Jump to content

இந்தி கற்றல் அவசியமா?


Recommended Posts

மும்மொழித் திட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தி திணிப்பு அவசியமா என்ற தலைப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு நான்  எழுதிய பதிவை யாழ் நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன். வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன்.

https://entamilpayanam.blogspot.com/2016/04/blog-post.html

-----------------------------------------------------------------------------------------------------------------------

 நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.  நாங்களிருவரும் வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியதுஅங்கு நாங்கள் சந்தித்த நபர்கள்அவர்களது கலாச்சாரம்பழக்கவழக்கம்உணவுமுறைவிருந்தோம்பல் என்று பல்வேறு தலைப்புகள் பற்றி விவாதித்தோம்.  

இவ்வாறாகத் தொடங்கிய உரையாடல்நாங்கள் அங்கு எதிர்கொண்ட பிரச்சனைகள்குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சனைகள்  பற்றிய திசையில் திரும்பியது. ஹிந்தி தெரியாததால் நாங்கள் சந்தித்த பிரச்சனைகள்நண்பர்களின் கேலியாருடனும் தோழமையுடன்  பழக முடியாத சுழ்நிலைபிறருடன் பேசுவதிலிருந்த தயக்கம்கடைக்குச் சென்றால் பொருட்கள் வாங்குவதிலிருந்த சிக்கல் என்றவாறு சென்றது.

 உடனே நண்பர், "ஹிந்தி படிச்சிருந்தா இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லைஇதெல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்த வீண் பிரச்சனைஇவனுக அரசியலுக்கு நம்மதான் பலிகடா. தமிழ் மொழியைப் பின்பற்றுவதால் எந்த ஒரு நன்மையும் இல்லை, மாறாக ஹிந்தி தெரிந்திருந்தால் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சுலபமாகச் சென்றுவர முடியும். ஹிந்தி தெரியலனா எவ்வளவு கஷ்டம்ன்னு” சொன்னார்.

 முதலில் அவர் கூறியதை ஆமோதித்த நான்பின்னர் கூறியவற்றைக் கேட்டு எரிச்சலடைந்தேன். இன்றும் ஞாபகமுள்ளதுபத்து வருடங்களுக்கு முன் எனக்கும் என் வடஇந்திய நண்பருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்.

 “நீ இந்தியாவில தான இருக்கேஅப்பறம் ஏன் ஹிந்தி தெரியலதேசிய மொழியே தெரியாம நீங்கெல்லாம் எதுக்கு இருக்கீங்கஎல்லா மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் கற்றுத் தரப்படுகிறதுஆனா தமிழ்நாட்டில மட்டும் ஏன் இது கட்டாயமாக்கப் படவில்லை. வேலைக்கு மட்டும் நார்த் இந்தியா வேண்டும்சென்ட்ரலிருந்து ஃபண்ட் மட்டும் வேணும் ஆனா ஹிந்தி வேண்டாம்?” என்று கூறினார்.

 அதுவரை அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் உடனே, “ஹிந்தி தெரிஞ்சாதான் இந்தியன்னு யார் சொன்னதுலாங்வேஜ் தெரிஞ்சா இந்தியனாகிவிட முடியுமாபாகிஸ்தானி ஹிந்தி பேசறான்அதனால அவன இந்தியன்னு சொல்லலாமாஒருவனுடைய மொழி அறிவை கருத்தில் கொண்டு அவன் இந்தியனா இல்லையான்னு சொல்றது தப்பு. இந்திய அரசாங்கத்திற்கு நீ எவ்வளவு டேக்ஸ் (tax) கட்டரையோ அதே டேக்ஸ் நானும் கட்டரேன். எங்களுக்குனு தனி மொழி இருக்குஆயிரம் இலக்கியங்கள் இருக்குஅதனால இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய தேவையில்லை. தனக்குன்னு ஒரு மொழி இல்லாதவன் தான் இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய கட்டாயமிருக்குஎங்களுக்கு அந்த அவசியமில்லை” என்றேன்.

இன்றுடன் பத்து வருடங்களாகிறதுஅன்று பேசுவதை நிறுத்திய நாங்களிருவரும் இன்று வரை பேசியதில்லை. சந்தர்ப்பங்கள் பல அமைந்தும் இருவருக்குமிருந்த கசப்புணர்வால் நட்புபாராட்ட இயலவில்லை. அதற்காக நான் இன்று வரை கவலை பட்டதுமில்லை. இந்தக் கேள்வி அவர் ஒருவரிடம் மட்டுமில்லாமல் பெரும்பாலான வட இந்திய மக்களிடமும் உள்ளது. ஏன் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்திக்கு எதிர்ப்பு உள்ளதுநாட்டின் தேசிய மொழியைக் கற்பதென்பது தேச விரோதச் செயலாபின்னர் ஏன் தமிழர்கள் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஆங்கிலம் நம் அன்னிய மொழியாக இருந்தாலும்அதைக் கற்க முனையும் தமிழர்கள் தேசிய மொழியை புறக்கணிப்பது எவ்வாறு சரியாகும்தமிழர்களின் இச்செயல்பாடு தவறானதல்லவா? என்பது போன்ற பேச்சுக்களை தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வரும் தமிழர்கள் நிச்சயம் கேட்டிருப்பர்.

 இக்கேள்விகளுக்கான தீர்வுகளை ஆராயும் முன்சில வரலாற்று நிகழ்வுகளைப இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறது. இன்னொறு முக்கியமான விஷயம்வரலாற்று நிகழ்வுகளை வாசிக்கும் பொழுது அங்கு குறிப்பிடப்படும் செய்திகளை நிகழ்காலத்தோடு ஒப்பிடாமல்நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்திற்குச் சென்று வாசித்தல் தவறான புரிதலைத் தடுத்து நம் புரிதலை எளிமையாக்கும்.

ஹிந்தி புறக்கணிப்பு அல்லது ஹிந்தி எதிர்ப்பு என்பது இன்றோ நேற்றோ தொடங்கப்பட்ட்தல்ல. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஒரு போராட்டம் (1900-1940).  ஆம் ஹிந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்கும் மத்திய/மாநில அரசின் திணிப்பு/பலவந்தத்தை  எதிர்த்துத் தொடங்கப்பட்டதே இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம். இம்மொழித் திணிப்பு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசால் கொண்டுவரப்பட்டது.

1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரசின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசுபள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. இராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்களில் மிக முக்கியமானோர்  -  மறைமலை அடிகள்ஈ.வே.ரா பெரியார்பாவேந்தர் பாரதிதாசன்கி. ஆ. பெ. விசுவநாதம் மற்றும் ஏ. டி. பன்னீர் செல்வம் ஆவர்.

இதைத் தொடர்ந்து  ஆறுஏழுஎட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.  இந்தி பயில்வது மட்டுமல்லாதுஇந்தி தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குச்  செல்ல முடியும் என்ற நிலை உருவானது. இதனால் கிராம மற்றும் நகர்ப்புறத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு  ஆங்கிலம்இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதேனில் சாதிமத பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய பெரியார் தலைமையிலான கட்சியினரும்பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் ஒன்றிணைந்து உண்ணாநோன்புமாநாடுகள்பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் கட்சி பதவி விலகிதையடுத்து, 1940இல் இருந்த பிரிட்டிஷ் அரசு இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினர். 

இந்தி திணிப்பின் தொடக்கம் காங்கிரஸ் கட்சியை மட்டுமே சாராதுநாம் தேசத் தந்தையாகப் போற்றும் காந்தியடிகள் மற்றும் நேருவின் பங்கும் இதில் முக்கியமானது.  பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆங்கிலம் அரசுமொழியாக விளங்கி வந்த நிலையில்பிரிட்டிஷுக்கு எதிராக அனைத்து மாநிலத்தவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரு பொது மொழியை உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்டதே இந்த தேசிய மொழி அல்லது பொது மொழித்திட்டம்.  இதன் வழிகாலே இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியின் பிறப்பு. இதனடிப்படையிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்துஸ்தானி மொழியை பிற மாநிலங்களில் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டது. ஆனால் முடிவில் வெற்றிபெற இயலவில்லை.

1948-49 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான இந்திய அரசுஇந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. இதனை எதிர்த்து சென்னை மாகாணம் மற்றும் இன்னபிற இடங்களிலும் இந்தித் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் அறிஞர் அண்ணாவும்நீதிக்கட்சியின்  பெரியாரும் போர்க்கொடி தூக்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக கட்டாயப் பாடமாக இருந்த இந்தி விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.

1948-50இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும்/வகுக்கும் நேரத்தில் ஒருமையான அல்லது ஒன்றுபட்ட தேசிய மொழி பற்றிய விவாதமும் நடைபெற்றது. இவ்வமைப்பிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்கள், பொதுமொழி என்பதன் அடிப்படையில்  பல்வேறு மசோதாக்கள்  இந்தி மொழியில் இயற்றப்பட்டது. அமைப்பிலிருந்த சிலர்  "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினர்.

இதனை எதிர்த்து அமைப்பிலிருந்த தென்னாட்டவர்கள்இதுபோன்று  இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தினால்முற்காலத்தில் ஆங்கிலத்தை  வெறுத்த  எம்மக்கள்  பலரும் ஆங்கிலத்திற்கு ஆதரவாகும் நிலை ஏற்படுமென்பதை உரைத்தனர்.   இதவே பின்னாளில் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்தும் நிலை உருவாகுமென்று எடுத்துரைத்தனர்.

தீவிர-வாதங்களுக்குப் பிறகுஇந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டுஇந்தி பேசாத  மாநிலங்களில் ஆங்கிலமும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அலுவலக மொழியாக நீடிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகவே ஆங்கிலம் நமது அனைத்து சட்ட நடவடிக்கைகள்நீதிமன்றங்கள்சட்டங்கள்மசோதாக்கள்விதிகள் போன்றவற்றில் நிலைத்தது.

 இதன்பின் 1955-58ல் பிரதமராக இருந்த நேரு தலைமையில் அமைக்கப் பெற்ற ஆணையம்ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணரும்  வழிகளைக் குறிப்பிட்டது. அதனடிப்படையில் இந்தி அலுவல் மொழியாகவும் ஆங்கிலம் துணைமொழியாகவும் பரிந்துரைக்கப்பட்டது.  முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த இராஜாஜி அவர்கள் இச்சமயம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக மாநாடு நடத்தினார். அப்போது "இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேபோல் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே” என முழங்கினார்.

 இதுபோன்று பல்வேறு எதிர்ப்புகள் இந்தி திணிப்புக்கெதிராக வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் நேரு அவர்கள் இந்தி மொழித்திணிப்பை நிறுத்திஆங்கிலம் இணையாக வரலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார். 

 1960-63ல் மீண்டும் அலுவல்மொழிச் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் போராட்டங்களும் மறியலும் வலுவானது. இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையை முன்னிருத்திய  கட்சிகளில் மிகமுக்கியமானது அண்ணாவால் தொடங்கப்பட்ட 'திராவிட முன்னேற்றக் கழகம்'. அந்நாளில் முனைப்புடன் இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்  கருணாநிதி அவர்கள். 

மத்தியில் மொழிச்சட்டத்தின் முக்கிய கருத்தாக "இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி 'இந்தி', ஆதலால் இதுவே தேசிய மொழியாக வழங்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பதிலுரைத்த அண்ணா அவர்கள், "எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காதுகாகமாகத்தான் இருக்கும்" என்றார்.

1964ல்  நேருவின்  மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் அமைச்சர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக்குவதில் தீவிரமாக இருந்தனர்.

அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும் என்றும்குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டும்பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி திணிக்கப்படும் என்ற அச்சமும் கவலையும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வழிவகுத்தது.

அன்றைய முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம்இந்திதமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார்.  இதனால் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது. தமிழக அரசியல் கட்சிகளனைத்தும்,  இந்தி அலுவல் மொழியாக மாறும் ஜனவரி 26 நாளை துக்கநாளாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க தொண்டர்களும்மாணவர்களும் இணைந்து மாநிலமெங்கும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். "இந்தி ஒழிக", "Hindi Never, English Ever"  என்ற கோஷங்கள் முதன்முதலில் எழுப்பப்பட்டது. 

இதன்பின் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்டது.  கலவரத்தின் தொடர்ச்சியாக காவல்துறையினர் மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடும்  நடத்தியதுஇதனால் நிலைமை மேலும் மோசமாகி தீவைப்புகொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிப்பு என பெருகியது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள்இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. அன்று நடந்த கலவரத்தில் மாணவர்கள் பலரும் படுகாயமடைந்ததோடு, கட்சித் தொண்டர்கள் பலரும் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இப்போராட்டத்திற்குப் பிறகுலால் பகதூர் சாஸ்திரி நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள்  குறித்து அதிர்ச்சி தெரிவித்ததோடு நேருவின் வாக்குறுதிகள் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.

1.  ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில்வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடரலாம்.

2.  இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.

3.    இந்தி இல்லாத மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டுஇந்நிலையில் இந்தி இல்லாத மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.

4. மத்திய அரசின் அலுவல்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்

இதன் தொடர்ச்சியாக, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துதிமுக முதன்முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றது. தேர்தலில் மாணவர் தலைவர் சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.  அந்நாளே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோலோச்சம் முற்றிலுமாக நின்றது.

காமராஜரின் இத்தோல்விக்கு முக்கியக் காரணம் இந்தி திணிப்பை ஆதரித்த காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் நோக்கமே.

பின்னர் பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் அவரசச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதோடுமும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாகக் கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது. அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திக்கு அளிக்கப்பட்ட தனிநிலை அந்தஸ்து முடிவுற்று அனைத்து மொழிகளுக்கும் சமநிலை வழங்கும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

1986ல் பிரதமர் ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். அப்போது திமுகவின்  தீவிரமான போராட்டத்தின் முடிவில் தொண்டர்கள் பலர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டனர். போராட்டம் தீவிரமாவதைக் கண்ட ராஜீவ் காந்தி அவர்கள்  இந்தி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதியளித்ததால் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

பிரதமர் மோடியின் துவக்க காலத்தில் இந்தித் திணிப்பு மீண்டும் உருவாகும் நிலை எழுந்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ போன்ற அரசியல் தலைவர்களின் எதிர்ப்பலையால் இந்தித் திணிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இன்றும் ஏதோ ஒருமூலையில் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. 

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் வெறும் வரலாறாக மட்டும் ஏற்பது தவறானதாகும். என் பார்வையில் சுதந்திரம் என்பது தனிமனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் மீது மற்றவரின் திணிப்பு இல்லாமலிருப்பது. அதுவே இங்கு மொழி பற்றிய திணிப்பிற்கும் பொருந்தும்.

இந்தி கற்றால்தான் இந்தியாவில் வாழ முடியும் என்ற நிலையில் நாமில்லை, அந்நிலை வரும் நிலையிலுமில்லை. செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்பிற்கு இணையான இன்னொரு மொழி இருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பற்றி சிந்திக்கவும் எனக்கு எண்ணமில்லை.

என் தமிழ் ஆசிரியன் பாரதி குறிப்பிட்டது போல்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்”.

 

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாம் தமிழன் என்ற உணர்வு அவசியமிருத்தல் வேண்டும்.

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”.

இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் ஏனைய மொழிகளுள் ஒன்றே தவிர  வேறேந்த சிறப்பும் இருப்பதாக அறியப்படவில்லை.

திறன் படைத்த எந்தவொரு சமூகமும் பிறருக்கு அஞ்சி, பிறர் திணிப்பை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. தாய்நாட்டிற் கெதிராக செயல்படுவது தீவிரவாதமே தவிர, இந்தி கல்லாமிலிருப்பது எவ்விதத்திலும் தீவிரமாகாது. ஆங்கிலத்தை நண்பனாக மட்டும் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர நம் அன்னையாக என்றும் ஏற்கமுடியாது. திணிக்கப்படுவது புறக்கணிக்கப்படும் என்பது மனித இயல்பு.

தமிழனே நீ வெற்றி நடைபோட்டு தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை சிறப்புறச் செய்தல் வேண்டும். அதே நேரத்தில் இந்தி கற்க விருப்பமுள்ளவர்கள் தாராளமாக தாங்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம். எந்த மொழியையும் விரும்பிக் கற்பதில் தவறில்லை. கற்றவை யாவும் நற்பலனையே தரும். அது மொழிக்கும் பொருந்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2019 at 11:08 PM, அருள்மொழிவர்மன் said:

தமிழனே நீ வெற்றி நடைபோட்டு தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை சிறப்புறச் செய்தல் வேண்டும்

இந்த கனவும் மெய்ப்பட வேண்டும்.. ஆனால் நாங்கள் இந்திய தமிழர், மலையகத் தமிழர், மலேசிய/சிங்கப்பூர் தமிழர், இலங்கைத்தமிழர் என பல நிறங்களாக உள்ள போது, எப்படி இது சாத்தியம் ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.