Jump to content

விமான அவசரகால கதவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

34-EBF907-6370-48-F9-8-C24-B3-B3-D50-DAB

கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா.

                                    மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான் வைக்க வேண்டும்.

                                     நாங்கள் எப்போதும் உள்ளூர் பயணத்துக்கு சவுத்வெஸ்ட் விமானத்தில்த் தான் பயணிப்போம்.பெரிய விமானம்.இலவசமாக 50 இறாத்தல் எடையுள்ள இரண்டு பொதிகளும் கையில் கொண்டு போவதற்கு ஒரு பொதி.இன்னும் ஒரு சிறிய கணனி வைக்க என்று ஒரு புத்தகபை கொண்டு போகலாம்.கையில் கொண்டு போகும் பொதியின் அளவு சரியாக இருக்க வேண்டுமே தவிர எடையை பார்க்க மாட்டார்கள்.இந்த வசதி வேறு விமானங்களில் இல்லை.வேறு விமானங்களில் கையில் கொண்டு போகும் பொதிக்கும் பணம் அறவிட தொடங்கிவிட்டார்கள்.

                                     விமானம் புறப்படுவதற்கு கொஞ்சம் முன் அவசரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் ஒவ்வொன்றையும் எடுத்து எப்படி எப்படி போட வேண்டும் என்று சொல்லுவதற்காகவும் முன்னுக்கு பின்னுக்கு நடுவில் வந்து நின்று சகையால் செய்து காட்டுவார்கள்.எமது இருக்கைக்கு அருகில் வந்து நின்ற ஒரு தடியன் குத்தியன் எங்களையே ஒரு முறைப்பாக பார்த்தான்.பின்னர் இந்த இருக்கையில் இருக்க சட்டதிட்டம் தெரியுமா என்று தொடங்க அதற்கிடையில் விமானமும் நகரத் தொடங்க அறிவிப்பும் தொடங்கியது.எம்மோடு கதைத்தவர் அறிவிப்புகளுக்கு ஏற்ற மாதிரி சைகைகள் காட்டத் தொடங்கியிருந்தார்.

                                       முதலில் எம்மோடு கதைக்கும் போது என்னடா ஒரு காலமும் இப்படி யாரையும் கேட்டதைக் காணவில்லையே?இவன் என்ன துவேசம் பிடித்தவனோ என்று எமக்குள் கதைத்துவிட்டு சரி எதுக்கும் விமானத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று படங்களுடன் இருந்த மட்டையை எடுத்து விறுவிறு என்று அவசரகால கதவு பற்றிய விளக்கத்தை மேலேட்டமாக படித்தால் உண்மையிலேயே நாங்கள் அதிலிருக்க தகுதியானவர்களா என்று எமக்கே சந்தேகமாக இருந்தது.

                                       அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

--- அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

ஈழப்பிரியன்....  அந்த  இடத்தில், ஒரு வெள்ளைக்காரன் இருந்திருந்தால்....
அப்படி, அவர் கேட்டிருப்பாரா...?  என்பது சந்தேகமே....இப்படியான விடயம், 
அதுகும்... அமெரிக்காவில் நடக்கும் போது என்னும் போது.... கவலையாக உள்ளது.

நீங்கள் அந்தப் பயணத்தில், சமாளித்து இருப்பீர்கள்...
உங்கள் மனைவி... மிகவும்  வேதனைப் பட்டு இருப்பார் என நினைக்கின்றேன்.

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

அந்த மட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகவும் பலசாலியாகவும் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறந்து அடுத்தவரை காப்பாற்றக் கூடியவராகவும் இப்படி இன்னும் பல.அந்த இருக்கையில் நான் இருந்திருந்தா விட்டிருப்பார்.எனது மனைவி இருந்தது தான் அவருக்கு எரிச்சலூட்டி இருக்கலாம்.அந்தக் கதவை ஒருக்கா திறந்து காட்டு என்று கேட்டால் முழிசிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.உண்மையிலேயே இவ்வளவு சிக்கல் நிறைந்த இடத்தில் இருந்தது எமது பிழை.

பிரச்சனை என்னவென்றால் இந்த இருக்கையில் இருப்பவர்களுக்கு இந்தளவும் தெரியுமா என்பதே.அவர் எம்மை மட்டும் கேட்டால் பிரச்சனை என்று தான் இருபக்கமும் இருந்தவர்களுக்கும் விளங்கப்படுத்தி அவசரத்துக்கு உங்களால் செய்ய முடியுமா என்ற ஒவ்வொருவரிடமும் கேட்டார்.

3 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

மகள் வேலை செய்வது விமான நிறுவனமல்ல.போயிங் என்று விமானம் செய்யும் கம்பனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

தட்டிவான் பின் சீற்றில் இருந்தா தான் சந்தோசம்.

12 minutes ago, goshan_che said:

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

இவ்வளவு காலமும் விமான பயணம் செய்தாலும் இதுவரை அந்த மட்டையை எடுத்து பார்த்ததில்லை.இனிமேல் அந்தப்பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம்.
நல்லதொரு பாடம் கற்றுக் கொண்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

அதுக்கு எல்லா பக்கமும் அவசரகால கதவு உண்டு  என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

உண்மை தான்.
அதோடு சவுத் வெஸ்ற்ரில் இருக்கைகளை முதலே தேர்வு செய்ய முடியாது.
ஒரே ஒரு நல்ல விடயம் கூடகுறைய சாமானுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு போகலாம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

அவங்கள் பயத்திலை ஒண்டும் கதைக்கேல்லை போலை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

பிஸ்னஸ் கிளாஸ்ல அப்படித்தானாம். சொல்லக் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

இவ்வளவு காலம் விமான பிரயாணத்தில் எங்களை மட்டுமல்ல வேறு யாரையும் இப்படி கேட்டு பார்க்கவில்லை.அதனால்த் தான் எமக்கும் தர்மசங்கடமாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிஸ்னஸ் கிளாஸ்ல அப்படித்தானாம். சொல்லக் கேள்வி.

2015 இல் துருக்கி விமானத்தில் நேபால் போனபோது துருக்கியில் இருந்து அமெரிக்கா புத்தகத்துக்கு4-5 பேர் தாங்களாகவே முதலாம் வகுப்புக்கு மாற்றி தந்தார்கள்.இது தான் முதல்தடவை.கதிரை கட்டிலாக மாறியது.நீட்டி நிமிர்ந்து படுக்கலாம்.கண்ணை முழித்தா என்ன வேணும் சார் என்ற உபசரிப்பு.தண்ணி அடிக்கிறவைக்கு சும்மா கையைக் காட்டினா காணும்.இத்தனை மடங்கு பணத்தை ஏன் வாங்குகிறார்கள் என்பது அப்ப தான் புரிந்தது.

இலவச முதலாம் வகுப்பென்றபடியால் அதைஇதைக் கேட்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2019 at 1:19 PM, ஈழப்பிரியன் said:

34-EBF907-6370-48-F9-8-C24-B3-B3-D50-DAB

 

                                       அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

இல்லை அண்ணா 
அது எவ் எ எ (Federal Aviation Administration FAA) விதிமுறை   
எமெர்ஜெண்சி கதவு அருகில் இருப்பவர்கள்தான் ... ஒரு அவசர சூழ்நிலையில் 
பணிபெண்களுக்கு உதவ வேண்டும் ... நீங்கள்தான் பயணிகளில் இறுதியாக இறங்குபவரும்.
எல்லோரும் அவசரமாக இறங்க உதவிய பின்புதான் நீங்கள் இறங்க வேண்டும்.

அவர்கள் சொன்னது எல்லாம் புரிந்தது ... நான் உங்களுக்கு உதவியாக அவசர சூழலில் 
இருப்பேன் என்று சொன்னவர்களை மட்டுமே அதில் உட்க்கார விடலாம் அது விதிமுறை.

சில பணிப்பெண்கள் எங்கே அவசர நிலைமை வரப்போகிறது என்று எல்லோரையும் 
கேட்பதில்லை ... அவர்கள் கேட்டு எஸ் என்று சொன்னவர்களைத்தான் இருக்க விட வேண்டும் என்பதும் 
இல்லாத பட்ஷத்தில் வேறு ஒரு சீட்டில் மாத்தி விட வேண்டும் என்பதும் விதிமுறை. 

அதில் இருப்பவர்களுக்கு சரளமான ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதும் அதில் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான அவசர கதவில் ஒரு அனுபவ கதை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

2015 இல் துருக்கி விமானத்தில் நேபால் போனபோது துருக்கியில் இருந்து அமெரிக்கா புத்தகத்துக்கு4-5 பேர் தாங்களாகவே முதலாம் வகுப்புக்கு மாற்றி தந்தார்கள்.இது தான் முதல்தடவை.கதிரை கட்டிலாக மாறியது.நீட்டி நிமிர்ந்து படுக்கலாம்.கண்ணை முழித்தா என்ன வேணும் சார் என்ற உபசரிப்பு.தண்ணி அடிக்கிறவைக்கு சும்மா கையைக் காட்டினா காணும்.இத்தனை மடங்கு பணத்தை ஏன் வாங்குகிறார்கள் என்பது அப்ப தான் புரிந்தது.

இலவச முதலாம் வகுப்பென்றபடியால் அதைஇதைக் கேட்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

மச்சக்காரர் ஐயா நீங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.