Jump to content

மோடியை வரவேற்றார் ரணில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை வரவேற்றார் ரணில்!

June 9, 2019

Modi-Ranil.png?resize=800%2C450

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட்பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினர்  சென்றடைந்தனர்.

அத்துடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன் பின்னர் 11.15 மணியளவிலிலிருந்து விமானத்தை விட்டு தரையிறங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். #நரேந்திரமோடி  #பண்டாரநாயக்கசர்வதேசவிமானநிலையம் #ரணில்விக்ரமசிங்க

Modi-at-colombo.png?resize=581%2C397

 

http://globaltamilnews.net/2019/123859/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ranil-bia-modi1-720x450.jpg

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.

இதன்போது பிரதமர் வந்த விமானத்துடன், பாதுகாப்புக்காக மற்றுமொரு விமானமும் இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று வரவேற்றுள்ளார். இந்த வரவேற்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான உத்தியோப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து அவர் பகல் 12 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ranil-bia-modi2.jpg

ranil-bia-modi.jpg

bia-modi.jpg

http://athavannews.com/இந்தியப்-பிரதமர்-மோடி-இல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இந்தியப் பிரதமர் மோடி

by in செய்திகள்

St-Anthony-s-Church-modi-1-300x200.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சிறிலங்கா பிரதமருடன் சென்றிருந்த இந்தியப் பிரதமர், அங்கு இறந்தவர்களின் நினைவாக மலர் செண்டு ஒன்றை வைத்து வணங்கினார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பயங்கர செயல்களினால், சிறிலங்காவின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது, சிறிலங்கா மக்களுடன், இந்தியா , ஒற்றுமையாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார்.

St-Anthony-s-Church-modi-1.jpgSt-Anthony-s-Church-modi-4.jpg

St-Anthony-s-Church-modi-3.jpgSt-Anthony-s-Church-modi-4-1.jpgSt-Anthony-s-Church-modi-5.jpg

 

http://www.puthinappalakai.net/2019/06/09/news/38437

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

மோடியை வரவேற்றார் ரணில்!

June 9, 2019

Modi-Ranil.png?resize=800%2C450

மிடுக்கான நிலையில் மோடி. Bildergebnis für Angry+simily

பரட்டைத் தலையில் ரணில். Bildergebnis für Ugly+simily

என்னாகுமோ....! ஏதாகுமோ…!!Bildergebnis für Ugly+simily

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣

15 minutes ago, Paanch said:

மிடுக்கான நிலையில் மோடி. Bildergebnis für Angry+simily

பரட்டைத் தலையில் ரணில். Bildergebnis für Ugly+simily

என்னாகுமோ....! ஏதாகுமோ…!!Bildergebnis für Ugly+simily

இந்தியாவின் அடுத்த மாநிலம்  வடக்கு கிழக்கா அல்லது சிறிலங்காவா......தேர்வு சிங்கள மொடயாக்களே உங்களுடையது என மோடி சொல்லியிருப்பாரோ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அரசியல் எவ்வளவு கேவலமானது......... குண்டு வெடித்த இடத்திற்க்கு முதல் விஜயம்...

அது சரி ரணிலும் மோடியும் கை கூப்பிகொண்டு வழிபடுகின்றனர்....ஆனால் ரஞ்சித்தும் மற்றவர்களும் கையை பிசைத்து கொண்டு வழிபடுகினறனர்......

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சிறிலங்கா பிரதமருடன் சென்றிருந்த இந்தியப் பிரதமர், அங்கு இறந்தவர்களின் நினைவாக மலர் செண்டு ஒன்றை வைத்து வணங்கினார்.

இந்த குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்தியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் மோடி இங்கு சென்றது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

இந்த குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்தியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் மோடி இங்கு சென்றது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது!

உண்மை அதுவாக இருந்தாலும் யார் நடவடிக்கை எடுப்பது.......இந்தியாவுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றே நான் சொல்லுவேன் .....இஸ்லாமியர்கள் சொல்லுவார்கள் இந்தியா தான் காரணம் என்று ஆனால் மீண்டும் நான் சொல்லுவேன் இந்தியாவுக்கு சம்பந்தமில்லை  பாகிஸ்தானும் ..சவுதியும் தான் முக்கிய காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Modi meets TNA delegation in Colombo.

மோடிக்கு....  மைத்திரி கொடுத்த பரிசு.

அதிபர் மாளிகையில் மைத்திரிபால சிறிசேனாவை மோடி சந்தித்து பேசினார். மோடிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்த சிறிசேனா, தியான நிலையில் உள்ள புத்தர் சிலையையும் பரிசாக கொடுத்தார்.

இந்த புத்தர் சிலை வெண் தேக்குமரத்தால் ஆனது. இச்சிலை கையால் செதுக்கப்பட்டது. இச்சிலையை கையால் செதுக்க 2 ஆண்டுகளானதாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/colombo/modi-meets-tna-delegation-in-colombo-353564.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

படங்களுக்கு முகத்தை காட்டிப் பழகின மோடி இந்தப் பக்கம் படம் எடுக்க ஆள் இல்லை ஆனால் ஒரு கறுவல் தான் நிற்குது என்று முகத்தை சுழிக்கிறார்.

அந்தக் கறுவல் ஆவா வாள் வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஆளாக இருக்கும் என்றும் மோடிக்கு சந்தேகம் வந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

எல்லாத்திலும் நொட்டை  பிடிக்காதிங்கோ 

Link to comment
Share on other sites

4 minutes ago, nedukkalapoovan said:

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

பல பல தசாபத்தங்களாக தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த புனித அந்தோனியார் தேவாலயம் சில தசாபத்தங்களின் முன்னர் வலுக்கட்டாயமாக சிங்களக் கத்தோலிக்க காடையர்களால் அபகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கொச்சிக்கடையில் வாழும் தமிழரிடம் விசாரித்துப் பார்த்தல் மல்கம் ரஞ்சித் கும்பலின் காடைத்தனம் தெரியும்!

Link to comment
Share on other sites

மோடி குஜராத் படுகொலைக்கு பேர் போனவர் என்பதை பலர் இலகுவில் மறந்து விடுகிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் – முழுமையான தொகுப்பு

mod-sl.jpg

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தினூடாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரச பிரதானிகள் வரவேற்றனர்.

D8nX1TWVsAAIN8H.jpgசெங்கம்பள மரியாதையுடன் பாரம்பரிய கலாசார முறைப்படி அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவேட்டிலும் கையொப்பமிட்டார்.

இதனையடுத்து, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பை வந்தடைந்த அவர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முதலாவதாக விஜயம் செய்திருந்தார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி

mod-ji.jpgஇதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேராயர் கர்த்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, அருட்தந்தையர்கள் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் உள்ளிட்ட அதிகாரிகளும் வருகைத் தந்திருந்தனர்.

இங்கு, மலர் வைத்து பிராத்தனையில் ஈடுபட்ட நரேந்திர மோடி, தாக்குதலையடுத்து தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் புனித அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டதோடு, குண்டுத் தாக்குதல் தொடர்பிலான புகைப்படத் தொகுப்பையும் பார்வையிட்டிருந்தார்.

பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது

தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, இலங்கை விரைவில் மீண்டெழும் என நான் நம்புகின்றேன் என்றும் பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என்றும் இலங்கையில் உள்ள மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

கொட்டும் மழையினில் மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

D8muFYKVsAI9Y2j.jpgஇதனையடுத்து, அணிவகுப்பு மரியாதையுடன் அவர், ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனால், கொழும்பு மற்றும் அதனை அண்டியப் பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த இவருக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிங்களப் பாரம்பரிய கண்டி நடனத்துடன் இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதோடு, 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு அதியுயர் மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, முக்கிய அதிகாரிகளும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுடன் மோடி விரிவான கலந்துரையாடல்

D8m_GFOV4AA7mhU.jpgஇதனை அடுத்து இடம்பெற்ற மத்திய விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோருடனும் அவர் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

தமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி வருமாறு கூட்டமைப்பினருக்கு மோடி அழைப்பு!

D8m_yv9UYAApnhv.jpgமேலும் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். அந்தவகையில் இந்த விடயங்கள் குறித்து புது டெல்லியில் ஒரு விரிவான கூட்டம் நடத்தவும் மோடி ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர் இலங்கைக்கான தனது குறுகிய நேர பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுச் சென்றார். இவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழியனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/பிரதமர்-மோடியின்-இலங்கை/

Link to comment
Share on other sites

On 6/9/2019 at 4:33 PM, தமிழ் சிறி said:

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

இதைத்தான் பேந்த பேந்த முழிக்கிற என்டு சொல்லுவாங்களோ?
இந்தியாட கறுப்பு பூனை படைக்கு இப்பிடி ஸ்டைலா உடுப்பு போடலாமோ என்டு நோட்டம் விடுறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.