Jump to content

மதுபோதையில் வரும் கணவனை நித்திரையிலேயே அடித்துக் கொன்ற மனைவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யும் கணவனை, உறக்கத்தில் வைத்து தலையில் இரும்பால் தாக்கி மனைவி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் இன்று (9) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆறுமுகன் ஜெயராமன் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவரை இரும்புக்கம்பியால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் அவர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

http://www.pagetamil.com/58620/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தி......

இஞ்ச பாரு பேச்சு பேச்சா... இருக்கணும்......... பொருள் எல்லாம் எடுக்கப்படாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வீட்டிலை கிடக்கிற சுத்தியல் குறடு பாக்குவெட்டி  வெங்காயம் வெட்டுற சின்னக்கத்தி கத்திரிக்கோல் எல்லாத்தையும் ஒரு அலுமாரிக்கை வைச்சு ஆமைப்பூட்டு  போடவேண்டிய கட்டாயத்துக்கு  நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்...😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.