Jump to content

தமிழரின் பூர்வீக குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதியால் திறந்துவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பூர்வீக குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Mullaitivu-Aamaiyan-Kulam.jpg

தமிழ் மக்களின் பூர்வீக கிராமமும் குளமுமான ஆமையன் குளம் என்ற குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆமையன் குளத்திற்கு ‘கிரி இப்ப வெவ’ என சிங்கள பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் நேற்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவுவும் உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு வந்துள்ளது.

ஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்கள மயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.

Mullaitivu-Aamaiyan-Kulam-2.jpg

Link to comment
Share on other sites

இவ்வாறான செய்திகள் தொடருகின்றன, எம்மிடம் பதில்கள் இல்லை. 

ஆயுங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் தீர்வு வருமென்பதும்,  அதை கூறியவர்களும் அடுத்த கட்ட கதைக்கு சென்று விட்டார்கள்.

சாதாரண தமிழ் மகளை இல்லை மகனை நம்பிக்கையையும் உணர்வையும் இழக்காமல் வைத்திருக்கு ஆதி மட்டத்தில் உள்ள தமிழர்கள் தான் முயலவேண்டும்.     அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளங்களை பலப்படுத்தல் வேண்டும். 

இருக்கும் குளங்களை, ஊர்களை, நிலங்களை பலப்படுத்தல் வேண்டும். 

தமிழர்களில் உணர்வுள்ளர்வர்கள் சட்டம் படிக்கவேண்டும், படித்தவர்கள் , வழக்குகள் தொடரால் வேண்டும். 

ஒரு சிங்கள இராணுவ அதிகாரி கூறிய தமிழ் மூலம், குறிப்பாக தமிழக சினிமாவை சிங்களத்தில் 'டப்பிங்' செய்து சிங்கள வீடுகளுக்கு எடுத்து செல்லலாம். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இவ்வாறான செய்திகள் தொடருகின்றன, எம்மிடம் பதில்கள் இல்லை. 

ஆயுங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் தீர்வு வருமென்பதும்,  அதை கூறியவர்களும் அடுத்த கட்ட கதைக்கு சென்று விட்டார்கள்.

சாதாரண தமிழ் மகளை இல்லை மகனை நம்பிக்கையையும் உணர்வையும் இழக்காமல் வைத்திருக்கு ஆதி மட்டத்தில் உள்ள தமிழர்கள் தான் முயலவேண்டும்.     அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளங்களை பலப்படுத்தல் வேண்டும். 

இருக்கும் குளங்களை, ஊர்களை, நிலங்களை பலப்படுத்தல் வேண்டும். 

தமிழர்களில் உணர்வுள்ளர்வர்கள் சட்டம் படிக்கவேண்டும், படித்தவர்கள் , வழக்குகள் தொடரால் வேண்டும். 

ஒரு சிங்கள இராணுவ அதிகாரி கூறிய தமிழ் மூலம், குறிப்பாக தமிழக சினிமாவை சிங்களத்தில் 'டப்பிங்' செய்து சிங்கள வீடுகளுக்கு எடுத்து செல்லலாம். 

ஆயுதப் போராட்டம் தராத தீர்வை உங்கள் ஆலோசனைகள் தருமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

ஆயுதப் போராட்டம் தராத தீர்வை உங்கள் ஆலோசனைகள் தருமா? 

தெரியாது, ஆனால் எதையோ கூறவேண்டும் என தோன்றியது. 

ஒரு தனிப்பட்ட இன உணர்வாளனாக , சமூகமாக , இனமாக நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய தேவையும் எதையாவது செய்யவேண்டிய கடமையும் உள்ளது. 

தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரை அற வழி தொடக்கம் ஆயுத வழி வரை முயன்றோம், தொடந்தும் முயற்சிப்போம். எத்தனை தடவை தோற்றோம், ஏன் தோற்றோம்  என்பதில் பாடங்கள் படித்து அத்தனை தடவையும் எழுந்தோம் மீண்டும் முயற்சிப்போம் என்பதே முக்கியம்.  

கள உறவு ஒருவரின் கையொப்பம் கூறி நிற்ப்பதும் ஒரு பாதை :  ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். 

இறுதியில் எமது வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள், இழப்புக்கள் இருந்திருக்கும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.