Jump to content

என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்

_20185_1559302041_A9CA4F88-FD35-4A93-80AB-67CFD3EC89A7.jpeg

முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்

விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவுஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இதுஅவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாதுதமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள்அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் இறுதியான மருத்துவமனையைஅதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்டமருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றியமருத்துவப் போராளி அலன்  அவர்களின் நேர்காணல்.

மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும்மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன?

பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையில் தான் இருந்ததுபெரும் காலங்கள்அங்கே சத்திர சிகிச்சைகூடங்களிலையே மக்களுக்கானசிகிச்சைகளை வழங்கி வந்தேன்அத்தோடு கடற்புலிகளின்படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன்அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளானநெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள்இயங்கியபோது அம் மருத்துவமனைகளிலும் என் பணிவிரிந்திருந்தது.

மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றிகூறுங்கள்.

உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும்மருத்துவ வளங்கள் குறைவுஅதாவது மருத்துவர்களோஅல்லது மருத்துவப் பொருட்களோ எமக்குத் தாராளமாகக்கிடைப்பதில்லைஅதனால் மக்களுக்கான மருத்துவப்பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலைமையின்ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள்கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டுதொடங்கினோம்அங்கே வாழ்ந்து வந்த அரசமருத்துவர்களின் ஆலோசனைகளும்உதவிகளும்பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத்தொடங்கினோம்.

இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன்நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பதுஉச்சமாக இருக்கும்மருந்தைவிட ஒருவரின் மனதில் 'நீவருத்தக்காரன் இல்லைஎன்ற நினைப்பை ஊட்டினாலேபெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும்இதுபண்டைய காலங்களில் இருந்து வந்த மரபுஅதைப் போலஅங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும்சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கிநின்றார்கள்.

பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரசமருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியதுஅதுஎவ்வாறு சாத்தியமானது?

இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாகஇருந்ததுபெரும்பாலான அரச மருத்துவமனைகளில்இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தனசத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டதுஇலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாககொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடுஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனானமருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாகஇருந்தது.

அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்துபணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

இல்லை என்றே நான் கூறுவேன்அவர்களும்நாங்களும்இணைந்துதான் அதிகமான காலங்களில் பணியாற்றிஇருக்கின்றோம்அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின்மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களைஉருவாக்குவதில் இருந்ததுஅதேநேரம் அவர்கள்மக்களுக்கான மருத்துவப் பணியிலோபோராளிகளின்மருத்துவப் பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள்ஆனால்அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோஎமதுநிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாகபங்கெடுத்தது இல்லைமக்கள் பணிக்காக நாம்இணைந்திருந்தோம்

மருத்துவ தடைபொருளாதாரத் தடை என்பன இறுக்கமாகஇருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறுஇயக்கினீர்கள்?

இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்டமருத்துவமனைஅதனால் எமது படையகமருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல்மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப்பிரச்சினைகளை நாம் கையாண்டோம்அதற்காக எமதுபிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப்பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின.

பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார்மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காதநிலையில்)அனைத்து வகையான மக்களும் சிகிச்சையைபெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறுகையாண்டீர்கள்?

எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கானசுதந்திரத்துக்கானதுஇதில் சிகிச்சைக்காக வரும்மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாகஎதிர்பார்க்கவில்லைமிக அவசரமான அல்லது முக்கியமாகசெய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவேசெய்தோம்அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சைபெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவசமருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகைமக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம்.

இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போதுபொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின்வான்படை தாக்குதலை மேற்கொண்டதுஅப்போது அங்கேஎன்ன நடந்தது?

புதுக்குடியிருப்பு மருத்துவர் பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையைப் பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம்விடுதிகள்வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதிஎன பல பகுதிகளை கொண்டிருந்ததுஅதில் இறுதி நேரம்எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமதுவான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால்அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சைக்கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில்சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்துஅங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம்

அதேநேரம்மல்லாவிஅக்கராயன்குளம்முல்லைத்தீவுகிளிநொச்சிமற்றும் நட்டாங்கண்டல் போன்றமருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன்பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம்அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில்தாமதம் ஏற்பட்டிருந்ததுஅந்த நிலையில் தான் எமதுமருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலைசெய்ததுஅதில் 60 இற்கும் மேல் மக்கள் சாவடைந்தார்கள்பலர் காயமடைந்தார்கள்.

இத்தாக்குதல் திட்டமிட்டு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரசமருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா?

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்லவழமையாகவேசிங்கள தேசம் செய்கின்ற விடயம்தான்அதுவும்மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்தபோதும் ( சிவப்பு நிற  குறியீடுஎந்த மனச்சாட்சியும்இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுசிங்களப்படைகள்.

அத் தாக்குதல்களில் மருத்துவர்கள்நோயாளர்கள் அல்லதுபணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா?

ஓம்..., பல தடவைகள் நடந்திருக்கின்றதுஇறுதிச்சண்டையில்கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால்கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம்புதுக்குடியிருப்புஉடையார்கட்டுவள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாகமுள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடத்தியதுஇனவாதப்படைஇவ்வாறான தாக்குதல்களில் பலமருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள்அதிலும் பலமருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சைவழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் வீரச்சாவடைந்தார்கள்.

குறிப்பாக மேஜர் அல்லிசெவ்வானம்இறையொளி என்றுஎமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம்மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும்சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள்மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள்மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருந்ததுஇதுஉண்மையா?

ஓம்புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்டமல்லாவிஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தபோது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக்கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததுஅப்போதுமருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப்படைகள் தாக்குதலை நடத்தினஅந்த நிலையில் பலநோயாளர்கள் இறந்து போனார்கள்.

நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில்பணியில் நின்றேன்எனக்கு தகவல் ஒன்று வந்ததுஉடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறுபணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்ற மருத்துவஅதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துபின் நகர்ந்திருந்தனர்அங்கிருந்து வெளியேறும்போது பலமருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல்தெரிவித்ததுஅதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான்இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தேன்

அப்போது அங்கே சிறுவர்கள்பெரியவர்கள் என்றவித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்துபோயிருந்தார்கள்அவர்களைக் கடந்தே நான் மருந்துக்களஞ்சியம்மருத்துவர் விடுதி என அனைத்துஇடங்களையும் அலசி அம்மருந்துகளை எடுத்து வந்தேன்ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரானசமன்குமார ராமவிக்ரமஅடுத்த நாள் அரச செய்திஊடகமான ரூபவாகினியில் விடுதலைப் புலிகள் தங்கி நின்றமருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார்.

இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாகக் கூற முடியும்எம்போராளிகள் இறுதி நேரத்தில்கூட வீரச்சாவடைந்தபோராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதைவிரும்புவதில்லைஅதேநேரம் புதுக்குடியிருப்புமருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல்நடத்தியபோது எமது படையணிகள் தங்களது நிலையைபுதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதிக்கு அருகில்அமைத்திருந்தார்கள்இந்த நிலையில் எம் போராளிகள்வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டுவர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும்கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லைஅதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்ததுப்பாக்கிகளும் இருக்கவில்லைதளபாடங்கள் மட்டுமேஉடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது.

அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள்என்பதற்கு நான் ஒரு சாட்சி.

புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும்போது புவியியல்நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா?

எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளைநிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (புPளு– புடழடியட Pழளவைழைniபெ ளுலளவநஅ ) சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் (ஐஊசுஊ ) ஊடாகக் கொடுப்போம்அதை விட கூரைகளில் சிவப்பு நிற குறியீட்டைவரைந்திருப்போம்இவற்றை வைத்துக் கொண்டேதிட்டமிட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்சிங்களப்படைகள்என்னைப் பொறுத்தவரை நாம்அமைவிடத்தை அடையாளப்படுத்திய பின்னரே அதிகமாகதாக்குதலை நடத்தினார்கள்.

நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவிஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்தபோது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில்நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன்அந்த ஒரு வாரமும்எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லைஆனால் ஒருவாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என் பொறுப்பில் இருந்த அம்மருத்துவமனைக்கும் தாக்குதல் நடத்தப்பட்டதுஉண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்ததுமட்டும்தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும்.

அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்குநேரடியாக உந்துகணையால் (சுPபு ) தாக்குதல்நடத்தப்பட்டதுஇவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டபின்பே மருத்துவமனைகள் அதிகமாகத் தாக்கப்பட்டனஅதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்றுஅறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்ததுஇதுஇறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது

உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டஇடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின்நிலை?

இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 எனபடிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறதுஅதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்துசென்றார்கள்அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச்சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்துமக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள்ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கிஅழிக்கப்பட்டதுகுடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக்கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்ததுசிங்கள அரசு.

உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்டஉடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்புவலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலைசெய்தார்கள்அப்போது உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக்கொண்டிருந்ததுஅம் மருத்துவமனையை குறி வைத்துபெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்ததுசிங்களப்படைகள்உடையார்கட்டுச் சந்தியில் இருந்துபுதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒருகிலோமீற்றர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகைநினைவில்லைமக்களை கொன்று குவித்ததுபாதுகாப்புவலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள்அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களைசாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில்வைத்து செய்கிறது சிங்களப்படைஅப்போது 20 பேருக்குமேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள்காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்துமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன்இறந்தஉடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களைதென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காகவெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன்அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்புவலயங்களில் நடந்தது

இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும்இவ்வாறுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம்செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும்.

இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள்ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதிகேட்டிருந்தார்கள்அதாவது தென் இலங்கை பகுதிகளில்வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால்எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவதுகுறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்புமுனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறுதயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும்அதே நேரம்தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச்சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும்அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தஅனுமதி கேட்டார்கள்

தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்குஅமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள்சிங்களவல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன்மட்டும் சண்டையிடுங்கள்நிராயுதபாணிகளாக இருக்கும்அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும்ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடத்த வேண்டாம் என்றுபணித்தார்இவ்வாறுதான் எம் தலைவர் மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுத்தார்சிங்கள அரசைப் போலகொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களைகொன்றொழிக்கவில்லைஅதே வேளை எம் பராமரிப்பில்எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதைஇச்சிங்கள அரசு அறியாது

விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு காயப்பட்ட சிங்களஇராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்?

நிச்சயமாக விடுதலைப் புலிகளின் மருத்துவர்களுக்குதலைவர் வலியுறுத்துவது இதைத்தான்எதிரி என்றாலும்அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள்போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்றுஅதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடுகளத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்தபோது அவர்களையும்எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம்

இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவத்தினர்சிகிச்சை பெற்றார்கள்அதில் இருவர் மேஜர் தரஅதிகாரிகளாகவும்ஒருவர் லெப்டினன்ட் தரஅதிகாரியாகவும்மிகுதியானவர்கள் கோப்ரல் தரபடையினராகவும் இருந்தார்கள்அதை விட இவர்கள்என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிறுதலைஎன்பவற்றில் பெரும் காயங்களுடனே வந்தார்கள்இவர்கள்பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்துகாப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள்அதில்மூவர் .சி.ஆர்.சிஊடாக சிங்கள அரசிடம்கையளிக்கப்பட்டார்கள்ஏனைய மூவரும் விடுதலைசெய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்தகாரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில்தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்

இவர்கள் மட்டும்தானா இருந்தார்கள்?

இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள்அதைவிட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பலஇராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம்அதேநேரம்விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாகபலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்கவைத்திருந்தோம்எனக்குத் தெரிய பலர் அங்கேஇருந்தார்கள்

உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள்போதுமான அளவில் இருந்ததா?

இல்லைஉணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப்போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்ததுசிங்கள அரசுஅதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள்கையிருப்பில் இல்லைஅதே நேரம் கைவிடப்பட்டபுதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டுவந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்துவந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்ததுஅதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை

வலிநிவாரணிதொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லைஅதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக்குளிசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல்போயிருந்ததுஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவினஅதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும் நுஒவநசயெட குiஒயவழைகள் கையிருப்பு இல்லாதநிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துஎடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாகஇருந்தது.  

சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள்உணவுக்கு பெரிதும் சிரமப்பட்டிருப்பார்களே.?

நிச்சயமாகநான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்தசண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாககாட்டியது என்றே கூறலாம்அதாவது பண்டமாற்றுப்பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள்செய்திருந்தார்கள்அதாவது பணம் என்ற பரிமாற்றுச்சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக்கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்ததுஅவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாககையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள்உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்டமக்கள்தான் அதிகமாக இருந்தார்கள்உழைப்புக்கு பணம்வாங்க மறுத்தார்கள்பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத்தாளாகவே இருந்ததுஒரு சோற்றுப் பருக்கைதான் அங்குபெறுமதியாக காணப்பட்டதுஇவ்வாறுதான் மக்கள்வாழ்ந்தார்கள்உண்ண உணவில்லை.

தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றைநடைமுறைப்படுத்தியதால்தான் பசியில் சாவடைந்தமக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுஇல்லைஎன்றால் பசியில் அங்கிருந்த அனைவருமேஇறந்திருப்பார்கள்.

இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறுகையாண்டீர்கள்?

உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அதுசண்டைதொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிநகர்ந்து வந்துவிட்டோம்நான் வட்டுவாகல் பகுதியில்இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாகமாற்றி இருந்தேன்அதனை சுற்றி சிறு கிடங்குகளைபதுங்குகுழி போல உருவாக்கிமேலே தறப்பாளைகட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம்இதுதான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை.

எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்?

எல்லா வகையான காயங்களும் வந்தனநான் இறுதியாகவட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால்முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தனஅதைவிட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத்தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தனஇறுதிக்காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும்இராணுவம் பயன்படுத்தி இருந்தான்.

இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கிநின்றார்களா ?

காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையைசுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள்அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வுசெய்து நாம் சிகிச்சை வழங்குவோம்உதாரணமாகஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும்என்றால் உடனடியாக அதை செய்தோம்சிகிச்சை செய்தும்பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும்காயக்காரர்களை இரத்தத்தை கட்டுப்படுத்திஅவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டுஏனைய காயக்காரரை கவனிப்போம்வேறு ஒன்றையும்செய்ய முடியாத நிலை.

மிகக் கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிரவேண்டும்ஓர் இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்குகால் மற்றும் கைகளில் காயம் இருந்ததுஅதனால்சத்திரசிகிச்சை செய்து அவரை அதற்குப் பின்னானசிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ்சிறிய மருத்துவ பதுங்குகுழிக்குள் படுக்க வைத்திருந்தேன்அப்போதுதிட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீதுசிங்களப் படைகள் செய்தனஅத் தாக்குதலில் 50 இற்கும்மேலான மக்கள் இறந்தனர்அதேநேரம் 6 போராளிகள்வீரச்சாவடைந்தனர்பல மக்கள் மீண்டும்காயமடைந்திருந்தனர்அதில் அவனும் ஒருத்தன்.

அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான்.

“ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்...” என்றுகத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடிவருகிறான்இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியேவிழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றனஎனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒருநிலையில் இருக்காதுஅப்போது எங்களின் போராளிமருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார்அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சைடுயியசழவழஅல செய்வதற்காக தயார்படுத்தினேன்மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்தஇளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம்அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம்தேவைப்பட்டதுஅதை தருவதற்கு அங்கே யாராலும்தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளிஉயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறதுஅக்குருதியைவைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம்.

இதைப் போலவே இன்னும் ஒன்றுசிறு பிள்ளை ஒன்றுதலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்குகொண்டுவரப்படுகிறாள்அவளைக் கொண்டுவந்தது அவளதுபேரன்அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியைகாப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார்பரிசோதித்த நான்அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்ஆனால்முடியவில்லைஅவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம்தெரியப்படுத்தலாம் என்று வந்த போதுஅவர் அந்த வீட்டுவாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார்அப்போதுசிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறதுஅத்தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன்அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார்இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது.

அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என்குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியைகொடுத்துமக்களைக் கொண்டு வெட்டிய ஒருபதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்தமக்களைப் புதைத்தேன்கடுமையான தாக்குதல்கள்நடத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றிப் பல மக்கள்இறந்திருந்தார்கள்எம்மால் எதையும் செய்ய முடியவில்லைஉடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல்அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்தபதுங்குகுழியில் புதைத்தோம்பண்டமாற்றுபொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்றுகொடுமையான இச்செயலையும் தந்திருந்தது.

இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது?

காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டுசண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில்இருந்தார்கள்ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும்அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும்என்பதில் குறியாக இருந்தார்கள்.

இறுதி நாள் என்ன நடந்தது ?

16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும்அதிகமான மக்களும் இருந்தார்கள்பெரும்பாலும் கால்உடைவுக் காயங்கள் தான் அதிகம்அவ்வாறான நிலையில்அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “அப்பாஅம்மாஉறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக்கூடியவர்கள் போங்கோ என்றுஅப்படி போனவர்கள்ஓரிரண்டு பேர் தான்மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள்

இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைஇராணுவம் சுற்றிவளைத்து விட்டதுஅதன் பின் அங்கேஎதையும் செய்ய முடியாத சூழல்முடிவெடுக்க முடியவில்லைஎன் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள்அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல்நான்அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின்குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது,

“ டொக்டர் நீங்களும் எங்களை விட்டிட்டு போகப்போறீங்களா...” என்று ஒரு தம்பி கேட்டான்என்னால்அவனுக்கு எதை செய்ய முடியும்அவர்களை எப்படிகாப்பாற்ற முடியும்என்னால் ஒரு முடிவும் எடுக்கமுடியவில்லைஅவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டுவருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கிசெல்கிறேன்அங்கே நண்பனின் குடும்பத்திடம் என்குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குவருகிறேன்

என்னால் அந்த இடத்துக்கு கிட்டப் போக முடியவில்லைஅவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள்எப்படியோ நான்அங்கே போய் சேர்கிறேன். 150-200 மீற்றர் தூரத்தைக்கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்துபடுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள்இவ்வாறுமருத்துவமனைக்குப் போய் சேர்ந்தபோது அப் போராளிகள்மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான்இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும்அதனால்அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள்.

நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச்செல்லுமாறு பணித்தேன்அதன் பின் அப்போராளிகளோடுபேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும்கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்ததுஅவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள்அதனால்அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போதுஒரு தம்பிடொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோடபிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாகப் போறன்என்றான்அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குதெரியவில்லைஅவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்றுஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன்அதேவேளை அங்கேஇருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான்உணர்ந்தேன்அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைக்காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில்கேட்கிறது.

நான் என்ன செய்ய முடியும்எதையும் முடிவெடுக்கமுடியாதவனாய் நின்றபோது என்னுடன் பணியாற்றிய ஒருசகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார்அவரைக்கூட்டிக் கொண்டு போய் என் மனைவிமகனோடு விடலாம்என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோது பெரும் தொகையான 60 எம்.எம்எறிகணைகள் எம்மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன்அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலானஎறிகணைகள் வெடித்துச் சிதறினஅத்தனையும்மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணைஎன்பது எனக்கு புரிந்து போனது

தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்தஎன்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர்ஆனாலும் நான்காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக்கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன்அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பிவந்திருந்தான்

'மச்சான் உன்னோட இடத்துக்கு 60எம்.எம்மால பராச்பண்ணி விட்டான்எதுவும் மிஞ்சவில்லைஎல்லாமே சிதறிப்போய்விட்டதுஒருத்தன் கூட உயிரோட இல்லஅவன்தெரிஞ்சுதான் அடிச்சிருக்கான்."

எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம்கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல்கதைத்துவிட்டு வந்த அப்போராளிகளையும் மக்களையும்காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு விநாடிகளும் இப்படிசிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனதுஎன்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை

மனைவிமகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லைமன நெகிழ்வோடு நான் இருந்தபோது நண்பனும் மற்றசகோதரனும் என்னை தம்மோடு வருமாறுகட்டாயப்படுத்தினர்அதற்குமேல் அங்கே ஒன்றும் இல்லைஎன்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்றநினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப்பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன்.

_20185_1559302041_EF148A3C-EE99-408A-97C

 

_20185_1559302041_6EC8555A-76A5-4370-9C0_20185_1559302041_1E871F8A-378E-46E9-966

 

_20185_1559302041_8926C92F-1BAE-4D3F-905

 

_20185_1559302041_587CF636-9BAA-4838-BB9

http://www.battinaatham.net/description.php?art=20185

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.