Jump to content

ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம் V$ ஜோமோன்டே சுவிஷேசங்கள் 


Recommended Posts

 

கதை ஒன்று  என சொல்லலாம் நடக்கும் சம்பவங்கள் மற்றும் இடம் மட்டும் வெவ்வேறு ,

கேரளாவிலிருந்து அரபு நாட்டுக்கு சென்று அங்கு தனது கடின உழைப்பால் தொழிலதிபராகும் ஒருவர் ,மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத துரோகத்தினால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்பட சட்டபிரச்சினை ஏற்பட்டு கைதாகும் ஆபத்து இருப்பதால் தலைமறைவாகிறார்.சீரும் சிறப்புமாக இருந்த வாழ்க்கை ஒரே நாளில்  தலைகீழாக மாறுகிறது,தகப்பன் தலைமறைவாகிட அம்மா கைதுசெய்யப்பட மூத்த மகனான நிவின் பாலி இதை எல்லாம் எப்படி எதிர் கொண்டு அப்பாவின் வியாபாரத்தை எப்படி தலை நிமிர்த்துகிறார் என்பதே ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம்.

ஜோமோன்டே சுவிஷேசங்கள்  
திருச்சூரில் தொழிலதிபராக இருக்கும் வின்சென்ட் அவரின் கடைசி மகன் ஜோமோன்(துல்கர் சல்மான்)  மூத்தவர்கள்  எல்லாம் வாழ்க்கையில் செட்டிலாகி விட ஜோமோன் மட்டும் பொறுப்பற்று திரிகிறார் எப்படி எனில் நாளை சகோதரியின் திருமணத்தை வைத்துகொண்டு இன்று இரவு நண்பனுடன் தண்ணி பார்ட்டி போடும் அளவிற்கு..
 அத்தோடு இல்லாமல் அவர் வீட்டு வேலைக்காரர்களே பொறுப்பில்லாமல் திரிகிறாய் என சொல்லிகாட்டும் அளவு பொறுப்பில்லாதவர்

தகப்பனிடம்  மோட்டார் சைக்கிள் வாங்க கெஞ்சி அனுமதி வாங்கி தகப்பனோ 3 லட்சம் வரையில் தான் விலை இருக்கும் என நினைத்து கொண்டிருக்கும் போது 18லட்சம் ரூபா பில்லை  தகப்பன் கையில் கொடுக்கும் அளவிற்கு  ஜாலி பேர்வளி. 

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாழ்வில் தகப்பனின் கட்டுமான நிறுவனம் தொடங்கிய புதிய கட்டட வேலைகள் சுற்றுசூழல் அமைப்பின் அனுமதி பெறவில்லை என இழுத்து மூடுகிறார்கள் ஒன்றன் பின் ஒன்றாக தகப்பனின் மற்றைய தொழில்களும் மூடுவிழா காண கடன் நெருக்கடி ஒருபக்கம் எந்த நேரமும் தகப்பன் கைது செய்யபடக்கூடிய நிலமை 

தகப்பனின் பினாமியான ராவுண்ணி ? தலையிட்டு தான் தான் உண்மையான சொந்தக்காரர் எனச்சொல்லி  தான் கைதாகி தகப்பனை கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கிறார்,
அதற்கிடையில் வீட்டு மேல் வாங்கிய கடன் காரணமாக வீடும் போக மூத்தவர்கள் 
ஒவ்வொருவராக பொறுப்புகளிலிருந்து கழண்டு கொள்ள ஜோமோன் மற்றும் தகப்பன் இருவரும் திருச்சூரிலிருந்து தமிழகத்தின் திருப்பூரிற்கு வருகிறார்கள் மோட்டார்சைக்கிளை விற்று நண்பனின் நிறுவனத்தில் பார்டனராக ஆகும் ஜோமோனிடம் நிறுவனத்தின் உண்மை நிலையை மறைத்து இவரையும் பார்டனராக்கி கையிலிருந்த பணத்தையும் இழக்க வைத்து நடுத்தெருவில் நிக்க  வைக்கிறான் நண்பன் 

,பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதை காண படம் பாருங்கள்.. முதல் பாதியில் அனுபமா பெரிதாக வேலை எதுவும் இல்லை இரண்டாம் பகுதியில் ஐஸ்வர்யா படம் முழுக்க வருகிறார் ,திருப்பூரை சுற்றியுள்ள தமிழர்களை நல்லவராகவும் உதவி செய்பவர்களாகவும் காட்டியுள்ளார்கள்.. ஒரு பாட்டில் பணக்காரர் ஆக மாறும் அபத்தங்கள் எதுவும் இல்லை, சிறிது சிறிதாக எப்படி முன்னேறிவருகிறார்  என்பதை நம்பும் விதமாக காட்டியுள்ளனர்.. இடையே மனோபாலா ஐஸ்வர்யாவின் அப்பாவாக வருகிறார் அவருக்கும் வின்சன்ட் க்கும் வரும் நட்பு.வின்சென்ட் க்கும்555 சிகரெட்க்கும் உள்ள பந்தம்..என்ன தான் பினாமி யாக இருந்தாலும் தன் நண்பனுக்காக சிறை செல்லும் ராவுண்ணி ? தன்நம்பிக்கையூட்டும் கதைகள் எனக்கு பிடிக்கும் அந்த வகையில் ஒருமுறை பார்க்க கூடிய படம் 

இப்படியான கதைகள் தமிழில் வருவதே இல்லை என சொல்லலாம் ? நான் பார்க்காமல் தவற விட்டனோ தெரியல 
மலையாளத்தின் முன்னணி நடிகர்களான நிவின் துல்கர் போன்றோர் துணிந்து இப்படியான கதைகளை தெரிவு செய்யும்போது தமிழின் பின்வரிசையில் உள்ளோர் கூட இப்படியான படங்களில் தங்களை முயற்சிக்காதமைக்கு காரணம் என்னவாக இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு...படம் பார்க்கத் தான் இருக்கு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நன்றி பதிவுக்கு...படம் பார்க்கத் தான் இருக்கு 

 

படம் பாக்க தனிய போக வேண்டாம் தங்கச்சி....காலம் கெட்டுப்போய் கிடக்கு...😎

Link to comment
Share on other sites

18 hours ago, ரதி said:

நன்றி பதிவுக்கு...படம் பார்க்கத் தான் இருக்கு 

 

ஒரு முறை பார்க்கலாம் கொஞ்சம் இழுவை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.