Jump to content

பாஸ்போர்ட் இல்லாமல்,  சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bangladesh Prime Ministers Pilot Caught Without Passport at Qatar

கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல்,  சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.

அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது வங்கதேச பிரதமரின் தனி விமானத்தை இயக்கிய ஃபஸல் மஹ்மூத் என்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாதது தெரிய வந்தது. இதுதொடர்பாக, தோஹா விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரிகள் பிமான் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, வங்கதேசத்திலிருந்து தோஹா சென்ற மற்றொரு விமானத்தில் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் பயணத்தில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக வேறு ஒரு விமானியை பின்லாந்து நாட்டிற்கு பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அனுப்பியது. மேலும், தோஹா விமான நிலையத்தில் சிக்கிய விமானி ஃபஸல் மஹ்மூத் ஓட்டலில் தங்க வைங்கப்பட்டு பின்னர் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, விமானி ஃபஸல் மஹ்மூத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸமான் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/bangladesh-prime-minister-s-pilot-caught-without-passport-at-qatar-353401.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.