார் கெயில். அதற்கு அடுத்து 5 வது ஓவரில் ஸ்டார்க் போட்ட நோ பாலில் அம்பயர் நோ பால் கொடுக்க தவறினார். ஆனால் அதற்கு அடுத்த பாலே கெயில் ஸ்டார்க பந்தில் கெயில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் சரியாக அம்பயர் முதல் பால் நோ பால் கொடுத்து இருந்தால், கெயில் அதற்கு அடுத்த பந்தில் (ஃபிரி ஹிட்) அவுட் ஆகி இருக்க மாட்டார்.

 
  •  
  •  
  •    மோசம்

    மோசம்

    அம்பயர்களின் இந்த தவறான முடிவுகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏன் இப்படி மோசமாக அம்பயர் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது என்று பலர் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இது மேற்கு தீவுகளுக்கு எதிராக மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

     
       என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    இதற்கு எதிராக கருத்து கூறியுள்ள மேற்கு இந்திய தீவுகள் வீரர் பொல்லார்ட், ஐசிசி இதுபோன்று தவறாக தீர்ப்பு வழங்கும் அம்பயர்களை உடனே நீக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இனியும் நாம் தாமதம் செய்ய கூடாது, என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

https://seithy.com/adslink.php?src=aHR0cHM6Ly90YW1pbC5vbmVpbmRpYS5jb20v

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் அவுசின் பக்கத்தில் பதின்மூன்று பேர் விளையாடி இருக்கின்றார்கள்.....!    👎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.