Jump to content

மதமும் மனிதர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதமும்  மனிதர்களும்
_____________________

உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள்  சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது .

 

இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக 
இருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது .

 

ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே .

 

மதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு 
சமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact).
ஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார 
எந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள்  அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன்  படி படியாக உலக நாகரீகம்  வளர்ச்சி கண்டது .

 

அரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் .

 

முதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்டவனை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் .

ஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் .

 

 

மனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது.
Civilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற
யாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும்.

முற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி  புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் மதகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா .

B.Uthayakumar/Oslo

Link to comment
Share on other sites

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2019 at 3:06 PM, ampanai said:

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

On 6/9/2019 at 2:28 PM, அருள்மொழிவர்மன் said:

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.