Jump to content

விமான அவசரகால கதவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

34-EBF907-6370-48-F9-8-C24-B3-B3-D50-DAB

கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா.

                                    மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான் வைக்க வேண்டும்.

                                     நாங்கள் எப்போதும் உள்ளூர் பயணத்துக்கு சவுத்வெஸ்ட் விமானத்தில்த் தான் பயணிப்போம்.பெரிய விமானம்.இலவசமாக 50 இறாத்தல் எடையுள்ள இரண்டு பொதிகளும் கையில் கொண்டு போவதற்கு ஒரு பொதி.இன்னும் ஒரு சிறிய கணனி வைக்க என்று ஒரு புத்தகபை கொண்டு போகலாம்.கையில் கொண்டு போகும் பொதியின் அளவு சரியாக இருக்க வேண்டுமே தவிர எடையை பார்க்க மாட்டார்கள்.இந்த வசதி வேறு விமானங்களில் இல்லை.வேறு விமானங்களில் கையில் கொண்டு போகும் பொதிக்கும் பணம் அறவிட தொடங்கிவிட்டார்கள்.

                                     விமானம் புறப்படுவதற்கு கொஞ்சம் முன் அவசரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் ஒவ்வொன்றையும் எடுத்து எப்படி எப்படி போட வேண்டும் என்று சொல்லுவதற்காகவும் முன்னுக்கு பின்னுக்கு நடுவில் வந்து நின்று சகையால் செய்து காட்டுவார்கள்.எமது இருக்கைக்கு அருகில் வந்து நின்ற ஒரு தடியன் குத்தியன் எங்களையே ஒரு முறைப்பாக பார்த்தான்.பின்னர் இந்த இருக்கையில் இருக்க சட்டதிட்டம் தெரியுமா என்று தொடங்க அதற்கிடையில் விமானமும் நகரத் தொடங்க அறிவிப்பும் தொடங்கியது.எம்மோடு கதைத்தவர் அறிவிப்புகளுக்கு ஏற்ற மாதிரி சைகைகள் காட்டத் தொடங்கியிருந்தார்.

                                       முதலில் எம்மோடு கதைக்கும் போது என்னடா ஒரு காலமும் இப்படி யாரையும் கேட்டதைக் காணவில்லையே?இவன் என்ன துவேசம் பிடித்தவனோ என்று எமக்குள் கதைத்துவிட்டு சரி எதுக்கும் விமானத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று படங்களுடன் இருந்த மட்டையை எடுத்து விறுவிறு என்று அவசரகால கதவு பற்றிய விளக்கத்தை மேலேட்டமாக படித்தால் உண்மையிலேயே நாங்கள் அதிலிருக்க தகுதியானவர்களா என்று எமக்கே சந்தேகமாக இருந்தது.

                                       அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

--- அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

ஈழப்பிரியன்....  அந்த  இடத்தில், ஒரு வெள்ளைக்காரன் இருந்திருந்தால்....
அப்படி, அவர் கேட்டிருப்பாரா...?  என்பது சந்தேகமே....இப்படியான விடயம், 
அதுகும்... அமெரிக்காவில் நடக்கும் போது என்னும் போது.... கவலையாக உள்ளது.

நீங்கள் அந்தப் பயணத்தில், சமாளித்து இருப்பீர்கள்...
உங்கள் மனைவி... மிகவும்  வேதனைப் பட்டு இருப்பார் என நினைக்கின்றேன்.

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

அந்த மட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகவும் பலசாலியாகவும் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறந்து அடுத்தவரை காப்பாற்றக் கூடியவராகவும் இப்படி இன்னும் பல.அந்த இருக்கையில் நான் இருந்திருந்தா விட்டிருப்பார்.எனது மனைவி இருந்தது தான் அவருக்கு எரிச்சலூட்டி இருக்கலாம்.அந்தக் கதவை ஒருக்கா திறந்து காட்டு என்று கேட்டால் முழிசிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.உண்மையிலேயே இவ்வளவு சிக்கல் நிறைந்த இடத்தில் இருந்தது எமது பிழை.

பிரச்சனை என்னவென்றால் இந்த இருக்கையில் இருப்பவர்களுக்கு இந்தளவும் தெரியுமா என்பதே.அவர் எம்மை மட்டும் கேட்டால் பிரச்சனை என்று தான் இருபக்கமும் இருந்தவர்களுக்கும் விளங்கப்படுத்தி அவசரத்துக்கு உங்களால் செய்ய முடியுமா என்ற ஒவ்வொருவரிடமும் கேட்டார்.

3 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

மகள் வேலை செய்வது விமான நிறுவனமல்ல.போயிங் என்று விமானம் செய்யும் கம்பனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

தட்டிவான் பின் சீற்றில் இருந்தா தான் சந்தோசம்.

12 minutes ago, goshan_che said:

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

இவ்வளவு காலமும் விமான பயணம் செய்தாலும் இதுவரை அந்த மட்டையை எடுத்து பார்த்ததில்லை.இனிமேல் அந்தப்பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம்.
நல்லதொரு பாடம் கற்றுக் கொண்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

அதுக்கு எல்லா பக்கமும் அவசரகால கதவு உண்டு  என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

உண்மை தான்.
அதோடு சவுத் வெஸ்ற்ரில் இருக்கைகளை முதலே தேர்வு செய்ய முடியாது.
ஒரே ஒரு நல்ல விடயம் கூடகுறைய சாமானுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு போகலாம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

அவங்கள் பயத்திலை ஒண்டும் கதைக்கேல்லை போலை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

பிஸ்னஸ் கிளாஸ்ல அப்படித்தானாம். சொல்லக் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொறியா சென்றபோது எனக்கு அந்த இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியாக காலை நீட்டிக்கொண்டு போனேன். 😀

யாரும் எதுவும் சொல்லவில்லை

இவ்வளவு காலம் விமான பிரயாணத்தில் எங்களை மட்டுமல்ல வேறு யாரையும் இப்படி கேட்டு பார்க்கவில்லை.அதனால்த் தான் எமக்கும் தர்மசங்கடமாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிஸ்னஸ் கிளாஸ்ல அப்படித்தானாம். சொல்லக் கேள்வி.

2015 இல் துருக்கி விமானத்தில் நேபால் போனபோது துருக்கியில் இருந்து அமெரிக்கா புத்தகத்துக்கு4-5 பேர் தாங்களாகவே முதலாம் வகுப்புக்கு மாற்றி தந்தார்கள்.இது தான் முதல்தடவை.கதிரை கட்டிலாக மாறியது.நீட்டி நிமிர்ந்து படுக்கலாம்.கண்ணை முழித்தா என்ன வேணும் சார் என்ற உபசரிப்பு.தண்ணி அடிக்கிறவைக்கு சும்மா கையைக் காட்டினா காணும்.இத்தனை மடங்கு பணத்தை ஏன் வாங்குகிறார்கள் என்பது அப்ப தான் புரிந்தது.

இலவச முதலாம் வகுப்பென்றபடியால் அதைஇதைக் கேட்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2019 at 1:19 PM, ஈழப்பிரியன் said:

34-EBF907-6370-48-F9-8-C24-B3-B3-D50-DAB

 

                                       அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

இல்லை அண்ணா 
அது எவ் எ எ (Federal Aviation Administration FAA) விதிமுறை   
எமெர்ஜெண்சி கதவு அருகில் இருப்பவர்கள்தான் ... ஒரு அவசர சூழ்நிலையில் 
பணிபெண்களுக்கு உதவ வேண்டும் ... நீங்கள்தான் பயணிகளில் இறுதியாக இறங்குபவரும்.
எல்லோரும் அவசரமாக இறங்க உதவிய பின்புதான் நீங்கள் இறங்க வேண்டும்.

அவர்கள் சொன்னது எல்லாம் புரிந்தது ... நான் உங்களுக்கு உதவியாக அவசர சூழலில் 
இருப்பேன் என்று சொன்னவர்களை மட்டுமே அதில் உட்க்கார விடலாம் அது விதிமுறை.

சில பணிப்பெண்கள் எங்கே அவசர நிலைமை வரப்போகிறது என்று எல்லோரையும் 
கேட்பதில்லை ... அவர்கள் கேட்டு எஸ் என்று சொன்னவர்களைத்தான் இருக்க விட வேண்டும் என்பதும் 
இல்லாத பட்ஷத்தில் வேறு ஒரு சீட்டில் மாத்தி விட வேண்டும் என்பதும் விதிமுறை. 

அதில் இருப்பவர்களுக்கு சரளமான ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதும் அதில் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான அவசர கதவில் ஒரு அனுபவ கதை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

2015 இல் துருக்கி விமானத்தில் நேபால் போனபோது துருக்கியில் இருந்து அமெரிக்கா புத்தகத்துக்கு4-5 பேர் தாங்களாகவே முதலாம் வகுப்புக்கு மாற்றி தந்தார்கள்.இது தான் முதல்தடவை.கதிரை கட்டிலாக மாறியது.நீட்டி நிமிர்ந்து படுக்கலாம்.கண்ணை முழித்தா என்ன வேணும் சார் என்ற உபசரிப்பு.தண்ணி அடிக்கிறவைக்கு சும்மா கையைக் காட்டினா காணும்.இத்தனை மடங்கு பணத்தை ஏன் வாங்குகிறார்கள் என்பது அப்ப தான் புரிந்தது.

இலவச முதலாம் வகுப்பென்றபடியால் அதைஇதைக் கேட்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

மச்சக்காரர் ஐயா நீங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.