Jump to content

கிரேசி மோகனின் மறைவும் சமூக வலைத்தளங்களின் அஞ்சலியும்


Recommended Posts

”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன்.

நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டுமே நம்மைச் சிரிக்க வைத்த வடிவேலு, இரட்டை அர்த்தங்களின் ஒட்டுமொத்த காண்ட்ராக்டர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இன்னொருவரை அடித்தே நம்மைச் சாய்த்த கவுண்டர், ரியாக்‌ஷன்களிலே களை கட்டிய செந்தில்,  கவுண்ட்டர்களாலே கரியரை வடிவமைத்த சந்தானம் என உலகம் முதல் உள்ளூர் வரை பெரிய பட்டியலே உண்டு. இதில் கிரேஸி வித்தியாசமானவர். மொழியின் சாத்தியங்களை வைத்து கவிதை எழுதியவர்கள் உண்டு; அதில் காமெடி சரவெடியைக் கொளுத்தியது கிரேஸிதான். 

முன்னாடி பின்னாடி 

“இது என்ன இன்னொரு கீ.. டூப்ளிகேட் கீ யா?” 

எச்சகலைன்னா நாய்தானா? எச்சைக்கலை புலி, எச்சைக்கலை சிங்கம்,

தட் ஹவ் டு ஐ நோ சார்.

என கிரேஸியின் வசனங்களை 3 வார்த்தைகள் சொன்னால் போதும். அந்த ஜோக் முடியும் முன்னரே சிரிப்பு வந்துவிடும். கிரேஸியின் கவுண்ட்டர்கள் வெடி சிரிப்பையெல்லாம் வரவைக்காது. ஆனால் தொடர்ந்து ஜோக்குகளாக கொட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஹைபிட்ச்சில் சிரித்துக்கொண்டிருப்போம். அதனால்தான் முதல் முறை பார்க்கும்போது பல ஜோக்குகளைத் தவறவிட்டு விடுகிறோம். ’சிவன் பபுள் எல்லாம் விட மாட்டார் சம்பந்தம்’ - ஒரு காட்சி போதும். 

காதலா காதலா படத்துக்கு விகடன் தந்த விமர்சனம் இன்றும் நினைவிலிருக்கிறது. இரண்டு பக்கம் முழுவதும் கிரேஸியின் ஜோக்குகளை மட்டும் போட்டு, இரண்டு பாக்ஸில் ஜோக்குகளை ப்ளஸ் என்றும் மற்றவற்றை மைனஸ் என்றும் எழுந்தியிருந்தார்கள். 

ஜோக் அமைய சூழலும் கைகொடுக்க வேண்டும் என்பார்கள். கிரேஸீக்கு அதெல்லாம் தேவையில்லை. அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷ் யாருடனோ பிஸியாகப் பேசிக்கொண்டிருப்பார். அன்று அவர் வீட்டில் பார்ட்டி. அப்போது ஒரு பெண் வந்து “சார் போன் வந்திருக்கு” என்பார். பதிலுக்கு நாகேஷ்  சீரியஸ் டோனில் “யார் வந்தா என்னம்மா? உள்ள கூப்ட்டு உட்கார வைங்க “ என்பார். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஒவ்வொருமுறையும் அருகிலிருப்பவர்களைதான் நான் கவனிப்பேன். அது ஜோக் என்றே கண்டுபிடிக்காமல் கடந்தவர்கள் பலர். இது தான் கிரேஸியின் பலமும் பலவீனமும். இதைக் கவனிக்காதவர்கள் உடனே “இதெல்லாம் ஒரு ஜோக்கா” எனக் கிண்டலடிப்பதுண்டு. ஆனால், கிரேஸி ஸ்டைல் புரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு அவர் படங்கள் எல்லாமே ஃபுல் மீல்ஸ்தான். 

கமலும் கிரேஸியும் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த செம காம்போ. மைக்கேல் மதன காம ராஜனில் தொடங்கி வசூல்ராஜா வரை அவர்கள் இணைந்துப் படைத்த ஒவ்வொரு படமும் எவர்க்ரேன் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்க வைக்கும். தமிழ் சினிமாவில் நிறைய காமெடி படங்கள் செய்தவர் என்ற பெயர் கிரேஸீக்கு இல்லாமல் போகலாம். ஆனால், நிறைய காமெடிகளை எழுதியவர் அவராகத்தான் இருப்பார். அதனால்தான் பார்த்த ஜோக்கையே திரும்பப் பார்த்தாலும் பாதி மறந்து போயிருக்கின்றன. ஒரு படத்தில் 1000 ஜோக் வைத்தால் எத்தனைதான் நினைவில் வைத்துக் கொள்வது?

கிரேஸி கமலுடன் சேர்ந்தாலும் சரி யாருடன் சேர்ந்தாலும் சரி.. தைரியமாகக் குடும்பத்துடன் பார்க்கலாம். இரட்டை அர்த்த வசனங்கள் தவறெனச் சொல்லவில்லை. ஆனால், கிரேஸியின் காமெடி பக்கா யூ சர்ட்டிஃபிகேட். 

கிரேஸியின் நாடகக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவர் சொன்னது. கறுப்பு நிறத்தில் ஒருவர் இருந்திருக்கிறார்.அவர், கிரேஸீ இருக்கும் ரூமைக் கடந்தபோது “என்ன தீஞ்ச வாடை வருது” என்றாராம் ஒருமுறை. ஆனால், சினிமாவில் இப்படியாக ஜோக்குகளைப் பார்த்ததாக நினைவிலில்லை. அந்தப் பொறுப்பு கிரேஸிக்கு இருந்திருக்கிறது.

கிரேஸி ஒன்றும் அபாரமான நடிகரல்ல. ஆனால், வசூல்ராஜாவில் அவர் சிரிக்க மட்டும் வைக்கவில்லை; கொஞ்சம் அழவும் வைத்திருப்பார். 

கிரேஸிக்கு இன்னும்கூட கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்; புகழ் கிடைத்திருக்கலாம் என்ற புகார் எல்லாம் எனக்கு ஏதுமில்லை. அவருக்குமே இருந்திருக்காது. 70களில் புகழ்பெறத் தொடங்கிய அவர் ஜோக்குகள் எத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதுதான் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்க வேண்டிய விருது. இப்போதும் யாராவது வண்டியைத் திருப்பி கீழே விழுந்தால் அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கிரேஸி எழுதிய கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் புத்தகத்தை மிஸ் செய்துவிடாதீர்கள். சினிமாவைவிடவும் அதிக நேரம் சிரிக்க வைத்திருப்பார். கிரேஸியின் பெயர்கள் எப்போதும் ஆச்சர்யம்தான். எல்லா நாடகத்திலும் வரும் ஜானகி நிஜமான நபர். அதைச் சொல்லவில்லை. மற்ற கதாபாத்திர பெயர்கள். இந்தப் புத்தகத்தில் வரும் ராஜகுருவின் பெயர் படுகிழத்தோப்பனார்.

வசூல்ராஜா படத்தில் ஒரு வசனம். “பேரு மட்டும் கங்காதரன் காவிரி தறேன் வச்சுக்கிற... ஆனா வாங்குன காசையே தர மாட்றியாமே” என எழுதியிருப்பார். அதிலிருந்து எந்தப் பெயரைக் கேட்டாலும் படித்தாலும் அதில் ஏதும் ஜோக் அடிக்க முடியுமா என அனிச்சையாக என் மூளை யோசிக்கும். அப்படி ஒருநாள் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்க நேர்ந்தது. அடைக்கலராஜ் என்பவர் மாரடைப்பால் இறந்துபோய்விட்டதாக எழுதப்பட்டிருந்தது. “அதான் அடைச்சுக்குச்சே.. இனி என்ன அடைக்கலராஜ்” என்றேன். எப்போதாவது கிரேசி மோகனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் இதையும் அவரிடம் சொல்லிக் காட்ட நினைத்திருந்தேன். ஆனால், இனி யாரிடம் சொன்னாலும் சிரிப்புக்கு பதில் வருத்தமே மிஞ்சும். காரணம், கிரேசியின் உயிரைப் பறித்ததும் மாரடைப்புதான்.

 

கார்க்கி

Link to comment
Share on other sites

முழுநீள நகைச்சுவைப் படங்களின் உச்சகட்டக் காட்சியில் அதிர்ச்சி ஏற்படும் விதமாக நெஞ்சை நெகிழ்த்தும்  காட்சி ஒன்றை அமைத்துப் படத்தை முடிப்பார்கள். அப்படி அமைந்துவிட்டது #கிரேசிமோகன் அவர்களின் மரணம். எதிர்பாராத அதிர்ச்சி. சத்தமில்லாத சாதனையாளர் கிரேசி மோகன்  . ஆனால் அவரது எழுத்துக்களுக்குச் சத்தம் உண்டு. அது அரங்கே அதிரும் சிரிப்புச் சத்தம். அது எப்போதும் ஓயாது. அவரது டைமிங் சென்ஸ் அவ்வளவு நுட்பமானது. தரமான  நகைச்சுவை , கவித்துமான மொழித்திறன் , இயல்பான கதை சொல்லல் எனத் தன் எழுத்தை ஆடம்பரம் இல்லாமல் செய்தவர். காமடியில் கலக்குபவர் மட்டுமல்ல...சென்டிமெண்டிலும்  கலங்கவைக்க அவருக்குத் தெரியும். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் குள்ளமான கமல் தன் அம்மாவிடம் பேசும் காட்சி ஒன்றே போதும். 

'மத்தவங்க என்னவேணா சொல்லட்டும்... நீ ஒன்னு சொன்னா எனக்கு அது ஆயிரம் மடங்கும்மா...' 

நகைச்சுவைக்கு உதாரணம் சொன்னால் அது பக்கம் பக்கமாகப் போகும். ஒவ்வொரு வினாடியிலும் ஏதாவது செய்துவிடுவார். அசாத்திய திறமைசாலி.

சில இழப்புகளைச் சந்திக்கும்போது எதை இழந்தோம் என்பதை நீண்டகாலத்திற்குப் பிறகுதான் உணர்வோம். அப்படி ஒரு இழப்பு தமிழ்த் திரை உலகுக்கு. நகைச்சுவையை கிரேசி மோகன் போல் எழுத ஒருவர் இப்போது இல்லை என்பதுதான் உண்மை.
அவருக்கு என் அஞ்சலிகள்.

பிருந்தா சாரதி

Link to comment
Share on other sites

கிரேசி மோகனின் மறைவிற்காக எழுத்தாளர் ஜெயமோகனின்  "கறாரான" அஞ்சலி

https://m.jeyamohan.in/122725#.XQJvC308w1K

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.