Jump to content

மோடி அரசாங்கமும் தமிழர் பிரச்சினையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசாங்கமும் தமிழர் பிரச்சினையும்

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றையதினம் கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னதாக சனிக்கிழமை இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரி ஒன்று "குண்டுத்தாக்குதல்களுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி தெரிவிக்கும் பல செய்திகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. 

D8nI89yUwAAF2LH.jpg

அந்த பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஒருவர் தனது நாட்டு பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு வந்து இங்கிருந்தே அந்த கட்டுரையை எழுதியிருந்தார். இங்கு அவர் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் என்று பலதரப்பினருடனும் பேசி அறிந்துகொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக அக்கட்டுரை அமைந்திருந்தது.

மோடியின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பற்றி நன்கு தெரிந்த அரசாங்க அதிகாரியொருவர் இந்த பத்திரிகையாளருடன் பேசியபோது, மோடி இலங்கை அரசாங்கத் தலைவர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடக்கூடிய விடயங்களைப்பற்றி மேலோட்டமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். 

அப்போது அவர் இலங்கையில் 'தமிழர் பிரச்சினை முக்கியத்துவமற்றதாக ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறினாராம். அத்துடன் ராகுல் காந்தியும் அவரை ஆதரிக்கும் தமிழ்நாட்டு கட்சிகளும் இந்தியாவில் ஆட்சியதிகாரத்துக்கு வராமல்போனது இலங்கைக்கு எவ்வளவோ நல்லதாகப் போய்விட்டது என்று இலங்கை தலைவர்களிடம் மோடி சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறியதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஏதோ ராகுல் காந்தி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு கட்சிகளின் நெருக்குதலால் இலங்கை அரசாங்கத்துக்கு அவர் தொந்தரவு கொடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று அந்த இலங்கை அதிகாரி எண்ணினார் போலும். அதை வாசித்தபிறகு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குறைந்தபட்சம் மிக அண்மைய கடந்த காலத்தையாவது ஒரு மீள்பார்வைக்குள்ளாக்கும் அக்கறை பிறந்தது.

இருவாரங்களுக்கு முன்னர் முன்னரைக் காட்டிலும் பெரிய பெரும்பான்மைப் பலத்துடன் மோடி இரண்டாவது பதவிக்காலத்துக்கு பிரதமராக வந்தபோது இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க அவர் உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்றையதினம் மோடியை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழர் பிரச்சினையின் இன்றைய நிலையை எடுத்துக்கூறி இந்தியாவிடமிருந்து தமிழர்கள் எதிர்பார்ப்பதையும் விளக்கியிருப்பார் என்று நம்பலாம்.

இச்சந்தர்ப்பத்தில் மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் அவரது அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்தது என்பதை ஒருகணம் நோக்கவேண்டும். அந்த அணுகுமுறையை முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவுடன் நடத்திய சந்திப்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை விட வேறு எதுவும் பிரகாசமாக விளங்கவைக்காது.

இன்று மோடியின் புதிய அரசாங்கத்தில் ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரான அவர், இந்தியாவின் வரலாற்றில் வெளியுறவு அமைச்சராக வந்திருக்கும் முதல் வெளியுறவுச்செயலாளர் மாத்திரமல்ல, வெளியுறவு அமைச்சராக வந்திருக்கும் முதல் தமிழருமாவார். 

சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராக சில வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய தி.ராமகிருஷ்ணன் கடந்த வருட ஆரம்பத்தில் " ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் " என்ற தலைப்பில் 1987 இந்திய -- – இலங்கை சமாதான உடன்படிக்கை பற்றி ஒரு நூலை எழுதிவெளியிட்டார். அவர் அந்த நூலின் முதல் அத்தியாயத்தை தொடங்கும்போது 2017 முற்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களை தவிர்க்கமுடியாமல் குறிப்பிடவேண்டியிருந்தது.ஏனென்றால் சமாதான உடன்படிக்கை பற்றிய மோடியின் முதல் அரசாங்கத்தின் மனநிலையை மாத்திரமல்ல தமிழர் பிரச்சினையை அது எவ்வாறு பார்க்கிறது என்பதையும் அந்த கருத்துகள் வெளிச்சம் போட்டுக்காட்டின.

சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் தூதுக்குழு ஜெய்சங்கருடன் நடத்திய அந்த சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம் குறித்து அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு கடப்பாடு இருப்பதால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் புதுடில்லி கேட்கவேண்டும் என்று பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப்போவதில்லை.1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு நிகழ்வுப்போக்குகள் நடந்தேறிவிட்டன.  இணைப்பை மீண்டும் செய்வது இக்கட்டத்தில் கஷ்டமானது. கடந்த காலத்துக்கு திரும்பிச்செல்லமுடியாது. அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகல விவகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பிரச்சினைக்கு பணயமாக வைத்திருப்பது விவேகமான செயலாக இருக்காது. இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில்  இணைப்பு விவகாரத்தை தமிழர்கள் தொடர்ந்து முக்கியத்துவப்படுத்தினால் இந்தியாவுக்கு ஆட்சேபனை இல்லை.காலத்துக்கு காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது.அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டுவிடவும் கூடும்" என்று கூறினார்.

ஜெய்சங்கர் அன்று இலங்கை வந்தபோது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு  உருவாக்கச்  செயன்முறைகளை முன்னெடுத்திருந்தது. அதை ஒரு வாய்ப்பு என்று வர்ணித்த அவர் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இயன்றவரை அதைப் பயன்படுத்தவேண்டும் என்றும் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார். இப்போது அந்த அரசியலமைப்பு உருவாக்கச்செயன்முறைகள் தடைப்பட்டுப்போயிருக்கின்றன. தமிழர்கள் பயன்படுத்தக்கூடியது என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்த அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இப்போது அவர் தமிழர்களுக்கு என்ன சொல்வாரோ? 

தமிழர் பிரச்சினை என்று வரும்போது இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவொரு நெருக்குதலையும் இனிமேல் பிரயோகிக்கப்போவதில்லை அல்லது நெருக்குதலைப் பிரயோகிக்கவேண்டும் என்று தமிழர்கள் இனிமேல் எதிர்பார்க்கக்கூடாது என்பதே ஜெய்சங்கரின் அன்றைய செய்தியாக இருந்தது. தங்களது பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கக்கூடியவற்றின் மட்டுப்பாடுகளை தமிழர்கள் புரிந்துகொண்டுதான் தங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே ஜெய்சங்கரின் தெளிவான செய்தி. வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தமிழர் பிரச்சினை குறித்து கருத்தை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு இன்னமும் ஏற்படவில்லை.

வீ.தனபாலசிங்கம்

 

 

http://www.virakesari.lk/article/57896

Link to comment
Share on other sites

பதினைந்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்த கூட்டமைப்பினருடன், மோடியின் செய்தி ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை. டெல்லிக்கு கூட்டமைப்பை வரவழைத்த மோடி, ஜெய்சங்கரின் அறிவுரையுடன் என்ன செய்வார் என தெரியயவில்லை. அவர்களை பொறுத்தவரையில் மாலைதீவு, இலங்கையை விட முக்கியம் பெற்றுள்ளது.   

ஜெய்சங்களரின் முதல் பேச்சு அவர்கள் ஒரு மெதுவான வெளிவிவகார அரசியலை கொண்டுள்ளதாக தெரிகின்றது. ஜெய்சங்கர் இந்தியாவின் அதிகூடிய காலம் சீனாவில் இந்திய தூதுவராக இருந்தவர். அமெரிக்காவிலும், உருசியாவிலும் இருந்தவர். 

இன்றும் சீனாவின் பக்கம் சார்ந்த சிங்கள இலங்கை, இந்தியாவிற்கு பாதமான நிலையை தொடவில்லை என்பதை இது உணர்த்துகின்றது. அந்த நிலை வரும்பொழுதும் கூட சிங்கள அரசியலுக்குள் தமக்கு தேவையானவற்றை பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கும்வரை தமிழரின் தேவை இருக்காது அந்த தேவை வரும்பொழுது தமிழர் தரப்பு இருக்காமல் போய்விடலாம். 

Link to comment
Share on other sites

‘மோடியின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்துள்ள, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான ஒப்பந்தம் குறித்த மேலதிக நடவடிக்கைகளுக்காகவே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை வருகை, கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் குறித்த தொடர்புகளை வெ ளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மோடியின்-வருகை-சந்தேகத்தை-ஏற்படுத்தியுள்ளது/175-234009

மோடியின் விஜயம் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்கமாக இருந்துவிடக்கூடாது - கலகம தம்மரங்சி தேரர்

மோடியின் விஜயம் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்கமாக இருந்துவிடக் கூடாது எனத் தெரிவித்த தேசய விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கலகம தம்மரங்சி தேரர், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தருவாத அவர் தெரிவிப்பதன் மூலம் தெற்கில் வேறு பிச்சினைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடும்போது,  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண அதிகாரத்துக்கு அப்பால் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இது தெற்கில் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது

மேலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவது தொடர்பாக உளவுத்துறை தகவலை இந்தியாவே எமக்கு ஆரம்பமாக அறிவித்தருந்தது. எமக்கு நேச நாடு என்றவகையில் ராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பால் சென்று இந்தியா இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் தாக்குதலை கட்டுப்படுத்த முடிந்திருக்கும். 

எனவே பாரிய தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்று முடிந்து குறுகிய காலத்துக்குள் இந்திய பிரதமர் எமது நாட்டுக்கு விஜயம் செய்ததை பல கோணத்திலு சிந்திக்கவேண்டியிருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி்லேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/57949

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.