Jump to content

காதல் திருமணம் செய்த மகளுக்காக... கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Father put Tribute Poster to her daughter due to love marriage near Ambur

லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா!

தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார்.

ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.

கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது.

எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நினைத்த இந்த ஜோடி, வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.

எப்போது தன் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தாரோ, அப்போதோ அவர் தனது மகள் இல்லை, இறந்துவிட்டார் என்று சரவணன் முடிவெடுத்தார். இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டார்.

அந்த போஸ்டரில் மகளின் போட்டோ உள்ளது. மேலும், "அன்புமகள் அகால மரணமடைந்துவிட்டாள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவளது உடல் இன்று மாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது"என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் ஊருக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/father-put-tribute-poster-to-her-daughter-due-to-love-marriage-near-ambur-353670.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை கையிலெடுத்துக்காது 
என்ன கோதாரியாவது செய்து தொலையுங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவராணி....

சாதியத்துக்கு அப்பால்.... (ஒரே சாதியாக இருந்தாலும் கூட) ஊரு, உலகம், சொந்தம் விட்டு ஓடுபவர்கள், இந்தியா போன்ற நாடுகளில், நல்ல பொருளாதார வளம் இல்லாதவர்கள், நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை.

வீடு வாடைக்கு எடுப்பதில் இருந்து, மளிகை பொருள் வாங்குவதில் இருந்து, ஊர் ஒத்துழைக்காது.

 

52 minutes ago, குமாரசாமி said:

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

ஜெர்மனியில், அவர்கள் தம்மை இலகுவாக பொருளாதார வளமிக்கவராக மாத்திக் கொள்ள முடியும்.

கனடாவில் கூட, சாதிய வேறுபாடு காரணமாக, மகளின் கணவரை வான் எத்திக் கொல்ல ஒருவர் முயன்று சிறை சென்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இவராணி....

சாதியத்துக்கு அப்பால்.... (ஒரே சாதியாக இருந்தாலும் கூட) ஊரு, உலகம், சொந்தம் விட்டு ஓடுபவர்கள், இந்தியா போன்ற நாடுகளில், நல்ல பொருளாதார வளம் இல்லாதவர்கள், நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை.

வீடு வாடைக்கு எடுப்பதில் இருந்து, மளிகை பொருள் வாங்குவதில் இருந்து, ஊர் ஒத்துழைக்காது.

 

ஜெர்மனியில், அவர்கள் தம்மை இலகுவாக பொருளாதார வளமிக்கவராக மாத்திக் கொள்ள முடியும்.

கனடாவில் கூட, சாதிய வேறுபாடு காரணமாக, மகளின் கணவரை வான் எத்திக் கொள்ள ஒருவர் முயன்று சிறை சென்றார்.

நீங்கள் கூறிய மூன்று கருத்துக்களும் சிறந்த கருத்துக்கள். எனினும் எனக்கு சார்ந்ததை எடுத்து மீள்கருத்து கூறுகின்றேன்.
இடம் வலம் மாறி அதாவது சாதி மாறி மணம் /கரம் பிடித்தவள் நல்லாய் இருக்கிறாள் என்று மனதுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தாலும்....அந்த பெற்றோரால் அந்த பொன் மகளை தங்களுடன் இணைதுக்கொள்ள முடியவில்லை. காரணம் அந்த பெற்றோர்களை சொந்த இனசனம் சேர்த்துக்கொள்ளாது என்ற பயம்.....அத்துடன் அவர்களுக்கு இன்னும் இரு பெண்பிள்ளைகள் இருக்கின்றார்கள். கலியாண பேச்சுக்கால் என்று வரும் போது  ஆதி அந்தம் எல்லாம் விசாரிப்பார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

ஜெர்மன் என்ன ஊரிலேயே நடந்து இருக்கு இந்தியன் ஆமி காலத்தில் வலிகாமம்  பொறுப்புள்ள ஆள் காதல் என்று இயக்கத்தில் இருந்து சுய விருப்பு என்று நினைகிறன் விலகி மன்சள் கயிறு கட்டி விட்டார் பெண்ணின் தாய் வீட்டுக்கு போகும்போது உடன் நாங்களும் சென்றோம் அங்கு பெண்ணின் தாயார் பெண்ணின் போட்டோக்களை எரித்துவிட்டு எட்டு செய்து கொண்டு இருக்கிறா வெறுத்து போய் திரும்பி சைக்கிளில் வந்தம் காலம் பொல்லாதது முள்ளிவாய்க்கால் அழிவில் இருந்து தப்பி அந்த குடும்பம் சுவிசில் வாழ்கின்றனர் என கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டணில் கூட மகளை காதலித்த, கறுப்பு இளைஞனை, பார்க்குக்கு பேச வருமாறு அழைத்த வெள்ளை தந்தை, பெற்றோல் ஊத்தி எரித்த கதை நடந்திருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 6/11/2019 at 4:48 AM, Nathamuni said:

லண்டணில் கூட மகளை காதலித்த, கறுப்பு இளைஞனை, பார்க்குக்கு பேச வருமாறு அழைத்த வெள்ளை தந்தை, பெற்றோல் ஊத்தி எரித்த கதை நடந்திருக்கின்றது. 

எப்பொழுது நடந்தது அதரம் கூடுகள் ஐயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது முன்னெப்போதும் இல்லாதவாறு தற்சமயம் கனடாவில் உச்சியில் ஏறி நிற்கிறது. சாதி என்பதை அறியாத பிள்ளைகள் பெற்றோர்கள் பேசும் சாதியத் திருமணங்களால் மனமுடைந்து போகிறார்கள் அல்லது திருமணம் செய்ய மறுக்கிறார்கள். நிலைத்தகவல் (உவகை மணமக்கள் இணைப்பு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.